மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்த துர்கா ஸ்டாலின்

மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயிலில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம் செய்தார். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவிலுக்கு நேற்று வருகை தந்த துர்கா ஸ்டாலின் சுமார் 40 நிமிடங்கள் சாமி தரிசனம் செய்தார். புத்து மூலவர், அங்காள பரமேஸ்வரி உற்சவர் அங்காள பரமேஸ்வரி பெரியாயி உள்ளிட்ட இடங்களில் சாமி தரிசனம் செய்தார் .மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி ஸ்டாலின் குடும்பத்தினரின் குலதெய்வம் என்பது குறிப்பிடத்தக்கது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

போர்க்களமாக மாறிய அதிமுக ஆலோசனைக் கூட்டம்.. மூன்று பேர் மண்டை உடைப்பு.!!

ராமநாதபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் அதிமுக ஒற்றை தலைமையை வலியுறுத்திய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் எம் ஏ முனுசாமி தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் ஓ பன்னீர்செல்வம் தரப்பினரும் கலந்து கொண்டனர்.  அப்போது எடப்பாடி பழனிசாமியை ஒற்றை தலைமையாக கொண்டுவர தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக கூறியதை எடுத்து, ஓபிஎஸ் தரப்பினர் ரகளையில் ஈடுபட்டு, கட்சி நிர்வாகிகள் அமர போடப்பட்டிருந்த நாற்காலிகளை தூக்கி வீசினர். இதையடுத்து, ஓபிஎஸ்-இபிஎஸ் ஆய்வாளர்கள் மோதல் … Read more

சிமெண்ட் மூட்டை ஏற்றிய டிரக் பள்ளத்தில் விழுந்து விபத்து…மூட்டைகள் ஓட்டுனர் மீது விழுந்ததால் பரபரப்பு

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே சிமெண்ட் மூட்டை ஏற்றிய டிராக்டர் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்  ஓட்டுனர் உயிர் தப்பினார்.  தும்பிபாடியைச் சேர்ந்த முருகவேல் என்பவர் டிராக்டரில் சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு கருப்பூரை நோக்கி சென்று கொண்டிருந்தார். கருப்பூர் மேம்பாலம் அருகே வேகத்தடை இருப்பதை அறியாமல் முருகவேல் வேகமாக டிராக்டரை ஓட்டியதால் பிரேக் பழுதடைந்தது. இதனை அடுத்து கட்டுப்பாட்டை இழந்த நிலையில் டிராக்டர் அருகில் இருந்த  சுமார் 20அடி ஓடை பள்ளத்தில் தலை குப்புற விழுந்தது. அப்பொழுது … Read more

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் 11-ம் தேதி காலை தீர்ப்பு

சென்னை: அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் நாளை மறுதினம் (ஜூலை 11) காலை 9 மணிக்கு தீர்ப்பளிக்கப்படும் என உயர் நீதிமன்ற நீதிபதிகிருஷ்ணன் ராமசாமி அறிவித்துள்ளார். சென்னையில் ஜூலை 11-ம் தேதி நடக்கவுள்ள அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொருளாளர் என்ற முறையில் ஓ.பன்னீர்செல்வமும், பொதுக்குழு உறுப்பினரான அம்மன் வைரமுத்து என்பவரும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அதில், கட்சி விதிகளை மீறி பொதுக்குழு கூட்டப்பட உள்ளதாகவும், நிரந்தர … Read more

ஓபிஎஸ்-க்கு ஆதரவாக திமுக.. கொந்தளிப்பில் இபிஎஸ் தரப்பு.!!

அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதிமுக ஆட்சி காலத்தில் உணவுத்துறை அமைச்சராக இருந்தவர் காமராஜர்.  திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் உள்ள காமராஜரின் வீடு, அவரது உறவினர்கள், நண்பர்கள் வீடு என தமிழக முழுவதும் 49 இடங்களில் காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர். உணவுத்துறை அமைச்சராக இருந்தபோது காமராஜர் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை குவித்ததாக எழுந்த புகாரியின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. … Read more

வீட்டை விட்டு ஓடிவர மறுத்த இளம் பெண் கத்தியால் குத்தி கொலை..! வெறிபிடித்த பாய் பெஸ்டீ..!

மதுரையில் வீட்டை விட்டு ஓடிவரமறுத்த திருமணம் நிச்சயமான பெண்ணை இளைஞர் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை உள்ளது. பாய் பெஸ்டியின் ஒரு தலை காதலால் நிகழ்ந்த பயங்கரம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.. மதுரை, பொன்மேனி பகுதியில் உள்ள குடியானவர் தெருவை சேர்ந்த பாண்டி என்பவரது 19 வயது மகள் அபர்ணா. சம்பவத்தன்று மாலை வீட்டில் இருந்த அபர்ணாவை மர்ம நபர் கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டான். கொலையாளியை … Read more

காலாவதியாகும் நிலையில் 35 லட்சம் கரோனா தடுப்பூசிகள் – 18-59 வயதினருக்கு இலவச பூஸ்டர் செலுத்த மா.சுப்பிரமணியன் கோரிக்கை

சென்னை: தமிழகத்தில் 35.52 லட்சம் கரோனா தடுப்பூசிகள் காலாவதியாகும் நிலையில் இருப்பதால் 18-59 வயதினருக்கு இலவசமாக பூஸ்டர் தவணை செலுத்த அனுமதிக்குமாறு மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிடம் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேட்டுக்கொண்டார். கொசுக்களால் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்துவது குறித்த ஆய்வுக் கூட்டம் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் டெல்லியில் இருந்து காணொலி காட்சி மூலம் நேற்று நடைபெற்றது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பொதுசுகாதாரம், மருந்து துறை … Read more

#தமிழகம் || எடப்பாடி ஆதரவாளர்களின் மண்டை உடைப்பு.. உள்ளே புகுந்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ரகளை.!

ராமநாதபுரத்தில் ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கு இடையே நடந்த மோதலில், இரு நபர்களுக்கு மண்டை உடைக்கப்பட்டு சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது. வருகின்ற 11ஆம் தேதி அதிமுகவின் பொதுக்குழு நடைபெறுமா? என்ற ஒரு கேள்வியும் எழுந்துள்ளது. இன்று அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்திற்கு தடை கோரிய வழக்கின் தீர்ப்பு, வருகின்ற 11ஆம் தேதி காலை 9 மணிக்கு அறிவிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் ஓர் பன்னீர்செல்வம் … Read more

தமிழகம் முழுவதும் 1 லட்சம் இடங்களில் நாளை மெகா தடுப்பூசி முகாம்

சென்னை: தமிழகம் முழுவதும் 31-வது சிறப்பு மெகா கரோனா தடுப்பூசி முகாம் 1 லட்சம் இடங்களில் நாளை நடைபெறுகிறது. தமிழகத்தில் அனைவருக்கும் விரைவாக தடுப்பூசி செலுத்த வாரம்தோறும் மெகா முகாம்கள் நடத்தப்பட்டு வந்தன. முதல் தவணை தடுப்பூசி 90 சதவீதத்தினருக்கும் அதிகமானவர்களுக்கு செலுத்தப்பட்டதால் மெகா முகாம்கள் நிறுத்தப்பட்டன. வழக்கமான மையங்களில் மட்டும் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது. இதற்கிடையே, கரோனா தொற்று பரவல் அதிகரித்ததால் மீண்டும் மெகா கரோனா தடுப்பூசி முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, … Read more