சென்னை: கடலில் குளிக்கச்சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உட்பட 4 பேர் மாயம்

திருவொற்றியூரில் கடலில் குளிக்கச் சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உட்பட 4 பேர் மாயமான நிலையில், அவர்களை தேடும் பணிகள் நடந்து வருகின்றன. சென்னை திருவொற்றியூர் பலகை தொட்டி குப்பம் அருகே கொருக்குப்பேட்டை அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சார்ந்த 8 பேர் விடுமுறை தினம் என்பதால் கடலில் குளிப்பதற்காக சென்றுள்ளனர். கடலில் குளித்துக் கொண்டிருந்தபோது கபீர் என்பவர் கடல் அலையில் சிக்கி உள்ளே இழுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இதனை பார்த்த அவரது … Read more

கடல் அலையில் சிக்கி உயிருக்கு போராடிய சிறுவன்… முதலுதவி செய்து காப்பாற்றிய டிஜிபி

சென்னை மெரினா கடற்கரையில் நடைப் பயிற்சி மேற்கொண்டிருந்த போது, கடல் அலையில் சிக்கி உயிருக்கு போராடிய சிறுவனை, டிஜிபி சைலேந்திர பாபு தக்க சமயத்தில் முதலுதவி செய்து உயிரைக் காப்பாற்றினார். அவருக்கு, சிறுவனின் உறவினர்கள் அவருக்கு நன்றி தெரிவித்தனர். தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு ஐபிஎஸ் இன்று மாலை 5.30 மணியளவில் மெரினா கடற்கரையில் நடை பயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது, குடும்பத்தினருடன் கடற்கரைக்கு வந்திருந்த சிறுவன் கடலில் குளித்துக் கொண்டிருந்தான். அப்போது, சிறுவன் திடீரென கடல் அலையில் சிக்கி … Read more

சுதந்திர தின விழா | புனித ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றினார் தமிழக முதல்வர் ஸ்டாலின்

சென்னை: நாட்டின் 76-வது சுதந்திர தினத்தைமுன்னிட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் புனிதஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடி ஏற்றிவைத்து, மரியாதை செலுத்தினா் முன்னதாக, இன்று காலை 8.35 மணிக்கு கோட்டை அருகில் வந்த முதல்வர் ஸ்டாலினை தலைமைச் செயலர் வெ.இறையன்பு வரவேற்று, காவல் துறை அதிகாரிகளை அறிமுகம் செய்துவைத்தார். தொடர்ந்து, காவல் துறையினரின் அணிவகுப்பை திறந்த ஜீப்பில் சென்று பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின், 9 மணிக்கு கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். சுதந்திர தின விழாவில், … Read more

மதவெறியர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட காந்தி: நினைவு கூர்ந்த ஸ்டாலின்

இந்தியாவின் 75ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் வாகனம் போர் சின்னத்திலிருந்து காவல்துறையின் இருசக்கர வாகனங்களின் அணிவகுப்புடன் அழைத்து வரப்பட்டது. பின்னர் கோட்டை கொத்தளத்திற்கு வந்த முதல்வர் ஸ்டாலினை தலைமைச் செயலாளர் இறையன்பு பூங்கொத்து அளித்து வரவேற்றார். பின்னர் காவல் துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்ற முதல்வர் ஸ்டாலின், கோட்டை கொத்தளத்திற்கு வருகை புரிந்து தேசியக்கொடியை ஏற்றினார். இதன்மூலம் 2ஆவது முறையாக முதல்வர் ஸ்டாலின் தேசியக்கொடியை ஏற்றி சிறப்பித்துள்ளார். தேசியக்கொடி ஏற்றிய போது … Read more

நாத உற்சவ இசை விழா: கர்நாடக சங்கீத கீர்த்தனைகளை வாசித்த நாதஸ்வர கலைஞர்கள்

கரூரில் 400-க்கும் மேற்பட்ட தவில் மற்றும் நாதஸ்வர கலைஞர்கள் பங்கேற்ற நாத உற்சவ இசை விழாவில் ஏராளமான இசை பிரியர்கள் கலந்து கொண்டு ரசித்தனர். கரூர் மாவட்டம் நெரூரில் அருள்மிகு சௌந்தரநாயகி உடனுறை அக்னீஸ்வரர் ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் நாத உற்சவம் விழா சிறப்பாக நடைபெறுகிறது. இதன் சிறப்பு அம்சமாக 300-க்கும் மேற்பட்ட நாதஸ்வர தவில் இசைக் கலைஞர்கள் கலந்து கொண்டு அனைவரும் ஒன்றாக இன்னிசை வழங்குவது வழக்கம். இந்நிலையில், 13-ஆம் ஆண்டு நாத உற்சவ விழா … Read more

