மதுரை திருமங்கலம் ஹோமியோபதி மருத்துவமனைக்கு ரூ.60 கோடியில் புதிய கட்டிடம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

மதுரை: மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள அரசு ஹோமியோபதி மருத்துவக்கல்லூரியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: 1975ம் ஆண்டு கீழ்பாக்கத்தில் அரசு ஹோமியோபதி கல்லூரி துவங்கப்பட்டது. பின்னர் 1982ம் ஆண்டு மதுரை திருமங்கலத்தில் மூன்றறை ஆண்டு டிப்ளமோ வகுப்பு துவங்கப்பட்டது. அதன்பிறகு 1985ம் ஆண்டு டிப்ளமோ வகுப்பு பட்டப்படிப்பாக தரம் உயர்த்தப்பட்டது. ஆண்டுதோறும் இந்த கல்லூரியில் 50 மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது. தற்போது 300 … Read more

வாய்க்காலில் சடலமாக மிதந்து வந்த 6 வயது சிறுவன்! போலீஸ் விசாரணை

வாய்க்காலில் சடலமாக மிதந்து வந்த 6 வயது சிறுவனை மீட்டு காவல் ஆய்வாளர் முதலுதவி செய்து காப்பாற்ற முயன்ற நிலையில் சிறுவன் ஏற்கெனவே இறந்து வந்தது தெரிய வந்துள்ளது. கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள உக்கரம் குப்பன் துறை அருகே கீழ்பவானி வாய்க்கால் நீரில் சிறுவன் ஒருவன் மிதந்து வருவதாக கடத்தூர் காவல்துறையினருக்கு அப்பகுதி வழியாக செல்லும் பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இது குறித்து சத்தியமங்கலம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டத்தை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் … Read more

திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில் திடீர் ரெய்டு : 60 செல்போன்கள் பறிமுதல்

க.சண்முகவடிவேல் திருச்சி மத்திய சிறைச்சாலை வளாகத்தில் உள்ள அகதிகளுக்கான சிறப்பு முகாமில், குற்ற வழக்குகளில் தொடர்புடைய, இலங்கைத் தமிழர்கள் உள்ளிட்ட 156 வெளிநாட்டவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீதான குற்ற வழக்குகள் நிறைவடையும் வரை இங்கு அடைக்கப்பட்டிருப்பது வழக்கம். மேலும் வழக்குகள் நிலுவையில் இருக்கும் போது, அவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாமல் இருப்பதற்காக இந்த சிறப்பு முகாம் அமைக்கப்பட்டு தங்க வைத்துள்ளனர். இந்த சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள அகதிகள் 11 பேரிடம், கடந்த மாதம் 20-ம் தேதி தேசிய … Read more

ஒண்டியாக சென்று சாதித்த ஒண்டிவீரன்.. முதல் சுதந்திர முழக்கமிட்ட மாவீரன்.!

தென் தமிழகத்தில் ஆங்கிலேயருக்கு எதிராக முதல் சுதந்திர போராட்ட வீர முழக்கமிட்ட ஒண்டி வீரனின் பெருமைகளை போற்றும் வகையில் மத்திய அரசு நாளை நினைவுத்தபால் தலை வெளியிடுகிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு…. தற்போதைய தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் தாலுக்காவில் உள்ள நெற்கட்டான் செவ்வயல் கிராமத்தை தலைமையிடமாக கொண்டு ஆட்சி செய்த செல்லையா – பகடை கருப்பாயி தம்பதியினரின் எட்டு குழந்தைகளில் கடைசிக் குழந்தையாக பிறந்தவர் தான் ஒண்டி வீரன். இவரது இயற்பெயர் முத்து … Read more

அஸ்வினிக்கு கடனுதவி வழங்க தாமதம் ஏன்? – மாவட்ட ஆட்சியர் விளக்கம்

செங்கல்பட்டு: “நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த பெண் அஸ்வினி சேகருக்கு, செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் புதுநகர் வளர்ச்சிக் குழுமம் மூலம் உடனடியாக கடை ஒதுக்க ஆணையிடப்பட்டு ஆக.18-ம் தேதியன்று கடை (எண் 66) ஒதுக்கீடு செய்ய இருந்த நிலையில் அதனை அவர் நிராகரித்துவிட்டார்” என்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகில் பூஞ்சேரி கிராமத்தில் வசித்துவரும் நரிக்குறவர் மற்றும் இருளர் குடும்பங்களுக்கு அரசு அறிவித்த பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவது குறித்து ஊடகங்களில் … Read more

இலவசங்கள் குறித்து கவலைப்படுவோர் வங்கி வாராக் கடன் தள்ளுபடி பற்றி கவலைப்படாதது ஏன்?

