தொடங்கப்பட்ட பொறியியல் கலந்தாய்வு..!முதல் நாளில் கல்லூரிகளை தேர்வு செய்த மாணவர்கள்.!

பொறியியல் கலந்தாய்வு தொடங்கப்பட்ட நிலையில், முதல்நாளில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்லூரிகளை தேர்வு செய்தனர். அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் 431 பொறியியல் கல்லூரிகளில் இளநிலைப் படிப்புகளுக்கு ஒரு லட்சத்து 48,811 இடங்கள் உள்ளன. இதற்கான மாணவர்சேர்க்கை கலந்தாய்வு நேற்று தொடங்கியது. முதல்கட்டமாக முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள் ஆகியோர் அடங்கிய சிறப்புப் பிரிவுக்கான கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி முதல்நாளான நேற்று அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டில் விண்ணப்பித்திருந்த விளையாட்டு வீரர்கள், … Read more

மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்தில் சூரிய சக்தி மூலமாக மின் உற்பத்தி செய்ய திட்டம்

சென்னையில் 2-ம்கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், உயர்மட்ட பாதை, மெட்ரோ ரயில் நிலையங்கள், பணிமனைகளில் சூரிய மின்சக்தி சாதனங்களை நிறுவி, மின்சாரம் உற்பத்தி செய்ய மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன்மூலமாக, ஆண்டுக்கு 2,400 கிலோவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். கார்பன் வெளியேற்றத்தை குறைத்தல், பசுமையை காத்தல்,பாதுகாப்பான மின் ஆற்றலை பெறுதல் உள்ளிட்ட நோக்கத்துக்காக சூரிய மின்சக்தி திட்டத்துக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஆரம்பம் முதலே ஊக்கம் அளித்து வருகிறது. … Read more

‘ரூபாய் நோட்டுல வாழுறாரு காந்தி’… பாஜக அடுத்த ப்ளான்?

நாட்டின் 75ஆவது சுதந்திர தினம் ஆகஸ்ட் 15ஆம் தேதி நாடு முழுவதும் கோலகலமாக கொண்டாடப்பட்டது. “ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ் – சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா” என்ற பெயரில் சுதந்திர தினத்தை கொண்டாட மத்திய பாஜக அரசு அழைப்பு விடுத்திருந்தது. மேலும், மத்திய பாஜக தலைமையிலான அரசு ஹர் கர் திரங்கா என்ற பரப்புரையையும் முன்னெடுத்தது. அதன் ஒருபகுதியாக, அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடி ஏற்ற வேண்டும்; சமூக வலைதளங்களிலும் மூவர்ணக் கொடியை முகப்பு புகைப்படமாக … Read more

உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ’மேஜிக் சூப்’ ரெசிபி

ஒவ்வொருவரும் தங்கள் உணவில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்களை சேர்ப்பதன் மூலமும் தங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வளர்ப்பதில் கவனம் செலுத்துகிறார்கள். ஆனால் நோய் எதிர்ப்பு சக்தி ஒரே நாளில் வராது, அதற்கு ஆரோக்கியமாக சாப்பிடுவது, நன்றாக தூங்குவதுடன் பல வாழ்க்கை முறை பழக்கங்களை கடைபிடிப்பது அவசியம். இங்கு உங்கள் இம்யூனிட்டியை அதிகரிக்க ஒரு சூப்பர் சூப் ரெசிபி உள்ளது. இதற்கு தக்காளி, பீட்ரூட் மட்டும் போதும். தேவையான பொருட்கள் 1½ – பீட்ரூட் (உரித்து, வேகவைத்து … Read more

நகைக்காக ஆண்நண்பருடன் இணைந்து கூலிப்படையை ஏவி கணவனை கொன்ற மனைவி..!

