திருமணத்திற்கு முன் குழந்தை – உயிருடன் புதைக்கப்பட்டதா? இறந்து புதைக்கப்பட்டதா? என விசாரணை

கூடலூர் அருகே பிறந்து சிலமணி நேரமே ஆன குழந்தை உயிருடன் புதைக்கப்பட்டதாக புகார் எழுந்த நிலையில், குழந்தையின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு உடற்கூராய்விற்காக ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள நிமினிவயல் பகுதியைச் சேர்ந்தவர் தேவன். இவரது 21 வயது மகள் பிரியா அப்பகுதியில் உள்ள ஒருவரை காதலித்து வந்திருக்கிறார். இந்த நிலையில் பிரியா கர்ப்பமடைந்து ஏழு மாதம் ஆகியிருக்கிறது. அவருக்கு கடந்த 18 ஆம் தேதி வயிற்று வலி … Read more

மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்த ஆர்வம் காட்டாத தமிழக அரசு: வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு

கோவை: மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசு ஆர்வம் காட்டுவதில்லை என பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் குற்றம்சாட்டினார். கோவை பெரியகடை வீதி, தியாகி குமரன் மார்க்கெட் பகுதியில் அமைப்புசாரா தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் ஆகியோருக்கு மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை, இ-ஷ்ரம் எனும் அமைப்புசாரா தொழிலாளர் அட்டை வழங்கும் நிகழ்ச்சியில் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டபின் செய்தியாளர்களிடம் வானதி சீனிவாசன் கூறியதாவது: ”தமிழகத்தில் … Read more

தூத்துக்குடி துப்பாக்கி சூடு அறிக்கை குறித்து ஜெயகுமார் சந்தேகம்..! – அறிக்கை கசிந்தது எப்படி என கேள்வி..!!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி கடந்த 2018ம் ஆண்டு 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். போராட்டத்தின் 100வது நாளில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பிரம்மாண்ட பேரணியை பொதுமக்கள் நடத்தினர். ஆட்சியர் அலுவலகத்தை அடைந்த போது வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறி போராட்டக்கார்கள் மீது போலீசார் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச் சூட்டில் அப்பாவி பொதுமக்கள் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. … Read more

காஞ்சிபுரம் உள்பட 6 மாவட்டங்களில் புதிய மருத்துவக்கல்லூரி அமைக்க நடவடிக்கை; 4,038 பணியிடங்கள் அக்டோபரில் நிரப்பப்படும்.! அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

வேலூர்: காஞ்சிபுரம் உள்பட 6 மாவட்டங்களில் புதிய மருத்துவக்கல்லூரி அமைக்க ஒன்றிய அமைச்சரிடம் கோரிக்கை வைத்து நிறைவேற்றப்படும் என்று வேலூரில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.வேலூர் மாவட்டத்தில் 952 இடங்களில் கொரோனா மெகா தடுப்பூசி முகாம் இன்று நடந்தது. சத்துவாச்சாரியில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த முகாமை தமிழக சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் கொரோனா மெகா தடுப்பூசி முகாம் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட … Read more

திருப்பத்தூர்: இரு தரப்பினரிடையே மோதல் -4 பேர் மருத்துவமனையில் அனுமதி; 10 பேர் மீது வழக்கு

வாணியம்பாடி அருகே இடம் தகராறு தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிமுக கிளை செயலாளர் உட்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் அருகே உள்ள வெள்ளக்குட்டை புதிய காலனி தெருவைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி ஏகாம்பரம். அதேப் பகுதியை சேர்ந்த மோகன்தாஸ். இருவரும் அருகருகே வீடு கட்டி வசித்து வருகின்றனர். இந்த நிலையில் மோகன் அவருக்கு சொந்தமான 2 … Read more

முகத்தை அழகுபடுத்த நீராவி பாத்.. மாணவருக்கு நேர்ந்த விபரீதம்.. அழகுநிலைய உரிமையாளர் கைது!

