தமிழகத்தில் குரூப் 4 தேர்வு: 7300 இடங்களுக்கு 22 லட்சம் பேர் போட்டி

சென்னை: நாளை மறுநாள் நடைபெறவுள்ள 7300 இடங்களுக்கான குரூப் 4 தேர்வை தமிழகம் முழுவதும் 22 லட்சம் பேர் எழுதவுள்ளனர். தமிழக அரசுத் துறைகளில் காலியாக உள்ள குரூப்-4 பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) கடந்த மார்ச் மாதம் அறிவித்தது. இளநிலை உதவியாளர், வரித் தண்டலர் நிலை-1, தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் உள்ளிட்ட பணிகளுக்கு மொத்தம் 7301 இடங்களுக்கு இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வு வரும் 24-ம் தேதி நடைபெறுகிறது. … Read more

திருத்தணியிலிருந்து ஆந்திரா கடத்தமுயன்ற 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல் – 2 பேர் கைது

திருத்தணி அருகே ஆந்திராவிற்கு கடத்த முயன்ற 2 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 3 டன் ரேஷன் அரிசியையும் போலீசார் பறிமுதல் செய்தனர். திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அருங்குளம் கூட்டுச்சாலை வழியாக ஆந்திர மாநிலத்திற்கு ரேஷன் அரிசி கடத்துவதாக திருவள்ளூர் மாவட்ட குடிமை பொருள் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, திருவள்ளூர் மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் தடுப்பு குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சுந்தரம்மாள் தலைமையிலான போலீசார் … Read more

நீட் தேர்வு | மத்திய அரசுக்கான பதில்கள் தயார்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: நீட் தேர்வு தொடர்பாக மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ள பதில்கள் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். நீட் மசோதா குறித்த மத்திய அரசின் கருத்துகள் மற்றும் கேள்விகளுக்கு தமிழக அரசு தயார் செய்துள்ள எழுத்துபூர்வ பதில்கள் குறித்து மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், “குடியரத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவதற்காக ஆளுநர் வழியாக தமிழக அரசு நீட் மசோதாவை அளித்தது. இதைத் தொடர்ந்து, ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகத்தால் இம்மசோதா … Read more

’’தேசிய விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை’’ – ஜி.வி.பிரகாஷ் நெகிழ்ச்சி!

சிறந்த பின்னணி இசையமைப்பாளருக்கான தேசிய விருதை வென்ற ஜி.வி.பிரகாஷ், தேசிய விருது கிடைக்கும் என்று தான் எதிர்பார்க்கவில்லை என்றும், விருது அறிவிப்பு தமக்கு ஆச்சர்யமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். டெல்லியில் 68வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. அதில் சுதா கொங்கரா இயக்கிய “சூரரைப் போற்று” திரைப்படம் ஐந்து விருதுகளை வாரிக் குவித்தது. அந்த படம் சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்ட நிலையில், அப்படத்தில் நடித்ததற்காக நடிகர் சூர்யா சிறந்த நடிகராகவும், நடிகை அபர்ணா பாலமுரளி சிறந்த … Read more

14 மாதங்களில் 70% வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம்.. சொல்கிறார் செந்தில் பாலாஜி..!

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, சென்னை புளியந்தோப்பில் உள்ள துணை மின் நிலையத்தை ஆய்வு செய்தார். பின்னர், அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது; “பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தான் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் மின் கட்டணம் குறைவு. பதிவு செய்து காத்திருக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் இலவச மின் இணைப்பு வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்தோம். ஒரே ஆண்டில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த … Read more

சிபிஎஸ்இ பிளஸ்2 தேர்வில் மாநில அளவில் முதல் இடம்,இந்திய அளவில் மூன்றாம் இடம்.. நாமக்கல் மாணவி சாதனை..!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே வெற்றி விகாஸ் பள்ளியில் சிபிஎஸ்இ பிளஸ் 2 பயின்ற மாணவி யோகேஷ்வரி, 496 மதிப்பெண்கள் எடுத்து இந்திய அளவில் மூன்றாம் இடமும், மாநில அளவில் முதல் இடமும் பிடித்துள்ளார். அதே பள்ளியில் பயின்ற மற்றொரு மாணவி நந்திதா, 488 மதிப்பெண்கள் எடுத்து மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். அவர்கள் இருவருக்கும் பள்ளியின் நிறுவனர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர். Source link

