தமிழகத்தின் 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் – வானிலை ஆய்வு மையம்

குமரிக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டலக் கீழடுக்குச் சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாக இன்றும் நாளையும் தமிழகத்தின் 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜூன் 5, 6, 7 ஆகிய நாட்களில் தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒருசில இடங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் சில இடங்களில் இலேசான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. இன்று … Read more

“குதிரைகள் தப்பிச் சென்ற பிறகு லாயத்தை பூட்டுவதா?” – அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தாமதம் மீது அன்புமணி விமர்சனம்

சென்னை: “மே மாதத் தொடக்கத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை தொடங்கியிருந்தால், நடப்பாண்டும் வழக்கத்தை விட கூடுதலாக பல லட்சம் மாணவர்கள் சேர்ந்திருப்பர். அந்த வாய்ப்பை அரசு பள்ளிகளில் இழந்து கொண்டிருக்கின்றன” என்று பாமக தலைவர் அன்புமணி கூறியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் அரசு பள்ளிகள் வரும் 13-ம் தேதி திறக்கப்படவுள்ள நிலையில், அவற்றில் இதுவரை மாணவர் சேர்க்கை தொடங்கப்படாதது கவலையளிக்கிறது. தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வரும் … Read more

“1000 ஆண்டுகள் ஆனாலும் கருணாநிதியின் பிறந்தநாள் விழா கொண்டாடப்படும்”- வைகோ புகழாரம்

“1000 ஆண்டுகள் ஆனாலும் கலைஞரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்படும்” என டெல்லியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். தமிழக முன்னாள் முதலமைச்சரான மு.கருணாநிதி 99வது பிறந்தநாள் விழா இன்று தமிழக அரசின் சார்பில் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. டெல்லியில் உள்ள தமிழ்நாடு அரசு இல்லத்தில் மதிமுக பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வைகோ, தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ் விஜயன் மற்றும் அரசு அதிகாரிகள் கருணாநிதி உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேலும், … Read more

#Vikram.. கமல் படமா? பகத் ஃபாசில் படமா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியானதா?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள ‘விக்ரம்’ திரைப்படம், ரசிகர்களின் மாபெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியானது. விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், காளிதாஸ் ஜெயராம், காயத்ரி என பல நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். படத்தின் டிரெய்லர், பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. இந்நிலையில் ‘கைதி’ படத்தை மற்றொரு முறை பார்த்துவிட்டு ‘விக்ரம்’ உலகுக்கு வாருங்கள் … Read more

#சென்னை || மதுபோதையில் வடமாநில ஓட்டுனரிடம் தகராறு.! ஆத்திரத்தில் லாரியை ஏற்றி 3 பேரை கொலை செய்த வடமாநிலத்தவர்.!

சென்னை அருகே, மது போதை தகராறில் லாரியை ஏற்றி இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பலி எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது. மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த லாரி ஓட்டுனர் உள்ளிட்ட இருவர் சேர்ந்து, தமிழகத்தை சேர்ந்த மூன்றுபேர் மீது லாரியை ஏற்றி கொலை செய்த சம்பவம் அரங்கேறி உள்ளது. சென்னை வட பெரும்பாக்கத்தில் லாரி பார்க்கிங் லாட் அருகே, கமலக்கண்ணன், நவீன் குமார், குமரன் ஆகியோர் மது அருந்திக் கொண்டிருந்தனர். அங்கு நிறுத்தியிருந்த லாரியை … Read more

பால்கனி இரும்பு கிரில் கேட்டில் சிக்கிக்கொண்ட குழந்தையின் தலை.. நீண்ட போராட்டத்திற்கு பின் பத்திரமாக மீட்பு.!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே வீட்டின் பால்கனியில் உள்ள இரும்பு தடுப்பில் தலையுடன் சிக்கிக்கொண்ட ஒன்றரை வயது ஆண் குழந்தை பாதுகாப்பாக மீட்கப்பட்டது. தாராசுரம் கடைவீதியில் வசித்தும் வரும் விஜய் ஆனந்த் என்பவரின் குழந்தை அரிபிரியன், பால்கனியில் உள்ள இரும்பு கிரில் கேட்டை பிடித்து விளையாடிக்கொண்டிருந்த போது கம்பிகளுக்கு இடையே தலை சிக்கிக்கொண்டது. தலையை வெளியே எடுக்க முடியாமல் குழந்தை தவித்த நிலையில் நீண்ட போராட்டத்திற்கு பிறகு கம்பியை இழுத்து வளைத்து குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது. Source … Read more

99வது பிறந்தநாள் | ஓமந்தூரார் தோட்டத்தில் கருணாநிதி சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை

சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99-வது பிறந்த நாள், முதல்முறையாக அரசு விழாவாக இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள கருணாநிதியின் சிலைக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைந்துள்ள கருணாநிதியின் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் … Read more

சென்னையில் சொகுசு கப்பல் சுற்றுலா திட்டம்; சேவையை தொடங்க உள்ள கார்டெலியா நிறுவனம்

சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில், சொகுசு கப்பல் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சனிக்கிழமையன்று சென்னை துறைமுகத்தில் தொடங்கி வைக்க உள்ளார். கப்பலின் பயணத்திட்டம், கட்டணம் குறித்து விரிவாக பார்க்கலாம். சட்டமன்றத்தில் அறிவித்தபடி, சொகுசு கப்பல் சுற்றுலா திட்டமானது சென்னையில் செயல்படுத்தப் படவுள்ளது. நாட்டின் பல்வேறு துறைமுகத்தில் சேவை வழங்கிவரும் கார்டெலியா (Cordelia) கப்பல் நிறுவனம், சென்னையிலும் தனது சேவையை தொடங்குகிறது. இரண்டு வகையான பயணத்திட்டங்களுடன், நட்சத்திர விடுதிகளை மிஞ்சும் அம்சங்களுடனும் சேவை வழங்க வருகிறது கார்டெலியா. சென்னை … Read more

அடுத்த பிரச்சினையை தொடங்கிய ஜனார்த்தன்… பரபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ்

Tamil Serial Pandian Stores Rating Update With promo : ஆரம்பமாகியது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்த பூகம்பம் இதை வைத்து இன்னும் ஒரு மாதத்திற்கு ஓட்டலாமே என்று சொல்லும் அளவுக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பான திருப்பதை ஏற்படுத்தியுள்ளது. சகோர ஒற்றுமை, கூட்டுக்குடும்பம், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை என அனைத்திற்கும் பெயர் பெற்ற பாண்டியன் ஸ்டோர்சில் தற்போது சகோத ஒற்றுமையை தவிர மற்ற அனைத்தும் இருக்கிறதா என்றால இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இதில் சகோதர ஒற்றுமையே … Read more

உச்சநீதிமன்ற வழக்கை முடிக்க பாருங்க.! தமிழகத்தின் களநிலவரமே வேற., பட்டியலை அடுக்கிய ஓபிஎஸ்.! 

ஆன்லைன் விளையாட்டு மறைமுக லாட்டரி விற்பனை போன்ற சூதாட்டங்களை தடை செய்து, தமிழகத்தில் சட்ட ஒழுங்கை சீர் செய்ய வேண்டும் என்று, தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், “இணையதள விளையாட்டு என்று கூறி, பொது மக்களை ஏமாற்றி, பணம் கட்ட வைத்து, பிறகு பந்தயமாக மாற்றி, தொடர்ந்து விளையாடச் செய்து சூதாட்டத்திற்கு அடிமையாக்கக் கூடியதாகவும்; விபரீத விளைவுகளை உருவாக்கக் கூடியதாகவும்; உயிருக்கே … Read more