விருமன் படப்பிடிப்பில் காமெடி நடிகர் சூரி மீது தண்ணீர் கேன் வீச்சு..! மன்னிப்புக்கேட்டார் ஷங்கர் மகள்

விருமன் படப்பிடிப்பில் தண்ணீர் கேனை தூக்கி சூரி மீது வீசியதற்காக மேடையில் வைத்து நடிகை அதிதி ஷங்கர் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். நடிகர் கார்த்தி நடிப்பில் விருமன் படம் விரைவில் திரைக்கு வர உள்ள நிலையில் அந்த படத்தில் நடித்த நட்சத்திரங்கள் செய்தியாளர்களை சந்தித்தனர் அப்போது பேசிய படத்தின்நாயகி அதிதி சங்கர், படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்ய சம்பவங்களை நினைவு கூர்ந்தார், டிரைசைக்கிள் ஓட்டியது.. கோலம் போட்டது.. என்று கூறியவர் நடிகர் சூரி மீது தண்ணீர் கேனை தூக்கி … Read more

சென்னையில் தண்ணீருக்கு அடியில் மெட்ரோ: மாநில கடலோர மேலாண்மை ஆணையம் அனுமதி

சென்னை: சென்னையில் தண்ணீருக்கு அடியில் மெட்ரோ சுரங்கப்பாதை அமைக்க தமிழ்நாடு மாநில கடலோர மேலாண்மை ஆணையம் அனுமதி அளித்துள்ளது சென்னை மாநகரில் ஏற்கெனவே 2 வழித்தடங்களில் சுமார் 55 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. தொடர்ந்து 2-வது கட்டமாக ரூ.63,200 கோடி செலவில் 118.9 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் பாதை மற்றும் ரயில் நிலையங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை 47 கி.மீ. தொலைவுக்கான பணிகள் நடைபெற்று … Read more

தமிழகம் முழுவதும் இன்று 91% தனியார் பள்ளிகள் இயங்கின: மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம்

சென்னை: தமிழகம் முழுவதும் இன்று 91 சதவீத தனியார் பள்ளிகள் இயங்கியதாக மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. சின்னசேலம் அருகே பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் இளைஞர்களின் போராட்டம் நேற்று கலவரமாக மாறியது. பள்ளிக்குள் நுழைந்து சூறையாடிய வன்முறை கும்பல், அங்கிருந்த பேருந்துகள், போலீஸாரின் பைக்குகளை தீவைத்து எரித்தனர். கல்வீச்சு தாக்குதலில் டிஐஜி, 2 எஸ்.பி.க்கள் உள்ளிட்ட 67 போலீஸார் காயமடைந்தனர். கலவரத்தை ஒடுக்க போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து, கள்ளக்குறிச்சி கலவரத்திற்கு … Read more

பெசா சட்டம்; குஜராத்தில் ஆம் ஆத்மி தேர்தல் வாக்குறுதி பின்னணி என்ன?

ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 7) குஜராத்தின் சோட்டா உதேபூர் மாவட்டத்தில் உள்ள பழங்குடியினருக்கு ஆறு அம்ச உத்தரவாதத்தை அறிவித்தார். பட்டியலிடப்பட்ட பஞ்சாயத்து பகுதிகளுக்கு நீட்டிக்கும் சட்டமான பெசா சட்டம் கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பெசா சட்டம் 1996-இல் பஞ்சாயத்துகள் தொடர்பான அரசியலமைப்பின் பகுதி 11வது விதிகள் அட்டவணைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு நீட்டிபதற்காக இயற்றப்பட்டது. (பஞ்சாயத்துகளைத் தவிர, அரசியலமைப்பின் 243-243ZT பிரிவுகளை உள்ளடக்கிய பகுதி IX, நகராட்சிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் … Read more

