ஜூலை 11-ல் அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்படுவார்: பொள்ளாச்சி ஜெயராமன்

திருப்பூர்: “வரும் ஜூலை 11-ம் தேதி , நிச்சயமாக ஒரே தலைமையாக அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொதுக்குழு மூலம் ஏகோபித்து ஒருமனதாக தேர்வு செய்யப்படுவார். சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும், திமுகவை எதிர்க்கின்ற வல்லமை படைத்த ஒரே தலைவர் எடப்பாடி பழனிசாமிதான்” என்று முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறியுள்ளார். திருப்பூர் மாநகர அதிமுக ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்குப் பின்னர், முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் செய்தியாளர்களைச் சந்தித்தார். … Read more

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்தைப் போல் தற்போது இபிஎஸ்-க்காக மாபெரும் எழுச்சி: ஆர்.காமராஜ்

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்தில் ஏற்பட்ட எழுச்சியை போல் தற்போது எடப்பாடி பழனிச்சாமி காலத்திலும் எழுச்சி ஏற்பட்டு அதிமுக எழுந்து நிற்பதாக முன்னாள் உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கூத்தாநல்லூரில் மாற்று கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய முன்னாள் அமைச்சர் காமராஜ், அ.தி.மு.க.வின் செயல்பாடுகள் செம்மைப்படுத்தப்பட்டு வருவதாகவும், கடந்த நான்கு ஆண்டுகள் இரண்டு மாதங்கள் எடப்பாடி பழனிச்சாமி சிறப்பாக … Read more

TNPSC Group 4 VAO தேர்வு; ஒரு மாதத்தில் இப்படி படித்தால்… வெற்றி உறுதி!

TNPSC group 4 VAO exam preparation tips for aspirants: குரூப் 4 தேர்வுக்கு தயாராகி வருபவர்கள் கவனத்திற்கு! தேர்வுக்கு இன்னும் ஒரு மாதம் மட்டுமே உள்ள நிலையில், இந்த ஒரு மாதத்தில் என்ன படிக்க வேண்டும்? எப்படி படிக்க வேண்டும்? எதை செய்யக் கூடாது போன்ற முக்கிய தகவல்களை இப்போது பார்ப்போம். குரூப் 4 தேர்வுக்கு தயாராகுபவர்கள், குறைவான நாட்களே உள்ளதால் அதற்கேற்றப்படி தயாராக வேண்டும். நீங்கள் ஏற்கனவே நன்றாக படித்து முடித்து விட்டீர்கள் … Read more

பள்ளிக்கு செல்ல சொன்னதால் மாணவன் எடுத்த விபரீத முடிவு.. சேலம் அருகே நிகழ்ந்த சோகம்..!

பள்ளிக்கு செல்ல கூறியதால் 9ம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியை சேர்ந்தவர் கார்த்தி.  இவருக்கு திருணமாகி உமா என்ற மனைவியும் ஜீவன், கிஷோர், முருகவேல்  ஆகிய மூன்று மகன்களும் உள்ளனர். கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுப்பாட்டால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். உமா தனது மூத்த மகன் ஜீவனை வாழப்பாடியில் உள்ள அரசு பள்ளியில்  10ம் வகுப்பு சேர்ப்பதற்கான ஏற்பாடுகள் செய்து வந்தார். ஆனால், … Read more

ஏர்வாடி தர்கா சந்தனக்கூட்டில் மதுபோதையில் பணியில் இருந்த காவலரை தாக்கிய 4 இளைஞர்கள்.!

ஏர்வாடி தர்காவில் நடைபெற்ற சந்தனக்கூடு திருவிழாவின் போது, பணியில் இருந்த காவலரை மதுபோதையில் இருந்த 4 இளைஞர்கள் தாக்கிய காட்சி வெளியாகியுள்ளன. நால்வர் கும்பலில் ஒருவன் கைது செய்யப்பட்டிருக்கிறான். கடந்த 24-ம் தேதி நடைபெற்ற சந்தனக்கூடு ஊர்வலத்தின் போது இளைஞர்கள் சிலரை ஒதுங்கிச் செல்ல காவலர் அறிவுறுத்தியதால் ஏற்பட்ட தகராறில், காவலரை 4 இளைஞர்கள் சரமாரியாக தாக்கினர். புகாரின் பேரில் வழக்கு பதிந்த போலீசார் ஒருவரை கைது செய்த நிலையில், 3 பேரை தேடி வருகின்றனர். Source … Read more

