’படிக்க வேண்டாம்; கல்யாணம் பண்ணிக்கோ’.. பெற்றோரின் அழுத்தத்தால் இளம்பெண் எடுத்த முடிவு

விழுப்புரத்தில் உயர்கல்வி படிப்பதற்கு மறுப்பு தெரிவித்து திருமணம் செய்துகொள்ள பெற்றோர்கள் வற்புறுத்தியதால் 12ஆம் வகுப்பு முடித்த மாணவி தற்கொலை செய்துகொண்டார்.  விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் தாலுக்காவுக்கு உட்பட்ட கிராமம் சு.பில்ராம்பட்டு. இந்த கிராமத்தில் வசிப்பவர் நல்லேந்தரன் என்பவரது மகள் வினோதினி. இவர் இந்த ஆண்டு 12ஆம் வகுப்பு முடித்துள்ளார். இந்த நிலையில் மாணவியின் வீட்டில் அவருக்கு திருமணம் செய்து வைக்க திட்டமிட்டுள்ளனர். ஆனால் மாணவி வினோதினி உயர்கல்வி பயில வேண்டும் எனக் கூறி திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்து … Read more

காவிரியில் வெள்ளம்… ஜம்புகேஸ்வரர் தெப்பக் குளத்திற்கு தண்ணீர் ஏன் வரவில்லை?

பஞ்ச பூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமான விளங்கும் ஜம்புகேஸ்வரர் – அன்னை அகிலாண்டேஸ்வரி திருக்கோவிலில் ஆடி மாத தெப்ப திருவிழாவை முன்னிட்டு திருக்கோவில் சூரிய குளத்தில் ஆழ்துளை கிணற்றில் மின் மோட்டார் மூலம் 24-மணி நேரமும் நீர் எடுக்கப்பட்டு அதே குளத்தில் நீர் நிரப்படும் அவல நிலையை ஆதாரபூர்வமாக மக்கள் நீதி மய்யம் கட்சி திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு … Read more

சென்னை : மயிலாப்பூர் ரவுடி அப்துல்லா தலைக்கேறிய போதையில் தன்னைத்தானே பிளேடால் கிழித்துங்க சம்பவம்.!

சென்னையில் ரவுடி ஒருவன் மது போதையில் உடற்பயிற்சி கூடத்தில் புகுந்து, அங்கிருந்த உடற்பயிற்சி உபகரணங்களை அடித்து உடைத்து நொறுக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  மேலும், அந்த ரவுடி பிளேடால் தன்னைத்தானே கிழித்துக்கொண்ட சம்பவமும் அரங்கேறியுள்ளது. சென்னை, மயிலாப்பூர் பகுதியில் மாநகராட்சி சார்பாக உடற்பயிற்சி கூடம் ஒன்று இயங்கி வருகிறது. இங்கு அதே பகுதியை சேர்ந்த ரவுடி (சொல்லப்படுகிறது) அப்துல்லா என்பவர், தினமும் வந்து மருந்து அருந்துவதை வாடிக்கையாக இருந்து வந்துள்ளார். சம்பவம் நடந்த நேற்று … Read more

அதிமுக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கியதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் சசிகலா மேல்முறையீடு

சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் பதவியிலிருந்து தன்னை நீக்கியது செல்லும் என்ற உரிமையியல் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து வி.கே.சசிகலா, உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு ஆகஸ்ட் 2-வது வாரத்தில் விசாரணைக்கு வரவுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலாவும், துணைப் பொதுச் செயலாளராக டிடிவி தினகரனும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சசிகலா சிறைக்குச் சென்றார். அவர் சிறையில் … Read more

’நம்மூர் இட்லி முதல் இத்தாலி நாட்டு உணவு வரை 47 வகைகள்’-உணவிலும் அசத்தும் செஸ் ஒலிம்பியாட்

44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டித்தொடரில் பங்கேற்க வந்துள்ள வீரர், வீராங்கனைகளுக்கு நம்மூர் இட்லி முதல் இத்தாலி நாட்டு உணவு வரை 47 வகையான உணவுவகைகளுடன் விருந்தளிக்கப்படுகிறது. இவர்களுக்கான உணவின் தரம் கறித்து உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தீவிர பரிசோதனை மேற்கொள்ள உள்ளனர். தமிழரின் தனித்த பண்பாடுகளில் விருந்தோம்பலும் ஒன்று. செஸ் ஒலிம்பியாட்டுக்காக பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், போட்டியில் பங்கேற்போர், விருந்தினர்களுக்கான விருந்தாம்பலிலும் கவனம் செலுத்தப்படுகிறது. 187 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் தமிழகம் வந்துள்ள நிலையில், அவர்களுக்கு … Read more

புதிய நீரிழிவு மருந்துகள்.. யாருக்கு பலன் கொடுக்கும்?

