தனியார் பேருந்தின் படியில் அமர்ந்து மது அருந்தியவாறு பயணம் செய்த நபர்கள் – வைரல் வீடியோ

திருப்பூரில் தனியார் பேருந்தில் பயணத்தின் போது படியில் அமர்ந்து மது அருந்திச் செல்லும் குடிமகன்கள். சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாகி வருகிறது. திருப்பூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து – அனுப்பர்பாளையம் வரை தனியார் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்றிரவு TN 39 BD2626  என்ற பதிவெண் கொண்ட பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது படிக்கட்டில் அமர்ந்தவாறு நான்கு நபர்கள் மது அருந்திச் சென்றுள்ளனர். இதை காரில் சென்ற நபர் ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் … Read more

கொஞ்சமா கூடிய தங்கம், வெள்ளி.. இன்றைய நிலவரம்

சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.60.90 என நிர்ணயிக்கப்பட்டு கிலோ பார் வெள்ளி ரூ.90,900 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில் வெள்ளி கிராமுக்கு 0.20 காசுகள் உயர்ந்துள்ளது.நேற்று வெள்ளி கிராம் ரூ.60.70 ஆக விற்பனையானது. தங்கத்தை பொறுத்தமட்டில் கிராம் ரூ.5 அதிகரித்து காணப்படுகிறது. அந்த வகையில் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ரூ.4805 என நிர்ணயிக்கப்பட்டு சவரன் ரூ.38440 ஆக உள்ளது. ஆக சவரனுக்கு ரூ.40 அதிகரித்துள்ளது. 24 காரட் 99.99 தூயத் தங்கம் … Read more

 அரசு மருத்துவர் வீட்டில் 12 சவரன் நகை கொள்ளை..!

புதுக்கோட்டை மாவட்டதில் உள்ள அறந்தாங்கியில் ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர்கள் ரமேஷ் (வயது39), மாதவி. ரமேஷ் புதுக்கோட்டை பேருந்து நிலையதிற்கு பின்புறம் மொபைல் கடை வைத்துள்ளார். அவரது மனைவி மாதவி அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார்.   இந்நிலையில், நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு ரமேஷ் மனைவியை மருத்துவமனையில் விட்டுவிட்டு, கடைக்கு சென்றுள்ளார். அதனை தொடர்ந்து மதியம் 1.30 மணிக்கு சாப்பாட்டிற்காக வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது,  வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. … Read more

நகைக்கடையில் கவரிங் செயினை வைத்துவிட்டு தங்க நகையை திருடிச் சென்ற திமுக வார்டு செயலாளர்.!

திருச்செந்தூரில் வாடிக்கையாளர் போன்று நகைக்கடைக்கு வந்த திமுக வார்டு செயலாளர், கவரிங் நகையை வைத்து விட்டு தங்க நகையை திருடிச் சென்ற காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது. 4 நாட்களுக்கு முன், வடக்கு ரத ரீதியில் உள்ள நகைக்கடைக்கு வந்த பெண்ணிடம் உரிமையாளர் நகை டிசைன்களை காண்பித்துள்ளார். அப்போது ஒரு செயினை எடுத்து மேஜையில் வைத்த பெண், வேறு டிசைன்கள் காண்பிக்கும் படி கூறிய நிலையில், உரிமையாளர் உள்ளே சென்று நகைகளை எடுத்து வருவதற்குள் கவரிங் செயினை மாற்றி … Read more

விதிகளை மீறி ஆம்னி பேருந்துகள் இயக்கம்: உரிமையாளர்களிடம் ரூ.9.65 லட்சம் அபராதம் வசூலிப்பு

தொடர் விடுமுறையின்போது ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவது வாடிக்கையாக உள்ளது. கடந்த சுதந்திர தினத்தையொட்டி அளிக்கப்பட்ட விடுமுறையின்போது ஆம்னி பேருந்துகளில் மும்மடங்கு கட்டணம் வசூலிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து திடீர் சோதனை நடத்திய போக்குவரத்துத் துறைஅதிகாரிகள், ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்ததாக புகாரளித்த 97 பேரிடம், அந்தந்த இடத்திலேயே உரிமையாளர்கள் மூலம் கூடுதல் கட்டணத்தைத் திருப்பி வழங்க வைத்தனர். மும்மடங்கு கட்டணம் இதேபோல் கடந்த 19-ம் தேதிகிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டத்தை ஒட்டி பெரும்பாலானோருக்கு ஆக.19, … Read more

நெருங்கும் காவல்துறை? திமுகவில் கரை ஒதுங்கும் வி.சி.ஆறுகுட்டி!

