கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தென்காசி மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு

தென்காசி: கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தென்காசி மாவட்டம் முழுவதும் இன்று காலை 6 மணி முதல் செப்டம்பர் 2- தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-தென்காசி மாவட்டம் சிவகிரி தாலுகா பச்சேரி கிராமத்தில் 20-ந்தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ள ஒண்டிவீரன் 251-வது வீரவணக்க நாள் நிகழ்ச்சி மற்றும் செப்டம்பர் 1-ம் தேதி நெற்கட்டும்செவல் கிராமத்தில் நடைபெறும் மாவீரன் பூலித்தேவன் பிறந்தநாள் நிகழ்ச்சியில் … Read more

சிறுமி கருமுட்டை விற்கப்பட்ட விவகாரம்: தாய் உட்பட 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்கிறது!

சிறுமியின் கருமுட்டை விற்கப்பட்ட விவகாரத்தில் சிறுமியின் தாய் உட்பட 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. சிறையிலிருக்கும் 4 பேருக்கு உத்தரவு நகல் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். ஈரோட்டில் 16 வயது சிறுமியின் கருமுட்டை விற்கப்பட்ட விவகாரம் பெரிய அளவில் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி ஈரோடு தெற்கு காவல் நிலையதில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அச்சிறுமியின் தாய் இந்திராணி, இரண்டாவது கணவர் சையத் அலி, இடைத்தரகர் மாலதி மற்றும் … Read more

புரோட்டீன் ரொம்ப முக்கியம்: சுகர் பேஷன்ட்ஸ் இந்த உணவுகளை தேடிச் சாப்பிடுங்க!

சர்க்கரை நோய் உள்ளவர்கள் உணவில் உள்ள கார்போஹைட்ரேட்டுகள் எப்படி குறைப்பது என்றுதான் யோசிக்கிறார்கள். இதற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை மற்ற சத்துகளை நாம் சாப்பிட வேண்டும் என்பதற்கு அவர்கள் கொடுப்பதில்லை. இதில் முக்கியமான புரோட்டீன் நிறைந்த உணவுகளுக்கு நாம் முக்கியத்துவம் கொடுப்பதில்லை.  நமது தசைகளில்தான் எல்லா புரோட்டீன்களும் இருக்கிறது. புரோட்டீன்களை உடைத்து, அதை குளுக்கோஸாக மாற்றி அதில் கிடைக்கும் ஆற்றலை உடல் சக்தியாக பயன்படுத்துக்கொள்கிறது. இந்தியா ஒரு கார்போஹைட்ரேட் உணவுகளை விரும்பும் நாடாக இருக்கிறது. ஐசிஎம்ஆர் அறிவுரைப்படி நாம் … Read more

’இணைந்து செயல்பட வாய்ப்பில்லை; ஓபிஎஸ் அழைப்பை ஏற்க முடியாது’ – இபிஎஸ் திட்டவட்டம்

சென்னை: ஓ.பன்னீர் செல்வத்துடன் இணைந்து செயல்பட முடியாது என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். அதிமுக பொதுக் குழு தீர்ப்பு தொடர்பாக சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், “முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்து அதிமுகவுக்காக உழைத்தவர்கள் சசிகலா, டிடிவி தினகரன் உள்பட யாராக இருந்தாலும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்” என்று தெரிவித்தார். இந்த கோரிக்கையை எடப்பாடி பழனிசாமி நிராகரித்து உள்ளார். இது தொடர்பாக சென்னை கிரீன்வேஸ் சாலையில் … Read more

முதல்வர் வீட்டுக்கு சென்ற ஆளுநர்: இப்படியொரு சர்ப்ரைஸ் விசிட்!

பாஜகவின் தாமரை தமிழகத்தில் மலர்ந்தே தீரும் என வீதி வீதியாக முழங்கியவர் தமிழிசை சௌந்தர்ராஜன். அவர் பாஜக மாநிலத் தலைவராக இருந்த காலகட்டத்தில் தான் அக்கட்சிக்கு புதிய ரத்தம் பாய்ச்சப்பட்டது. தமிழகத்தில் அக்கட்சி பேசுபொருளானது. தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவிய அவர் மாநிலங்களவை மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு மத்திய அமைச்சராவார் என அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த போது தெலங்கானாவுக்கு ஆளுநராக நியமிக்கப்பட்டார். பின்னர் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பொறுப்பும் தமிழிசை கைகளில் சேர்த்து … Read more

