பொதுச்செயலாளர் பதவியிலிருந்து ஜெயலலிதாவையே நீக்கியது கொடுஞ்செயல் – ஜேசிடி பிரபாகர் விளாசல்

ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களை அதிமுகவில் இருந்து நீக்கி வரும் எடப்பாடி பழனிசாமிக்கு கண்டனம் தெரிவித்து ஜே.சி.டி.பிரபாகர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்தும் தனக்கே உரியது என்ற அதிபர் மனப்பான்மையில் எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வருவதாகவும் அவர் விமர்சித்துள்ளார். பொதுக்குழு என்ற பெயரில், எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களை கூட்டி நிரந்தரப் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து ஜெயலலிதாவையே நீக்கியது கொடுஞ்செயல் என்றும், இது கட்சி விதிமுறைகளுக்கு முரணாது என்றும் ஜே.சி.டி.பிரபாகர் கூறியுள்ளார். தன் விருப்பங்களுக்கு ஏற்ப கட்சியின் அடிப்படை … Read more

சில துளி லெமன் ஜூஸ்… சுகர் பிரச்னைக்கு இந்த தீர்வு தெரியுமா?

எதைத் திண்றால் பித்தம் தெளியும் என்ற கதையாக, எதை சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரை குறையும் என்று பலரும் தேடி வருகிறார்கள். அவர்களுக்காகவே இந்த தகவல், சில துளி லெமன் ஜூஸ் ரத்தத்தில் குளுக்கோஸ் அளவைக் குறைத்து சுகர் பிரச்னைக்கு தீர்வு தருகிறது. நீரிழிவு நோயாளிகளிடம் கசப்பானது எது என்று கேட்டால் அவர்கள் சர்க்கரையைத்தான் சொல்வார்கள். ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த முடியாமல் சர்க்கரையை வெறுப்பவர்கள். அவர்களுக்காகவே, இந்த தகவல், எலுமிச்சை ஜூஸ் எப்படி இரத்தத்தில் அதிக அளவில் … Read more

கனமழை காரணமாக வால்பாறையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை.!

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கோவை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக மழை கொளுத்தி வருகிறது. இதனால் கோவை குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், கனமழையின் காரணமாக ஒரு சில நாட்களில் விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கோவை மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால், வால்பாறை தாலுகாவில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை ஒருநாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். Source link

டீசல் டேங்க்கில் கசிவு? நடு ரோட்டில் திடீரென தீப்பற்றி எரிந்த சரக்கு வாகனம்..டி.வி., பிரிட்ஜ், ஏசி சேதம்..!

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே டி.வி., பிரிட்ஜ், ஏசி உள்ளிட்ட பொருட்களை ஏற்றிச் சென்ற சரக்கு வாகனம் சாலையில் சென்றுக் கொண்டிருந்த போதே திடீரென தீப்பற்றி எரிந்தது. பொன்னாக்குடியில் இருந்து நாங்குநேரி நோக்கிச் சென்ற சரக்கு வாகனம், நான்கு வழிச்சாலையில் வந்த போது பின் பகுதியில் திடீரென தீப்பற்றியதாக கூறப்படுகிறது. பின்னால் வந்த வாகன ஓட்டிகள் எச்சரிக்கை விடுத்ததால், சரக்கு வாகன ஓட்டுநர் உடனடியாக கீழே இறங்கி உயிர்தப்பிய நிலையில், வாகனத்தில் இருந்த டி.வி., பிரிட்ஜ் உள்ளிட்டவை … Read more

கே.பி.முனுசாமிக்கு குவாரி? – அமைச்சர் துரைமுருகன் விளக்கம்

கோவை: “கடந்த மாதம் 20 குவாரிகள் ஒப்பந்தப்புள்ளி மூலம் விட்டோம். அதில் அதிக தொகை ஒப்பந்தம் கோரி ஒன்றை கே.பி.முனுசாமி எடுத்துள்ளார்” என்று அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார். கீழ்பவானியில் உள்ள விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கோவையில் இன்று (ஜூலை 14) ஆலோசனை நடத்தினர். மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைகள் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். … Read more

