#Breaking: தஞ்சாவூர் சாஸ்திரா கல்லூரி.. ஏரியில் கட்டப்பட்டதா.? தமிழக அரசுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.! 

அரசு நில ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்றபோது தஞ்சைப் பகுதியில் குடியிருக்கும் மக்கள் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி வலியுறுத்தியுள்ளனர்.  இதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் இது குறித்த வழக்கு விசாரணையின் போது தமிழக அரசு, “நீர்நிலையில் சாஸ்திரா பல்கலைக்கழகம் அமைந்திருப்பதால், அதற்கு மாற்று இடம் வழங்க முடியாது. இது சாஸ்திராவுக்கு பொருந்தாது.” என்று தெரிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து, இது குறித்த ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. … Read more

“பிஹாரில் வீசும் காற்று வெகு விரைவில் புதுச்சேரியிலும் வீசும்” – நாராயணசாமி

புதுச்சேரி: “பிஹாரில் வீசும் காற்று புதுச்சேரியிலும் வெகு விரைவில் வீசும், ரங்கசாமி வீட்டுக்கு செல்லும் காலம் வெகு தொலைவில் இல்லை” என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார். புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “மத்திய அரசு 5ஜி அலைக்கற்றை ஏலத்தினால் ரூபாய் நாலரை லட்சம் கோடி கிடைக்கும் என மதிப்பீடு செய்தது. ஆனால் ரூபாய் ஒன்றரை லட்சம் கோடிக்குத்தான் ஏலம்போயுள்ளது. ரூ.3 லட்சம் கோடி அரசுக்கு வரவேண்டிய வருவாய் வரவில்லை. கடந்த காலத்தில் … Read more

அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணை: தேதி குறித்த நீதிமன்றம்!

ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கோரிக்கையை ஏற்று, அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்குகளின் விசாரணையை, சென்னை உயர் நீதிமன்றம் நாளை மறுதினத்துக்கு (ஆகஸ்ட் 10) தள்ளிவைத்துள்ளது. ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க மறுத்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கினை உயர் நீதிமன்றதுக்கு மாற்றிய உச்ச நீதிமன்றம், இரு வாரங்களில் விசாரித்து முடிக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டிருந்தது. அதன்படி இந்த வழக்குகள் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு கடந்த … Read more

`நோ கமெண்ட்ஸ்’- ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்தப்பின் நடிகர் ரஜினிகாந்த் பேட்டி

இன்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், தானும் தமிழக ஆளுநரும், நீண்ட நேரம் அரசியல் குறித்து விவாதித்ததாக செய்தியாளர்களிடையே தெரிவித்தார். சென்னை கிண்டியில் உள் ராஜ் பவனில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நடிகர் ரஜினிகாந்த் இன்று நேரில் சந்தித்து பேசினார். அதன்பின் போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்திற்கு அவர் திரும்பினார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தமிழக ஆளுநரை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். அவரிடம் 30 நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தேன். ஆளுநர் ஆர்.என்.ரவி காஷ்மீரில் பிறந்து … Read more

இணைப்பை துண்டித்த அண்ணா பல்கலைக்கழகம்; 18 என்ஜினீயரிங் கல்லூரிகளின் நிலை என்ன?

Chennai Tamil News: பொறியியல் கல்லூரிகளில் முக்கியமாக தேவைப்படும் ஆய்வகங்கள், வகுப்பறைகள் மற்றும் ஆசிரியர்கள் போன்ற உள்கட்டமைப்புகள் போதிய அளவு இல்லாத காரணத்தினால் 18 பொறியியல் கல்லூரிகள் இந்த ஆண்டிற்கான (2022-23) அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பை இழக்கவுள்ளது. மேலும், உள்கட்டமைப்பில் குறைபாடு உள்ள 207 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. பின்னர், அண்ணா பல்கலைக்கழகம் சமர்ப்பித்த இணக்க அறிக்கைகளின் அடிப்படையில் இணக்க பொறியியல் கல்லூரிகளின் பட்டியலை முடிவு செய்துள்ளது. இரண்டு வருடங்களுக்கு பின்பு, அண்ணா பல்கலைக்கழகம் 476 … Read more

கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோர புளிய மரத்தில் மோதி விபத்து – ஓட்டுநர் உயிரிழப்பு

சேலம் மாவட்டத்தில் கட்டுப்பாட்டை இழந்த லாரி புளிய மரத்தில் மோதிய விபத்தில் ஓட்டுநர் உயிரிழந்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை பொட்டியம் பகுதியை சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் பிரகாஷ்(24). இவர் நேற்று காலை மின்னாம்பள்ளியில் இருந்து டிப்பர் லாரியில் ஜல்லி ஏற்றிக் கொண்டு கருமந்துறை பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்பொழுது வாழப்பாடி அருகே பேளூர்-அயோத்தியாபட்டணம் சாலையில் சென்றபோது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி நிலை தடுமாறி சாலையோரத்தில் இருந்த புளியமரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த … Read more

இரும்பு பெயர் பலகை கம்பத்தின் மீது மோதி விபத்து ஏற்படுத்திய மாநகர பேருந்து ஓட்டுநர் கைது..!

சென்னை ஆலந்தூர் மெட்ரோ நிலையம் அருகே இரும்பு பெயர் பலகை கம்பத்தின் மீது மாநகர பேருந்து மோதி விபத்து ஏற்படுத்திய ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். தாம்பரத்தில் இருந்து கோயம்பேடு நோக்கி நேற்று அதிவேகமாக வந்த பேருந்து, பெயர்ப்பலகை தாங்கிய இரும்பு கம்பத்தின் மீது மோதியது. விபத்தில் ராட்சத இரும்பு கம்பம் பெயர் பலகையுடன் சாலையில் விழுந்ததில், படுகாயமடைந்த இருசக்கர வாகன ஓட்டி சண்முகசுந்தரம், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, அஜாக்கிரதையாக … Read more

அதிமுக பொதுக்குழு வழக்கு: ஆக.10-க்கு விசாரணை ஒத்திவைப்பு

சென்னை: அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கின் விசாரணையை வரும் ஆகஸ்ட் 10-ம் தேதிக்கு தள்ளிவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜூலை 11-ம் தேதி கூட்டப்பட்ட அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரியும், அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்டது செல்லாது என்று அறிவிக்கக் கோரியும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர். இதை விசாரித்த தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, திட்டமிட்டபடி பொதுக்குழுவை நடத்தலாம் … Read more

கடும் அதிருப்தியில் இருக்கும் அரசு ஊழியர்கள்… பிடிஆர் மீது பாயும் முதல்வரின் அதிரடி நடவடிக்கை!

ஒன்றிய அரசு: துறை ரீதியான தமது வெளிப்படையான பேச்சுக்களால் அவ்வபோது சர்ச்சையில் சிக்குவது தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு பழக்கமான ஒன்றாக உள்ளது. அமைச்சராக பொறுப்பேற்க பின்னர் தான் பங்கேற்ற முதல் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திலேயே மத்திய அரசை ‘ஒன்றிய அரசு’ என்று புதிய சொல்லாடலில் அழைத்து தேசிய அளவில் கவனத்தை பெற்ற பிடிஆர், பெட்ரோல், டீசல் மீதான வரி விதிப்பு, அரிசி உள்ளி்ட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி விதிப்பு போன்ற விவகாரங்களில் மத்திய … Read more

‘அரசு ஊழியர்களை தரக்குறைவாக பேசுகிறார் பிடிஆர்’- செல்லூர் ராஜூ

நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி அமையும் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அச்சம்பத்து புதுக்குளம் பகுதியில் தொகுதி மேம்பாடு நிதியில் கட்டப்பட்ட சமுதாய கூடத்தை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். முன்னதாக செய்தியாளர்களை சந்திக்க செல்லூர் ராஜு அமர்ந்தபோது அப்பகுதி மக்கள் குடிநீர் கேட்டு அவரை சூழ்ந்ததால் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்… ‘2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக … Read more