ரசாயன கலவைக்கு தடை விதிப்பு எதிரொலி களிமண் சிலை வடிக்கும் பணி தீவிரம்: களைகட்டுகிறது விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்

பொள்ளாச்சி: விநாயகர் சதுர்த்தியையொட்டி, ரசாயன கலவைக்கு தடைவிதிப்பால் பொள்ளாச்சி பகுதியில் களிமண் சிலை வடிக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி பகுதியில் பல்வேறு இந்து அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் சார்பில் பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தியையொட்டி சிலை பிரதிஷ்டை செய்ய ஏற்பாடுகள் நடக்கிறது. இதனால் விநாயகர் சிலைகளுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ள நிலையில், இப்பணியில் மண்பாண்ட தொழிலாளர்கள்  தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பொள்ளாச்சி சுற்று வட்டாரத்தில், வடக்கிபாளையம், ஆர்.பொன்னாபுரம், கோபாலபுரம், ஆவல் சின்னாம்பாளையம், அங்கலகுறிச்சி, கோட்டூர், … Read more

டைரி எழுதாமல் வந்த மாணவனை தாக்கிய ஆசிரியர் – போலீஸில் புகார்

திருவள்ளூர் அருகே தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவனை ஆசிரியர் தாக்கியதில் பள்ளி மாணவனுக்கு தலையில் வீக்கம் ஏற்பட்டுள்ளதால் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். திருவள்ளூர் மாவட்டம், திருவலாங்காடு ஒன்றியற்குட்பட்ட வீர கோவிலில் சென் ஜோசப் தனியார் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது இந்த பள்ளியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில், வேணுகோபாலபுரம் பகுதியைச் சேர்ந்த வெங்கட்ராமன் – சாந்தி தம்பதியரின் மகன் கிஷோர் இரண்டாம் வகுப்பு படித்து … Read more

Tamil News Live Update: நித்யானந்தாவுக்கு மீண்டும் பிடிவாரண்ட்: கர்நாடக நீதிமன்றம் உத்தரவு!

Go to Live Updates Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது. Tamil News Latest Updates கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பிறந்த நாளான கிருஷ்ண ஜெயந்தி, ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் விஷ்ணுவின் எட்டாவது அவதாரமாக கருதப்படும் … Read more

தென்காசியில் 13 நாட்களுக்கு 144 தடை உத்தரவு அமல்

தென்காசி: புலிதேவன் பிறந்த தினம், ஒண்டிவீரன்‌ வீர வணக்கம் நிகழ்ச்சியில் வன்முறை ஏற்படுவதை தவிர்ப்பதற்காக தென்காசியில் இன்று காலை 9 மணி முதல் செப்டம்பர் 2-ம் தேதி வரை 13 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் வெளியிட்ட அறிக்கையில், “தென்காசி மாவட்டம்‌, சிவகிரி வட்டம்‌, பச்சேரி கிராமத்தில் 20.08.2022 நடைபெறும்‌ ஒண்டிவீரன்‌ வீர வணக்கம் நிகழச்சி மற்றும் 07.9 2022 நெல்கட்‌டும் செவல்‌ கிராமத்தில்‌ நடைபெறும்‌ பூலித்தேவன்‌ … Read more

இந்திய குடியுரிமையை துறக்க அனுமதிக்க கூடாது: மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்!

இஸ்லாம் மதத்துக்கு மாறி, வங்கதேசத்தில் வசித்து வரும் தனது மகள், இந்திய குடியுரிமையை துறக்க அனுமதிக்க கூடாது என மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி தந்தை தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த வினோத் பெய்ட் என்பவர், தனது மகளை கடத்திச் சென்று, வலுக்கட்டாயமாக இஸ்லாத்துக்கு மாற்றியுள்ளதாகவும், வங்கதேசத்தில் வசித்து வரும் அவர், இந்திய குடியுரிமையை துறக்க அனுமதிக்க கூடாது என மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை … Read more

அண்ணன் தம்பிகளுக்குள் அரிவாள் மோதல் – ஒரு பலி !