பாரதமாதா நினைவாலய பூட்டு உடைப்பில் கைது; பாஜ மாநில துணைத்தலைவர் சிறைக்கு செல்ல மறுத்து அடம்: சேலம் ஜிஎச்சில் தேம்பி தேம்பி அழுதார்

சேலம்: பாரத மாதா நினைவாலயத்தின் பூட்டை உடைத்த வழக்கில் கைதான பாஜ மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம், மருத்துவமனையில் இருந்து சிறைக்கு செல்ல மறுத்து அடம்பிடித்து தேம்பி தேம்பி அழுதார். அவரை வலுக்கட்டாயமாக போலீசார் அழைத்து சென்று, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் பாஜ சார்பில் நடந்த பாத யாத்திரையின்போது, மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் பாரத மாதா நினைவாலய கதவுகளின் பூட்டை உடைத்து உள்ளே சென்று, சிலைக்கு மாலை அணிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக, … Read more

ஒரே கிராமத்தைச் சேர்ந்த 4 சிறுவர்கள் மீது மின்சாரம் தாக்கி மருத்துவமனையில் அனுமதி.!

திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்ற இல்லம் தேடி கல்வித்திட்ட வகுப்பிற்கு சென்ற ஒரே கிராமத்தைச் சேர்ந்த 4 மாணவர்கள் மின்சாரம் தாக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருவாதிரைமங்களம் பகுதியில் சங்கர் என்பவருக்கு சொந்தமான கீற்று கொட்டகையில் கல்விக்கான வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வகுப்பிற்கு சென்ற சந்துரு, நிஷ்வந்த், யஷ்வந்த், சுரேஷ்குமார் ஆகிய சிறுவர்கள் அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்திருந்த கம்பி வேலியை தொட்டுள்ளனர். இதில், நால்வரும் தூக்கிவீசப்பட்ட நிலையில், கிராம மக்கள் அவர்களை … Read more

சிறந்த ஆலோசகர்களால் இந்த அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது: அமைச்சர் பிடிஆர் பேச்சு

சென்னை: “நல்ல கருத்துக்களை யார் சொன்னாலும் முதல் ஆளாக ஏற்போம் எனவும், சர்வாதிகாரமாக சொல்லும் அறிவுரைகளை ஒருபோதும் ஏற்க மாட்டோம் என்றும்” நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். மதுரை எஸ்.எஸ்.காலனியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற நிதி அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் 586 பயனாளிகளுக்கு ரூ.93 லட்சம் மதிப்பிலான திட்டங்களை வழங்கி தொடங்கி வைத்தார். அப்போது மேடையில் பேசிய நிதி அமைச்சர் பிடிஆர்., “ஒரு சமுதாயத்திற்கு கலாச்சாரமும், … Read more

செந்தில் பாலாஜி அடிக்கப் போகும் சிக்ஸர்… ஸ்டாலினுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்!

தமிழக முதல்வர் கடந்த மாதம் 15ஆம் தேதி கோவை வருகை புரிந்து அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து, கோவை பயணம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் வரும் 24ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவை வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு நடக்கும் அரசு விழாவில் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார். இந்நிலையில் முதல்வர் வருகை தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் கோவை மாவட்ட … Read more

உயர்நீதிமன்ற தீர்ப்பின் மூலம் அரசியல் அனாதையானார்; எடப்பாடி நாஞ்சில் சம்பத் கருத்து

கடலூர்: உயர்நீதிமன்ற தீர்ப்பின் மூலம் அரசியல் அனாதையாகி உள்ளார் எடப்பாடி பழனிசாமி என நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார். கடலூரில் நேற்று நாஞ்சில் சம்பத் அளித்த பேட்டி: அதிமுக தலைவராக நாடகமாடிய எடப்பாடி பழனிசாமிக்கு உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. தன்னை முதலமைச்சராக்கிய சசிகலா தலையிலே கை வைத்து, அவரை கட்சியிலிருந்து நீக்கியவர்தான் இந்த எடப்பாடி. இவர் எந்த காலத்திலும் தமிழ்நாட்டு அரசியலில் வெற்றி பெற முடியாது. கொள்ளையடித்த பணத்தை வைத்து பொதுக்குழு உறுப்பினர்கள் மூலம் … Read more