ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சந்திப்பு.. பேசப்பட்ட முக்கிய விவகாரம்.!!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சந்தித்துள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று 12 மணி அளவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசினார்.  இந்த சந்திப்பின்போது, கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்த மாணவி ஸ்ரீமதி கடந்த ஜூலை 13ம் தேதி பள்ளியின் மூன்றாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்ட விவகாரம் மற்றும் … Read more

ரூட் தல, பஸ் டே என்ற பெயரில் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தால் கடும் நடவடிக்கை: சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை

சென்னை: ரூட் தல மற்றும் பஸ் டே என்ற பெயரில் வன்முறை மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் சம்பவங்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல் ஆணையாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை பெருநகரில் உள்ள கல்லூரிகளில் கோடை விடுமுறைக்குப் பின்னர் இளங்கலை 2ம் ஆண்டு மற்றும் 3ம் ஆண்டு மாணவர்களுக்கு கடந்த 18ம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகிறது. மாணவர்கள் சாலையில் கும்பலாகவும், பேருந்துகளில் … Read more

மத்திய அரசு அனுமதி கிடைத்ததால் செப்.1 முதல் நெல் கொள்முதல்: அமைச்சர் சக்கரபாணி அறிவிப்புமத்திய அரசு அனுமதி

சென்னை: மத்திய அரசின் அனுமதி கிடைத்துள்ளதால், டெல்டா மாவட்டங்களில் ஒரு மாதம் முன்னதாக செப்.1-ம் தேதியே நெல் கொள்முதல் தொடங்கும் என்று தமிழக உணவுத் துறை அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், மேட்டூர் அணையில் இருந்து மே 24-ம் தேதியே தண்ணீரை முதல்வர் திறந்துவிட்டார். அத்துடன், குறுவை நெல் சாகுபடியும், அறுவடையும் முன்னதாகவே தொடங்கிவிடும் என்பதால், 2022-23 ஆண்டு காரிஃப் சந்தைப்பருவ கொள்முதலை அக்.1-ம் … Read more

மகள்களை கொலை செய்துவிட்டு தற்கொலைக்கு முயன்ற தாய்க்கு நீதிமன்ற விடுதலை- என்ன காரணம்?

`பெண் குழந்தைகள் பெற்றுக் கொள்வதை கேவலமாக எண்ணுவதை சமூகம் இன்னும் திருத்திக் கொள்ளாதது துரதிஷ்டவசமானது’ என சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. வேலூர் மாவட்டம், பொன்னை பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் – சத்யா தம்பதியருக்கு, லத்திகா என்ற ஐந்து வயது பெண் குழந்தையும், ஹாசினி என்ற மூன்று வயது பெண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் சத்யா மூன்றாவதாகவும் பெண் குழந்தையை பெற்றெடுத்தார். மூன்றும் பெண் குழந்தைகள் என்பதால் தன்னை துரதிஷ்டசாலி என சமூகம் இகழ்ந்ததாக கூறும் … Read more

பெண்களை எப்படி கவர்வது? கூகுளில் அதிகம் தேடப்பட்ட கேள்வியும், அதற்கான பதில்களும்

ஒரு பெண்ணை எப்படி கவர்வது? பொதுவாக, பெண்களின் மனதில் இடம்பிடிக்க ஆண்கள் செய்யும் விஷயங்களில் மிகச் சிறிய விஷயங்களைப் புறக்கணிக்கிறார்கள், இங்குதான் அவர்கள் பெரிய தவறு செய்கிறார்கள். பெண்களை மகிழ்விப்பதற்கும், அவர்களின் இதயங்களை வெல்வதற்கும் நீங்கள் ஒவ்வொரு சிறிய விஷயத்திலும் கவனம் செலுத்த வேண்டும். அதனால்தான் பல ஆண்கள் இந்த கடினமான டாஸ்கை சமாளிக்க, எளிதான வழியை கூகுளில் தேடுகிறார்கள். உங்கள் துணையை மகிழ்விப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் சில ஸ்பெஷல் டிப்ஸ்களை இன்று நாங்கள் உங்களுக்கு … Read more

குஜராத், கர்நாடகத்தில் முடியும் போது, உங்களால் முடியாதா?! திமுக அரசுக்கு அன்புமணி கேள்வி!

