இப்படி துரோகம் செய்யலாமா? ஆறுகுட்டியுடன் அ.தி.மு.க பிரமுகர் வாக்குவாதம் ஆடியோ வைரல்

அதிமுகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுகுட்டி திமுகவில் இணைந்த நிலையில் அதிமுக நிர்வாகி ஒருவர் அவர் திமுக”வில் இணைந்து தொடர்பாக அவருடன் தொலைபேசியில் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஆடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. கோவை கவுண்டம்பாளையம் தொகுதியின் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஆறுகுட்டி நேற்று முன்தினம் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அது தொடர்பாக அவர் போட்டியிட்ட கவுண்டம்பாளையம் தொகுதியை சேர்ந்த துடியலூர் பகுதி எம்.ஜி.ஆர் இளைஞரணி இணைச் செயலாளர் எம்.ஆர்.நாகராஜன் ஆறுகுட்டியுடன் … Read more

எழுத்துதேர்வில் தேர்ச்சி பெற்ற 127 பேர் உடற்தகுதி தேர்வில் தோல்வி அடைந்ததற்கான காரணம் கடின பயிற்சி இல்லாதது-போலீசார் தகவல்..!

தமிழக காவல்துறையில் புதிதாக சேர்க்கவுள்ள 444 சப்-இன்ஸ்பெக்டர்கள் பணிகளுக்கான எழுத்து தேர்வு நடத்தப்பட்டதில் வெற்றி பெற்ற 413 பெண்களுக்கான உடற்தகுதி தேர்வு சேலம் மாவட்டம் குமாரசாமிப்பட்டியில் உள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது.  கடந்த 23-ந்தேதி தேர்வர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு அவர்களுக்கு உயரம் அளவீடு செய்து 400 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடத்தப்பட்டதன் முடிவில், முதல் நாளில் 284 பெண்கள் கலந்து கொண்டதில் 248 பேர் மட்டும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர்.  இதையடுத்து, நேற்று முன்தினம் 2-ம் கட்ட … Read more

‘‘எனக்கு துரோகம் செய்தால் நான் பொறுத்துக் கொள்ள வேண்டுமா?’’ – வைரல் ஆடியோவில் ஆறுக்குட்டி

கோவை: துரோகம் செய்துவிட்டதாக திமுகவில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ ஆறுக்குட்டியிடம் அதிமுக உறுப்பினர் வாக்குவாதம் செய்த ஆடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. கோவை விளாங்குறிச்சியைச் சேர்ந்தவர் ஆறுக்குட்டி. 2011-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை அதிமுக எம்.எல்.ஏவாக இருந்தார். சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு தரப்படவில்லை. இந்நிலையில் கட்சி நடவடிக்கைகளில் ஈடுபடாமல் சில காலம் அமைதியாக இருந்த முன்னாள் எம்.எல்.ஏ ஆறுக்குட்டி கடந்த 24-ம் தேதி பொள்ளாச்சியில் நடந்த விழாவில் … Read more

புதுப்பட்டினம் ஊராட்சியில் வாகன ஓட்டிகளிடம் அடாவடி வசூல் வேட்டை; நடவடிக்கை எடுக்க கோரிக்கை

திருக்கழுக்குன்றம்: புதுப்பட்டினம் ஊராட்சியில் அடாவடி வசூல் வேட்டையால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாவதால், இதனை சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து கட்டுப்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர். திருக்கழுக்குன்றம் ஒன்றியத்திற்குட்பட்ட புதுப்பட்டினம் ஊராட்சியில் பஜார் வீதிக்கு வருகின்ற லாரி, மினி வேன் உள்ளிட்ட வாகனங்களுக்கு தினசரி வரி வசூல் செய்வதற்காக ஊராட்சி மூலம் ஆண்டுக்கு ஒருமுறை என ஏல முறையில் குத்தகை விடப்பட்டு அதை புதுப்பட்டினத்தை சேர்ந்த ஒருவர் குத்தகை எடுத்து புதுப்பட்டினத்திற்கு லோடு எற்றி … Read more

“எனக்கு ஏன் அழைப்பு இல்லை “.. மாநகராட்சி கமிஷனர் மீது சேலம் திமுக எம்பி பகிரங்க புகார்!