தென்காசி மாவட்டத்தில் ஆண் நண்பருடன் சேர்ந்து கூலிப்படையை ஏவி கணவரை கொன்ற மனைவி கைது செய்யப்பட்டார்.  தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே வென்றிலிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த வைரவசாமி மற்றும் அவரது மனைவி முத்துமாரி ஆகியோர் வீரசிகாமணியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். நேற்று முன்தினம் காலையில் வழக்கம்போல் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்ற இவர்கள் பணி முடிந்ததும் இரவில் வீடு திரும்பினர். நடுவக்குறிச்சி சமத்துவபுரத்தை கடந்து காட்டு பகுதியில் சென்றபோது, அந்த வழியாக காரில் … Read more

3 முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வருக்கு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் கடிதம்

சென்னை: போக்குவரத்து கழக ஊழியர்களின் பிரச்சினைகளில் முடிவெடுத்து, ஊதிய ஒப்பந்தத்தை இறுதிசெய்ய நேரடியாக தலையிட்டு தீர்வு காணுமாறு முதல்வருக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் (சிஐடியு) கடிதம் எழுதியுள்ளது. இதுதொடர்பாக சம்மேளனத்தின் தலைவர் அ.சவுந்தரராஜன், பொதுச் செயலாளர் கே.ஆறுமுக நயினார் ஆகியோர் முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: கடந்த 2006-11 காலகட்டத்தில் திமுக ஆட்சியின்போது போக்குவரத்து ஊழியர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய ஒப்பந்தம் என்பதை மாற்றி 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை என்று அப்போதைய … Read more

ஓ.பன்னீர்செல்வம் தூண்டிலில் சிக்கிய எடப்பாடி பழனிசாமி – ர.ர.,க்கள் கப்சிப்!

தரப்பில் இருந்த அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள், ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்து வருவது, எடப்பாடி பழனிசாமி தரப்பை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. கடந்த ஜூலை மாதம் 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, , வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் அண்மையில் தீர்ப்பு அளித்தார். அதில், அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்றும், அதிமுகவில் ஜூன் மாதம் 23 … Read more

சேலத்திற்கு ஆர்ப்பாட்டமாக வருகை தந்த எடப்பாடி பழனிச்சாமி! மெளனம் கலையுமா?

சேலம்: அதிமுகவில் ஏற்பட்டுள்ள பெரும் பரபரப்புகளுக்கு இடையே, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம் வந்தடைந்தார். அவருக்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.  அப்போது, கழகப் பொதுச் செயலாளர் அம்மாவின் அரசியல் வாரிசு எடப்பாடியார் என தொண்டர்கள் ஆவேசமாக முழக்கங்கள் எழுப்பினார்கள். எடப்பாடி தலைமையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லாது என உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனால் அவர் வகித்து வந்த இடைக்கால பொதுச் செயலாளர் பதவியும் தானாகவே காலாவதியான நிலையில், … Read more

ரயில் நிலைய கவுன்டர்களின் பயன்பாடுகள் குறைகின்றன: தெற்கு ரயில்வேயில் 80% டிக்கெட் ஆன்லைனில் விற்பனை

நெல்லை: தெற்கு ரயில்வேயில் சென்னை, திருச்சி, மதுரை, சேலம், பாலக்காடு, திருவனந்தபுரம் ஆகிய 6 கோட்டங்கள் உள்ளன. தமிழகம், கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் முழுமையாகவும், ஆந்திரா, கர்நாடகாவில் சில பகுதிகளும் தென்னக ரயில்வே எல்கையில் இடம்பெற்றுள்ளன. இவற்றில் தமிழகத்திலும், கேரளாவிலும் படித்தவர்கள் அதிக சதவீதத்தில் உள்ளதால் இந்த 2 மாநிலங்களிலும் 80 சதவீத டிக்கெட்டுகள் ஆன்லைனிலேயே எடுக்கப்பட்டு வருகின்றன. அதாவது சமீபத்தில் எடுக்கப்பட்ட புள்ளி விவரப்படி, தெற்கு ரயில்வேயில் 2018ம் ஆண்டில் 26 முதல் 28% … Read more