காலை உணவாக தயிர்- வாழைப் பழம்: இந்த 5 நன்மைகள் இருக்கு!

ஒவவொருவருக்கும் காலை உணவு என்பது மிகவும் முக்கியமானது. அன்றைய தினம் முழுவதும் உடல் சுறுசுறுப்பாக இயங்குவதற்கு காலை உணவு ஒரு முக்கிய தேவையாக உள்ளது. இதனால் சத்தான ஊட்டச்சத்து அதிகம் உள்ள காலை உணவை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். எனவே இயற்கையில் அதிக சத்தானது எது என்பதை உணர்ந்து அந்த உணவுகளை தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த வகையில் காலை உணவாக தயிர் மற்றும் வாழைப்பழத்தின் கலவையை எடுத்துக்கொள்வது ஆரோக்கியமானது மட்டுமல்லாமல் ஊட்டச்சத்து நிறைந்ததாகவும் உள்ளது. இதை … Read more

11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முறை தொடரும்: அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

சென்னை: 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு வழக்கம்போல் நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார். சென்னையில் உள்ள பாரத சாரண, சாரணியர் இயக்க மாநிலத் தலைமை அலுவலகத்தில் சாரண, சாரணியர் இயக்க புரவலரும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று தேசியக் கொடி ஏற்றினார். இதனைத் தொடர்ந்து சாரண, சாரணியர்களின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், ” … Read more

பிரபல நடிகையுடன் தொடர்பு? யார் அந்த மாஜி அமைச்சர்?

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் அன்புச்செழியன். இவர் கோபுரம் பிலிம்ஸ் எனும் சினிமா தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். சினிமாவுக்கு ஃபைனான்ஸ் செய்வது உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்து வந்தாலும், ஃபைனான்ஸ்தான் இவரது பிரதான தொழில். ஒரு மணி நேரத்தில் ரூ.10 கோடியை உடனே கொடுக்கும் வல்லமை படைத்தவர் என்று இவர் குறித்து பேசப்படும் போதெல்லாம் சொல்லப்படும். அதேசமயம், வட்டி பணத்தை வசூல் செய்வதில் கறாராக செயல்படும் இவர், அதற்காக கட்டப்பஞ்சாயத்துகளிலும் ஈடுபடுவதாக குற்றம் சாட்டப்படுகிறது. ஆனாலும், இவர் … Read more

பெரியாரின் சிலையை உடைக்க சொன்ன கனல் கண்ணன் கைது

மதுரவாயலில் கடந்த ஒன்றாம் தேதி நடந்த கூட்டமொன்றில் இந்து முன்னணி மாநில கலை பண்பாட்டு பிரிவின் செயலாளரும், பிரபல சண்டை பயிற்சியாளருமான கனல் கண்ணன் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், ஸ்ரீரங்க கோயிலுக்கு முன் இருக்கும் கடவுள் இல்லை என்று சொன்னவரின் சிலை என்றைக்கு உடைக்கப்படுகிறதோ அன்றுதான் இந்துக்களின் உண்மையான எழுச்சி நாளாக இருக்கும் என்றார். அவரது இந்தப் பேச்சு மிகப்பெரிய விவாதமாக மாறியது. மேலும் அவரை கைது செய்ய வேண்டுமென்றும் பலரும் வலியுறுத்தினர். சூழல் இப்படி … Read more

சென்னை: அரசுப் பேருந்து மோதி பள்ளி மாணவி உயிரிழப்பு – ஓட்டுநர் காவல்நிலையத்தில் சரண்