அரசு நிகழ்ச்சிகளில் தனக்கு அழைப்பு கொடுப்பதில்லை என்றும் அதையும் மீறி அழைப்பு கொடுக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மிரட்டப்படுகிறார்கள் என்றும் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக சேலம் எம்.பி.யாக உள்ள எஸ்.ஆர். பார்த்திபன் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ”சுயமரியாதை என் உயிரினும் மேலானது. அரசு நிகழ்ச்சிகளுக்கு சேலம் எம்.பிக்கு அழைப்பு கொடுக்க கூடாது; அதையும் மீறி அதிகாரிகள் அழைப்பு கொடுத்தால் அதிகாரிகள் மிரட்டப்படுகிறார்கள். ஊழல் இல்லாத நேர்மையான என் செயல்பாடுகளை சேலம் மக்கள், கழகத் … Read more

‘‘முழுமையான பார்வை பெற்ற நாடாக இந்தியா உருவாக வேண்டும்’’ – ஆளுநர் தமிழிசை

புதுச்சேரி: 37வது கண் தான வழிப்புணர்வு விழாவையொட்டி புதுச்சேரி தவளக்குப்பத்தில் உள்ள கண் மருத்துவமணையில் கண் தான விழிப்புணர்வு முகாம் இன்று மாலை நடைபெற்றது. துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் முகாமை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கண்தானம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்கள், தன்னார்வலர்கள், தன்னார்வ அமைப்புகள் ஆகியோருக்கு நினைவுப் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. கண் தானம் குறித்த குறும்படமும் திரையிடப்பட்டது. நிகழ்ச்சியில் ஆளுநர் தமிழிசை பேசியதாவது: “இருதய தானம், சிறுநீரக தானம் … Read more

7 மாநிலங்களில் 21 போலி பல்கலை.கள்

புதுடெல்லி: நாடு முழுவதிலும் 21 போலி பல்கலைக் கழகங்கள் செயல்படுவதாக பல்கலை மானிய குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பல்கலை மானிய குழு (யுஜிசி) செயலர் ரஜனீஷ் ஜெயின் கூறியதாவது:நாட்டில் யுஜிசி சட்டப்படி அங்கீகாரம் பெறாத 21 போலி பல்கலைக் கழங்கள் செயல்பட்டு வருகின்றன. அவைகளுக்கு பட்டம் அல்லது சான்றிதழ் வழங்கும் தகுதியில்லை. புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, ஒடிசா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் உள்ள போலி பல்கலைக்கழகங்களின் பட்டியலை யுஜிசி வெளியிட்டுள்ளது. இவற்றில் … Read more

”தொகுதியில் குழந்தைகளிடம் கேட்டால் என்னைதான் எம்.எல்.ஏ என்று கூறுவார்கள்” – ஜெயக்குமார்

பரந்தூர் விமான நிலையம் அமைக்க விவசாயிகளிடம் கருத்து கேட்காமல் இந்த அரசு செயல்படுகிறது என முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள தங்கசாலை தொழில் பயிற்சி நிலையம் அருகே இருக்கும், நாகாத்தம்மன் ஆலய திருவிழாவில் பங்கேற்ற பின்னர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”சென்னையில் லேசான மழை பெய்தால் கூட தண்ணீர் தேங்குகிறது. மழைநீர் வடிகால் அமைக்கும் பணி முடிந்த பின்னரும் குழி மூடப்படுவதில்லை. முறையான … Read more

தருமபுரி ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி.

தருமபுரி: தருமபுரியில் இன்று (வெள்ளி) நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தின்போது, ‘என் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கவில்லை என்றால் மாவட்ட ஆட்சியர் மீதுதான் நடவடிக்கை எடுப்பேன்’ என்று கூறி பாமர விவசாயி ஒருவர் அனைவரையும் சிரிப்பில் ஆழ்த்தினார். தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கட்டிட கூட்டரங்கில் இன்று (வெள்ளி) மாவட்ட விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீர் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தலைமை வகித்தார். கூட்டத்தில், விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள், அரசின் பல்வேறு … Read more

தோல் தொழிற்சாலைகளில் 4 நாட்கள் நடந்த ஐடி ரெய்டு நிறைவு

ஆம்பூர்: திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரில் பரிதா நிறுவனத்திற்கு சொந்தமான பல்வேறு ஷூ, தோல் மற்றும் ஷூ உதிரி பாகங்களின் தொழிற்சாலைகள் உள்ளன. இந்த தொழிற்சாலைகளில் அதிகளவில் வரி ஏய்ப்பு நடந்திருப்பதாக புகார் எழுந்தது. அதன்பேரில், கடந்த 23ம் தேதி காலை முதல் மாவட்டத்தில் 12 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் 100 பேர் அதிரடியாக ரெய்டு நடத்த துவங்கினர். தொடர்ந்து நேற்று 4வது நாளாக நீடித்த ரெய்டு அதிகாலையில் முடிவடைந்துள்ளது. இதேபோல் ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் கே.எச். … Read more