#BigBreaking || தமிழக சாதாரண கட்டண பேருந்து ஓட்டுனர், நடத்துனர்களுக்கு இரட்டிப்பு வசூல் படி – தமிழக அரசு அறிவிப்பு.!

தமிழக அரசு போக்குவரத்து கழக ஓட்டுனர் ஓட்டுனர்கள், நடத்துனர்களுக்கு வழங்கப்பட்டு வரும் வசூல் படி, இரட்டிப்பாக வழங்கப்படும் என்று, தமிழக அரசு சற்றுமுன்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சாதாரண கட்டண பேருந்துகளில் பணியாற்றும் ஓட்டுனர், நடத்துனர்களுக்கு, இப்போது வழங்கப்படும் வசூல் படி இரட்டிப்பாக வழங்கப்படும் என்றும், தமிழக அரசு அறிவிப்பில் தெரிவித்துள்ளது. மகளிருக்கு இலவச பேருந்து பயணம் செய்ய அனுமதி வழங்கியதன் காரணமாக, தற்போது வசூல் படியை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. Source link

இருசக்கர வாகனத்திற்கு தவணை செலுத்தாததால் நிதி நிறுவன ஊழியர் திட்டியதால் இளைஞர் தற்கொலை.!

விழுப்புரத்தில் இருசக்கர வாகனத்திற்கு தவணை செலுத்தாததால், தனியார் நிதி நிறுவன ஊழியர் தகாத வார்த்தைகளால் திட்டியதால், இளைஞர் தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வானகார குப்புசாமி வீதியை சேர்ந்த ரவிக்குமார் என்ற இளைஞர், தனியார் நிதி நிறுவனம் மூலம் மாதத் தவணையில் இருசக்கர வாகனம் வாங்கிய நிலையில், கடந்த 3 மாதங்களாக இ.எம்.ஐ கட்டவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ரவிக்குமாரின் வீட்டிற்கு சென்ற நிதி நிறுவன ஊழியர், அவரை தகாத வார்த்தைகளால் திட்டியதால் … Read more

டெங்கு அலர்ட்: மாநிலம் முழுவதும் மருத்துவ முகாம்களை நடத்த பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தல் 

சென்னை: டெங்கு காய்ச்சல் பாதிப்பு அடுத்து வரும் மாதங்களில் அதிகரிக்க வாய்ப்புள்ள நிலையில், மாநிலம் முழுவதும் மருத்துவ முகாம்களை நடத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் இந்தாண்டு மே மாதம் வரை 2,548 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருபுறம் கரோனா தொற்றும், மற்றொரு புறம் டெங்கு காய்ச்சல் பாதிப்பும் அதிகரித்து வருவதால் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வதில் சுகாதாரத் துறைக்கு பெரும் சவால் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மாவட்ட சுகாதார துணை இயக்குநர்களுக்கு பொது சுகாதாரத் … Read more

வழியில் ஏற்பட்ட நெஞ்சுவலி – காவல்நிலையத்தில் தஞ்சமடைந்த ஓட்டுநரை காப்பாற்றிய போலீசார்

நெஞ்சு வலி காரணமாக காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த ஆட்டோ ஓட்டுனரின் உயிரை அடையாறு போக்குவரத்து காவல்துறையினர் காப்பாற்றியுள்ளனர். சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (53). கடந்த 25 வருடங்களாக ஆட்டோ ஓட்டி வருகிறார். நேற்று முன்தினம் கொடுங்கையூரில் இருந்து திருவான்மியூருக்கு பயணியை ஏற்றிச்சென்று அவரது வீட்டில் விட்டுள்ளார். அப்போதே அவருக்கு லேசான நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இருப்பினும் சமாளித்து விடலாம் என நினைத்து திருவான்மியூரில் இருந்து ஆட்டோவை எடுத்துக்கொண்டு புறப்பட்டிருக்கிறார். ஆனால் ஒரு கட்டத்தில் நெஞ்சு வலி தாங்க … Read more

ஓ.பி.எஸ் பராக்… தொண்டர்கள் மனநிலை அறிய மதுரை பயணம்!

