6 வயது சிறுமியை கரும்பால் அடித்தே கொன்ற கொடூரத்தாய்…! செல்போன் பேச்சு அம்பலமானதால் ஆத்திரம்..!

திருவண்ணாமலை அருகே 6 வயது சிறுமி கரும்பால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தாயின் செல்போன் பேச்சை காட்டிக் கொடுத்ததால் சிறுமிக்கு நிகழ்ந்த கொடுமை குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.. திருவண்ணாமலை அடுத்த அரடாப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் பூபாலன் இவரது மனைவி சுகன்யா . இவர்களுக்கு எட்டு வயதில் மூன்றாம் வகுப்பு படித்து வரும் பிரசன்னதேவ் என்ற மகனும், ஆறு வயதில் ஒன்றாம் வகுப்பு படித்து வரும் ரித்திகா … Read more

களியக்காவிளை முதல் கன்னியாகுமரி வரை தேசிய கொடி பேரணி – குமரி ஆட்சியர், எஸ்பி பதிலளிக்க உத்தரவு

மதுரை: களியாக்காவிளை முதல் கன்னியாகுமரி வரை தேசிய கொடியுடன் வாகனத்தில் பேரணி நடத்த அனுமதி கோரிய மனுவுக்கு குமரி மாவட்ட ஆட்சியர், எஸ்பி ஆகியோர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கன்னியாகுமரியைச் சேர்ந்த விஷ்ணு, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், “ஆகஸ்ட் 15-ல் மதியம் 2 மணிக்கு களியக்காவிளையில் இருந்து கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரம் வரை இரு சக்கர வாகனத்தில் தேசிய கொடியுடன் பேரணி நடத்த திட்டமிட்டுள்ளோம். இதில் நூறு கல்லூரி மாணவர்கள் பங்கேற்கின்றனர். … Read more

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் என்ன..?- மக்கள் நல்வாழ்வு துறை அறிக்கை..!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வரும் நிலை காணப்படுகிறது. தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் பதிவான கொரோனா பாதிப்பு குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 927 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் . இதனால், இதுவரை தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35 லட்சத்து 55 ஆயிரத்து 538 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 186 பேருக்கு … Read more

மொட்டை மாடிக்கு செல்லவே பயம்! தாழ்வான மின்னழுத்த கம்பிகளால் அவதிப்படும் மக்கள்!

தாழ்வாக செல்லும் உயர்மின்னழுத்த கம்பிகளால் தங்கள் வீட்டு மொட்டை மாடிக்கு செல்லக் கூட பயமாக இருப்பதாக கோவை மசக்காளிப்பாளையம் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மின்பாதையை புதைவட தடமாக மாற்றி எடுத்து செல்ல வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவை டாடாபாத் துணை மின்நிலையத்தில் இருந்து கள்ளிமடை பகுதியில் உள்ள சிங்காநல்லூர் துணை மின் நிலையத்துக்கு 110 மெகாவாட் அளவு மின்சாரம் உயர் மின்னழுத்த கம்பிகள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு … Read more

நான் பேசியிருக்க வேண்டிய உரை – ப சிதம்பரம்  

P Chidambaram P Chidambaram writes: The speech that I might have made: இந்த விவாதம் முன்பே நடந்திருக்க வேண்டும். விதி 267 இன் கீழ் உள்ள விவாதத்திற்கும் வேறு எந்த விதிக்கும் இடையே உள்ள வேறுபாட்டை நான் புரிந்து கொள்ளவில்லை. அரசாங்கம் பிடிவாதமாக இருந்தது. அதனால் தான் இந்த தாமதம்.   விலைவாசி உயர்வு பற்றி நாம் விவாதிக்கலாம். ஆனால் இதை பொருளாதார நிலை பற்றிய விவாதமாக நாம் கருத முடியாது. அப்படி … Read more

வேலூர் மாநகராட்சி | கைப்பம்புடன் கால்வாய் சுவர் அமைத்த அவலம்.! 