இவவச கவசம்: அரசியல் கட்சிகள் என்னதான் வளர்ச்சி திட்டங்கள் பற்றி பேசினாலும் தேர்தல் போரில் மக்கள் மனங்களை வெல்ல அவை இலவச அறிவிப்புகளையே கவசங்களாக கைக்கொள்கின்றன. அது…கருணாநிதி ஆட்சி காலத்தி்ல் செயல்படுத்தப்பட்ட இலவச டிவி வழங்கும் திட்டமாக இருந்தாலும் சரி… ஜெயலலிதா ஆட்சியில் பொதுமக்களுக்கு அளிக்கப்பட்ட இலவச மின்விசிறி, மிக்சி, கிரைண்டராக இருந்தாலும் சரி… கருணாநிதி கோடி போட்டால், ஜெயலலிதா ரோடு போடும் அளவுக்கு இலவசங்களை மக்களுக்கு வாரி வழங்கினார். கருணாநிதியின் வழியில் ஆட்சி நடத்துவதாக கூறும் … Read more

குடியாத்தம் இளைஞருக்கு விருது: 7000 மரங்கள் நட்டு குருங்காடு வளர்த்தவருக்கு முதல்வர் பாராட்டு

வேலூர் மாவட்டம் பாலாற்றங்கரையில் 25 ஏக்கரில் 7000 மரங்களை நட்டு குருங்காடு வளர்த்து வரும் இளைஞருக்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் சிறந்த இளைஞருக்கான விருதை வழங்கினார். வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த உள்ளி பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஸ்ரீகாந்த். இவருக்கு வயது 33. பி.சி.ஏ பட்டப்படிப்பு முடித்தவுடன் இவர் சென்னையில் சினிமா இயக்குனராகும் கனவுடன் உதவி இயக்குனராக பணியாற்றி வந்துள்ளார்.  இதனிடையே கடந்த 2017 ஆம் ஆண்டு குடும்ப சூழ்நிலை காரணமாக ஸ்ரீகாந்த் சொந்த … Read more

பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் 2 விசைப்படகுகள் கவிழ்ந்தது: 10 மீனவர்கள் தப்பினர்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே பழையாறு துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் செழியன், சுரேந்தர் ஆகியோருக்கு சொந்தமான 2 விசைப்படகில் 10 பேர் நேற்று அதிகாலை மீன் பிடிக்க சென்றனர். இதில் ஒரு படகில் 5 பேர் வீதம் 2 படகுகளிலும் 10 பேர் இருந்தனர். மீன்களை பிடித்து கொண்டு பழையாறு துறைமுகத்துக்கு திரும்பி வந்தனர். கொள்ளிடம் ஆறு கடலில் சங்கமிக்கும் இடமான முகத்துவாரத்தின் வழியாக வந்தபோது அங்கு மண் மேடாகியிருந்ததால் தரைதட்டி மண் குவியலில் மோதி … Read more

சுதந்திரம் முதல் இன்று வரை.. 4000 தபால் தலைகளை சேகரித்துள்ள ஆசிரியருக்கு ஆட்சியர் பாராட்டு

சுதந்திரம் கிடைத்ததில் இருந்து இன்று வரை வெளியிடப்பட்டுள்ள 4,000 தபால் தலைகளை சேகரித்து வைத்திருக்கிறார் விழுப்புரம் பள்ளி ஆசிரியர் ஒருவர். மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஆர்வத்தை தூண்டவும் நீண்ட நாட்களாக இந்த பணியை செய்து வருவதாக பெருமிதம் கொள்கிறார் அவர். தகவல் பரிமாற்றம் என்று சொன்னாலே அது கடிதப் போக்குவரத்தாக இருந்த காலம் கொஞ்சம் கொஞ்சமாக மாறி இப்போது அது எங்கே என்று தேடும் நிலைக்கு வந்துவிட்டோம். இப்படி கடிதப் போக்குவரத்து இருந்த காலங்களில் கடிதங்களை கொண்டு செல்ல அரசாங்கத்திற்கு ஒரு தொகை … Read more

4-வது நாளாக தேடுதல் வேட்டை… ட்ரோன் உதவி… காயமடைந்த காட்டு யானையை பிடிக்க தீவிரம்

கோவை மாவட்டம் ஊக்கையனூர் பகுதியில் நான்காவது நாளாக வனத்துறை அதிகாரிகள் வன பகுதியை மேப் கொண்டு ஆலோசனை செய்தும், ட்ரோன் கேமரா மூலம் காட்டு யானையை தேடி வருகின்றனர் தமிழக கேரள எல்லை பகுதியான கொடுங்கரை பகுதியில் 8 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு  வாயில் காயத்துடன் காணப்பட்டது  இதனை அடுத்து கோவை மண்டல தலைமை வன பாதுகாவலர் ராமசப்பிரமணியன் தலைமையில் 7 குழுக்களும் கேரள வனத்துறை சார்பில் 4 … Read more