ஊராட்சி மன்ற தலைவரை கட்டையால் அடித்து கொலை செய்த மர்ம நபர்கள்.!

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே ஊராட்சி மன்ற தலைவரை கட்டையால் அடித்து கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நரசிம்மமூர்த்தி என்பவர் தாரவேந்திரம் பஞ்சாயத்து தலைவராக உள்ளார். இரவில் அவர் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த போது அவரை பின்தொடர்ந்து சென்ற மர்ம நபர்கள் அவரை கட்டையால் அடித்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றதாக கூறப்படுகிறது. Source link

கோவை, தேனி உட்பட 4 மாவட்டங்களில் இன்று அதி கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது: தமிழக கடலோரப் பகுதிகளில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், தமிழக வளிமண்டலத்தின் மத்திய பகுதியில் கிழக்கு – மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதியில் நீட்சி (shear zone) நிகழ்கிறது. இப்பகுதி அடுத்து வரும் நாட்களில் வடக்கு நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் பெரும்பாலான இடங்களில் ஆகஸ்ட் 5-ம் தேதி வரை லேசானது முதல்மிதமான மழை பெய்யக்கூடும். … Read more

ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றுக: சைக்கிளில் சென்று ஆட்சியரிடம் மனு அளித்த பள்ளி மாணவி

ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி 7ஆம் வகுப்பு மாணவி 60 கிமீ தூரம் சைக்கிள் பயணம் மேற்கொண்டு ஆட்சியரிடம் மனு அளிக்க உள்ளார். விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் தாலுகா கலத்தம்பட்டு ஊராட்சிக்குட்பட்ட அன்னபள்ளம் கிராமத்தில் 12 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி உள்ளது. இதில், 5 ஏக்கர் பரப்பளவில் வீடுகள் மற்றும் விளை நிலங்களாக ஆக்கிரமித்துள்ளனர். இது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இந்நிலையில், அதே கிராமத்தைச் சேர்ந்த விவசாயி புவனேஸ்வர் என்பவரின் … Read more

5G அலைக்கற்றை ஏலம் நிறைவு… 4 நிறுவனங்கள்.. அள்ளிய ஜியோ… முழு விவரம் உள்ளே!

இந்தியாவில் 5ஜி சேவை வழங்குவதற்கான அலைக்கற்றை ஏலம் கடந்த ஜூலை 26 ஆம் தேதி இணையதளம் வாயிலாக தொடங்கியது. 7 நாட்களாக 40 சுற்றுகளாக நடைபெற்ற ஏலம் கடந்த திங்கட்கிழமை நிறைவடைந்தது. இந்த ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஐடியா, அதானி குழுமத்தின் அதானி டேட்டா நெட்வர்க் ஆகிய 4 நிறுவனங்கள் பங்கேற்றன. மொத்தம் ரூ.1.50 லட்சம் கோடிக்கு 5G அலைக்கற்றை ஏலம் எடுக்கப்பட்டது. ஜியோ நிறுவனம் அதிகபட்சமாக ரூ.88 ஆயிரம் கோடிக்கு ஏலம் எடுத்தது. … Read more

இளம்பெண்ணை வீடுபுகுந்து கடத்திய கும்பல்.. நெடுஞ்சாலையில் காருடன் மடக்கிப் பிடித்த போலீசார்.!

மயிலாடுதுறையில் நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து கடத்திச் செல்லப்பட்ட இளம்பெண், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே மீட்கப்பட்டார். காதல் விவகாரத்தில், இளம்பெண்ணை கடத்திச் சென்ற கும்பலைச் சேர்ந்த 3பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை கஞ்சமேட்டுத்தெருவைச் சேர்ந்த விக்னேஸ்வரன் என்ற இளைஞர், மயிலாடுதுறை ((மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள)) மயிலம்மன் நகரில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கியிருந்துள்ளார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த 23 வயது பட்டதாரி இளம்பெண் ஒருவரை அவர் காதலித்துள்ளார். … Read more

மின்கட்டணத்தை ஆண்டுதோறும் 6 சதவீதம் உயர்த்த திட்டம்: ஒழுங்குமுறை ஆணையத்திடம் அனுமதி கோரும் மின்வாரியம்