புதுச்சேரியில் பாமக ஆட்சி அமைய வேண்டும்: பொதுக்குழு கூட்டத்தில் ராமதாஸ் பேச்சு

புதுச்சேரி: பெண்களிடம் பேசினால் வீட்டின் அனைத்து ஓட்டுகளும் நமக்குத்தான் நம்மால் ஆட்சி அமைக்க முடியும் என்று புதுச்சேரியில் நடைபெற்ற கூட்டமொன்றில் ராமதாஸ் தெரிவித்தார். புதுச்சேரி மாநில பாமக பொதுக்குழு கூட்டம் கம்பன் கலையரங்கத்தில் இன்று நடைபெற்றது. மாநில துணை அமைப்பாளர் மதியழகன் வரவேற்புரை ஆற்றினார். மாநில அமைப்பாளர் கணபதி தலைமை தாங்கினார். மாநில துணை அமைப்பாளர் வடிவேல், மாநில வன்னியர் சங்க தலைவர் ஜெயக்குமார், காரைக்கால் மாவட்ட செயலாளர் பிரபாகரன் தேவமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் … Read more

ஓபிஎஸ் வாகனத்தில் இருந்த ஈபிஎஸ் போட்டோவை கிழித்து செருப்பால் அடித்த ஆதரவாளர்கள்!

மதுரையில் ஓபிஎஸ் வாகனத்தில் இருந்த ஈபிஎஸ் படத்தை கிழித்து எறிந்து, ஓபிஎஸ் ஆதரவாளர்கள் செருப்பால் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒற்றைத் தலைமை விவகாரத்தால் அதிமுக கிட்டத்தட்ட இரண்டாக பிரிந்து கிடக்கிறது. குறிப்பாக கடந்த 23-ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு பின்பாக ஓ.பி.எஸ். – ஈ.பி.எஸ். என அவர்களது ஆதரவாளர்கள் இரு பிரிவினராக செயல்பட்டு வருகின்றனர். இரு அணியினரும் மாறி மாறி ஒருவரையொருவர் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும் பொதுக்குழு கூட்டத்தில் இரட்டைத் தலைமையை ரத்துசெய்ய வேண்டும் … Read more

பாறைகளில் மறைந்திருக்கும் விலங்கு; உங்கள் கூர்மையான பார்வைக்கு ஒரு சவால்… கண்டுபிடிங்க!

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் கூர்மையான பார்வைத் திறனுக்கும் உங்கள் மூளையின் சிந்திக்கும் திறனுக்கும் சவால் விடக் கூடியவை. இந்த படம் உங்கள் கூர்மையான பார்வைத் திறனுக்கு சவால்விடுகிறது. இங்கே பாறைகளில் ஒரு விலங்கு மறைந்திருக்கிறது. அது என்ன விலங்கு என்று கண்டுபிடியுங்கள். சமீப காலமாக ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தில் அதிக அளவில் பகிரப்படுகிறது. நெட்டிசன்கள் ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் உள்ள சுவாரஸியத்தால் அது ஒரு அடிக்‌ஷனாக மாறி வருகிறது. நீங்களும் ஒருமுறை இந்த ஆப்டிகல் இல்யூஷன் … Read more

திருவிடைமருதூர் அரசு மருத்துவனையில் போதிய மருத்துவர்கள் & மின்சாரம் இல்லாததால் நோயாளிகள் அவதி..!

அரசு மருத்துவமனையில் மின்சாரம் இன்றி பிரசவம் பார்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூரில் அரசு தலைமை மருத்துவமனை உள்ளது. அன்மையில் தரம் உயர்த்தப்பட்ட இந்த மருத்துவமனையில் இரவு மருத்துவமனையில் பொதுமான மருத்துவர்கள் இல்லாததாலும் சரியான நேரத்தில் மின்சாரம் இல்லை என்பதாலும் நோயாளிகள் அவதியடைந்தனர். இந்நிலையில், நேற்று பிரசவத்திற்காக கர்ப்பிணி பெண் ஒருவர் சிகிச்சைக்காக வந்திருந்தனர். அப்போது அங்கு மின்சாரம் இல்லாததால் அவர்கள் யூ.பி.எஸ் உதவியுடன் விளக்கு வெளிச்சத்தில் பிரசவம் பார்த்துள்ளனர். அதே போல பலத்த … Read more

2030க்குள் பொருளாதார தன்னிறைவு என்ற இலக்கை நோக்கி தமிழக அரசு பயணித்து வருகிறது – தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்!

2030 ஆம் ஆண்டுக்குள் பொருளாதார தன்னிறைவு என்ற இலக்கை நோக்கி தமிழக அரசு பயணித்து வருவதாக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். என்.டி.சி. குழுமத்தின் இரு சரக்கு போக்குவரத்து நிறுவனங்களின் தொடக்கவிழாவில் மாமல்லபுரத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, பிற மாநிலங்களை ஒப்பீடுகையில், தமிழகத்தின் பொருளாதாரம் வலிமையாக உள்ளது என்றார். Source link