96 ஆயிரம் இடங்களுக்கு 4 லட்சம் விண்ணப்பம்; அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர ஆர்வம் காட்டும் மாணவர்கள்

தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை முதலாமாண்டு சேர்வதற்கான விண்ணப்பங்கள் முதன்முறையாக 4 லட்சத்தை கடந்துள்ளது. தமிழகத்தில் உள்ள 164 கல்லூரிகளில் சேர்வதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பம் பெறப்பட்டு வருகிறது. விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் நாளையுடன் நிறைவடைய உள்ள நிலையில், மொத்தம் உள்ள 96 ஆயிரம் இடங்களுக்கு இதுவரை 4 லட்சத்து ஆயிரத்து 494 பேர் விண்ணப்பித்துள்ளனர். Source link

கள்ளக்குறிச்சி கலவரம் | இதுவரை 309 பேர் கைது: தேர்வு காரணமாக இரு சிறுவர்களுக்கு ஜாமீன்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக இதுவரை 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை மீட்க உரிமையாளர் முன்வரவில்லை எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது. கள்ளக்குறிச்சி கலவரத்தில் காவல்துறை வாகனத்திற்கு தீ வைத்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். கலவரத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட இருபது சிறுவர்களில் 2 பேருக்கு ஜாமீன் வழங்கியது விழுப்புரம் நீதிமன்றம். மேலும் கலவரத்தில் விட்டுச்சென்ற இரு சக்கர வாகனங்கள் மற்றும் கண்காணிப்பு கேமரா மூலம் போராட்டக்காரர்களை அடையாளம் காணும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டு … Read more

ஸ்மார்ட் மீட்டர் பொருத்த மாதாந்திர வாடகை கட்டணம் வசூலிக்கப்படாது – செல்தில் பாலாஜி

வீடுகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்கு மாதாந்திர வாடகை  கட்டணம் வசூலிக்கப்படாது என மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். கரூரில் 44வது ஒலிம்பியாட் செஸ் போட்டி விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. கரூர் மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்ட இந்த விழிப்புணர்வு பேரணியில் ஒலிம்பியாட் நினைவு மாதிரி ஜோதியை மாணவர்கள் எடுத்துச் செல்ல மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேரணியை தொடங்கி வைத்து அவர்களுடன் நடந்து சென்றார். இதையடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் … Read more

கள்ளக்குறிச்சி கலவரத்துக்கு பட்டியலினத்தவரே காரணம் என உளவுத்துறை முடிவுக்கு வந்தது எப்படி? – அண்ணாமலை கேள்வி

சென்னை: கள்ளக்குறிச்சி கலவரத்துக்கு பட்டியலினத்தவர்கள் காரணம் என்ற முடிவுக்கு உளவுத்துறை வந்தது எப்படி என்று பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுதியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கள்ளக்குறிச்சி கலவரத்துக்கு பட்டியலினத்தவர்கள் காரணம் என்ற முடிவுக்கு உளவுத்துறை வந்தது எப்படி என்று பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், … Read more

திருவள்ளூர்: நண்பர்களுடன் ஏரியில் குளித்த இரண்டு சிறுவர்களுக்கு நேர்ந்த பரிதாபம்

நண்பர்களுடன் ஏரியில் குளித்த 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். சென்னை ஆவடி பகுதியைச் சேர்ந்த நண்பர்களான சஜீவன் (17), அருள் (17) மற்றும் வெங்கடேசன் (17) ஆகியோர் வெள்ளவேடு அடுத்த கோலப்பஞ்சேரி சுங்கச்சாவடி அருகே உள்ள ஏரியில் குளிக்க சென்றதாக தெரிகிறது. அப்போது சஜீவன் மற்றும் அருள் ஆகிய 2 பேரும் நீரில் மூழ்கியதை கண்ட அவர்களது நண்பன் வெங்கடேசன், வெள்ளவேடு காவல் நிலையத்திற்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் அளித்துள்ளார். இதனையடுத்து நிகழ்விடத்திற்கு வந்த … Read more