சென்னை: ஆண்டுதோறும் 6% மின் கட்டணத்தை உயர்த்த மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் மின் வாரியம் அனுமதி கோரியுள்ளது. தமிழக மின்வாரியம், ஆண்டுதோறும் நவம்பருக்குள் தன் மொத்த வருவாய், தேவை அறிக்கையை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் சமர்ப்பிக்கும். அந்த அறிக்கையை ஆணையம்ஆய்வு செய்து, வருவாயைவிட செலவு அதிகம் இருந்தால், பற்றாக்குறையை ஈடுகட்ட மின் கட்டணத்தை உயர்த்த மின்வாரியத்துக்கு அனுமதி வழங்கும். 2021-22 நிலவரப்படி மின்சார வாரியத்தின் மொத்த கடன் சுமைரூ.1.58 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. 2021-22-ல் மின்வாரியம்கடனுக்காக செலுத்த … Read more

ஓசூர்: பஞ்சாயத்து தலைவர் அடித்துக் கொலை – மர்ம நபர்களுக்கு போலீசார் வலை

பஞ்சாயத்து தலைவரை கட்டையால் தாக்கி படுகொலை செய்த சம்பவம் தளி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த தளி அருகே பிபி பாளையம் செல்லும் வழியில் ஒருவர் இறந்து கிடப்பதாக தளி போலீசாருக்கு தகவல் கிடைத்தது இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இருசக்கர வாகனம் கீழே விழுந்து கிடந்துள்ள நிலையில், 100மீட்டர் தொலைவில் தலையில் தாக்கப்பட்டு இரத்த வெள்ளத்தில் சடலம் கிடந்துள்ளது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் இறந்தவர் … Read more

அழகிய பெரியவன் எழுதும் ஒவ்வொரு விரலிலும் உலகம் – 14

அழகிய பெரியவன் *வேகம் வேடிக்கையல்ல*சென்னையிலிருந்து ஆம்பூருக்கு தொடர்வண்டியில் திரும்பி கொண்டிருந்தபோது அந்தக் காட்சியைப் பார்த்தேன். ஒரு நிலையத்தில் வண்டி நின்று புறப்பட்டதும், இளைஞர் ஒருவர் வண்டி போகும் திசையில் பின்புறமாகவே ஓடியபடி செல்ஃபி வீடியோ எடுத்தார். நடைமேடையில் பாதுகாப்புக்கு போடப்பட்டிருக்கும் மஞ்சள் கோட்டுக்கு உள்ளே, தொடர்வண்டிக்கு மிக நெருக்கமாக, பத்தடி தொலைவுக்கு அந்த இளைஞர் அப்படி பின்புறமாக ஓடினார். நடைமேடையில் இருந்த பயணிகளும், தொடர் வண்டிக்குள் இருந்த பயணிகளும் கத்திக் கூச்சலிட்டனர். அதற்கு அவரின் முகத்திலிருந்து ஓர் … Read more

பாரி வேட்டையில் ஈடுபட்ட கிராம மக்கள்.. 50 பேருக்கு தலா ரூ.5,000 ரூபாய் அபராதம் விதித்த வனத்துறையினர்..!

ஆடிப்பெருக்கை முன்னிட்டு பழனி அருகே பாரி வேட்டை நடத்துவதற்காக கரூர் மாவட்டத்தில் இருந்து வேட்டை நாய்களுடன் வந்திருந்த 50 பேரை போலீசார் கைது செய்தனர். தொப்பம்பட்டி பகுதியில் பலர் வேட்டை நாய்களுடன் சுற்றித்திரிவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அங்கு விரைந்த வனத்துறையினர் அவர்களிடம் விசாரித்தபோது கரூர் மாவட்டம் தோகைமலையை சேர்ந்த அவர்கள் பாரி வேட்டையில் ஈடுபட 26 வேட்டை நாய்களுடன் வந்திருப்பது தெரியவந்தது. வன விலங்குகளை வேட்டையாடக்கூடாது என எச்சரித்த வனத்துறையினர் ஆளுக்குத் தலா 5,000 ரூபாய் … Read more

கலை, அறிவியல் கல்லூரியில் சேர ஆக.5-ல் கலந்தாய்வு தொடக்கம்

சென்னை: அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஆக. 5-ம் தேதி தொடங்கும் என்று கல்லூரிக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் 163 அரசு கலை,அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு சுமார் 1.30 லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. இவற்றுக்கான மாணவர் சேர்க்கை இணையவழியில் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு கடந்த ஜூன் 20முதல் ஜூலை 27-ம் தேதி வரை நடைபெற்றது. மொத்தம் 4.07 லட்சம் மாணவர்கள் பதிவு … Read more