அதிமுக பொதுச்செயலாளர் செல்வி ஜெ.ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அக்கட்சியில் நாள்தோறும் ஏதேனும் மாற்றங்கள் நிகழ்ந்து வண்ணம் உள்ளது. குறிப்பாக ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சரானது பின்னர் அவசர அவசரமாக ராஜினாமா செய்தது. ஓபிஎஸ் தர்மயுத்தம், ஓ.பன்னீர்செல்வம் அணி, எடப்பாடி பழனிசாமி அணி, அதிருப்தி அணி, அமமுக, சசிகலா ஆதரவு என கட்சியின் நிலைப்பாடு என்னவென்று தெரியாமல் உள்ள இடியாப்ப சிக்கலால் தொண்டர்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர். இதனை சாதமாக பயன்படுத்திக்கொண்ட மத்தியில் ஆளும் பாஜக, மாநிலத்தில் … Read more

ஈரோடு,பெருந்துறை சாலையில் உள்ள ஓட்டல்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை..

ஈரோடு: ஈரோடு குமலன்குட்டை, பழையபாளையம், பெருந்துறை சாலையில் உள்ள ஓட்டல்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். உணவகம் ஒன்றில் நடத்திய சோதனையில் கெட்டுப்போன இறைச்சி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தனர். 

என்ன குற்றம் செய்தார்கள்? கனியாமூர் பள்ளி மாணவியின் மரண வழக்கில் உயர் நீதிமன்றம் கேள்வி

கனியாமூர் பள்ளி மாணவி மரண வழக்கில் பள்ளி தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் எதற்காக கைது செய்யப்பட்டார்கள் என்ற காரணத்தை தெரிவிக்காவிட்டால், விசாரணை அதிகாரிகள் ஆஜாரக உத்தரவிட நேரிடும் என்று சிபிசிஐடி-யை சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த கடலூர் மாவட்டம் பெரியநெசலூரைச் சேர்ந்த மாணவி, கடந்த மாதம் 13ம் தேதி மரணமடைந்தார். இதையடுத்து மாணவியின் தாய் செல்வி அளித்த புகாரின்பேரில் சந்தேக மரணம் என்ற பிரிவின் … Read more

தமிழகத்தையே திரும்பி பார்க்க வைத்த திமுக எம்.எல்.ஏ வீட்டு மொய் விருந்து, கருப்பு பணத்தை மாற்றும் முயற்சியா.?!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நடத்திய பேரனின் காதுகுத்து மற்றும் மொய் விருந்தில் 100 ஆடுகள் வெட்டப்பட்டு சுமார் 8000 நபர்களுக்கு விருந்து வைக்கப்பட்ட சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்ப்படுத்தியது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பேராவூரணி சட்டமன்ற தொகுதியின் உறுப்பினர் நா.அசோக் குமார் 8000 நபர்களுக்கு மொய் விருந்து ஏற்பாடு செய்துள்ளார். இந்த விருந்தில் 100 கிடா, 1300 கிலோ கறி வெட்டி விருந்து சமைக்கப்பட்டது.  மேலும், சைவ உணவு மட்டும் சாப்பிடுபவர்களுக்கு பாயாசம், வடை, … Read more

இபிஎஸ் குணாதிசயங்களைத்தான் கண்டிக்கிறேன்; அவருடன் விரோதம் இல்லை: டிடிவி தினகரன்

தஞ்சாவூர்: “அனைவரும் இணக்கமாக செயல்பட்டால்தான், தீய சக்தியான திமுகவை ஆட்சி பொறுப்பில் இருந்து அகற்ற முடியும், என்ற உயரிய நோக்கத்தோடு ஓபிஎஸ், வைத்திலிங்கம் கூறியுள்ள கருத்தை நான் வரவேற்கிறேன். அதே நேரத்தில் அதிமுகவில் உள்ள சில துரோகிகள், துரோக சிந்தனை உள்ளவர்கள் திருந்தினால்தான், இவர்களது எண்ணங்கள் நிறைவேறும்” என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தஞ்சையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: ” பன்னீர்செல்வம், … Read more