“சூர்யாவுக்கு வாழ்த்துகள்… மத்திய அரசுக்கு நன்றி” – அண்ணாமலை

சென்னை: ‘சூரரைப் போற்று’ படத்துக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெறும் சூர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய அரசுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார். 2020-ம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கான 68-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. சூரரைப் போற்று படம் 5 விருதுகளை வென்றது. சிறந்த படத்துக்கான விருது, சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது , அபர்ணா பால முரளிக்கு சிறந்த நடிகைக்கான விருது, ஜி.பிரகாஷுக்கு சிறந்த பின்னணி இசைக்கான … Read more

போலி செய்திகளை பரப்பியதற்காக 94 யூடியூப் சேனல்களை முடக்கியது மத்திய அரசு..!!

யூடியூப், கூகுள் நிறுவனத்தின் மிகவும் பிரபலமான வீடியோ பகிரும் தளமாகும். இந்த தளத்தில் தினமும் ஆயிரக்கணக்கிலான வீடியோக்கள் பதிவேற்றப்படுகின்றன. யூடியூப் மூலம் அதிக பணம் சம்பாதிக்க முடியும் என்பது இதன் கூடுதல் சிறப்பு. இது இந்தியாவிலும் மிகவும் பிரபலமானது. லட்சக் கணக்கிலான இந்திய பயனர்கள் இதில் வீடியோக்களை பார்த்து மகிழ்கின்றனர். இந்த நிலையில், 2021-22 ஆம் ஆண்டில் போலி செய்திகளை பரப்பியதற்காக 94 யூடியூப் சேனல்களை மத்திய அரசு தடை செய்துள்ளது என்று தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை … Read more

வகுப்பறையின்றி மரத்தடியில் பாடம் நடத்தும் 2,500 பள்ளிகளுக்கு கட்டிடங்கள்: அன்பில் மகேஸ் உறுதி

ராமநாதபுரம்: தமிழகத்தில் வகுப்பறைகள் இன்றி மரத்தடியில் வகுப்புகள் நடத்தப்படும் 2,500 பள்ளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் கட்டிடங்கள் கட்டிக் கொடுக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார். ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரியில், வளர்ச்சியில் முன்னுரிமை பெறும் மாவட்டங்களில் சிறப்பு பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வித் திட்டத்தின் கீழ் கல்வி கற்ற வயது வந்தோர்களுக்கு அடிப்படை எழுத்தறிவுச் சான்றிதழ் வழங்குதல் மற்றும் தன்னார்வலர்களுக்கான பயிற்சிப் பணிமனை … Read more

சுகர், தாம்பத்யம்… 3 முக்கிய நன்மை இருக்கு; முருங்கை இலையை ஆண்கள் மிஸ் பண்ணாதீங்க!

முருங்கை இலையில் அதிக மருத்துவ குணங்கள் இருக்கிறது. குறிப்பாக இது ஆண்களுக்கு மிகவும் நன்மை தருகிறது. ஆண்களை தாக்கும் ப்ராஸ்டேட் நோய்க்கு இது மருந்தாக செயல்படுகிறது. முருங்கை இலையில் காணப்படும் சில சத்துக்கள் ஆண்களுக்கு ப்ராஸ்டேட் நோய்யை குணப்படுத்த வாய்ப்பிருக்கிறது. மேலும் இதில் இருக்கும் பாலிபினால்ஸ், ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. மேலும் விலங்களிடத்தில்தான் இந்த ஆய்வுகள் நடத்தப்படிருந்தாலும் மனிதர்களுக்கும் இது பயனுள்ளதாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. எலிகளிடத்தில் நடத்தப்பட்ட சோதனையில் அதன் விந்தனு உத்பத்தியை முருங்கை இலை … Read more