கோடிகளை அள்ளிக்கொடுக்கும் அமெரிக்க ஓபன்… சாம்பியன் பட்டம் வென்றால் எவ்வளவுன்னு பாருங்க!

U.S. Open 2022 TAMIL NEWS: ஆண்டுதோறும் நடத்தப்படும் டென்னிஸ் தொடர்களில் அமெரிக்க ஓபன் (U. S. Open) தொடரும் ஒன்று. இத்தொடர் வருகிற 29ம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 11ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில், இத்தொடருக்கான பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த தொடருக்கான மொத்த பரிசுத் தொகையாக 60 மில்லியன் டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 479 கோடி ரூபாய் போட்டியாளர்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், ஆடவர் … Read more

கோகுலாஷ்டமி பண்டிகைக்கு வீடுகளில் படையலிட்டு மக்கள் வழிபாடு: ஸ்ரீகிருஷ்ணர் கோயில்களில் சிறப்பு பூஜை

சென்னை: கோகுலாஷ்டமி எனப்படும் கிருஷ்ண ஜெயந்தியை பண்டிகையை முன்னிட்டு ஸ்ரீகிருஷ்ணர் கோயில்களில் நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மேலும், வீடுகளில் படையலிட்டு பக்தர்கள் வழிபாடு நடத்தினர். தமிழகம் முழுவதும் நேற்று ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி பண்டிகை விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை அக்கரையில் உள்ள கிருஷ்ணர் கோயிலுக்கு நேற்று காலை முதலே ஏராளமான பக்தர்கள் வந்தனர். நேற்று பகல் முழுவதும் சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடைபெற்றன. நேற்று முன்தினம் இரவு 10.30 மணிக்கு ஸ்ரீராதா கிருஷ்ணருக்கு … Read more

துணை வேந்தர்கள் நியமனத்துக்கு எதிர்ப்பு: தலைமை செயலாளருக்கு ஆளுநர் கடிதம்!

பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் ஆளுநரிடம் இருக்கிறது. இந்த நிலையில், பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை மாநில அரசு நியமிக்கும் சட்ட மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம், துணைவேந்தர்களை இனி ஆளுநருக்கு பதில், தமிழக அரசே நியமிக்கும். இதுவரை ஆளுநரின் அதிகாரத்திற்கு கீழ் இருந்த துணை வேந்தர்கள் நியமனம் இனி மாநில அரசின் நேரடி அதிகாரத்திற்கு வரும். உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியால் தாக்கல் செய்யப்பட்டு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கடந்த … Read more

மகளின் ஆசை: கிருஷ்ணர் வேடமிட்டு மகிழ்ந்த இஸ்லாமிய தம்பதியினர்

நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி நேற்று கொண்டாடப்பட்டது. நாட்டின் முக்கிய கோவில்களில் கிருஷ்ண ஜெயந்திவிழா கொண்டாட்டத்தில் பெரும் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டனர். இஸ்கான் சார்பில் சென்னை மற்றும் கோயமுத்தூரில் கிருஷ்ண ஜெயந்திவிழா கொண்டாடப்பட்டது. அதேபோல் பெங்களூர், ஹைதராபாத்,மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களிலும் கிருஷ்ண ஜெயந்தி வண்ண விளக்குகள், ஆராதனைகள் பஜனைகளுடன் கொண்டாடப்பட்டது. அத்துடன் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு தயில் உறியடி நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதனை ஏராளமானோர் கண்டு மகிழ்ந்தனர். இதே போல் குஜராத் மாநிலத்தின் பல்வேறு … Read more

திருச்சுழி பகுதியில் கண்மாய்களை ஆக்கிரமித்துள்ள கருவேல மரங்கள் அகற்றப்படுமா?: விவசாயிகள் எதிர்பார்ப்பு

திருச்சுழி: திருச்சுழி பகுதியில் உள்ள கண்மாய்களை ஆக்கிரமித்து கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.விருதுநகர் மாவட்டத்தில் அதிகளவில் வானம் பார்த்த பூமியாக உள்ளது. நெல் உள்ளிட்ட பல பயிர்கள் முழுக்க முழுக்க மழையை மட்டுமே நம்பியே பயிரிடப்படுகிறது. மழை காலங்களில் மழை நீரை சேமிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் கடந்த அதிமுக ஆட்சியில் கிடப்பில் போட்டனர்.திருச்சுழி ஒன்றியத்தில் உள்ள 135 கிராமங்களில் 103 ஒன்றிய கண்மாய்களும், 15 பொதுப்பணி துறைக்கு … Read more

சென்னை : கட்சி மாறியதால் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் நாட்டு வெடிகுண்டு வீச்சு.!

