சுருக்கு வைத்து மாடுகளை பிடித்துச் செல்லும் கொள்ளை கும்பல் – அதிர்ச்சியில் விவசாயி!

சேலம் அருகே காட்டுக்குள் சுருக்கு வைத்து  கொள்ளை கும்பல் மாடுகளை பிடித்துச் செல்லும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில்  புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்க போலீசார் அலட்சியம் காட்டுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி, குரால்நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் பெரியண்ணன் (49). இவர் அப்பகுதியில் உள்ள சுகந்தி என்பவரின் தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருவதோடு 20க்கும் மேற்பட்ட நாட்டு மாடுகள் வளர்த்து வருகிறார். இந்நிலையில், தினந்தோறும் மாடுகளை அருகில் உள்ள … Read more

பாஜக-வில் இணையும் ரஜினி ரசிகர்கள்!

எஸ்.இர்ஷாத் அஹமது, தஞ்சாவூர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் தஞ்சையில் நாளை நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பாஜகவில் இணைகின்றனர். இதுகுறித்து தஞ்சை மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற செயலாளர் ரஜினி.கணேசன் கூறியதாவது:தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் ரஜினி ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த 14 ஒன்றியங்கள், இரண்டு மாநகரங்கள், ஒரு நகரம் ஆகியவற்றைச் சேர்ந்த ரசிகர்கள்; 1000-1500 பேர் பாஜகவில் இணைகிறார்கள்.அதேபோல பெரம்பலூர் மாவட்ட செயலாளர் … Read more

அதிமுகவில் ஒற்றை தலைமை… ஆலோசனை கூட்டத்தில் நடந்தது என்ன? 

அ.தி.மு.க. தொண்டர்கள், நிர்வாகிகள் எதிர்பார்ப்பது ஒற்றை தலைமையே என்றும், அதுகுறித்து இன்றைய ஆலோசனை கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டதாகவும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்துள்ள. அதிமுக பொதுக்குழு கூட்டம் வரும் 23ம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு இன்று சென்னை: ராயப்பேட்டை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற அ.தி.மு.க. நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். … Read more

நாட்டிலேயே முதல் முறையாக.. முதல் பயணத்தில்.. முதல் தனியார் ரயில்

நாட்டிலேயே முதல் முறையாக தனியாரால் இயக்கப்படும் ரயில் கோவையில் இருந்து சீரடிக்கு பயணத்தை தொடங்கியது. திருப்பூர், ஈரோடு,சேலம், பெங்களூரு, மந்திராலயம் வழியாக செல்லும் ரயிலில் 1,500 பேர் பயணிக்கின்றனர். மத்திய அரசின் ‘பாரத் கௌரவ்’ திட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள 5 நகரங்களில் இருந்து ஷீரடிக்கு தனியார் ரயில்களை இயக்க மத்திய அரசு முடிவு செய்தது. அதன் ஒரு பகுதியாகக் கோவையில் இருந்து ஷீரடிக்கு இன்று முதல் ரயில் சேவை இயக்கப்படுகிறது. கோவையைச் சேர்ந்த எம் என் … Read more

300-ஐ கடந்த பாதிப்பு | தமிழகத்தில் புதிதாக 332 பேருக்கு கரோனா

சென்னை: தமிழகத்தில் இன்று ஆண்கள் 194, பெண்கள் 138 என மொத்தம் 332 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக சென்னையில் 171 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 34 லட்சத்து 57,969 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 34 லட்சத்து 18,312 பேர் குணமடைந்துள்ளனர். இன்று மட்டும் 153பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர். தமிழகம் முழுவதும் 1,632 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று உயிரிழப்பு இல்லை. தமிழகத்தில் நேற்று கரோனா தொற்று பாதிப்பு … Read more

கொடைக்கானல்: காலி மது பாட்டில்களை ரூ.10க்கு திரும்பப் பெறும் திட்டம் நாளை முதல் அமல்

கொடைக்கானல் மலைப்பகுதிகளில் காலி மது பாட்டில்களை பத்து ரூபாய்க்கு திரும்பப்பெறும் திட்டம் நாளை முதல் அமல்படுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள மலைப் பிரதேசங்களில், மது பாட்டில்களை வனப்பகுதிக்குள் தூக்கி வீசுவதால் பல்லுயிர் சூழலுக்கு கேடு விளைவதாக, தொடுக்கப்பட்ட வழக்கின் அடிப்படையில் உயர்நீதி மன்றம், அதனை தடுக்க என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள் என அரசுக்கு கேள்வி எழுப்பியது. அதனை அடுத்து இன்று திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், மற்றும் ஆத்தூர் தாலுகாவில் உள்ள சில மலை … Read more

அ.தி.மு.க-வில் ஒற்றைத் தலைமை: பெரும்பான்மை நிர்வாகிகள் ஆதரவு என ஜெயக்குமார் பேட்டி

அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அதிமுகவின் ஒற்றைத் தலைமை குறித்து விவாதிக்கப்பட்டது என்றும் பெரும்பான்மை நிர்வாகிகள் ஒற்றைத் தலைமைக்கு ஆதரவு தெரிவித்தனர் என்றும் அதிமுக மூத்த தலைவர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இதனால், ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் இருவரில் அதிமுகவின் ஒற்றைத் தலைமை யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சரும் மூத்த தலைவருமான ஜெயக்குமார், “அதிமுகவின் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், ஒற்றைத் தலைமை குறித்து விவாதிக்கப்பட்டது. அந்த … Read more

விருந்துக்கு வரச்சொல்லி, அரிவாளால் வெட்டிக் கொலை செய்தது வேதனையளிக்கிறது – கமல்ஹாசன்.!

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அடுத்த சோழபுரம் அருகே உள்ளது துளுக்கவெளி. இந்த கிராமத்தை சேர்ந்த பட்டியில் இன வகுப்பை சேர்ந்தவர் என்று சொல்லப்படும் சரண்யா (24 வயது) என்பவரும், திருவண்ணாமலை மாவட்டம் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மோகன் (31 வயது) என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.  காதல் விவகாரம் சரண்யா வீட்டில் தெரிய வரவே, காதலன் மாற்று சமூகம் என்பதால் அவரின் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், சரண்யாவின் சகோதரரான சக்திவேல் தனது மைத்துனர் ரஞ்சித் என்பவருக்கு … Read more

படப்பிடிப்புகளை ரத்து செய்துவிட்டு 12 நாட்களாக அமெரிக்காவில் உள்ள சிம்பு.. அவரை பெற்றதில் தான் பெருமையடைவதாக டி.ராஜேந்திர் கண்ணீர் மல்க பேட்டி..

தனது சிகிச்சை தொடர்பாக மகன் சிம்பு, படப்பிடிப்புகளை ரத்து செய்துவிட்டு 12 நாட்களாக அமெரிக்காவில் தங்கியிருப்பதாகவும், அவரை பெற்றதில் தான் பெருமையடைவதாகவும் இயக்குனர் டி.ராஜேந்திர் கண்ணீர் மல்க தெரிவித்தார். உயர் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லும் முன் சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்த அவர், தான் மேல் சிகிச்சைக்கு வெளிநாடு செல்ல மகன் சிம்பு தான் காரணம் என்றும் தன்னைப் பற்றி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் கூறினார். வயிற்றுப் பகுதியில் ரத்த கசிவு ஏற்பட்டதால் சென்னை … Read more

குமாரபாளையத்தில் 10 சிறு சாயப்பட்டறைகள் இடித்து அகற்றம்: வாழ்வாதாரத்தை முன்வைத்து கடும் வாக்குவாதம்

நாமக்கல்: குமாரபாளையத்தில் அனுமதியின்றி செயல்பட்ட 10 சிறு சாயப்பட்டறைகளை நாமக்கல் மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் உத்திரவின் பேரில் இடித்து அகற்றப்பட்டன. அப்போது சாயப்பட்டறை உரிமையாளர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. குமாரபாளையத்தில் விசைத்தறி தொழில் பிரதானமாக மேற்கொள்ளப்படுகிறது. இதை மையப்படுத்தி அங்கு ஏராளமான சாயப்பட்டறைகள் இயங்கி வருகின்றன. அவற்றில் சில சாயப்பட்டறைகள் உரிய அனுமதியின்றி இயங்கி வருகின்றன. அவை சாயக்கழிவு நீரை சுத்திகரிப்பு செய்யாமல் நள்ளிரவு மற்றும் அதிகாலை வேளைகளில் காவிரி ஆற்றில் நேரடியாக … Read more