’இதை டெபாசிட் பண்ணிடுங்க’.. வங்கி காவலாளியிடம் கள்ள நோட்டுகளை கொடுத்துவிட்டு பறந்த நபர்!

திருவான்மியூரில் காவலாளியிடம் 8 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளை கொடுத்து ஏடிஎம்மில் டெபாசிட் செய்ய சொல்லிவிட்டு தப்பி ஓடிய நபரை போலீசார் தேடிவருகின்றனர். சென்னை அடையாறு எல்.பி சாலையில் தனியாருக்கு சொந்தமான கட்டடத்தில் எஸ்பிஐ வங்கி செயல்பட்டு வருகின்றது. இக்கட்டடத்தில் அதே பகுதியைச் சேர்ந்த கர்ணன்(42), என்பவர் காவலாளியாக வேலை பார்த்து வருகின்றார். இந்நிலையில் மாலை காவலாளி கர்ணன் வேலையில் இருந்தபோது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கர்ணனிடம் 8 ஆயிரம் … Read more

நிதியே இல்லாத அரசாங்கத்துக்கு பேனா வைக்க மட்டும் நிதி வந்தது எப்படி?- இபிஎஸ்

திருச்சி: “நிதியே இல்லை என்று கூறிவரும் இந்த அரசாங்கத்துக்கு பேனா வைக்க மட்டும் எப்படி நிதி வந்தது என்று மக்கள் கேட்கின்றனர்” என்று அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். திருச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் சிவபதி இல்ல விழாவில், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியது: “திமுக ஆட்சி பொறுப்பேற்று 15 மாதங்களாகிறது என்ன செய்தீர்கள்? என்று மக்கள் கேட்கின்றனர். ஆன்லைன் ரம்மி செய்ததுதான் மிச்சம். … Read more

செப்டம்பர் 3-ம் தேதி முதல் கோயில்களில் தமிழில் வழிபாடு – நாதக முன்னெடுப்பு

இந்து கோயில்களில் தமிழில் வழிபாடு செய்யக் கோரி, கோயில் பொறுப்பாளர்களையும் (நிருவாகத்தையும்) பூசாரிகளையும் நடைமுறையில் தமிழ் வழிபாட்டைச் செய்ய வைக்க வேண்டும் என கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக கட்சி தொண்டர்களுக்கு சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, “அன்னைத் தமிழில் அர்ச்சனை” என்ற பெயரில் தமிழ்நாடு அரசு சென்ற ஆண்டு ஒரு திட்டத்தை அறிவித்தது. அதன்படி இந்து சமய அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்துக் கோயில்களிலும் தமிழில் வழிபாடு (அர்ச்சனை) செய்ய ஏற்பாடு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் … Read more

இந்துத்துவாவை நிலைநாட்ட பிரதமர் செயல்படுகிறார் – சீறும் வைகோ

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் ஓட்டுநர் சின்னதுரை இல்ல திருமண விழா நெல்லை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது. இதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ  மணமக்கள் பிரபாகரன் -தனச்செல்வி ஆகியோரை வாழ்த்தி திருமாங்கல்யத்தை எடுத்துகொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பேசுகையில், “திராவிட மாடல் ஆட்சியை மிக வெற்றிகரமாக முதல்வர் மு க ஸ்டாலின் நடத்தி வருகிறார்.மூன்று லட்சம் பேருக்கு  வேலை வாய்ப்பை உருவாக்கிக் கொடுப்பதற்கான … Read more

திருத்தணி அருகே நண்பர்களுடன் கிணற்றில் குளித்த 9-ம் வகுப்பு மாணவன் நீரில் மூழ்கி பலி

திருவள்ளூர்: திருத்தணி அருகே நண்பர்களுடன் கிணற்றில் குளித்த 9-ம் வகுப்பு மாணவன் யோகவேல் நீரில் மூழ்கி உயிரிழந்தார். 4 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் திருத்தணி தீயணைப்புத் துறையினர் யோகவேல் உடலை கிணற்றில் இருந்து மீட்டனர்.

