தமிழ்நாடு, சத்தீஸ்கருக்கான எஸ்.சி., எஸ்.டி. பட்டியல் திருத்த மசோதா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தாக்கலாகிறது..!

தமிழ்நாடு மற்றும் சத்தீஸ்கரில் எஸ்.சி., எஸ்.டி. பட்டியலில் திருத்தம் செய்வதற்கான மசோதா உள்ளிட்ட 24 மசோதாக்கள் வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக மக்களவைச் செயலாளர் அறிவித்துள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 18ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 13ம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில், புதிய மசோதாக்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதில், தேசிய பல் மருத்துவ ஆணைய மசோதா, சுரங்கங்கள் மற்றும் கனிம வளங்கள் திருத்த மசோதா, குடும்ப நீதிமன்றங்கள் சட்டத் திருத்த … Read more

ஓ.பன்னீர்செல்வத்திற்கு கரோனா அறிகுறி: மருத்துவமனை அறிக்கை

சென்னை: ஓ.பன்னீர்செல்வம் கரோனா அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எம்ஜிஎம் மருத்துவமனை தெரிவித்துள்ளது. ஓ.பன்னீர்செல்வம் கரோனா அறிகுறி காரணமாக நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் உடல் நிலை குறித்து எம்ஜிஎம் மருத்துவமனை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ” தமிழக முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் லேசான கரோனா அறிகுறிகளுடன் 15ம் தேதி தனிப்படுத்துதல் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது மருத்துவ வல்லுனர்கள் அடங்கிய குழுவின் கண்காணிப்பில் உள்ளார். அவரது உடல்நிலை சீராக உள்ளது” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. Source link

`உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுக்க முடியாது'- டாஸ்மாக்கை மூட நீதிமன்றம் மறுப்பு

`அரசு டாஸ்மாக் கடையினால் பொது மக்களுக்கு இடையூறு ஏதும் இல்லாததால் டாஸ்மாக் கடையை பூட்ட உத்தரவிட முடியாது’ என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மக்கள் போராட்டம் நடத்துகிறார்கள் என்பதற்காக உணர்ச்சி வசப்பட்டு நீதிமன்றத்தால் எந்த முடிவுக்கும் வர முடியாது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். கன்னியாகுமரி நடைகாவு பகுதியைச் சேர்ந்த ஜார்ஜ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவொன்று தாக்கல் செய்திருந்தார். அதில், “கன்னியாகுமரி நித்திரவிளை அருகேயுள்ள நம்பாளிசாலை ஆற்றுப்புரம் பகுதியில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. இது பொதுமக்களுக்கு … Read more

பரிதாப நிலையில் ஓபிஎஸ்.. மிரட்டிப் பார்க்க நினைத்தால் தலை காட்ட முடியாது- சீறும் ஆர்பி உதயகுமார்

அன்று சைக்கிளில் சுற்றித் திரிந்தவர் இன்று 5 ஆயிரம் கோடிக்கு அதிபதி என்று ஓ.பி.எஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ், முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மீது கடந்த சில தினங்களுக்கு முன்பு ஊழல் குற்றச்சாட்டு கூறியிருந்தார்.கோவை செல்வராஜ் குற்றச்சாட்டு:-அதிமுகவில் இரட்டை குழல் துப்பாக்கிகளாக செயல்பட்ட இபிஎஸ், ஓபிஎஸ் தற்போது தனித்தனியே பிரிந்து கிடக்கின்றனர். ஜூலை 11ஆம் தேதி கட்சியின் தற்காலிக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி கே பழனிசாமி (இபிஎஸ்), முன்னாள் முதலமைச்சரும் கழக ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர் … Read more

நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் 3 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக வரும் 18ஆம் தேதி வரை நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்த செய்திக்குறிப்பில், தமிழ்நாடு, புதுச்சேரியில் வரும் 20ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அம்மையம் கணித்துள்ளது. மேலும், வரும் 17ஆம் தேதி வரை மத்திய கிழக்கு, … Read more

குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர், உறுப்பினர்கள் நீக்கம் ரத்து : உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் மற்றும் உறுப்பினர்களை நீக்கி பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவராக இருந்த சரஸ்வதி என்பவரையும், சரண்யா ஜெயக்குமார், துரைராஜ், முரளிகுமார் உள்ளிட்ட உறுப்பினர்களையும் நீக்கி 2022 பிப்ரவரி மாதம் தமிழக அரசு உத்தரவிட்டது. மேலும் புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தேர்வு செய்வதற்கான விண்ணப்பங்களை வரவேற்க ஆணையத்தின் செயலாளருக்கு அனுமதி அளிக்கப்படுவதாகவும் அந்த உத்தரவில் … Read more

சத்தியமங்கலம்: அருகே வந்த நபரை ஆக்ரோஷத்துடன் துரத்திய காட்டு யானை

சத்தியமங்கலம் அருகே சாலையில் நடமாடிய காட்டு யானையின் அருகே நடந்து சென்ற நபரை காட்டு யானை துரத்தி தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. இவ்வனப்பகுதி வழியாக தமிழக கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் காட்டு யானைகள் பகல் நேரங்களில் நடமாடுகின்றன. இந்த நிலையில் இன்று சத்தியமங்கலம் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் தமிழக கர்நாடக எல்லை பகுதியில் உள்ள புளிஞ்சூர் வனப் … Read more

ஒதுங்க வேண்டுமா விராட் கோலி? பிரபலங்கள் கூறுவது என்ன?

ஜாம்பவான் வீரர் கபில்தேவ், 450 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய அஷ்வினை ஆடும் லெவனியில் இருந்து கழற்றி விடும் போது, மோசமான ஃபார்மில் இருக்கும் கோலியையும் டி20 போட்டிகளில் இருந்து கழற்றி விட வேண்டியது தானே? என்று கேள்வியெழுப்பி எழுப்பி இருந்தார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியின் தற்போதைய ஃபார்ம் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. அவர் கடந்த 3 ஆண்டுகளாகவே பெரிய அளவில் ரன்கள் குவிக்க மிகுந்த சிரமப்பட்டு வருகிறார். இதனால், அவர் மீதான … Read more

புதிதாக 9 மணல் குவாரிகள்: 30 குவாரிகளில் மணல் அள்ளும் முறையில் மாற்றம்:  சுற்றுச்சூழல் அனுமதி கோரியது நீர்வளத்துறை

சென்னை: புதிதாக 9 மணல் குவாரிகள் அமைக்கவும் 30 குவாரிகளில் மணல் அள்ளும் முறையில் மாற்றம் கொண்டுவரவவும் சுற்றுச்சூழல் அனுமதி கோரி தமிழக நீர்வளத்துறை விண்ணப்பித்துள்ளது. தமிழகத்தில் 2022 ஜனவரி முதல் தற்போது வரை கடலூர், திருச்சி, வேலூர், அரியலூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் காவேரி, கொள்ளிடம், பாலாறு, வெள்ளாறு ஆகிய ஆறுகளில் புதிதாக 9 மணல் குவாரிகள் அமைப்பதற்கான சுற்றுச்சூழல் அனுமதி கோரி தமிழ்நாடு நீர்வளத்துறையானது தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் விண்ணப்பங்களை … Read more

'அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா மட்டுமே' : இபிஎஸ்-க்கு எதிரான போஸ்டர்

அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா மட்டுமே; எடப்பாடி பழனிசாமி கிடையாது ன நெல்லை அதிமுக பெண் நிர்வாகி ஒட்டியுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக அதிமுகவின் பொதுச் செயலாளர் யார் என்பது குறித்து பல்வேறு குழப்பங்கள் நிலவி வந்த நிலையில், பொதுக்குழுவில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இருப்பினும் பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள் செல்லாது என பன்னீர்செல்வம்  தரப்பில் கூறப்பட்டு வந்த நிலையில், இரு தரப்பினரும் மாறி மாறி … Read more