அடம் பிடித்து நாடகம் ஆடும் ஆளுநர் – சிபிஎம் கண்டனம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பல்கலை கழக துணை வேந்தர்கள் நியமனத்தை, மாநில அரசே மேற்கொள்ளும் சட்ட வரைவிற்கு ஒப்புதல் மறுத்து ஆளுநர் அடம் பிடித்துள்ளார். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை விடவும் தனக்கு அதீத அதிகாரங்கள் இருப்பதாக காட்டிக்கொள்ளும் அடாவடித்தனத்தின் தொடர்ச்சியே இதுவாகும். குஜராத், தெலங்கானா மாநிலங்களில் துணை வேந்தர் நியமனத்தை மாநில அரசுகளே மேற்கொள்கின்றன. அங்கு UGC விதிமுறைகளின்படியே நியமனங்கள் நடக்கின்றன. அதையே தமிழ் நாட்டிலும் கொண்டுவர அரசு முடிவு செய்துள்ளது. … Read more

எடையூர் முதல் கோட்டகம் வரை ஜல்லி கற்கள் பெயர்ந்துள்ள சாலையை சீரமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

முத்துப்பேட்டை: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த எடையூர் கிழக்கு கடற்கரை சாலை வாண்டையார் பேருந்து நிறுத்தம் முதல் அனுமந்தன் கோட்டகம் வரையிலான சுமார் ஒரு கிலோ மீட்டர் சோத்திரியம் சாலை இப்பகுதி மக்களின் முக்கிய சாலையாகும். இந்த சாலை போட்டு சுமார் 12 வருடங்களுக்கு மேலாகிறது. இவ்வழியாக தான் எடையூர், முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி ஆகிய பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்லவேண்டும். குறிப்பாக பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவிகள், அதேபோன்று சுற்று பகுதியை சேர்ந்த மக்கள் தொலைதூரம் செல்ல … Read more

ஜெயலலிதாவுக்கு சிகிச்சை | அப்பல்லோ மருத்துவமனை மீது தவறே இல்லை: எய்ம்ஸ் மருத்துவக் குழு அறிக்கை

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் அப்பல்லோ மருத்துவமனை எவ்வித குறையும் வைக்கவில்லை. அங்கு அளிக்கப்பட்ட அனைத்து சிகிச்சைகளுமே முறையான மருத்துவ நடைமுறைகளுக்கு உட்பட்டே இருந்துள்ளது என்று எய்ம்ஸ் மருத்துவக் குழு தெரிவித்துள்ளது. ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்தேகம் எழுப்பிய நிலையில் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி இது குறித்து விசாரிக்க ஒரு நபர் ஆணையம் ஒன்றை அமைத்தார். அந்த ஆணையத்திற்கு உதவ எய்ம்ஸ் மருத்துவர்கள் கொண்ட 7 பேர் … Read more

ஆன்லைனில் போலி ரியல் எஸ்டேட் விளம்பரம் – ரூ.11 லட்சம் மோசடி!

ஆன்லைன் விற்பனை தளமான ஓ.எல்.எக்ஸ். தளத்தில் போலியான ரியல் எஸ்டேட் விளம்பரங்களை வெளியிட்டு பெருந்தொகையை மோசடி செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு முன் ஜாமீன் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. ஓ.எல்.எக்ஸ். ஆன்லைன் விற்பனை தளத்தில் எந்த ஆவணங்களும் இல்லாமல் நிலம் விற்பனைக்கு உள்ளதாக கூறி ஸ்மார்ட் ஹோம் டெவலப்பர்ஸ் என்ற நிறுவனம் சார்பில் விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தை நம்பி, கோவையை சேர்ந்த எல்சன் என்பவர் 11 லட்சம் ரூபாயை செலுத்தியுள்ளார். பின்னர், … Read more

வடலூர்-கருங்குழி சாலையில் பாலம் அமைக்கும் பணி மந்தம்: விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை

வடலூர்: வடலூர்- கருங்குழி செல்லும் சாலையில் புதியபாலம் அமைக்கும் பணி மந்தமாக நடைபெறுவதால் விரைவாக முடிக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். வடலூர் அருகே கருங்குழி செல்லும் சாலையில் ஏற்கனவே பாலம் இருந்தது. அதை அகற்றி புதிய பாலம் கட்டும் பணி துவங்கி ஆறு மாதங்கள் ஆகிறது. இந்த பாலம் வழியாக தான் கொளக்குடி, மேட்டுக்குப்பம், நைனார்குப்பம் ஆகிய ஊருக்கு இந்த பாலம்மக்கள் செல்ல வேண்டும். இங்கு தனியார் கல்லூரி, அரசு மேல்நிலைப்பள்ளி, தொடக்கப்பள்ளி, வள்ளலார் சித்தி வளாகம், … Read more

அப்பா இல்லை, ரோட்டில் பெட்டிக் கடை வைத்திருக்கும் அம்மா… கோ கோ-வில் கனவைத் துரத்தும் விக்கி!

