கோபிச்செட்டிப்பாளையம் அருகே இரு கார்கள் மோதி விபத்து

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் அருகே அதிவேகமாக சென்ற இரு கார்கள் மோதிக்கொண்ட விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பாஸ்கரன் என்பவர் தமது குடும்பத்தினருடன் காரில் பெங்களுரு சென்று கொண்டிருந்தார். கோபிச்செட்டிப்பாளையம் அருகே சென்றபோது, சரக்கு வாகனத்தை பாஸ்கரன் முந்த முயன்றதாக கூறப்படுகிறது. அதே சமயத்தில், மற்றொரு காரும் பாஸ்கரனின் காரை முந்த முயற்சித்தது. அப்போது, எதிர்பாராவிதமாக அந்த கார் பாஸ்கரனின் கார் மீது மோதியதில், இரு கார்களும் சாலையோர விவசாய நிலத்தில் புகுந்து நின்றன. … Read more

'நீலகிரி மக்களுக்காக போராடுவேன்' – அதிமுக ஓபிஎஸ் அணி மாவட்டச் செயலாளர் பேச்சு

கோத்தகிரி: ”நீலகிரி மக்களுக்காக போராட்டங்கள் நடத்தப்படும்” என்று புதியதாக நியமிக்கப்பட்ட ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளர் எம்.பாரதியார் தெரிவித்தார். அதிமுக ஓபிஎஸ் அணி சார்பில் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். நீலகிரி மாவட்ட செயலாளராக வெலிங்டன் கன்டோன்மெண்ட் துணை தலைவர் எம்.பாரதியார் நியமிக்கப்பட்டுள்ளார். பொறுப்பு ஏற்றுக்கொண்ட பாரதியார் தனது ஆதரவாளர்களுடன் இன்று கோத்தகிரியில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். அவருக்கு அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி வரவேற்பு அளித்தனர். அப்போது … Read more

புதுக்கோட்டை: கோயில் தேர் சாய்ந்து 5 பேர் காயம்.. விபத்துக்கு என்ன காரணம்?

புதுக்கோட்டையில் முறையான பராமரிப்பு இன்றி தேரோட்டம் நடைபெற்றதால் தேர் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. புதுக்கோட்டை திருக்கோகர்னேஸ்வரர் கோவிலில் தேரோட்டம் இன்று காலை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்துச் செல்ல முயன்றனர். மேடான பகுதியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தேரை, அதிகப்படியாக பக்தர்கள் வடம் பிடித்து இழுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மேடான பகுதியிலிருந்து தேர் வேகமாக கீழிறங்கியபோது, அதன் வேகத்தை கட்டுப்படுத்துவதற்காக சக்கரத்தின் கீழ் தடுப்புக்கட்டையை வைத்ததாக தெரிகிறது. பொதுவாக தேரின் … Read more

திமுக அரசின் திறனற்ற செயல்பாட்டால் தேர் விபத்துகள் தொடர்கின்றன: அண்ணாமலை விமர்சனம்

புதுக்கோட்டையில் பிரசித்தி பெற்ற அரைக்காசு அம்மன் பிரஹதாம்பாள் திருக்கோயில் தேர் திருவிழாவின் போது, தேர் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதற்கு அரசு அதிகாரிகளின் மெத்தனபோக்கும், தமிழக அரசின் திறன்றற செயல்பாடுமே காரணம் என பாஜக குற்றம்சாட்டியுள்ளது. இது தொடர்பாக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழகத்தில் சமீபத்தில் தஞ்சை, தர்மபுரி, உளுந்தூர்பேட்டை எனத் தொடர்ச்சியாகத் தேர் விபத்துகள் நடைபெற்று வருகிறது. இந்து சமய அறநிலையத் துறையின் அமைச்சரும், அதிகாரிகளும், திருக்கோயில் தேர்களின் தரத்தை பரிசோதிக்க வேண்டிய பொதுப்பணித் … Read more

திம்பம் மலைப்பாதையில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார் – அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய பயணிகள்

திம்பம் மலைப்பாதை 19 ஆவது கொண்டை ஊசி வளைவில் கார் தீப்பிடித்து எரிந்தது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர். தமிழக – கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அம்மன் கோவிலை அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. இந்த மலைப்பாதை வழியாக இரு மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று திம்பம் மலைப் பாதையில் சென்று கொண்டிருந்த … Read more

மழைக்காலத்தில் முடங்கும் மதுரை: வெள்ளத்தில் மிதக்கும் சாலைகள்; ஸ்தம்பிக்கும் போக்குவரத்து