சிவகாசி அருகே உள்ளது ஈஞ்சார் கிராமம். இதே பகுதியில் முருகன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். முருகனின் உடன் பிறந்த சகோதரர்களான முக்தீஸ்வரன்,மணிகண்டன்,விநாயகமூர்த்தி ஆகிய மூவரும் அதே பகுதியில் வசித்து வந்தார்கள். இதனிடையே, அண்ணன் தம்பிகளுக்கு இடையே நீண்ட வருடமாக சொத்து பிரச்சனை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக கடந்த ஆண்டு மோதல் ஏற்பட்டு காவல்துறை தற்காலிகமாக சமாதானப்படுத்தி அனுப்பியுள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று சொத்து பிரச்சனை குறித்து பேசுவதற்காக முக்தீஸ்வரன்,மணிகண்டன்,விநாயகமூர்த்தி ஆகியோர் முருகன் வீட்டிற்கு … Read more

கொள்ளிடம் அருகே பழையாறு துறைமுகத்தில் பக்கிங்காம் கால்வாயில் படகு அணையும் தளம் அமையுமா?.. மீனவர்கள் எதிர்பார்ப்பு

கொள்ளிடம்: மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே பழையாறு கிராமம் உள்ளது. இங்கு பழையாறு மீன்பிடி துறைமுகம் அமைந்துள்ளது.கொள்ளிடம் ஆறு வங்கக்கடலில் கலக்கும் இடமாக இருப்பதால் இப்பகுதியில் இயற்கை துறைமுகம் மாக பழையாறு துறைமுகம் விளங்கி வருகிறது. துறைமுகத்தை 1982 ஆம் ஆண்டு இந்த பழையாறு துறைமுகம் மேம்படுத்தப்பட்டு படகுகள் அணையும் தளம் அமைக்கப்பட்டது. தொடர்ந்து அப்பகுதியில் இருந்து மீனவர்கள் தங்கள் படகுகளை பழுது பார்ப்பதற்கும் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைப்பதற்கும், தாங்கள் பிடித்து வரும் மீன்களை பத்திரமாக … Read more

‘அட இங்கே இத்தனை புள்ளி மான்களா?' – பார்த்து பரவசமடையும் பயணிகள்

முதுமலை வனப்பகுதி சாலையின் இருபுறங்களிலும் மேய்ந்து கொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான மான்களை சுற்றுலா பயணிகள் மிக அருகில் கண்டு ரசித்தனர். நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில், கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக பெய்த தொடர் மழை காரணமாக வனப்பகுதி முழுவதும் பசுமையாக காணப்படுகிறது. சாலையின் இரு புறங்களிலும் வளர்ந்துள்ள புற்களை மேய்வதற்காக நூற்றுக்கணக்கான மான்கள் வருகின்றன. அவ்வாறு வரக்கூடிய மான்கள் சாலை ஓரங்களில் நின்று மேய்ச்சலில் ஈடுபடுகின்றன. நூற்றுக்கணக்கான மான்களை சுற்றுலா பயணிகள் ஒரே நேரத்தில் … Read more

“எங்களை நோக்கி பொதுக்குழு உறுப்பினர்கள் வர ஆரம்பித்துள்ளனர்” – ஓபிஎஸ் அணியின் வைத்திலிங்கம்

தஞ்சாவூர்: “அதிமுகவுக்கு கூட்டுத் தலைமைதான் வேண்டும். எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் தற்போது கிடையாது. எனவே கூட்டுத்தலைமை இருந்தால்தான், இந்த இயக்கம் வலுவானதாக மாற முடியும்” என்று ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் கூறியுள்ளார். தஞ்சையில் ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “நேற்று பேட்டியில் அண்ணன் ஓபிஎஸ், இபிஎஸ் செய்த பல சூழ்ச்சிகளையெல்லாம் சொல்லாமல், அவருடைய நயவஞ்சகத்தை வெளிப்படுத்தாமல், நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும். நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும், நடப்பவை நல்லவையாக இருக்கட்டும். மனகசப்புகளை … Read more

முதல்வர் போட்ட உத்தரவு: உடனே பணியை தொடங்கிய அன்பில் மகேஷ்

மாப்பிள்ளை சம்பா அரிசிக்கு புவிசார் குறியீடு பெறுவதற்கு முயற்சித்து வருகிறோம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார் சென்னை கோயம்பேட்டில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் மூன்று நாட்கள் நடைபெறும் தஞ்சாவூர் பாரம்பரிய கைவினை கலை பொருட்களின் கண்காட்சியினை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் கண்காட்சியில் வைத்திருக்கக்கூடிய பொருட்களை பற்றி கேட்டறிந்தார் மேலும் அங்கு வைத்திருந்த நாதஸ்வர கடையில் நாதஸ்வரம் வாசித்துப் பார்த்தார். அதன் … Read more