’நீண்டநேரம் ஆகியும் கதவு திறக்கல’..அதிமுக முன்னாள் அமைச்சரின் மருமகன் எடுத்த விபரீத முடிவு

அதிமுக முன்னாள் அமைச்சர் மருமகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அமைச்சரவையில் 2016 ஆண்டு காதி மற்றும் கதர்கிராமத் தொழில்துறை அமைச்சராக இருந்தவர் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த பாஸ்கரன். இவருக்கு 2 மகன்களும் 1 மகளும் உள்ளனர். இந்நிலையில், பாஸ்கரன் தனது மகள் சுமதியை சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சரவணன் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்திருந்தார். இந்த நிலையில் பொறியியல் பட்டதாரியான சரவணன் கட்டுமான ஒப்பந்ததாரர் வேலை பார்த்து வந்ததோடு கடந்த … Read more

உதயகுமாருக்கு நெருக்கமான உசிலம்பட்டி எம்எல்ஏ ஓபிஎஸ் அணிக்கு தாவல்: அதிர்ச்சியில் இபிஎஸ் அணி  

மதுரை: முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு நெருக்கமான உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன் திடீரென்று ஓபிஎஸ் அணிக்கு தாவியது, மதுரை மாவட்ட இபிஎஸ் அணி நிர்வாகிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மதுரை மாவட்ட அதிமுகவில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார், முன்னாள் மேயர் வி.வி.ராஜன் செல்லப்பா ஆகியோர் முக்கிய அதிகார மையங்களாக உள்ளனர். மூவரும் தற்போது எம்எல்ஏ-க்களாகவும், மாவட்டச் செயலாளர்களாகவும் உள்ளனர். ஆட்சிக்கு வந்தால் அமைச்சர், எம்எல்ஏ, மேயர் என்றும், கட்சியிலும் முக்கிய பொறுப்புகளில் இவர்கள் … Read more

5வது ஆண்டில் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்… திமுக தலைவரும், நெடிய அரசியலும்!

முதல்வர் அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக நான்கு ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார். இன்றைய தினம் 5வது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளார். இதையொட்டி பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 14 வயதில் பள்ளி மாணவராக அரசியல் ஆழம் பார்த்திட களமிறங்கிய ஸ்டாலின், இன்று தமிழகத்தின் முதல்வர் என்ற மாபெரும் அரியணையை அலங்கரித்துக் கொண்டிருக்கிறார். கோபாலபுரம் இளைஞர் திமுகவில் தொடங்கி என்ற உயரிய நிலையை அடையும் வரை ஸ்டாலினின் அரசியல் பயணம் மிகவும் நீண்டது. இவர் செய்த … Read more

8 வழிச்சாலையை கடுமையாக எதிர்ப்போம் – முத்தரசன் அறிவிப்பு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் சென்னையில் உள்ள அக்கட்சியின் மாநில தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “விலைவாசி உயர்வுக்கு எதிராக தமிழக முழுவதும் வரும் 30 ஆம் தேதி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி 150 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. உணவு பொருட்கள் மட்டுமல்லாமல் அனைத்து அத்தியாவசிய பொருட்கள் கடுமையாக உயர்ந்து வருகிறது. இதனை கட்டுபடுத்த மத்திய அரசு எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்கவும் அனுமதிக்கப்படுவதில்லை.  வருமானத்தை அதிகரிக்காத … Read more

ஒகேனக்கல்லில் கரைபுரண்டு பாயும் வெள்ளம்; மேட்டூர் அணையில் இருந்து 1.20 லட்சம் கனஅடி நீர்திறப்பு.! 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மேட்டூர்: கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், கேரள மாநிலம் வயநாட்டிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக, கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இரு அணைகளும் நிரம்பிய நிலையில் இருப்பதால், பாதுகாப்பு கருதி உபரிநீர் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது. மேலும் மாநில எல்லை பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஒகேனக்கல் காவிரியில் நேற்று காலை விநாடிக்கு 88 ஆயிரம் கனஅடியாக இருந்த … Read more