3 நாள் நடைப்பயணத்தை தொடங்கினார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்

தருமபுரி: தருமபுரி- காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி 3 நாள் நடைப்பயணத்தை அன்புமணி ராமதாஸ் தொடங்கினார். தருமபுரி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த இன்று முதல் 3 நாள் பிரச்சார பயணம் செய்ய உள்ளதாக அறிவித்திருந்தார். நடைப்பயணத்தில் அரசியல் நிலைகளை கடந்து அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்க அவர் வேண்டுகோள் விடுத்தார்.

”மின்சாரக் கட்டணம் உடனடியாக செலுத்த வேண்டும்” :  போலி குறுச் செய்தி மூலம் பல லட்சம் மோசடி

சென்னை காவல்துறையினருக்கு 50 மேற்பட்ட மின்சார கட்டணம் தொடர்பான மோசடி புகார்கள் வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் மற்றும் காவல்துறையினர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக போலி குறுச் செய்திகளுக்கு பலியாக வேண்டாம் என்ற விழுப்புணர்வு பிரச்சாரத்தை தொடர்ந்து செய்து வருகிறது. இந்நிலையில் மின்சாரம் தொடர்பான போலி மோசடி புகார்கள் அதிகரித்துவருகிறது. குறிப்பாக சென்னையில் உள்ள அடையார் காவல்நிலையத்தில் 23 புகார்களும், தி.நகரில் 12 புகார்களும் பதிவு … Read more

தொடர்ந்து 4-வது நாளாக குறைந்த தங்கத்தின் விலை.. தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.!

உலகம் முழுவதும் கடந்த ஆண்டு ஏற்பட்ட தொழில்துறை தேக்கத்தின் காரணமாக உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளின் பக்கம் திரும்பி வருகின்றனர். பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளை தற்போது தங்கத்தின் மீது முதலீடு செய்து வருகின்றனர். அதனால், தங்கத்தின் தேவை அதிகரித்து வருகிறது. அதன் காரணமாகவே தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கம் நிலவி வந்த நிலையில் தங்கத்தின் விலை தொடர்ந்து 4வது நாளாக குறைந்துள்ளது. அதன்படி, … Read more

தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல, வரும் 20, 21, 22-ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் … Read more

வன்முறை சம்பவத்தில் ஈடுப்பட்டால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்: செந்தில் பாலாஜி

இலவசம் வேண்டாம் என்று சொல்பவர்களே அவர்கள் ஆளும் மாநிலங்களில் இலவச திட்டங்களை கொடுத்து வருவதாகவும், இரட்டை வேடங்களை, தேர்தல் வாக்குறுதிகளில் அறிவிக்கிறார்கள் என கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி பாஜகவை சுட்டிக்காட்டினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 15 ஆம் தேதி கோவை வந்து அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்பதாக இருந்தது. ஆனால் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து, முதலமைச்சரின் கோவை பயணம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற … Read more

சர்வதேச புகைப்பட தினத்தை முன்னிட்டு உதகையில் பிரத்யேக கேமரா அருங்காட்சியகம்…

நீலகிரி: சர்வதேச புகைப்பட தினத்தை முன்னிட்டு உதகையில் தனியார் கேளிக்கையா பூங்காவில் 2600 கேமராக்கள் பிரத்தியேக அரங்கம் அமைக்கப்பட்டிருப்பது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த அரங்கில் 1880 ஆண்டில் இருந்து 2017ஆம் ஆண்டு வரை பயன்படுத்தப்பட்ட பலவகையான கேமராக்கள் இடம் பெற்றுள்ளன. உலகில் மிக பெரிய கேமரா என்று அழைக்கப்படும் மம்மூத் கேமரா முதல் நவீன டிஜிட்டல் கேமரா வரை அனைத்து கேமராகளும் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. அதில் இரண்டம் உலக போரின் போது போர் முனையில் பயன்படுத்தப்பட்ட … Read more

வீட்டின் மேல் சுவர் இடிந்து விழுந்து வீதியில் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுமி பலி

ஆம்பூர் அருகே வீட்டின் மேல் சுவர் இடிந்து விழுந்;த விபத்தில் வீதியில் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சோமலாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேந்தர், கட்டட மேஸ்திரியான இவருக்கு வாணி என்ற மனைவியும் வர்ஷினி (3) என்ற பெண் குழந்தையும் 1 வயதில் மற்றொரு பெண் குழந்தை இருந்தனர். இந்நிலையில் நேற்றிரவு முழுவதும் ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 41.00 மில்லி மீட்டர் கனமழை பெய்த நிலையில் … Read more

5 அம்ச கோரிக்கை.. மணல் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

அனைத்து எம்-சாண்ட் மற்றும் ஆற்று மணல் லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு, சென்னை மற்றும் அண்டை மாவட்டங்களில் வியாழக்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கியுள்ளது. 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தின் ஒரு பகுதியாக 8 மாவட்டங்களில் சுமார் 20,000 மணல் லாரிகள் நிறுத்தப்பட்டன. வாகனங்களில் அதிக பாரம் ஏற்றுவதை தடுக்க நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட, தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, வள்ளூவர்கோட்டத்தில் மணல் லாரி உரிமையாளர்கள், கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தினர். அப்போது வாகனங்களில் அதிக பாரம் … Read more

கள்ள ரூபாய் நோட்டுக்களை புழக்கத்தில் விட முயன்ற 2 பேர் கைது.!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் கள்ள ரூபாய் நோட்டுக்களை புழக்கத்தில் விட முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். தற்காலிக பேருந்து நிலையம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது அந்த வழியாக சென்னை பதிவெண் கொண்ட இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்ததை அடுத்து அவர்கள் வந்த இருசக்கர வாகனத்தை சோதனை செய்ததில் கட்டுக்கட்டாக 500 ரூபாய் கள்ள நோட்டுகள் இருந்தது தெரியவந்தது. சென்னையை சேர்ந்த நாகராஜன், … Read more

கிருஷ்ண ஜெயந்தி இன்று கொண்டாட்டம்: ஆளுநர், அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து

சென்னை: நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழக ஆளுநர், அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஆளுநர் ஆர்.என்.ரவி: உலக நன்மைக்காக, அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவை முழு வளர்ச்சியடைந்த நாடாக மாற்றும் பணியில் அடியெடுத்து வைத்திருக்கும் இந்த பொற்காலத்தில், முழுமையாகவும், மிகுந்த அர்ப்பணிப்புடனும், ஆர்வத்துடனும் நமது கடமையை மேற்கொள்ள வேண்டும். தேசத்தின் விழுமிய லட்சியத்தை நிறைவேற்றவும், நம்மால் இயன்ற அனைத்தையும் செய்வதற்கும் இந்த நன்னாளில் அனைவரும் நம்மை அர்ப்பணிப்போம். எதிர்கட்சித் தலைவர் … Read more