கோவை ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த 18 வயதான கல்லூரி மாணவர் அந்தப்பகுதியில் உள்ள ஒரு ஆண்கள் அழகுநிலையத்துக்கு சென்றார். பின்னர் அவர் முகத்தை அழகுபடுத்த நீராவி பாத் எடுத்துள்ளார். அப்போது கவனக்குறைவால் கொதித்துக்கொண்டு இருந்த வெந்நீர் அந்த மாணவரின் முகத்தில் பட்டதால் வெந்தது. இதனால் மாணவர் வலியால் அலறி துடித்தார். உடனே அங்கிருந்த ஊழியர் சாதாரண கிரீமை எடுத்து அந்த காயத்தில் போட்டுவிட்டு மாணவரை வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டதாக தெரிகிறது. இதையடுத்து பெற்றோர் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு … Read more

கரோனாவுக்கு பிறகு வரும் விநாயகர் சதூர்த்தி: 2 ஆண்டு ஸ்டாக்கில் இருந்த சிலைகள் விற்பனை

மதுரை: கரோனாவுக்குப் பிறகு வழக்கமான ஆரவாரத்துடன் விநாயகர் சதூர்த்தி கொண்டாட்டத்திற்காக தொழிலாளர்கள் விநாயகர் சிலைகள் தயார் செய்து வருகின்றனர். இந்துகள் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளில் விநாயகர் சதூர்த்தி விழா முக்கியமானது. இந்த ஆண்டு வரும் 31ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. ‘கரோனா’ தொற்று ஊரடங்கு கட்டுப்பாடுகளால் கடந்த 2 ஆண்டாக ஆட்டம், பாட்டம், ஊர்வலத்துடன் கொண்டாடப்படும் விநாயகர் சதூர்த்தி விழா தடை ஏற்பட்டது. வழக்கமான கொண்டாட்டம் இல்லாமலேயே இந்த விழா நடந்தது. வீடுகளில் … Read more

ஓபிஎஸ் அரசியலில் இருப்பதற்கு எந்தவித அடிப்படையும் இல்லை – கே.பி. முனுசாமி

கிருஷ்ணகிரியை அடுத்த புளியஞ்சேரி கிராமத்தில் அதிமுக சார்பில் இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி எம்எல்ஏ கலந்துகொண்டு விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தவர், அனைவரும் வாருங்கள் என அழைப்பதற்கு ஓபிஎஸ்க்கு எந்தவித தார்மீக உரிமையும் இல்லை என்றும் கடந்த 23ம் தேதி நடைபெற்ற பொதுகுழுவுக்கு இருவரும் கையொப்பம் இட்டு தான் அனைவரையும் … Read more

விபத்தில் உயிரிழந்த நாய் – ஊர்முழுக்க இரங்கல் பேனர் அடித்து கண்ணீர் அஞ்சலி

மயிலாடுதுறை மகாதானபுரத்தைச் சேர்ந்தவர்கள் ஹரிபாஸ்கர்-கார்குழலி தம்பதியினர். இவர்கள் இருவருமே காவல் துறையில் வேலை பார்க்கின்றனர். ஊருக்கே காவல் பணியாற்றும் இவர்களின் வீட்டையும், இவர்களது இரண்டு குழந்தைகளையும் காப்பது என்னவோ இவர்கள் செல்லமாக வளர்க்கும் நாய்கள்தான். இவர்கள் தங்கள் வீட்டில் 4 நாய்களை அவற்றுக்கு செல்லப்பெயரிட்டு வளர்த்து வந்தனர். அதிலும் குறிப்பாக ‘சச்சின்” என்றழைக்கப்பட்ட நாய் இவர்களின் செல்லப்பிள்ளையாகவே மாறியிருந்தது. தினசரி காலை 5.30 மணிக்கே கதவைத் தட்டி, உரிமையாளர்களை எழுப்பிவிடும் சச்சின், வெளிக்கதவைத் திறந்து விட்டதுமே நேராக … Read more

திருமுல்லைவாயலில் சாலையில் வீணாகும் குடிநீர்; அதிகாரிகள் அலட்சியம்

ஆவடி: சென்னை புழல் ஏரியில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ராட்சத குழாய்கள் மூலமாக ஆவடி மாநகராட்சி மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் ஏற்றப்பட்டு, ஆவடி சுற்றுவட்டார பகுதிகளுக்கு லாரிகள் மூலமாக மக்களுக்கு வினியோகிக்கப்படுகிறது. இதற்கிடையே, கடந்த ஒரு மாதத்துக்கு முன் திருமுல்லைவாயல் காவல் நிலையம் எதிரே புழல் ஏரியிலிருந்து வரும் ராட்சத குடிநீர் குழாயில் வெடிப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகிறது. சாலைகளில் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதைத் தொடர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன் உடைந்து போன … Read more