2047-ம் ஆண்டு உலக நாடுகளை இந்தியா வழிநடத்தும்.. மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்.!

ஓலம் என்கிற தலைப்பிலான காணொளி வெளியீட்டு விழா சென்னை அரும்பாக்கம் டி.ஜி. வைஸ்ணவா கல்லூரியில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய செய்தி மற்றும் தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் பேசியதாவது, உலகின் தலை சிறந்த நாடாக இந்தியா உள்ளது. குறிப்பாக கடந்த 8 ஆண்டுகளில் இந்த நாடு அடைந்துள்ள வளர்ச்சியை அனைவரும் கண்கூடாக காண முடியும். ஆங்கிலேயர்களுக்கு எதிராக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட சுதேசி கப்பலை இயக்கிவர் வ.உ. சிதம்பரனார். அவரது தற்சார்பு … Read more

செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 9ஆவது சுற்று ; ஜொலித்த இந்திய வீராங்கனைகள்

செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 9ஆவது சுற்று ஆட்டத்தில், இந்திய மகளிர் ‘பி’ அணி சுவிட்சர்லாந்து அணியை முழுமையாக வீழ்த்தியது. தமிழக வீரர்களான பிரக்ஞானந்தா, சேதுராமன், கார்த்திகேயன் முரளி ஆகியோர் வெற்றி வாகை சூடினர். மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் 44வது செஸ் ஒலிம்பியாட் தொடரின், 9-வது சுற்றில் இந்திய ஓபன் ‘ஏ’ அணி, பிரேசில் அணியுடன் மோதியது. அப்பிரிவில், இந்திய வீரர்கள் அர்ஜுன், சசிகிரண் கிருஷ்ணன் ஆகியோர் வெற்றி பெற்ற நிலையில், ஹரிகிருஷ்ண பென்டாலா, விதித் சந்தோஷ் விளையாடிய … Read more

ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்வது தொடர்பாக ஆக.12-க்குள் மக்கள் கருத்துகளை அனுப்பலாம்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்வது தொடர்பாக வரும் 12-ம் தேதிக்குள் பொதுமக்கள் தங்கள் கருத்துகளை மின்னஞ்சல் மூலம் அனுப்பலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக உள்துறை செயலர் க.பணீந்திர ரெட்டி வெளியிட்ட செய்திக்குறிப்பு. சமீபகாலங்களில், ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளால் ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக 20 பேர் உயிரிழந்துள்ளனர். வரன்முறையற்ற ஆன்லைன் விளையாட்டுகளால் கற்றல் குறைபாடுகள், ஒழுக்க குறைபாடுகள் ஏற்படுவதாகவும் அரசுக்கு தெரியவந்துள்ளது. எனவே, ஆன்லைன் விளையாட்டுகள் தொடர்பாக புதிய அவசர சட்டம் … Read more

திடீரென வந்த துரைமுருகன்; மேடையை விட்டு இறங்கி சென்று வரவேற்ற கனிமொழி

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 4வது ஆண்டு நினைவு நாளையோட்டி திமுக மகளிரணி சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில், திமுக எம்.பி கனிமொழி பேசிக்கொண்டிருக்கும்போது, அமைச்சர் துரைமுருகன் திடீரென நிகழ்ச்சிக்கு வந்ததைப் பார்த்த கனிமொழி பேச்சை நிறுத்திவிட்டு மேடையை விட்டு கீழே இறங்கிச் சென்று கையைப் பிடித்து மேடைக்கு அழைத்து வந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. மறைந்த திமுக தலைவர் மு.க. கருணாநிதியின் 4-ம் ஆண்டு நினைவு நாள் இன்று அணுசரிக்கப்பட்டது. திமுக தலைவர் மு.க. … Read more

#தூத்துகுடி || வடமாநில இளைஞர் சடலமாக மீட்பு, காவல்துறையினர் விசாரணை..!