அரசு பங்களாவில் அதிமுக அலுவலகம் நடத்தி வருவதாக ஈபிஎஸ்மீது புகார்-தலைமை செயலாளருக்கு கடிதம்

எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தங்கியுள்ள அரசு பங்களாவில் அதிமுகவின் எம்எல்ஏகள் கூட்டம் நடத்த அனுமதிக்க கூடாது என முன்னாள் முதலமைச்சர் பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர் கோவை செல்வராஜ் தமிழக தலைமைச்செயலாளர் கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் வரும் 17-ம் தேதி கிரீன்வேஸ் சாலையில் உள்ள அரசு பங்களாவில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறப் போவதாக ஊடகங்களிலும் செய்தி வெளியாக இருப்பதை கோவை செல்வராஜ் சுட்டிக்காட்டியிருக்கிறார். எதிர்க்கட்சித் தலைவராகவே அந்த பங்களாவிலிருந்து செயல்பட வேண்டிய … Read more

நடிகை நீது சந்திராவிடம் பேரம் பேசிய தொழில் அதிபர்: ‘மனைவியாக வாழ மாதம் ரூ25 லட்சம் சம்பளம்’

நடிகை நீது சந்திரா சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில், “தனக்கு சினிமாவில் வேலை இல்லாததால், பெரிய தொழிலதிபர் ஒருவர் மாதம் ரூ.25 லட்சம் சம்பளத்துக்கு மனைவியாக இருக்க முடியுமா என்று கேட்டு பேரம் பேசினார்” என்ற அதிர்ச்சித் தகவலை தெரிவித்துள்ளார். ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் என பிஸியாக இருந்த நடிகை நீது சந்திராவுக்கு சினிமாவில் வாய்ப்பு குறைந்ததால் அவர் திரையில் தோன்றுவது குறைந்தது. பின்னர், பட வாய்ப்புகளே இல்லாமல் போனது. நடிகை நீது சந்திரா, நேர்காணல் ஒன்றில் … Read more

அதிமுக அலுவலக வன்முறை: அறிக்கை தாக்கல் செய்ய போலீஸுக்கு ஐகோர்ட் உத்தரவு – முத்தரப்பு வாதங்கள் என்னென்ன?

சென்னை: கடந்த ஜூலை 11-ம் தேதியன்று, அதிமுக தலைமை அலுவலகம் முன் நடந்த சம்பவங்கள் குறித்து நாளை (ஜூலை 15) விரிவான அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒற்றைத் தலைமை பிரச்சினையால் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 11-ம் தேதி ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால், சட்டம்-ஒழுங்கு பிரச்சினையைக் காரணம் காட்டி அதிமுக தலைமை அலுவலகத்தை பூட்டி, வருவாய் கோட்டாட்சியர் சீல் வைத்துள்ளார். … Read more

44-வது செஸ் ஒலிம்பியாட் துவக்க விழாவிற்கான பணிகள் தீவிரம் – அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு

28-ம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ள 44 வது செஸ் ஒலிம்பியாட் துவக்க விழா, ஏற்பாடுகள் பற்றி நேரு உள்விளையாட்டு அரங்கில், விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மெய்யநாதன், ஜூலை மாதம் 28-ம் தேதி , 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான தொடக்க விழா நடைபெற உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கினை ஆய்வு மேற்கொண்டேன். நேரு உள் விளையாட்டு அரங்கின் பராமரிப்பு … Read more

#திருச்சி || தனியார் பள்ளி வேன் மீது மோதிய கார்.. ஒருவர் பலி..!

தனியார் பள்ளி வேன் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம், துறையூரில் தனியார் பள்ளியின் வேன் ஒன்று பெரம்பலூர்-துறையூர் சாலையில் அம்மாபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே மாணவ-மாணவிகளை ஏற்றுவதற்காக சாலையோரத்தில் நின்று கொண்டிருந்தது.  அப்போது,  அந்த சாலையில் வந்த கார் ஒன்று ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்து சாலையில் உள்ள மின்கம்பத்தில் மோதியது. அதன் பின், அந்த காரின் பின்பக்கம் பள்ளி வேனின் இடது பக்கம் மோதி விபத்துக்கு உள்ளானது. … Read more