புதுவிதமான 'ரோபோடிக்' பிரச்சாரத்தை கையில் எடுத்த தமிழக பாஜக.!
திருப்பூரை அடுத்த பல்லடத்தில் பா.ஜ.க சார்பில் வருகின்ற 17-ம் தேதி தாமரை மாநாடு நடைபெற உள்ளது. இதில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொள்கிறார். இந்த மாநாடு குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனை தொடர்ந்து தொடங்கப்பட்டுள்ளது. திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் செந்தில்வேல், மாவட்ட துணைத் தலைவர் குணசேகரன் ஆகியோர் ‘ரோபோடிக்’ பிரசாரத்தை தொடங்கி வைத்துள்ளனர். மேலும், மாநில பொதுக்குழு உறுப்பினர் சண்முகம், … Read more