#BigBreaking || பதவி காலி… சற்றுமுன் ஓபிஎஸ் தரப்பு பரபரப்பு வாதம்.!

அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க கோரி ஓ பன்னீர்செல்வம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் ஒருவர் தரப்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு இன்று இரண்டாவது நாளாக நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்த போது, எடப்பாடி பழனிச்சாமி தரப்பில், அதிமுக பொதுக்குழு நிகழ்ச்சி நிரல்கள் கட்சி அலுவலகத்தால் விநியோகிக்கப்பட்டவை என்றும், வரைவு நிகழ்ச்சி நிரலுக்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் வழங்கவில்லை என்றும், ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகள் காலியானாலும் எந்த வெற்றிடமும் ஏற்படாது … Read more

உணவகங்கள், மருந்தகங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக், கெட்டுப்போன உணவு பொருட்கள் பறிமுதல்.!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பார்த்திபனூரில் உணவகங்கள், மருந்தகங்கள் மற்றும் மளிகைக்கடைகளில் உணவு பாதுகாப்புத்துறையினர் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 600 கிலோ அளவிலான தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் 27 கிலோ அளவிலான கெட்டுப்போன உணவுப்பொருட்கள், காலாவதியான மருந்துகள் மற்றும் 10 வீட்டு உபயோக சிலிண்டர்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்ததுடன் விதிமுறைகளை பின்பற்றாமல் தொடர்ந்து செயல்படும் பட்சத்தில் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை … Read more

முன்னாள் அமைச்சர் காமராஜின் மகன் தங்கியிருந்த வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை

கோவை: கோவையில் முன்னாள் அமைச்சர் காமராஜின் மகன் தங்கியிருந்த வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் காமராஜ். அதிமுக முன்னாள் அமைச்சர். இவரது மகன் இன்பன். மருத்துவரான இவர் கோவை அவிநாசி சாலை, லட்சுமி மில் சந்திப்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக கடந்த சில மாதங்களாக பணியாற்றி வருகிறார். பீளமேட்டை அடுத்த சவுரிபாளையத்தில் இருந்து சிங்காநல்லூர் செல்லும் வழித்தடத்தில் கண்ணபிரான் மில் அருகே அடுக்குமாடி குடியிருப்பு … Read more

“பொதுக்குழுவுக்கு 2665 உறுப்பினர்களில் 2190 பேர் சம்மதம்” – இபிஎஸ் தரப்பு விளக்கம் என்ன?

ஜூலை 11-ம் தேதி நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழுக் கூட்டத்துக்கு தடைவிதிக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதிட்டது. அதிமுகவில் ஒற்றைத் தலைமை கோஷம் வலுப்பெற்றதை அடுத்து எடப்பாடி பழனிசாமி தரப்புக்கும், ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. இதனைத் தொடர்ந்து, இருவரும் தங்களின் ஆதரவாளர்களை ஒன்றுதிரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் எடப்பாடி பழனிசாமிக்கே அதிக அளவிலான மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து, கடந்த ஜூன் 23-ம் தேதி அதிமுக பொதுக்குழு … Read more

‘என்னய்யா… திடீர்னு காவி கலரா மாறுது!’: அன்பில் மகேஷ் தொகுதி ஆச்சரியம்

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொகுதியில் உள்ள நீர்த்தேக்க தொட்டி காவி நிறத்திற்கு மாற்றப்பட்டு வருவது குறித்து அப்பகுதி  திமுகவினர் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர். இது குறித்த விபரம் வருமாறு : திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றிய கிராம ஊராட்சி பகுதிகள் மற்றும் கூத்தைப்பார்  பேரூராட்சி, துவாக்குடி நகராட்சி ஆகிய பகுதிகளில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் மேலே பச்சை நிற வண்ணத்தில் நடுவில் இளம் மஞ்சளில் கீழே பச்சை வண்ணத்தில்  பளிச்சென்று இது நாள் வரை … Read more

தஞ்சாவூர்.! குடும்ப பிரச்சினை காரணமாக தொழிலாளி தற்கொலை.!