வேலூர் மாநகராட்சியில் சுமார் 1000 கோடி மதிப்பீட்டில் பல்வேறு கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த வகையில் அனைத்து வார்டுகளிலும் முறையான கழிவுநீர் கால்வாய் மற்றும் பாதாளா சாக்கடை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில், வேலூர் மாநகராட்சி  விஜயராகவபுரத்தில் அடி பம்புடன் சேர்த்து கழிவு நீர் கால்வாயின் தடுப்பு சுவர் கட்டப்பட்டுள்ளது. மாநகராட்சியின் இந்த செயலால் அடிப்பம்பை பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் வேதனை அடைந்துள்ளனர்.  அடி பம்புடன் சேர்த்து கழிவு … Read more

மூடப்பட்ட ஹைட்ரோ கார்பன் கிணறுகள் திறப்பிற்கு எதிராக ஆக.15-ல் உண்ணாவிரதம்: பி.ஆர்.பாண்டியன்

சென்னை: “மூடப்பட்ட ஹைட்ரோ கார்பன் கிணறுகளை எல்லாம் திறந்து வணிக நோக்கோடு பயன்படுத்துவதற்கு கார்ப்பரேட்டுகளையும், ஓஎன்ஜிசியையும் களமிறக்குகிற முயற்சியில் திமுக அரசு ஈடுபட்டுள்ளது. இதனைக் கண்டித்து வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி மன்னார்குடியில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்” என்று விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறியுள்ளார். அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில், விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் இன்று சந்தித்துப் … Read more

தரவு பாதுகாப்பு மசோதா வாபஸ் ஏன்? – மத்திய அரசிடம் வெள்ளை அறிக்கை கேட்கும் விசிக எம்பி!

தரவு பாதுகாப்பு மசோதா: கணினிகளின் பயன்பாடு அதிகரித்துவிட்ட இன்றைய இன்டர்நெட், டிஜிட்டல் யுகத்தில் பயனர்களின் தனிப்பட்ட தரவுகளை கணினி மற்றும் இணைய நிறுவனங்கள் திருடாமல் தடுக்கும் நோக்கில் 2019 இல் தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதாவை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. நாடாளுமன்ற கூட்டுக்குழு பரிசீலனை: ஆனால் அந்த மசோதாவில் பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. இதில் முக்கியமாக இந்த சட்டத்தின் பயன்பாட்டிலிருந்து எந்தவொரு நிறுவனத்திற்கும் விலக்கு அளிப்பது … Read more

வராத பேருந்து; வாடும் மக்கள்! பரிதவிக்கும் பள்ளி மாணவர்கள்! 2022-லும் இப்படி ஒரு அவலம்!

ஏர்வாடி அருகே பேருந்து வசதி இல்லாமல் பரிதவிக்கும் 10-க்கு மேற்பட்ட கிராம மக்கள்… ஆட்டோவிற்கு ஆயிரம் ரூபாய் கொடுத்து ஆபத்தான முறையில் பயணம் செய்து பள்ளி செல்லும் மாணவர்களின் அவல நிலையை இத்தொகுப்பில் காணலாம். ராமநாபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே சேரந்தை, கிருஷ்ணாபுரம், தனிச்சியம், சேனான்குறிச்சி, அடஞ்சேரி, கல்பார், ஆதன்சேரி, பிச்சப்பன் வலசை, மூக்கன்வலசை உள்ளிட்ட 10-க்கு மேற்பட்ட கிராமத்திற்கு போதிய பேருந்து வசதிகள் இல்லாததால் நாள்தோறும் வேலைக்கு செல்வோர், பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் … Read more

டி.டி.வி தினகரன் குறித்த கேள்வி; ஓ.பி.எஸ் பதில் என்ன?

OPS reply to question about TTV comments: அ.தி.மு.க.,வின் முதல் நாடாளுமன்ற உறுப்பினர் மாயத்தேவர் மறைவையொட்டி அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் அஞ்சலி செலுத்தினர். அந்த வகையில் சசிகலா இன்று நண்பகல் அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் தனது சகாக்களுடன் அஞ்சலி செலுத்தினார்.  மாயத்தேவர் மறைவையொட்டி அவரது சொந்த ஊரான திண்டுக்கல்லுக்கு சென்று நேரில் ஆறுதல் தெரிவிக்க விமானம் மூலம் சென்னையில் இருந்து திருச்சி வந்தார் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம். … Read more