Ultimate Kho Kho 2022 – Chennai Quick Guns Tamil News: கோ கோ, நம் மண்ணில் விளையாடப்படும் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றாக உள்ளது. ஆனால், இவ்விளையாட்டு பள்ளி – கல்லூரிகள் அளவில் மட்டுமே அதிகம் விளையாடப்படும் ஒரு விளையாட்டாக இருந்து வருகிறது. மற்ற விளையாட்டுகளைப்போல் இந்த விளையாட்டுக்கு சர்வதேச அளவில் முக்கியத்தும் வழங்கப்படாமலும் இருக்கிறது. ஆனால், தற்போது இருக்கும் நவீன விளையாட்டு உலகம் அதை மாற்றும் முன்னெடுப்பை எடுத்துள்ளது. அவ்வகையில், ஐபிஎல், புரோ கபாடி லீக் … Read more

பாலியல் குற்றங்களுக்கான தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: பாலியல் குற்றங்களை செய்ய அஞ்சும் அளவுக்கு தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில், ”தேனி மாவட்டம் எரசக்கநாயனூரில் கடந்த ஜூலை 2-ஆம் தேதி பாலியல் வன்கொடுமை முயற்சியை எதிர்த்ததால் கொடியவன் ஒருவனால் தீயிட்டு எரிக்கப்பட்ட 7 வயது சிறுமி, ஒரு மாத உயிர்ப் போராட்டத்திற்கு பிறகு உயிரிழந்திருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது. அவரது குடும்பத்திற்கு அனுதாபங்கள். 7 வயது சிறுமிக்கு … Read more

நீ கிறிஸ்டியன் தான..? எச். ராஜா பத்திரிகையாளர் சந்திப்பில் தரக்குறைவு பேச்சு

பாஜக மாவட்ட தலைவர் டாக்டர். சரவணன் திமுகவில் இணைந்த விவகாரத்தால் பாஜக நிர்வாகிகள் புலம்பலில் உள்ளனர். தென்மாவட்டங்களில் காலூன்றியாக வேண்டும் என்ற இலக்கில் பாஜக இருந்து வருகிறது. முதலில் மதுரையை கைப்பற்றிவிட்டால் மற்ற மாவட்டங்களை எளிதாக அடைந்து விடலாம் என்று எண்ணி மதுரை மாவட்ட பொறுப்பு டாக்டர். சரவணனுக்கு வழங்கப்பட்டது. ஆனால், ஒரேநாளில் திமுகவை கடுமையாக விமர்சித்துவிட்டு அதே நாளில் திமுகவில் இணைந்துவிட்டார் டாக்டர் சரவணன். இந்த நிலையில் காரைக்காலில் இன்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவின் … Read more

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் ஆப்ரேஷன் தியேட்டர் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து

மதுரை அல்லாது சிவகங்கை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி கன்னியாகுமரி என ஒட்டுமொத்த தென் தமிழகத்திற்கும் மருத்துவ தலைநகரமாக விளங்கக்கூடியது மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை. இக்கட்டடம் 1984ல் கட்டப்பட்டது.   சில ஆண்டுகளாக கட்டடத்தின் சுவர் பகுதிகளில் ஆங்காங்கே விரிசல் விட்டு காணப்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் பெய்த மழையால் மதுரை அரசு மருத்துவமனையில் புற்றுநோய் அறுவை சிகிச்சை பிரிவு 90வது வார்டின், ஆப்பரேஷன் தியேட்டர் மேற்கூரையின், சிமென்ட் பூச்சு பெயர்ந்து விழுந்தது. அதில் … Read more

கீழக்கரை பகுதியில் நிலத்தடி நீருக்கு வேட்டு வைக்கும் கருவேல மரங்களை அகற்ற வேண்டும்: சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

கீழக்கரை: கீழக்கரை தாலுகாவில் மழை நீரை பாதுகாக்க சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதுடன் பலன் தரும் மரக்கன்றுகளை நடுவதற்கு உள்ளாட்சி அமைப்புகள் முன் வரவேண்டும். இதன் மூலம் அடுத்த 3 மாதங்களுக்கு தண்ணீர் எதிர்பார்ப்பின்றி மரங்கள் வளர்ந்து சுற்றுச்சூழலை மேம்படுத்த உதவும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, வடஅமெரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா கண்டங்கள் உட்பட 129 நாடுகளில் சீமை கருவேல மரங்கள் உள்ளது. 1870ல் சமையலுக்கான எரி பொருளாகவும் பயிர்களுக்கு வேலிகளாகவும் முதன் … Read more