Tamil news today live : செஸ் ஒலிம்பியாட் விளம்பரம் : நீதிமன்றத்தில் முறையீடு

Go to Live Updates பெட்ரோல், டீசல் விலை சென்னையில் இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ.94.24 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. செஸ் ஒலிம்பியாட் தொடக்கம் இந்தியாவில் முதல்முறையாக நடைபெறும் சர்வதேச செஸ் போட்டியான செஸ் ஒலிம்பியாட் மாமல்லபுரத்தில் இன்று முதல் தொடங்குகிறது. 187 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் போட்டியில் பங்கேற்கின்றன. போட்டியை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். செஸ் ஒலிம்பியாட் … Read more

செஸ் ஒலிம்பியாட் போட்டி : சென்னைக்கு வர ஆவலாக காத்திருக்கிறேன் பிரதமர் மோடி பெருமிதம்.!

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவிற்காக சென்னைக்கு வர ஆவலுடன் காத்திருக்கிறேன் என பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரத்தில் நடந்தாலும் தொடக்க விழா, பல்வேறு கலை நிகழ்ச்சிகள், கண்கவர் நடனங்களுடன் இன்று மாலை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. I am looking forward to being in Chennai for the inauguration of the 44th Chess Olympiad at 6 … Read more

முன்னாள் டிஜிபி ஜாபர் சேட் மீதான வழக்கு தொடர்பாக ஐ.பெரியசாமியிடம் அமலாக்க துறை விசாரணை

சென்னை: தமிழக முன்னாள் டிஜிபி ஜாபர் சேட்டுக்கு, வீட்டு வசதி வாரிய நிலம் ஒதுக்கப்பட்ட வழக்கு தொடர்பாக, கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று விசாரணை மேற்கொண்டனர். தமிழக காவல் துறையில் கடந்த 2006-2011 காலகட்டத்தில் உளவுத் துறை ஐஜியாக ஜாபர்சேட் இருந்தபோது, திருவான்மியூர் பகுதியில் தமிழக அரசின் வீட்டு வசதி வாரிய நிலம் ஒதுக்கப்பட்டதாக கூறப்பட்டது. மேலும், அந்த நிலத்தில் வீடு கட்டாமல், சட்டத்துக்கு புறம்பாக வணிக வளாகம் கட்டப்பட்டதாக, 2011-ம் … Read more

7-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு – அப்துல் கலாம் நினைவிடத்தில் குடும்பத்தினர், பொதுமக்கள் அஞ்சலி

ராமேசுவரம்: மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் 7-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ராமேசுவரத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் குடும்பத்தினரும் பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர். முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், கடந்த 2015 ஜூலை 27-ம் தேதி மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் நடந்த கல்லூரி விழாவில் பேசிக் கொண்டிருந்தபோது மயங்கி விழுந்து உயிரிழந்தார். அவரது உடல் ராமேசுவரம் தீவில் உள்ள பேக்கரும்பு என்ற இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அங்கு இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி … Read more

கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் இன்று தொடங்குகிறது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள்!

சென்னை அருகே மாமல்லபுரத்தில் கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் செஸ் ஒலிம்பியாட் இன்று தொடங்க உள்ளது. பிரதமர் மோடி தொடங்கிவைக்க உள்ள இந்தப் போட்டியில், 187 நாடுகளில் இருந்து 2,100 வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். மதிநுட்ப விளையாட்டான சதுரங்கத்தில் சர்வதேச அளவில் வல்லவர்கள் யார் என்பதை தீர்மானிக்கும் செஸ் ஒலிம்பியாட் சென்னை அருகே மாமல்லபுரத்தில் இன்று தொடங்குகிறது. செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான சுடர் ஓட்டத்தை கடந்த மாதம் 19 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் தொடங்கி … Read more

இன்று செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா: ‘லைவ்’ பார்ப்பது எப்படி?

Chess OIympiad 2022: சென்னையில் முதன்முறையாக நடைபெறவிருக்கும் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவை மக்கள் நேர்காணலில் காணலாம். தொலைக்காட்சியிலும் இணையதளத்தின் வாயிலாகவும் விழாவின் நேர்காணலை எப்படி பார்க்கலாம் என்பதை தெரிந்துகொள்ளலாம். இந்தியாவில் முதன்முறையாக நடைபெறவிருக்கும் 44ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி, தமிழ்நாட்டின் சென்னையில் இன்று மாபெரும் தொடக்க விழாவுடன் தொடங்கவிருக்கிறது. இப்போட்டியானது சென்னையின் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள ஷெரட்டன் மகாபலிபுரம் ரிசார்ட் மற்றும் கன்வென்ஷன் சென்டரில் நடத்தப்பட உள்ளது. உலகெங்கும் உள்ள … Read more

சோழ வம்சத்து ராணி செம்பியன் மகாதேவி சிலை அமெரிக்காவில் கண்டுபிடிப்பு.!

சோழ வம்சத்து ராணி செம்பியன் மகாதேவி உலக சிலை அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகத்தில் உள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கண்டுபிடித்துள்ளனர். நாகை கைலாசநாதர் கோவிலில் உள்ள செம்பியன் மகாதேவி சிலை போலியானது.  1929 ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து செம்பியன் மகாதேவி சிலை கடத்தப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. செம்பியன் மகாதேவி சிலை சோழ வம்சத்தை சார்ந்த 1000 வருடங்களுக்கும் மேல் பழமையான உலோக சிலையாகும்.  10ம் நூற்றாண்டில் ஆட்சி செய்த சோழப் பேரரசர் கண்டராதித்தரின் பட்டத்தரசி … Read more

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் இன்று தொடக்கம் – போட்டியை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்

சென்னை: சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று மாலை நடக்கும் நிகழ்ச்சியில், 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். இந்நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் மத்திய, மாநில அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். பிரதமரின் வருகையையொட்டி சென்னையில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று தொடங்கி ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடக்கவுள்ளது. இதன் தொடக்க விழா, சென்னை … Read more

இருவரை பலிகொண்ட குற்றாலம் வெள்ளப்பெருக்கு… முதலுதவி மையம் கூட இல்லாததால் ஏற்பட்ட சோகம்!

தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவியில் நேற்று மாலை சுமார் 6 மணியளவில், வன பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அருவியில் குளித்துக் கொண்டிருந்த 5 பேர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டுள்ளனர். அப்போது, அங்கு பாதுகாப்புக்கு நின்று கொண்டிருந்த காவலர்கள் ஒருவரை மீட்ட நிலையில் மற்ற இரண்டு பேர் தடுப்புகளை பிடித்துக் கொண்டு வெள்ளத்திலிருந்து தப்பியுள்ளனர். இருந்த போதும், இரண்டு பெண்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நிலையில், பாறைகளில் முட்டி பலத்த காயமடைந்து உயிரிழந்த நிலையில் … Read more