ஜி.எஸ்.டி காரணம் காட்டி நான்கே மாதத்தில் இரண்டாவது முறையாக விலையேற்றம் செய்திருப்பது மக்களை பாதிக்கும் செயல், உடனடியாக திரும்ப பெற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.  அவர் தன்னுடைய டுவிட்டர் பதிவில், “தமிழ்நாட்டில் ஆவின் தயிர், நெய் ஆகியவற்றின் விலைகள் குறைந்தபட்சம் ரூ.5 முதல் ரூ.45 வரை விலை உயர்த்தப்பட்டிருக்கின்றன. பொருளாதார நெருக்கடி மிகுந்த தருணத்தில், ஏழை மக்களை பாதிக்கும் வகையிலான இந்த விலை உயர்வு நியாயமற்றது; ஏற்றுக் கொள்ள முடியாதது.  கடந்த மார்ச் … Read more

அதிர்ச்சி கொடுத்த ஆவின்.. பால் பொருட்கள் விலை திடீர் உயர்வு..!

மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் தயிர், நெய் உள்ளிட்ட பொருட்களின் விலையை உயர்த்துவதாக ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, 100 கிராம் தயிர் விலை 10 ரூபாயில் இருந்து 12 ஆக உயர்ந்துள்ளது. 200 கிராம் தயிர் விலை 25 ரூபாயில் இருந்து 28 ரூபாயாக அதிகரித்துள்ளது. ஒரு லிட்டர் நெய்க்கு 50 ரூபாயும், ஒரு லிட்டர் தயிருக்கு 10 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது. பாக்கெட்டில் அடைக்கப்பட்ட அரை லிட்டர் தயிர் 30 ரூபாயில் இருந்து 35 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. … Read more

மாணவர் நலனுக்காக தற்கொலை தடுப்பு படை: தமிழக அரசுக்கு கமல் வலியுறுத்தல்

சென்னை: மாணவர்களின் நலன் கருதி தற்கொலை தடுப்பு படையை அமைக்க வேண்டும் என தமிழக அரசை மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: பொதுத் தேர்வு முடிவுகள் வெளியான ஜூன் 20-ம் தேதி மட்டும் தமிழகத்தில் ஒரே நாளில் 11 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். கடந்த சில நாட்களில் உயிர்க்கொல்லி நீட் என்னும் அநீதியால் 3 மாணவர்கள் தற்கொலை, மேச்சேரி அரசுப் பள்ளியில் 11-ம் வகுப்பு மாணவி … Read more

குட்கா ஊழல்; வழக்குப்பதிவு செய்ய அனுமதி கோரி சிபிஐ கடிதம்; தமிழக அரசு விரைவில் பரிசீலனை   

குட்கா ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்கள், டிஜிபிக்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் எதிராக சட்ட ரீதியாக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க முன்அனுமதி கோரி தமிழக அரசுக்கு சிபிஐ கடிதம் அனுப்பியுள்ளது. இந்நிலையில் தமிழக விரைவில் இது தொடர்பாக பரீசீலனை செய்யும் என்று தகவல் வெளியாகி உள்ளது.   சென்னை புறநகரில் உள்ள எம்டிஎம் என்ற பான் மசாலா நிறுவனத்தில் வருமானவரித் துறையினர் கடந்த 2016-ம் ஆண்டு நடத்திய சோதனையில் அந்நிறுவனம் ரூ.250 … Read more

முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் மருத்துவமனையில் இருந்து இன்று வீடு திரும்புகிறார்.?

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று வீடுதிரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று வீடுதிரும்ப உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த 4 நாட்களாக சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  கடந்த 18 … Read more