வங்கிகளில் கடன் வாங்கி ரூ.8,045 கோடி ஸ்வாகா: சென்னை பிரபல தொழில் அதிபர் கைது

Businessman Rahul Surana arrested Tamil News: சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சுரானா இண்டஸ்ட்ரியல் லிமிடெட், சுரானா பவர் லிமிடெட், சுரானா கார்ப்பரேஷன் லிமிடெட் ஆகியவை, ஐ.டி.பி.ஐ., வங்கியிடம் இருந்து, 4,000 கோடி ரூபாய் பணத்தை கடனாக பெற்று, அதைத் திருப்பிச் செலுத்தாமல், முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்த நிலையில், சட்டவிரோத பணப்பற்றிமாற்றத்தில் ஈடுபட்டதாக அமலாக்க துறையும் வழக்கு பதிவு செய்தது. ஐடிபிஐ வங்கியில் தங்கம் இறக்குமதி செய்யும் தொழிலில் … Read more

அதிர்ச்சியிலும், வேதனையிலும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கை.!!

பள்ளி மாணவிகளின் மர்ம மரணங்கள் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டி என தேமுதிக தலைவர் விஜயகாந்த தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் பள்ளி மாணவிகள் மர்மமான முறையில் இறப்பதும், தற்கொலைக்கு முயல்வது பெரும் அதிர்ச்சியும் வேதனையும் ஏற்படுத்தியுள்ளது. மாணவி ஸ்ரீமதியின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மண்ணின் ஈரம் கூட இன்னும் காயாத நிலையில் திருவள்ளூரில் மற்றொரு மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் … Read more

மாணவர்களுக்கு தற்கொலை எண்ணம் வரவே கூடாது: முதல்வர் ஸ்டாலின் 

சென்னை: ” மாணவிகளுக்கு பாலியல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ தொல்லை தரக்கூடிய எத்தகைய இழிசெயல் நடந்தாலும், தமிழ்நாடு அரசு நிச்சயமாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்காது. கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். குற்றவாளியை சட்டத்தின் முன்நிறுத்தி அதற்குரிய தண்டனையை நிச்சயமாகப் பெற்றுத்தரும். எந்த சூழலிலும் மாணவிகள் தற்கொலை எண்ணத்திற்கு தள்ளப்படக்கூடாது” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியின் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். … Read more

காதல் திருமணம் செய்த தம்பதிக்கு பெண்ணின் தந்தையால் நேர்ந்த கொடூரம்

எட்டையபுரம் அருகே காதல் திருமணம் செய்த தம்பதியரை பெண்ணின் தந்தை வெட்டிக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகே உள்ள வீரப்பட்டி கிராமம் ஆர்.சி தெருவைச் சேர்ந்த முத்துக்குட்டி (50). ஏன்வரது மகள் ரேஸ்மா (20), இவர், கோவில்பட்டியில் உள்ள கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், இவர் அதே பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வடிவேல் என்பவரது மகன் மாணிக்கராஜை (26) காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்கு ரேஷ்மாவின் தந்தை … Read more

‘ஆர்டர்லி’ புகார்: நன்னடத்தை விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்க ஐகோட் உத்தரவு!

தமிழகத்தில் பணியில் உள்ள மற்றும் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிகளின் வீடுகளில் ஆர்டர்லியாகப் பணியாற்றும் போலீஸாரை உடனே திரும்ப பெற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே இதுதொடப்பான வழக்கில் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நேற்று (ஜூலை 25) மீண்டும் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் குமரேசன் ஆஜராகி, “தமிழகத்தில் காவல்துறையில் உள்ள ஆர்டர்லி முறையை ஒழிப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுவிட்டன. ஏற்கெனவே இதுதொடர்பாக தக்க அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன” என்றார். … Read more