தஞ்சாவூர் மாவட்டத்தில் குடும்ப பிரச்சினை காரணமாக தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் குலசேகரநல்லூர் தோப்பு தெருவை சேர்ந்தவர் தொழிலாளி ராமதுரை(52). இவருடைய மனைவி பழனியம்மாள். இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் ராமதுரை குடும்ப பிரச்சனை காரணமாக மன வேதனையடைந்து தற்கொலை செய்வதற்காக விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் விஷம் குடித்து மயங்கி கிடந்த ராமதுரையை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு … Read more

டிப்பர் லாரி மீது தனியார் பள்ளி வாகனம் வேகமாக மோதியதில் 3 மாணவர்கள் படுகாயம்.!

செங்கல்பட்டில் முன்னால் சென்று கொண்டிருந்த டிப்பர் லாரி மீது தனியார் பள்ளி வாகனம் வேகமாக மோதியதில் ஓட்டுநர் மற்றும் 3 மாணவர்கள் பலத்த காயமடைந்தனர். மண்ணிவாக்கம் பகுதியில் சாலையின் குறுக்கே மாடு ஒன்று வந்த நிலையில், டிப்பர் லாரி ஓட்டுநர் திடீரென பிரேக் பிடித்தார். அப்போது பின்னால் வந்த பள்ளி வாகனம் டிப்பர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த காட்சிகள் சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ள நிலையில் மண்ணிவாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர். மாடுகளை சாலையில் விட்ட … Read more

தி.மலையில் மாற்றுத்திறனாளி சிறுவன் சிவானந்தத்தை சந்தித்த முதல்வர் ஸ்டாலின் 

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் கிராமத்தில் வசித்து வரும் மாற்றுத்திறனாளி சிறுவன் சிவானந்தத்தின் இல்லத்திற்குச் சென்ற தமிழக முதல்வர் மு.க.ஸாட்லின், அப்பயனாளிக்கு மருத்துவ உபகரணங்களை வழங்கி நலம் விசாரித்தார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி: தமிழக முதல்வர் இன்று (ஜூலை 8) திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் கிராமத்தில் வசித்து வரும் சிறுவன் சிவானந்தம் (வயது 14) என்ற மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளியின் இல்லத்திற்கு சென்று, அவருக்கு அரசின் அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு மறுவாழ்வு பெற்ற விவரங்களை … Read more

அண்ணா ஆர்ச் பகுதியில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம் – இனிமே இப்படித்தான் போகணும்!

அண்ணா ஆர்ச் பகுதியில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. சென்னை ஈ.வே.ரா சாலையானது சென்னையில் முக்கிய சாலைகளில் ஒன்றாகும். பெருகி வரும் வாகன போக்குவரத்தால் காலை மற்றும் மாலை வேளைகளில் இந்த சாலையில் போக்குவரத்து நெரிசல்கள் அதிக அளிவில் ஏற்படுகிறது. எனவே ஈ.வே.ரா சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க போக்குவரத்து மாற்றங்கள் நாளை 09.07:2022 முதல் 10 நாட்களுக்கு சோதனை ஓட்டமாக அமல்படுத்தப்பட உள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. … Read more

உங்கள் குழந்தையின் உயரம் அதிகமாகனுமா… அப்போ இந்த உணவுகளை மறக்காம கொடுங்க!

உங்கள் குழந்தையின், உயரத்தைப் பற்றி நிங்கள் கவலைக்கொள்கிறீர்களா? ஆனால் உயர்த்தை அதிகப்படுத்துவதைக் காட்டிலும் இருக்கும் உயரத்தை தக்க வைக்க வேண்டும். இது கேட்பதற்கு பொருந்தாமல் இருந்தாலும், இதுதான் உண்மை. இந்நிலையில், நாம் சில உணவுகளை குழந்தைகளுக்கு சாப்பிடக்கொடுத்தால், அவர்கள் உயரம் அதிகமாகும். கால்சியம், வைட்டமின் டி, மெக்னீஷியம்,  பாஸ்பரஸ் உள்ள உணவுகளை சாப்பிட்டால், ஆரோக்கியமான எலும்புகள் வளரவும், தசைகள் உருவாகவும் உதவுகிறது. தயிர் இதில் கால்சியம் சத்து அதிகம் இருக்கிறது. எலும்புகளை வலுவாக்க உதவுகிறது. சிறு வயதில் … Read more