சென்னை கே.கே நகரில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை ஜாபர்கான் பேட்டையை சேர்ந்த பாலாஜி, ஜானேஸ்வரன், ராஜா மற்றும் கேசவன் உட்பட 20 க்கும் மேற்பட்டோர் ஒரே பகுதியில் நண்பர்களாக இருந்து வந்திருக்கிறார்கள். இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு பாலாஜி மற்றும் ஜானேஸ்வரன் உட்பட பலர் அதிமுகவில் இருந்து திமுகவிற்கு மாறியிருக்கிறார்கள். அன்று முதல் ஒரே பகுதியில் வசித்த நண்பர்கள் இரு … Read more

கிராமுக்கு கொஞ்சமா கூடிய தங்கம்.. ஆறுதல் அளிக்கும் வெள்ளி

சென்னையில் ஒரு கிராம் 22 காரட் ஆபரணத் தங்கம் ரூ.4,830 என நிர்ணயிக்கப்பட்டு சவரன் (8 கிராம்) ரூ.38,640 ஆக உள்ளது.24 காரட் 99.99 தூயத் தங்கத்தை பொறுத்தவரை கிராமுக்கு ரூ.5,232 என நிர்ணயிக்கப்பட்டு சவரன் ரூ.41,856 ஆக காணப்படுகிறது. ஆறுதல் அளிக்கும் வெள்ளிஇது நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில் கிராமுக்கு ரூ.8ம், சவரனுக்கு ரூ.64ம் அதிகமாகும். இந்த மாதத்தில் ஆகஸ்ட் 13ஆம் தேதி ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.4,914 ஆக அதிகரித்து காணப்பட்டது.வெள்ளியை பொறுத்தமட்டில் கிராம் ரூ.61.30 … Read more

மாநகராட்சி சார்பில் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் இன்றும், நாளையும் ‘சென்னை தினம்’ கொண்டாட்டம்

சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில் பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரையில் இன்றும், நாளையும் சென்னை தினம் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இது தொடர்பாக சென்னை மாநகராட்சிவெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னைப் பட்டினம் 1639-ம் ஆண்டு உருவானது. 383 ஆண்டுகளில் சென்னை மாநகரமாக பல்வேறு நிலைகளில் வளர்ச்சி அடைந்துள்ளது. ஒவ்வோர் ஆண்டும் ஆக.22-ம்தேதி சென்னை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு சென்னை தினத்தை கொண்டாடும் வகையில் மாநகராட்சி சார்பில் இன்றும் (ஆக.20), நாளையும்(ஆக.21) இந்திய தொழில் கூட்டமைப்புடன் இணைந்து … Read more

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: உடனடி நடவடிக்கை கோரும் திருமாவளவன்

நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையின் மீது தாமதிக்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் விவகாரத்தையொட்டி நடந்த துப்பாக்கி சூடு தொடர்பாக விசாரணை செய்வதற்கென நியமிக்கப்பட்ட நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் கடந்த மே மாதம் 18ஆம் தேதி தனது அறிக்கையைத் தமிழக அரசிடம் அளித்தது. சுமார் 3000 பக்கங்களைக் கொண்ட அந்த அறிக்கையில் என்ன … Read more

குடும்ப பிரச்சனை காரணமாக தந்தையை கொலை செய்த மகன்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் ராஜ். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருடைய மகன் கார்த்தி (40) லோடுமேன் ஆக பணிபுரிந்து வருகிறார். கார்த்திக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு வந்துள்ளது. இதனால் கார்த்தியின் மனைவி கடந்த சில வருடங்களுக்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.  அந்த நிலையில் இந்த வழக்கில் கார்த்தி கடந்த 10 வருடங்களாக சிறை … Read more