மொபட்டில் இருந்து தவறி கீழே விழுந்த பெண் உயிரிழப்பு

கோவை மாவட்டத்தில் மொபட்டில் இருந்து தவறி கீழே விழுந்த பெண் உயிரிழந்துள்ளார். கோவை மாவட்டம் சூலூர் புளியமரத்துபாளையம் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மனைவி சித்ரா (44). இவர் சம்பவத்தன்று மொபடில் சந்திரபுரம்-சுல்தான்பேட்டை சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த சித்ராவை அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் சித்ரா வரும் வழியிலேயே … Read more

“முதலில் ஏரியாவுக்குள் பழனிவேல் தியாகராஜனை வரச் சொல்லுங்கள்” – செல்லூர் ராஜூ

மதுரை: கமிஷனுக்காக நிதியமைச்சர் தெருவிளக்கு டெண்டரை நிறுத்தி வைத்துள்ளதாக அவரது திமுக கட்சியினரே சொல்கிறார்கள் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ சாடியுள்ளார். மதுரை மேற்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட அச்சம்பத்து – புதுக்குளம் பகுதியில் தொகுதி மேம்பாடு நிதியில் கட்டப்பட்ட சமுதாய கூடத்தை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ எம்எல்ஏ பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியவது: ”அதிமுகவில் இருந்து சென்றவர்கள் கோபதாபத்தில் ஏதாவது பேசுவார்கள். அவர்கள் பற்றி நான் கருத்து … Read more

CSIR-ன் தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்ட முதல் பெண் விஞ்ஞானி: யார் இந்த கலைச்செல்வி?

நவீன கல்வியின் ஆய்வுமொழி ஆங்கிலம் அதை ஆரம்பக் கல்வியில் இருந்து படித்தால்தான் பெரிய பதவிகளுக்கு செல்ல முடியும் என்று ஆங்கில மோகம் நிலவும் சூழ்நிலையில், தமிழ்வழிக் கல்வியில் படித்த ந. கலைச்செல்வி அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சிலின் (சிஎஸ்ஐஆர்) முதல் பெண் தலைமை இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த ந. கலைச்செல்வி தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளார். அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சில் (சிஎஸ்ஐஆர்) தலைமை இயக்குநராக தமிழகத்தைச் சேர்ந்த பெண் விஞ்ஞானி … Read more

இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து – தொழிலாளி உயிரிழப்பு

நாமக்கல் மாவட்டத்தில் இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார். திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் அருகே உள்ள கணபதிபாளையம் அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் கூலிதொழிலாளி ராமச்சந்திரன்(58). இவர் நேற்று தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் பொம்மட்டிக்கு சென்று விட்டு மீண்டும் புத்தூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென பின்னால் வேகமாக வந்த கார் ஒன்று இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் ராமச்சந்திரன் படுகாயமடைந்த நிலையில் அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக … Read more

மின்சார திருத்த சட்ட மசோதாவானது நிலைக் குழுவிற்கு பரிந்துரைக்கப்பட திமுகதான் காரணம்: செந்தில்பாலாஜி 

சென்னை: “மின்சார திருத்த சட்ட மசோதாவானது நிலைக் குழுவிற்கு பரிந்துரைக்கப்பட்டதற்கு திமுகதான் காரணம்” என்று அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, மின்சார திருத்த சட்ட மசோதா குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், “நாடாளுமன்றத்தில் இன்று (ஆகஸ்ட் 8) கொண்டு வரப்பட்ட மின்சார திருத்த சட்ட மசோதாவிற்கு முதல்வர் தொடர்ந்து எதிர்ப்புக் குரலை பதிவு செய்து வருகிறார். ஏழை மக்களை இந்த மசோதா பாதிக்கும். … Read more

தமிழகத்தில் இன்று எங்கெல்லாம் கனமழை? வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

தமிழகத்தில் இன்று எட்டு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த அறிவிப்பில், “மேற்குதிசைக்காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 08.08.2022: வடதமிழக மாவட்டங்கள், திண்டுக்கல், தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. … Read more