கனியாமூர் தனியார் மேல்நிலைப் பள்ளி கலவர சம்பவம்.. வீடியோ உதவியால் மேலும் 3 பேர் கைது.!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் சக்தி மேல்நிலைப்பள்ளியில் நடந்த கலவரம் சம்பவம் தொடர்பாக மேலும்  3பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கலவரம் நடைபெற்ற போது அந்த பள்ளியின் வளாகத்தில் மாட்டுப்பண்ணை பொறுப்பாளரை மிரட்டி மாடுகளை கொள்ளை அடித்துச் சென்ற சின்னசேலத்தைச் பூவரசன், மணிகண்டன் மற்றும் ஆதிசக்தி  ஆகிய 3பேரை வீடியோ  மூலம் போலீசார் கண்டுபிடித்து கைது செய்துள்ளனர். Source link

முதல்வர் ஸ்டாலின் நாளை டெல்லி பயணம்: பிரதமர் மோடியை ஆக.17-ம் தேதி சந்தித்து கோரிக்கை மனு அளிக்கிறார்

சென்னை: நாளை டெல்லி புறப்பட்டுச் செல்லும் முதல்வர் ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து மாநிலம் தொடர்பான பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளிக்கிறார். தமிழக முதல்வராக ஸ்டாலின் கடந்த 2021-ம் ஆண்டில் பொறுப்பேற்ற பிறகு, டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, தமிழகத்தின் கோரிக்கைகளை வலியுறுத்தினார். பிரதமர்தமிழகம் வந்தபோதும் பல்வேறுகோரிக்கைகள் குறித்து வலியுறுத்தினார். அதில் நீட் தேர்வு, ஜிஎஸ்டி இழப்பீடு நீட்டிப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் நிலுவையில் தொடர்கின்றன. இந்த நிலையில், 44-வது செஸ்ஒலிம்பியாட் போட்டியை … Read more

ஓபன் ஆசியா ஆணழகன் போட்டி: முதல் மூன்று இடங்களை பிடித்த இந்திய வீரர்கள்

பல்வேறு நாடுகளில் இருந்து 140 பேர் பங்கேற்ற ஓபன் ஆசியா 2022 ஆணழகன் போட்டி ராமநாதபுரத்தில் நடைபெற்றது. ராமநாதபுரத்தில் இந்தியன் ஃபிட்னஸ், ஃபிட்னஸ் ஃபெடரேஷன் செயலாளர் ஜெகநாதன் தலைமையில் ஓபன் ஆசியா 2022 ஆணழகன் போட்டி நடைபெற்றது. இதில் சவுதி அரேபியா, துபாய், இலங்கை, அந்தமான், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து 140 பேர் கலந்து கொண்டனர். வேர்ல்ட் பாடி பில்டிங் பெடரேஷன், இந்தியன் பிட்னஸ் ஃபெடரேஷன் ராம்நாடு ஆகியோர் இணைந்து நடத்திய இந்தப் போட்டியை தனசேகரன் … Read more

சிறப்பான சேவை, புலன் விசாரணைக்காக 15 காவல் அதிகாரிகளுக்கு முதல்வரின் பதக்கங்கள்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழக காவல் துறையில் 15 அதிகாரிகளுக்கு சிறந்த பொதுசேவைக்கான முதல்வரின்பதக்கம், புலன் விசாரணைக்கான சிறப்பு பணி பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து தமிழக அரசுநேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு. மக்கள் சேவையில் தன்னலம் கருதாமல் சிறப்பாக செயல்பட்ட 5 காவல் துறை அதிகாரிகளின் சீரிய பணியை பாராட்டி சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறந்த பொது சேவைக்கான தமிழக முதல்வரின் காவல் பதக்கம் வழங்கப்படுகிறது. அதன்படி, சென்னை பெருநகர காவல் சட்டம் – ஒழுங்கு (தெற்கு) கூடுதல் ஆணையர் பிரேம் … Read more

‘தீபாவளிக்கு 5 நாட்கள் விடுமுறை அளியுங்கள்’ – அரசுக்கு எழுந்த கோரிக்கை

தீபாவளிக்கு 5 நாட்கள் விடுமுறை அளிக்க வேண்டுமென தமிழ்நாடு அரசுக்கு பட்டாசு வணிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பின் மூன்றாவது மாநில மாநாடு சிவகாசியில் நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் உள்ள ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட பட்டாசு வணிகர்கள், விருதுநகர் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர், சிவகாசி காங்கிரஸ் எம்எல்ஏ அசோகன் ஆகியோர் பங்கேற்றனர். இதில், பட்டாசுக்கான 18 சதவிகித ஜிஎஸ்டி வரியை 12 சதவிகிதமாகக் குறைப்பது உள்ளிட்ட, பட்டாசு வர்த்தகம் குறித்த கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுளிடம் முன்வைத்து, 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM