அண்ணாசாலை, பெரம்பூர், தாம்பரம்.. சென்னையின் முக்கிய பகுதிகளில் இன்று மின்தடை

சென்னையின் அண்ணாசாலை, பெரம்பூர், தாம்பரம், ஐடி காரிடார், தரமணி, போரூர் ஆகிய பகுதிகளில் பராமரிப்புப் பணிகளுக்காக சென்னையின் சில பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தப்படும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது. சென்னையின் சில பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும், பணிகள் முடிந்தால் மதியம் 2 மணிக்குள் விநியோகம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அண்ணாசாலை: ஃப்ளவர் பஜார் ராட்டன் பஜார், என்எஸ்சி போஸ் … Read more

கோவையில் பரபரப்பு.. போஸ்டர் விவகாரம் தொடர்பாக பா.ஜ.க – திமுகவினரிடையே தள்ளுமுள்ளு.!

கோவை – அவிநாசி சாலையில் அமைந்துள்ள மேம்பாலத்துக்காக நூற்றுக்கும் மேற்பட்ட தூண்கள் கட்டப்பட்டுள்ளன. இந்தத் தூண்களில் அனைத்து கட்சியினர் சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன. இதைத் தடுக்கும் வகையில் மாவட்ட கலெக்டர் சமீரன் தலைமையில் அனைத்துக் கட்சி சார்பில் கூட்டம் நடத்தப்பட்டது.  இந்த கூட்டத்தில் பொது இடங்கள் மற்றும் தூண்களில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களை 10 நாட்களுக்குள் அகற்ற வேண்டும் என மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.  இந்நிலையில், 10 நாட்களுக்கு மேலாகியும் போஸ்டர்கள் அகற்றப்படாததைக் கண்டித்து கோவை மாவட்ட … Read more

பெரியபாளையம் கோயில் | காணிக்கையாக வந்த 91 கிலோ தங்க கட்டிகள் வங்கியில் முதலீடு – பத்திரத்தை நிர்வாகிகளிடம் வழங்கினார் முதல்வர்

சென்னை: பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலுக்கு பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப்பட்ட 91 கிலோ தங்கத்தை உருக்கி, தங்கக் கட்டிகளாக வங்கியில் முதலீடு செய்யப்பட்டது. இதற்கான தங்க முதலீட்டு பத்திரத்தை கோயில் நிர்வாகிகளிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடந்த 10 ஆண்டுகளாக கோயில்களில் காணிக்கையாக வந்த பலமாற்று தங்க நகைகள் உள்ளிட்டவற்றில், கோயிலுக்கு தேவைப்படுபவை தவிர, மற்றவற்றை மும்பையில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான தங்க உருக்காலையில் உருக்கி, சொக்கத் … Read more

கரூரில் கழிவுநீரில் கலவையை கொட்டி கால்வாய் அமைக்கப்பட்டதா? -அதிகாரிகளின் விளக்கம் இதுதான்!

கரூரில் மாநகராட்சி பகுதியில் உள்ள குடியிருப்பு வீதியில் கால்வாய் நீரிலேயே கலவையை கொட்டி தளம் அமைப்பது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. வீடியோ வைரல் ஆனதை தொடர்ந்து நடந்தது என்ன என்பது குறித்து நகராட்சி அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் கழிவு நீர் கால்வாய் கட்டும் பணியின் போது கழிவுநீர் கால்வாயிலேயே கலவையை கொட்டி சாக்கடை தளம் அமைப்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இது குறித்து அதிர்ச்சி … Read more

கடனை திருப்பிக் கேட்டது குத்தமா? அரிவாளுடன் ஓட ஓட துரத்திய தி.மு.க பிரமுகர்; வீடியோ

திருச்சி அருகே கொடுத்த கடனை திரும்ப கேட்டவரை அறிவாளை எடுத்துக்கொண்டு வெட்டத் துரத்திய திமுக ஒன்றிய கவுன்சிலர் நித்தியா கணவரின் வெறிச்செயல் சமூக ஊடகங்களில் வீடியோவாக வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே தளுதாளப்பட்டி ஊராட்சி ஒன்றிய தி.மு.க கவுன்சிலராக இருப்பவர் நித்தியா. இவரது கணவர் வெற்றிச்செல்வன். இவர் இதே பகுதியை சேர்ந்த குணசேகரன் என்பவரிடம் ரூ.2 லட்சம் கடனாக பெற்றுள்ளார். கடன் வாங்கி  பல வருடங்கள் கடந்தும் வெற்றிச்செல்வன் கடனை திருப்பி … Read more

இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் நெடுங்கல் பகுதியை சேர்ந்தவர் தொழிலாளி வெங்கடேசன். இவர் இருசக்கர வாகனத்தில் தர்மபுரி மாவட்டம் அனுமந்தபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, நிலைத்தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த வெங்கடேசனை மீட்டு அப்பகுதியில் இருந்தவர்கள் சிகிச்சைக்காக தர்மபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி வெங்கடேசன் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து இந்த விபத்து குறித்து … Read more

குற்ற வழக்குகளில் குற்றத்தை நிரூபிக்க முக்கிய காரணியாக விளங்கும் அரசு தரப்பு சாட்சிகளின் கண்ணியம் காக்கப்படுமா?

சென்னை: குற்ற வழக்குகளில் குற்றத்தை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்க முக்கிய காரணியாக விளங்கும் அரசு தரப்பு சாட்சிகளை, மணிக் கணக்கில் நீதிமன்றங்களில் காத்திருக்க வைப்பதையும், அவர்களின் கண்ணியத்துக்கு ஊறுவிளைவிக்கும் வகையில் கேள்விகள் கேட்பதையும் தவிர்க்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு வலுத்து வருகிறது. கீழமை நீதிமன்றங்களில் நடைபெறும் குற்ற வழக்குகளில் சாட்சி விசாரணை என்பது மிகவும் முக்கியமானது. திறமையான அரசு வழக்கறிஞர்களின் வாதத்தால் பெரும்பாலான வழக்குகளில் குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு, தண்டனை பெற்றுக் கொடுக்கப்படுகிறது. இதற்கு முக்கிய … Read more

பொங்கலுக்கு தமிழக அரசு கிஃப்ட்: இந்த தடவை கட்டாயம் – அமைச்சர் உறுதி!

பொங்கல் பண்டிகைக்கு வேட்டி சேலை வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஆர். காந்தி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வேட்டி சேலை வழங்கும் திட்டத்தினை தொடர்ந்து செயல்படுத்தவும், கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களுக்கு தொடர் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி விசைத்தறி நெசவாளர் கூட்டமைப்புகள் உண்ணாவிரதம் மற்றும் போராட்டங்கள் நடத்துவதாகவும் மற்றும் இத்திட்டத்தினை அரசு கைவிட உத்தேசித்துள்ளதாகவும் சில பத்திரிகை மற்றும் ஊடகங்களில் தவறான தகவல்கள் … Read more

யாரைக் கேட்கிறாய் சுங்கக் கட்டணம்..? காரோடு இழுத்துச் சென்ற ஓட்டுனர்..! கில்லி படம் போல நிஜ சம்பவம்..!

சுங்கச்சாவடி ஒன்றில் சுங்கக்கட்டணம் செலுத்த மறுத்த வாகன ஓட்டி ஒருவர், சுங்கச்சாவடி ஊழியரை தாக்கியதோடு, அவரது சட்டையை பிடித்து காரோடு சேர்த்து இழுத்துச்சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. சுங்க கட்டண உயர்வு..! நிர்ணயித்த காலத்துக்கு பின்னரும் கணக்கு வழக்கில்லாமல் சுங்கம் வசூலிக்கும் சாவடிகள்..! பாஸ்டெக் இல்லையென்றால் இரு மடங்கு கட்டணம்..! பாஸ்டேக் இருந்தாலும் நீண் டவரிசையில் காத்திருக்கும் அவலம் போன்ற வற்றால் சுங்கச்சாவடி மீது வாகன ஓட்டிகளுக்கு ஒரு வித வெறுப்புணர்வு மேலோங்கி வருகின்றது. இதன் … Read more

அரசியல் வேறு… அரசு வேறு… | மத்திய அரசுடனான உறவில் சுமுக நிலைப்பாடு – ‘அரசியல்’ செய்யும் அதிகாரிகள் களையெடுப்பு

சென்னை: மக்களுக்கான வளர்ச்சித் திட்டங்கள் கிடைக்க மத்திய அரசுடன் பகை உணர்வான அணுகுமுறை வேண்டாம் என்ற நிலைப்பாட்டுடன் இருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், வேண்டாத செய்திகளை பரப்பும் அதிகாரிகளை களையெடுக்கவும் முடிவெடுத்துள்ளார். நீட் விவகாரத்தில் தமிழகத்துக்கு சாதகமாக நடக்கவில்லை, ஜிஎஸ்டி இழப்பீட்டை நீட்டிக்கவில்லை என்பது உள்ளிட்ட பல்வேறு வருத்தங்கள் இருந்தாலும், மத்திய அரசுடன் சுமுகமான போக்கையே தமிழக அரசு விரும்புகிறது. இதைப் பயன்படுத்தி தமிழகத்துக்கு பல்வேறு திட்டங்களையும், அதன்மூலம் போதிய நிதியையும் பெற முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு … Read more