சிங்கார சென்னை உணவுத் திருவிழா: இன்று முதல் பீப் பிரியாணிக்கு அனுமதி!

சிங்காரச் சென்னை உணவுத் திருவிழாவில் பீப் பிரியாணிக்கு இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சென்னை தீவுத்திடலில் “சிங்காரச் சென்னையில் உணவுத் திருவிழா” என்ற 3 நாள் திருவிழாவை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியம், சேகர்பாபு நேற்று துவக்கி வைத்தனர். இந்த உணவுத் திருவிழாவில் பாரம்பரிய உணவு வகைகள், சிறுதானிய உணவுகள், பலவகையான உணவு வகைகள், பிரியாணி வகைகள், மீன் உணவுகள், நெல்லை இருட்டுக்கடை அல்வா உள்ளிட்ட ஏராளமான உணவு வகைகள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் தமிழ்நாடு அரசின் சார்பில் நடத்தப்படும் இந்த … Read more

இபிஎஸ் நீலிக்கண்ணீர் வடிப்பதை விவசாயிகள் நம்பமாட்டார்கள்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

சென்னை: போலி விவசாயி இபிஎஸ் விவசாயிகளுக்காக நீலிக்கண்ணீர் வடிப்பதை யாரும் நம்பப்போவது இல்லை என்று வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்து வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி யூரியா உரத்துடன் இணை பொருட்கள் சேர்த்து விற்கப்படுவதாகவும் கூட்டுறவு நிறுவனங்களில் நானோ கட்டாயப்படுத்தி விற்கப்படுவதாகவும் தெரிவித்ததுடன் மேலும் யூரியா தோட்டக்கலை பயிர்களுக்கு … Read more

பகிரங்கமாக மிரட்டிய ரஜினி; பம்மி.. பதுங்கிய திமுக அரசு!

தமிழ் சினிமா சூப்பர் ஸ்டார் என கொண்டாடப்படுபவர் நடிகர் ரஜினி. தனது ஸ்டைல் நடிப்பின் மூலம் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்களை தன் பக்கம் இழுத்தவர். ஒரே நேரத்தில் புகழும் ரசிகர்கள் கூட்டமும், அதிகரித்ததால் ரஜினிக்கு அரசியல் ஆசை ஏற்பட்டது. இதனை தனது ரசிகர்களுக்கு உணர்த்தும் விதமாக, வர வேண்டிய நேரத்தில் கண்டிப்பாக வருவேன் என அவ்வப்போது தூண்டி விட்டுக்கொண்டு இருந்தார். இந்த நிலையில் கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் ரஜினி தனது ரசிகர்களை ராகவேந்திரா … Read more

முதியவரை கட்டிப்போட்டு கொள்ளையடிக்க முயன்ற இளம் காதல் ஜோடி! தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்!

கோவையில், பட்டப்பகலில் வீட்டுக்குள் புகுந்து முதியவரை கட்டிப் போட்டு திருட முயன்ற காதல் ஜோடியை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். கோவை வடவள்ளி அடுத்த பொம்மணம்பாளையத்தை சேர்ந்தவர் 76 வயதான பெரியராயப்பன். இவருக்கு ராஜம்மாள் என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். பொம்மணம் பாளையத்தில் பெரியராயப்பனும் அவரது மனைவி ராஜம்மாளும் தனியே வசித்து வந்தனர். ராஜம்மாள் நேற்று மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்றிருந்த வேளையில் பெரிய ராயப்பன் வீட்டில் தனியாக இருந்துள்ளார். … Read more

இலங்கையில் இருந்து 4  பேர் அகதிகளாக தமிழகம் வருகை.!

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அந்த நாட்டின் அன்னிய செலவாணி கையிருப்பு குறைந்து பெட்ரோல் டீசலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது இதனால் தொழில்கள் பாதிப்படைந்து அத்தியாவசிய பொருட்களின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகின்றன. அதன் காரணமாக இலங்கை அரசுக்கு எதிராக கொழும்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொதுமக்கள் எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடும் விலை உயர்வு வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற பல்வேறு காரணங்களுக்காக இலங்கை தமிழர்கள் கள்ளப்படகு மூலம் கடல் வழியாக தனுஷ்கோடிக்கு … Read more