மதுரை: மதுரை மாநகரில் வைகை ஆறு, கண்மாய்கள் போன்ற ஏராளமான நீர் ஆதாரங்கள் இருந்தும் இயற்கை இலவசமாக கொடுக்கும் மழைநீரை அதில் சேமிப்பதற்கு மழைநீர் கால்வாய் கட்டமைப்பு இல்லாததால் மழைக்காலத்தில் மதுரை வெள்ளத்தில் தத்தளிப்பதோடு மழைநீரும் சேமிக்கப்படாமல் வீணாகி வருகிறது. மதுரை மாநகராட்சியின் மக்கள் தொகை 20 லட்சத்தை தாண்டியுள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்களும் நகர்ப்பகுதியிலேயே வசிக்க ஆர்வம் காட்டுகின்றனர். மக்கள் அடர்த்தி மிகுதியால் நகர்பகுதியில் சிறு காலியிடங்களைக் கூட வீணாக்காமல் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. … Read more

கோவிலுக்கு சென்ற சென்ற மூதாட்டி நகைக்காக கழுத்தறுத்து கொலை.. ஓமலூர் அருகே பயங்கரம்

ஓமலூர் அருகே கோவிலுக்கு சென்ற சென்ற மூதாட்டி நகைக்காக கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். இந்த கொலை குறித்து தாரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுக்கா தாரமங்கலம் அருகேயுள்ள துட்டம்பட்டி மந்திவளவு பகுதியைச் சேர்ந்த விவசாயி கந்தசாமி. இவருடைய மனைவி சின்னம்மாள்(78 வயது) தனது வீட்டருகில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்று வருவதாகக் கூறிவிட்டு சென்றவர், வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அக்கம்பக்கத்தில் உறவினர் வீடுகளில் தேடிப்பார்த்தும் காணவில்லை. இதையடுத்து சின்னம்மாளின் பேரன் … Read more

மதுரையில் இருந்து வேளாங்கண்ணிக்கு பார்வை மாற்றுத்திறனாளி தலைமையில் 180 பேர் பாதயாத்திரை

மதுரை: மதுரையில் இருந்து வேளாங்கண்ணிக்கு 37வது ஆண்டாக பார்வை மாற்றுத்திறனாளி தலைமையில் 180 பேர் பாதயாத்திரைக்கு புறப்பட்டனர். மதுரை புது சிறை வீதி மதுரை மில் காலனியில் வசிப்பவர் பாக்கியம் எனும் பார்வையற்ற மாற்றுத்திறனாளி. இவர் கடந்த 1985 ஆம் ஆண்டு முதல் ஆரம்பத்தில் 5 பேருடன் மதுரையிலிருந்து நாகை மாவட்டம் அன்னை வேளாங்கண்ணி ஆலயத்திற்கு பாதயாத்திரையாக புறப்பட்டார். அதன்பிறகு ஒவ்வோர் ஆண்டும் இவருடன் இணைந்து பாதயாத்திரை செல்பவர்களின் எண்ணிக்கை அதிகமானது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் … Read more

மகளிரை உற்சாகப்படுத்த நெல்லையில் நடைபெற்ற மகளிர் அழகிப் போட்டி

பாளையங்கோட்டையில் குழந்தைகள் மற்றும் மகளிருக்கான அழகிப்போட்டி நடைபெற்றது. இதில் ஏராளமான குழந்தைகள் மற்றும் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் சிகை அலங்காரம் மற்றும் அழகு கலை நலச் சங்கத்தின் சார்பில் அழகிப் போட்டி நடைபெற்றது. இதில், சிகை அலங்காரம் மற்றும் அழகு கலை உரிமையாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் பாளையங்கோட்டையில் மெகந்தி, மேக் அப் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது. இதில், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கோவில்பட்டி, கன்னியாகுமரி அண்டை மாநிலமான கேரளா உள்ளிட்ட … Read more

சென்னையில் மீண்டும் ஒழுகிய ஆவின் பால் பாக்கெட்டுகள்!

சென்னை பழைய வண்ணாரப் பேட்டையில் கடந்த வியாழக்கிழமை ஆவின் பால் விநியோகஸ்தர் 300 லிட்டர் (ஆரஞ்சு) பால் பாக்கெட்டுகளை மாதாவரம் பால் பண்ணையில் இருந்து வாங்கியிருந்தார். இந்த 300 லிட்டர பால் பாக்கெட்டுகளில் சில பாக்கெட்டுகள் உடைந்துபோய் காணப்பட்டன. இதனால் சில பாக்கெட்டுகளில் இருந்த பால் கசிந்து வீணானது.இது குறித்து பேசிய தமிழ்நாடு பால் முகவர் சங்கத் நிறுவனத் தலைவர் பொன்னுச்சாமி, “இது தொடர்ச்சியாக நடைபெற்றுவருகிறது. இதனால் பால் முகவர்கள் பாதிக்கப்படுகின்றனர். மேலும் ஒரு பால்முகவர் 300 … Read more