பெண்கள் பட்டம் வாங்கியதுடன் நிறுத்திக் கொள்ளாமல் தகுதியான பணிகளை தேர்ந்தெடுத்து பணியாற்ற வேண்டும் – முதல்வர் அறிவுரை

சென்னை: பெண்கள் பட்டம் வாங்கியதுடன் நிறுத்திக் கொள்ளாமல் தகுதியான பணிகளைத் தேர்ந்தெடுத்து பணியாற்ற வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை கொளத்தூர் அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், மாணவ, மாணவிகளுக்கு கல்விக் கட்டணமாக ரூ.10 ஆயிரம் மற்றும் புத்தகப் பைகளை வழங்கினார். இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி … Read more

மருத்துவக் கல்லூரி மாணவிக்கு அரசு பேருந்தில் பாலியல் தொல்லை: ஓட்டுநர் கைது

வேலூர்: அரசு பேருந்தில் பயணித்த மாணவிக்கு இரவில் நேர்ந்த கொடுரம் கேட்பவர்களை பதபதைக்கச் செய்கிறது…ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த 20 வயது இளம்பெண் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்று வருகிறார். கல்லூரியில் தொடர் விடுமுறைகள் வந்ததால், மருத்துவக் கல்லூரி மாணவி, சொந்த ஊருக்கு செல்வதற்காக நேற்று கும்பகோணம் பேருந்து நிலையத்தில் தஞ்சாவூரில் இருந்து திருப்பதி நோக்கி செல்லும் தமிழக அரசு (SETC) பேருந்தில் ஏறி வேலூர் நோக்கி பயணம் செய்துள்ளார். அப்போது மாணவி இரவில் உறங்கும் … Read more

இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து – இருவர் உயிரிழப்பு

குளித்தலை அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். கரூர் மாவட்டம், குளித்தலை அருகே பங்களாபுத்தூர் சாலையில் கழுகூரைச் சேர்ந்த கருப்பையா என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். அப்போது எதிர் திசையில் சிறுகமணியைச் சேர்ந்த சதீஷ் மற்றும் பெட்டவாய்த்தலைச் சேர்ந்த ரமேஷ் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். இந்நிலையில், இரு வாகனங்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் சிறுகமணியைச் சேர்ந்த சதீஷ் மற்றும் கழுகூரைச் சேர்ந்த கருப்பையா ஆகியோர் சம்பவ … Read more

ஆகஸ்ட் 16 சீன உளவுக் கப்பல் இலங்கை வருகை: தீவிரமாக கண்காணிக்கும் இந்தியா!

சீனாவின் செயற்கைக்கோள் கண்காணிப்பு கப்பல் இலங்கை வர இந்தியா கவலை தெரிவித்திருந்த நிலையில், ஆகஸ்ட் 16ஆம் தேதி சீனாவின் யுவான் வாங் 5 கப்பல் இலங்கை ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வர இலங்கை வெளியுறவுத்துறை நேற்று அனுமதி அளித்துள்ளது. சீனாவின் செயற்கைக்கோள் கண்காணிப்பு கப்பல் ‘யுவான் வாங் 5’ ஆகஸ்ட் 16 முதல் ஒரு வாரத்திற்கு இலங்கை தெற்கு கடற்கரையில் உள்ள ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்த அந்நாட்டு அரசு நேற்று (ஆகஸ்ட் 13) அனுமதி அளித்துள்ளது. முன்னதாக சீன … Read more

#BREAKING : மதுரை மாவட்ட பாஜக தலைவர் சரவணன் கட்சியில் இருந்து நீக்கம் – பாஜக அண்ணாமலை.!

பாஜகவில் இருந்து டாக்டர் சரவணன் நீக்கப்படுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். காஷ்மீரில் வீரமரணமடைந்த மதுரை ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு சென்ற தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் கார் மீது பாஜகவினர் நேற்று காலணியை வீசினர். இந்த சம்பவம் தமிழ்நாடு அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.  இந்த நிலையில், மதுரை மாநகர் மாவட்ட பாஜக தலைவர் டாக்டர் சரவணன் இன்று தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் … Read more

1 லட்சம் வழக்குகள், ரூ.1.07 கோடி அபராதம் வசூல்: பதிவெண் பலகையின் விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை

பதிவெண் பலகையின் விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது என போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. ‘பதிவெண் பலகையின் விதிகளை மீறும் வாகன ஓட்டிகள்: நடவடிக்கை எடுக்க தயங்குகிறதா போக்குவரத்து துறை?’ என்ற தலைப்பில் ஆகஸ்ட் 12ம் தேதி ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் செய்தி வெளியாகி இருந்தது. இது தொடர்பாக போக்குவரத்து காவல்துறை அளித்துள்ள விளக்கத்தில் கூறியிருப்பதாவது: சட்ட விதிகளுக்கு புறம்பாகபதிவெண் பலகைகளை பொருத்தியுள்ள வாகனங்கள் மற்றும் மடிக்கும் வகையிலான பதிவெண் பலகைகளை பொருத்தியுள்ள … Read more

சேலம் அருகே காணாமல் போன கிணற்றை மீட்ட அதிகாரிகள்

சேலம் மாவட்டம் தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ராமிரெட்டிபட்டி கிராமத்தில் உள்ள மந்தை தோப்பூர் பகுதியில் 50 ஆண்டுக்கு முன்பு மக்களின் குடிநீர் தேவைக்காக அரசு கிணறு அமைத்து கொடுத்திருந்தது. பொது கிணற்றில் இருந்து மக்கள் நீரை இறைத்து பயன்படுத்தி வந்தனர். காலப்போக்கில் கிணற்று நீரை பயன்படுத்தாமல் போனதால், கிணறு பயன்பாடு இன்றி இருந்து வந்தது. அந்த கிணறு தனியாரால் சில ஆண்டுகளுக்கு முன்பு ஆக்கிரமிக்கப்பட்டு, மூடி மறைக்கப்பட்டது. இதனை அறிந்த பொதுமக்கள் கிணற்றை மீட்க நீண்ட … Read more

தற்கொலை செய்து கொண்ட காவலர் – உடலை ஊருக்குள் அனுமதிக்க மறுத்த மக்கள்: காரணம் என்ன?

சென்னையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட காவலரின் உடலை ஊருக்குள் விட மறுத்த ஊர்மக்கள். மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் தலையிட்டு சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். திருப்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட இருனாபட்டு ஊராட்சி திருவிக நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரபு. இவருக்கு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மைசூர் பகுதியைச் சேர்ந்த வசு என்பவருடன் திருமணமாகி கிஸ்மிதா என்கிற ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் சென்னை வில்லிவாக்கம் பகுதியில் சிட்டி ஏஆர் காவலராக பணியாற்றி வந்த பிரபு … Read more

நாட்டின் வளர்ச்சிக்காக அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் – மாணவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வேண்டுகோள்

சென்னை: நாட்டின் வளர்ச்சிக்காக அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார். நாட்டின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி என்.கே.டி. தேசிய மகளிர் கல்வியியல் கல்லூரி மற்றும் ஸ்ரீனிவாஸ் இளைஞர்கள் சங்கம் சார்பில் ‘வந்தே பாரதம்’ என்ற ஒலி, ஒளி கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா சென்னை திருவல்லிகேணி என்.கே.டி. கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. ஆளுநர் ஆர்.என்.ரவி கண்காட்சியைத் தொடங்கிவைத்துப் பேசியதாவது: தேச விடுதலைக்காகப் பாடுபட்ட வீரர்களை நினைவுகூர்ந்து, மரியாதை செலுத்த … Read more

தீண்டாமைக் கொடுமைக்கு பெயர் போன உத்தரப்பிரதேசத்தை தமிழகத்துடன் ஒப்பிடும் அண்ணாமலை

சென்னை: சமூக நீதியில் தமிழகத்தை விட உத்தரபிரதேசம் சிறப்பாக உள்ளதைப் போன்ற தோற்றத்தை உருவாக்க பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முயற்சிப்பதாக குற்றச்சாட்டை முன்வைக்கிறார் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில பொதுச்செயலாளர் எஸ்.சாமுவேல்ராஜ். இது தொடர்பாக நேற்று (ஆகஸ்ட் 13) மயிலாடுதுறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில பொதுச்செயலாளர் எஸ்.சாமுவேல்ராஜ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் உள்ள தீண்டாமை குறித்து தெரியப்படுத்தியவுடன், அதற்கான சிறப்பு அரசாணையை தமிழக … Read more