சென்னையில் தனியார் பள்ளியில் சுதந்திர தின விழாவை கொண்டாடிவிட்டு சைக்கிளில் வீடு திரும்பியபோது மாநகரப் பேருந்து மோதி 12-ம் வகுப்பு மாணவி விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவத்தில் தொடர்புடைய மாநகரப் பேருந்து ஓட்டுநர் சிட்லப்பாக்கம் காவல் நிலையத்தில் சரணடைந்தார். சென்னை குரோம்பேட்டை அடுத்த அஸ்தினாபுரம், ராஜேந்திர பிரசாத் சாலையில் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த 12-ம் வகுப்பு பள்ளி மாணவி லட்சுமி ஸ்ரீ(17), மாநகரப் பேருந்து மோதி தலை நசுங்கி சம்பவ … Read more

Ind vs Zim 1st ODI: கேப்டனாக ராகுல்… தேதி, நேரலை ஒளிபரப்பு, முழு அட்டவணை

India Tour of Zimbabwe 2022 Schedule, Squads, Venues, Dates, Time, Live Telecast, and Live Streaming Details Tamil News: ஜிம்பாப்வே நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய கிரிக்கெட் அணி, அந்த அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி வரும் 18 ஆம் தேதி (பிற்பகல் 12.45 மணி) ஹராரேயில் நடக்கிறது. நேற்று முன்தினம் ஹராரே சென்றடைந்த இந்திய … Read more

#கடலூர் || குடும்ப தகராறில் கணவர் தூக்கு போட்டு தற்கொலை

கடலூர் மாவட்டத்தில் குடும்ப தகராறில் கணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள வடக்கு திட்டை பகுதியை சேர்ந்தவர் விவசாயி அருள்செல்வம்(40). இவரது மனைவி மஞ்சமாதா. இந்நிலையில் அருள் செல்வம் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து வீட்டில் மனைவியோடு தகராறு செய்து வந்துள்ளார். இதேபோல் நேற்று மாலை அருள் செல்வம் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்ததால் கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன வேதனை அடைந்த அருள் … Read more

நாட்டின் 75வது சுதந்திர தினம்.. தமிழகம் முழுவதும் தேசிய கொடி ஏற்றி கொண்டாடிய மாவட்ட ஆட்சியர்கள்!

நாட்டின் 75வது சுதந்திர தினவிழாவையொட்டி தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர்கள் தேசிய கொடி ஏற்றி காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டனர். திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தேசியக்கொடியை ஏற்றினார்.  சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தேசிய கொடியை ஏற்றினார். நாட்டின் 75வது சுதந்திரதின விழாவை முன்னிட்டு  மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா தேசியக் … Read more

’ஓபிஎஸ் தவறை உணர்ந்து மாறிவிட்டார்; இபிஎஸ் திருந்துவதற்கு வாய்ப்பே இல்லை’ – டிடிவி தினகரன்

சென்னை:” எடப்பாடி பழனிசாமி திருந்தினால் அவரோட சேர்வது குறித்து பார்ப்போம். ஆனால், எனக்கு தெரிந்தவரை அவர் திருந்துவதற்கு வாய்ப்பே இல்லை. பதவி, ஆட்சி வெறியில் தனது குடும்ப உறுப்பினர்களுக்குக்கூட அவர் துரோகம் செய்யக்கூடியவர். அவருடன் இருக்கும் ஒரு 10 பேர், அவர்கள் செய்திருக்கக்கூடிய தவறுகளுக்கு தண்டனை அனுபவிக்கின்ற காலம் நெருங்கிக்கொண்டிருக்கிறது” என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில், அமமுக பொதுக்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. … Read more

'நாவடக்கம் தேவை..!' – அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு ஜெயக்குமார் எச்சரிக்கை!

விடியா அரசின் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களுக்கு நாவடக்கம் தேவை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தன்னுடைய துறையில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல், மக்களின் உயிரைக் காக்கும் மக்கள் நல்வாழ்வுத் துறையை கடந்த 14 மாத காலமாக, தனது தற்குறி நிர்வாகத்தால் கோமா நிலைக்குக் கொண்டு சென்ற, மா.சு. என்று ஆளும் கட்சியினரால் அன்போடு (?) அழைக்கப்படும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் … Read more