இளைஞர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் உள்ள தனியார் மரக்கடை அருகில், உப்பள பகுதியில் அடையாளம் தெரியாத சுமார் 35 வயது மதிக்கத்தக்க வட மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர் சடலம் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் இறந்தவர் யார்? … Read more

4 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் வேக மாறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆக. 8-ம் தேதி (இன்று) நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, கரூர், மதுரை மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஆக. 9, 10-ம் தேதிகளில் நீலகிரி,கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, வட தமிழக கடலோர … Read more

இந்தி படத்தை ரிலீஸ் செய்யும் உதயநிதி: ‘இந்தி திணிப்பை மட்டுமே எதிர்ப்போம்’ என விளக்கம்

ஹாலிவுட்டில் 1994 ஆம் ஆண்டு வெளியான ‘ஃபாரஸ்ட் கம்ப்’ திரைப்படம் சர்வதேச அளவில் சினிமா ரசிகர்களால் பெரிய அளவில் வரவேற்கப்பட்டது. இந்த படத்தில் ஹாலிவுட் நடிகர் டாம் ஹான்க்ஸ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். உலக அளவில் ஏற்கெனவே பிரபலமான ஃபாரஸ்ட் கம்ப் திரைப்படத்தை தழுவி பாலிவுட்டில், லால்சிங் சர்தா என்ற திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில், பாலிவுட் நடிகர் அமீர்கான் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அமீர்கான் நடித்துள்ள இந்த லால்சிங் சத்தா என்ற இந்திப் படம், தமிழ் … Read more

செஸ் ஒலிம்பியாட் தொடர் நிறைவு விழா, நகரின் சில பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்..!

சென்னையை அடுத்த மாம்மல்லபுரத்தில் 44 வது செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சி கடந்த 28ம் தேதி கோலாக்கலாமாக தொடங்கியது.  இந்த போட்டியில் 186 நாடுகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்நிலையில், நாளை இந்த போட்டியில் நிறைவு விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது அதனால், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, 44-வது செஸ் ஒலிம்பியாட் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் 9-ந்தேதி … Read more

அரசியலமைப்பு சட்டம் குறித்து விழிப்புணர்வு வந்தால் ஜனநாயகம் மலரும் – உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி செலமேஸ்வர் கருத்து

சென்னை: அரசியலமைப்பு சட்டம் குறித்த புரிதல், விழிப்புணர்வு மக்களிடம் வரும்போதுதான் நாட்டில் உண்மையான ஜனநாயகம் மலரும் என்று, சென்னையில் நடந்த கருத்தரங்கில் உச்ச நீதிமன்ற முன்னாள்நீதிபதி செலமேஸ்வர் தெரிவித்தார். சென்னை தரமணியில் உள்ள ஆசிய ஊடகவியல் கல்லூரியில் (ஏசியன் காலேஜ் ஆஃப் ஜர்னலிசம்) ‘அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகம்’ என்ற தலைப்பிலான கருத்தரங்கம் நேற்று நடந்தது. இந்த நிகழ்வில், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் காளீஸ்வரம் ராஜ் எழுதிய ‘சட்டம், வாழ்க்கையில் அரசியலமைப்பின் அக்கறைகள்’ என்ற நூல் வெளியிடப்பட்டது. நூலை … Read more

கிருஷ்ணகிரி | சந்தையில் விலை வீழ்ச்சி – மீன்களுக்கு உணவாக ஏரியில் தக்காளியை கொட்டிய விவசாயிகள்

மகசூல் அதிகரிப்பால், விலை குறைந்துள்ள நிலை யில் போச்சம்பள்ளி பகுதி விவசாயிகள் மீன்களுக்கு உணவாக தக்காளியை ஏரியில் கொட்டி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகாவில் மருதேரி, பண்ணந்தூர், பனங்காட்டூர், அரசம்பட்டி, சந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தக்காளி விலை ரூ.100-க்கும் அதிகமாக விற்பனையானது. இதையடுத்து, இப் பகுதியில் விவசாயிகள் பலர் தக்காளி சாகுபடியில் ஈடுபட்டனர். தற்போது, தக்காளி மகசூல் அதிகரித்துள்ளது. இதனால், … Read more