தி.மலை அண்ணாமலையார் கோயில் அன்னதான கூடத்தில் பக்தர்கள் அலைக்கழிப்பு: டோக்கன் முறையில் குழப்பம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயில் அன்னதான கூடத்தில் பக்தர்கள் அலைக்கழிக் கப்படுகின்றனர். திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயிலில் ராஜ கோபுரம் அருகே உள்ள அன்னதான கூடத்தில் தினசரி பிற்பகல் சுமார் 300 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. அன்னதான திட்டத்துக்கு செல்வந்தர்கள் நிதியுதவி அளிக்கின்றனர். அன்னதான கூடம் உள்ளே சென்று உணவு சாப்பிடுவதற்கு, பக்தர்களிடம் டோக்கன் விநி யோகிக்கும் முறை கடைபிடிக் கப்படுகிறது. இந்நிலையில், அன்னதான கூடத்தை தேடி செல்லும் பக்தர்கள் தொடர்ந்து அலைக்கழிக் கப்படுவதாக குற்றச்சாட்டு … Read more

ஈபிஎஸ் உயிருக்கு ஆபத்து..? போலீஸ் பாதுகாப்புக்கோரி டிஜிபியிடம் மனு..!

அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுள்ள தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, மாவட்டம் தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதுவரை 5 மாவட்டங்களில், அவர் சுற்றுப்பயணம் முடித்துள்ளார். அவர், சுதந்திர தினத்துக்கு பிறகு மீண்டும் திருச்சி மற்றும் தென் மாவட்டங்களில் சுற்றுப் பயணம் செய்ய திட்டமிட்டுள்ளார். இந்நிலையில், முன்னாள் முதல்வரான அவருக்கு சுற்றுப் பயணத்தின்போது கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று சேலத்தை சேர்ந்த அதிமுக வழக்கறிஞர் ஏ.பி.மணிகண்டன், சென்னையிலுள்ள டிஜிபி அலுவலகத்துக்கு மின்னஞ்சல் … Read more

கல்வி ,மருத்துவத்திற்கு செலவு செய்வது இலவசம் ஆகாது: முதல்வர் மு.க ஸ்டாலின் 

சென்னை: கல்வி மற்றும் மருத்துவத்திற்கு செலவு செய்வது இலவசம் ஆகாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை கொளத்தூர் கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கலந்து கொண்டு உரையாற்றினார். விழாவில் பேசிய முதல்வர், “தமிழ்நாடு முழுவதும் சுற்றிச் சுழன்று வந்தாலும் கூட எனது தொகுதிக்கு வருவது மகிழ்ச்சியாக உள்ளது. கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி எனது தொகுதியில் அமைந்ததில் பெருமகிழ்ச்சி. முதலமைச்சரிடம் எல்லோரும் கோரிக்கை வைப்பார்கள். … Read more

பாஜகவை நெருங்குகிறதா திமுக? சட்டென்று மாறும் அரசியல் வானிலை!

அண்ணாமலை திமுகவை பாராட்டுவதும், அண்ணாலை அறிக்கை முரசொலியில் செய்தியாவதும் தமிழக அரசியலில் அதிரடி மாற்றம் நிகழப்போகிற்கான அறிகுறியா என கேள்வி எழுந்துள்ளது. தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினை, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பாராட்டியது, திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் செய்தியாக வெளியாகியுள்ளது. போதை பொருள் ஒழிப்பில் தீவிர கவனம் செலுத்தி வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் இது தொடர்பாக அவ்வப்போது ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க காவல் துறையினருக்கு உத்தரவுகளை பிறப்பித்து … Read more

போதைப் பொருள் விற்பவர்கள் மீது போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை தேவை: இபிஎஸ்

சென்னை: போதைப் பொருள் விற்பனை செய்பவர்கள் மீது போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை என்றும் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் இபிஎஸ் கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ” இரு தினங்களுக்கு முன்பு தமிழகத்தில் போதைப் பொருள் தடுப்பு குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர்களிடமும், காவல் துறை உயர் அதிகாரிகளிடமும் திமுக அரசின் முதலமைச்சர் தீவிர ஆலோசனை நடத்தியதாக செய்திகள் வெளிவந்தன. இதற்கு முன்னாள் இப்படிப்பட்ட ஆலோசனைகள் எல்லாம் நடத்தாமல்தான் காவல் துறைத் … Read more