கள்ளக்குறிச்சி பள்ளி கலவரம்: பேருந்துகளை டிராக்டர் மூலம் இடித்து சேதப்படுத்திய இளைஞர் நீதிமன்றத்தில் சரண்

கள்ளக்குறிச்சி: கனியாமூர் பள்ளி கலவரத்தின் போது பள்ளி பேருந்துகளை டிராக்டர் மூலம் இடித்து சேதப்படுத்தியதாக இளைஞர் ஒருவர் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார். கடந்த மாதம் 13ம் தேதி 12ம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி என்பவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், பள்ளி தரப்பில் தற்கொலை செய்து கொண்டதாகவும், உறவுகள்- பெற்றோர்கள் தரப்பில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறி, 4 நாட்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், அதற்கு மறுநாளான ஜூலை 17ம் தேதி, பெரும் … Read more

புதிய தலைமுறை அறக்கட்டளை அறிமுகப்படுத்தும் வள்ளி செயலி -சுதந்திர தின விழிப்புணர்வு நிகழ்வு

75வது சுதந்திர தின ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடும் வகையில் புதிய தலைமுறை அறக்கட்டளையின் வள்ளியம்மை அம்மாள் மருத்துவ உதவித் திட்டத்தின் மூலம் பல்வேறு நிகழ்ச்சிகள் எஸ்.ஆர்.எம். மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மைய வளாகத்தில் நடைபெற்றது. இதில் ’’வள்ளி செயலி’’ உட்பட பல்வேறு திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்தியாவின் 75வது சுதந்திர தின ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில், புதிய தலைமுறை அறக்கட்டளையின் வள்ளியம்மை அம்மாள் மருத்துவ உதவித் திட்டத்தின் மூலம் “வள்ளி சிறப்பு … Read more

ஒரே மாதத்தில் 3 மான்கள் பலி : மேட்டுப்பாளையம் சாலையில் தொடரும் சோகம்

கோயம்புத்தூர் மேட்டுப்பாளையம் ஊட்டி சாலையில் தெரு நாய்கள் கடித்து புள்ளிமான் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் ஊட்டி சாலை அகஸ்தியர் ஞான பீடம் செல்லும் வழியில் கந்தசாமி என்பவருக்கு சொந்தமாக தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் உணவு தேடி வந்த புள்ளிமான் ஒன்று தெரு நாய்களிடம் சிக்கிக்கொண்டது. மானை பார்த்த நாய்கள் அதனை தாக்கிய நிலையில், புள்ளிமான் உயிரிழந்தது. இந்த சம்பவம் தகவல் அறிந்து உடனடியாக அங்கு வந்த மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் … Read more

கோவில்பட்டி : ஊராட்சி மன்ற தலைவர் வெட்டிக் கொலை.. 2 பேர் கைது.!

கோவில்பட்டி அருகே ஊராட்சி மன்ற தலைவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள தெற்கு திட்டங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் பொன்ராஜ் (வயது 63), இவர் அவரது பண்ணை வீட்டுத் தோட்டத்தில் மர்மநபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். கொலை குறித்து விசாரணை நடத்திய கோவில்பட்டி கிழக்கு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், கொலையில் தொடர்புடைய கார்த்திக்(வயது 33) மற்றும் வசந்த் (வயது … Read more

கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதியுடன் படித்த 2 மாணவிகள் நீதிமன்றத்தில் ஆஜராகி ரகசிய வாக்குமூலம்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதியுடன் படித்த 2 மாணவிகள் நீதிமன்றத்தில் ஆஜராகி ரகசிய வாக்குமூலம் அளித்துள்ளனர். ஸ்ரீமதி மரணம் தொடர்பாக அவரது உறவினர்கள், பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள் உள்ளிட்டோரிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், திங்கட்கிழமையன்று ஸ்ரீமதியின் தோழிகள் இருவர், விழுப்புரம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில், நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் ஆஜராகி 2 மணி நேரம் வாக்குமூலம் அளித்தனர். மாணவியின் இரு பிரேதப் பரிசோதனைகள் குறித்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் குழு … Read more

“பெரிய நிறுவனங்களிடம் வசூல் வேட்டை நடத்தவே மின் கட்டண கருத்துக் கேட்பு கூட்டம்” – அண்ணாமலை குற்றச்சாட்டு

சென்னை: “மின் கட்டண குறைப்பு தொடர்பாக மக்களிடம் கருத்து கேட்கும் நாடகத்தை நிறுத்திவிட்டு, உயர்த்திய மின் கட்டணத்தை தமிழக அரசு உடனடியாக குறைக்க வேண்டும்” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இந்திய மக்கள் முன்னேற்றக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், தலைவருமான அர்ஜுனமூர்த்தி, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை முன்னிலையில் தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார். இதன்பின்னர் கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “பாஜகவின் … Read more

'எடப்பாடி பழனிசாமி சிறை செல்வது உறுதி' – ஓபிஎஸ் ஆதரவாளர் ஆரூடம்!

சிறை செல்வது உறுதி என, ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்து உள்ளார். தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்தில், அவரது ஆதரவாளர் புகழேந்தி அவரை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: எடப்பாடி பழனிசாமி ஒருபோதும் அதிமுகவின் மன்னனாக மகுடம் சூட முடியாது. ஐந்தரை அறிவுள்ள எடப்பாடி பழனிசாமி உடனிருக்கும் முன்னாள் அமைச்சர்கள் அனைவரும் பணத்தைப் பெற்றுக் கொண்டு அவரைத் தவறாக வழிநடத்திச் செல்கின்றனர். அதிமுக மற்றும் இரட்டை … Read more

உருக்கமான கடிதம் எழுதி வைத்துவிட்டு இளைஞர் தற்கொலை – சென்னையில் சோகம்

சென்னை அயனாவரம் நாட்டு முத்தையால் கன் தெருவை சேர்ந்தவர் கலா. இவர் சென்னை மாநகராட்சியில் தற்காலிக  தூய்மை பணியாளராக வேலை செய்கிறார். இவருக்கு வெங்கடேஷ் என்ற மகனும், விஜய் என்ற மகனும் உள்ளனர். விஜய் பத்தாம் வகுப்புவரை படித்துவிட்டு தனது வீட்டின் அருகே உள்ள தனியார் இருசக்கர வாகனம் பழுது நீக்கும் கடையில் வாட்டர் வாஷ் செய்யும் வேலை செய்துவந்தார். இந்தச் சூழலில் நேற்று காலை 9 மணிக்கு கலா வியாசர்பாடியில் உள்ள சர்ச்சுக்கு சென்றுவிட்டு மதியம் … Read more

பிரசவத்திற்க்காக அனுமதிக்கப்பட்ட பெண் தவறான சிகிச்சையின் காரணமாக உயிரிழப்பு: உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு

தேனி: தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் பிரசவத்திற்க்காக அனுமதிக்கப்பட்ட பெண் தவறான சிகிச்சையின் காரணமாக உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. இது குறித்து உடற்கூராய்வு நடத்த உத்தரவிட கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க உயர்நீதிமன்றம் மதுரை கிளை அரசு தரப்பில் விரி விளக்கம் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டது. தேனியை சேர்ந்த பூங்கொடி மனுதாக்கல் செய்துள்ளார். அதில் தனது மகள் கனிமொழிக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் மீண்டும் கருவுற்றதால் கடந்த ஜூன் மாதம் பிரசவத்திற்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். இந்த … Read more

பூத்துக் குலுங்கும் சூரியகாந்தி மலர்கள்! தென்காசியில் உருவான திடீர் சுற்றுலாத்தலம்!

தென்காசி மாவட்டத்தில் வாழ்வாதாரத்திற்கு பயிரிடப்பட்ட சூரியகாந்தி மலர்களால் திடீர் சுற்றுலாத்தலமாக மாறிய வயல் வெளிகள் கேரள மக்களால் நிரம்பி வழியத் துவங்கியுள்ளன. மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்திலுள்ள குற்றாலம், தென்காசி மாவட்டத்திலுள்ள பிரபல சுற்றுலாத்தலம். ஆனால் கடந்த சில வாரங்களாக சுரண்டையை சுற்றியுள்ள கிராமங்கள் திடீர் சுற்றுலாத்தலங்களாக மாறியுள்ளன. ஏன் அவை சுற்றுலாத்தலங்களாக மாறின என்பது குறித்து இத்தொகுப்பில் விரிவாகப் பார்க்கலாம். சுற்றுலாத்தலமாக உருவெடுத்த சூரியகாந்தி தோட்டங்கள்: தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரை, சுந்தரபாண்டிபுரம், ஆய்க்குடி உள்ளிட்ட பகுதிகளில் வருடம் … Read more