மருத்துவ சந்தையில் புதிதாக வந்துள்ள நீரிழிவு நோய் மருந்துகள் நீரிழிவு பாதிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றாக வேலை செய்யுமா? அல்லது சிலருக்கு மட்டும்தான் பலன் கொடுக்குமா என்பது குறித்து ஃபோர்டிஸ் சிடிஓசி மருத்துவமனை நீரிழிவு மற்றும் அதனுடன் தொடர்புடைய அறிவியல் மையத்தின் தலைவர் மருத்துவர் அனுஷ் மிஸ்ரா கூறுவதை பார்க்கலாம்.உடலில் இன்சுலின் அளவு குறைந்து காணப்படுவதால் சர்க்கரை வியாதி என்னும் நீரிழிவு நோய் ஏற்படுகிறது.இந்தப் பாதிப்பின் அறிகுறியாக அடிக்கடி சீறுநீர் கழித்தல், அதீத பசித்தல் உணவு, தண்ணீர் அதிகமாக … Read more

30 ஆம்புலன்ஸ், 1000 மருத்துவப் பணியாளர்கள்: மருத்துவத் துறை கட்டுப்பாட்டில் செஸ் ஒலிம்பியாட்

சென்னை: செஸ் ஒலிம்பியாட் நடைபெறும் இடத்தில் மருத்துவ சேவை வழங்க 30 ஆம்புலன்ஸ் மற்றும் 1000 மருத்துவ பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளதாக மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். செஸ் ஒலிம்பியாட் நடைபெற உள்ள மாமல்லபுரத்தில் மருத்துவ துறை தொடர்பான முன்னேற்பாடு பணிகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் இன்று ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “சர்வதேச சதுரங்க போட்டிக்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றன. சுமார் 180 … Read more

“இதுபோன்ற வரவேற்பை எங்கும் கண்டதில்லை” – வெளிநாட்டு வீரர்கள் நெகிழ்ச்சி!

இரண்டு நாட்கள் பயணமாக பிரதமர் நரேந்திரமோடி நாளை சென்னை வருகிறார். சென்னையில், நாளை செஸ் ஒலிம்பியாட் தொடரை அவர் தொடங்கிவைக்கிறார் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் சென்னைக்கு வந்தவண்ணம் உள்ளனர். சென்னை விமான நிலையத்தில் அவர்களை வரவேற்க 2 துறை சார்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அவர்களுடன் இணைந்து தன்னார்வலர்களும் வெளிநாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் சிரமமின்றி விடுதிக்கு செல்ல வழிகாட்டுகின்றனர். வீரர்களின் போக்குவரத்துக்காக 115 பேருந்துகள், 100-க்கும் மேற்பட்ட கார்கள் இயக்கப்படுகின்றன. … Read more

“கவுன்சிலர்களை கொஞ்சமாவது மதியுங்கள்” – மதுரை மாநகராட்சி கூட்டத்தில் கடும் விவாதம்

மதுரை; ‘‘மழைக்கு சாலைகள் சேறும் சகதியுமாகிவிட்டன. தெருக்களில் சாக்கடை நீர் ஓடுகிறது. மக்கள் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் தவிக்கிறோம்’’ என்று மாநகராட்சி கூட்டத்தில் இன்று மண்டலத் தலைவர்கள், கவுன்சிலர்கள் கொதிப்படைந்து பேசினர். மதுரை மாநகராட்சி கூட்டம் இன்று மேயர் இந்திராணி தலைமையில் நடந்தது. எம்எல்ஏ பூமிநாதன், மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன் ஜித் சிங், துணை மேயர் நாகராஜன், முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நடந்த விவாதங்கள் வருமாறு: 5-வது மண்டலத் தலைவர் சுவிதா: சுகாதாரத்துறையில் வாகனங்கள், தூய்மைப்பணியாளர்கள் … Read more

'220 கோடி ரூபாய் கமிஷன்.. ஊழல் வழக்கில் செந்தில்பாலாஜி சிறை செல்ல நேரிடும்' – அண்ணாமலை

தமிழக அரசு தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்கி 220 கோடி ரூபாயை கமிஷனாக பெற்றிருப்பதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார். தமிழக அரசின் மின்கட்டண உயர்வைக் கண்டித்து கரூரில் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், பங்கேற்று பேசிய அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, மே, ஜூன் ஆகிய இரு மாதங்களில் 4 ஆயிரத்து 600 கோடி ரூபாய்க்கு தனியாரிடமிருந்து மின்சாரத்தை வாங்கி 4 சதவிகித கமிஷனாக 220 கோடி ரூபாய் பெற்றுள்ளதாக குற்றஞ்சாட்டினார். மின்னுற்பத்தி திறனை குறைத்து தனியாரிடம் மின்சாரம் வாங்குவதாகவும், அமைச்சர் செந்தில்பாலாஜி ஊழல் வழக்கில் சிறை … Read more