அதிமுகவில் ஒற்றைத் தலைமையாக இ.பி.எஸ் உறுதியான திட்டத்துடன் செயல்பட்டு வருவதால், ஓ.பி.எஸ் வியூகங்களை வகுக்க தொண்டர்களின் மனநிலையை அறிய மதுரை பயணம் செய்துள்ளார். அதிமுகவில் ஒற்றைத் தலைமை பேச்சால் ஜூன் 14 முதல் பெரும் சூறாவளியே வீசி வருகிறது. பொதுக்குழு பெரும் களேபரமாக நடந்தது. ஒற்றைத் தலைமை விவகாரத்தில், ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் இடையேயான மோதல் ஒவ்வொரு நாளும் உச்ச கட்டத்தை அடைந்து வருகிறது. ஒற்றைத் தலைமை விவகாரத்தில் இ.பி.எஸ்-ன் கைகளே ஓங்கி இருக்கிறது. அதிமுக பொதுக்குழு … Read more

#BigBreaking || அதிமுகவை எடப்பாடி கைப்பற்றுவதை தடுக்க.., உட்சபட்ச ஆயுதத்தை கையில் எடுத்த ஓபிஎஸ்.!

அதிமுக பொதுக்குழு கூட்டம் பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே கடந்த 23 ஆம் தேதி நடைபெற்றது. வந்த கூட்டத்தில் பன்னீர்செல்வத்துக்கு எதிராகவும், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் கோஷங்களை உறுப்பினர்கள் எழுப்பினர். மேலும், எடப்பாடி பழனிசாமி பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது. பொதுக்குழுவில் நிறைவேற்ற கொண்டுவரப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் நிராகரிக்கப்படுவதாக அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி அறிவித்தார். அதேசமயம் தற்காலிக அவைத் தலைவராக இருந்த தமிழ்மகன் உசேன், பொதுக்குழுவின் மூலம் நிரந்தர அவை தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.  மேலும், பொதுக்குழு … Read more

ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொட்டாஷ் உரம் தனியார் கிடங்கில் பதுக்கல் -பறிமுதல் செய்த காவல்துறை!

தூத்துக்குடியில் ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 50 இலட்ச ரூபாய் மதிப்புள்ள பொட்டாஷ் உரத்தைத் தனியார் கிடங்கில் பதுக்கியதைக் கண்டறிந்த காவல்துறையினர் அதைப் பறிமுதல் செய்து, கடத்தல்காரர்களைத் தேடி வருகின்றனர்.  இந்தியன் பொட்டாஷ் நிறுவனத்திற்குக் கப்பலில் வந்த உரத்தை பிஎஸ்டிஎஸ் நிறுவனத்தின் லாரிகளில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டது. மத்திய அரசின் கிடங்குக்கு உரத்தைக் கொண்டு செல்லாமல் மறவன்மடம் அருகில் உள்ள தனியார் கிடங்கில் பதுக்கியுள்ளதாகக் காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்துப் புதுக்கோட்டைக் காவல்துறையினர் தனியார் கிடங்கில் இருந்த … Read more

மரம் விழுந்து பெண் பலி | முறைமன்ற நடுவம் அறிவுரை, அமைச்சர் உத்தரவை அலட்சியப்படுத்தியதா சென்னை மாநகராட்சி?

சென்னை: மரக்கிளைகளை அகற்றுவது தொடர்பாக உள்ளாட்சி அமைப்பு முறைமன்ற நடுவம் மற்றும் அமைச்சர் சேகர்பாபு ஆகியோரின் உத்தரவுகளை சென்னை மாநகராட்சி அலட்சியப்படுத்தியாதா என்ற கேள்வி எழுந்துள்ளது. சென்னை கேகே நகரில் சில நாட்களுக்கு முன்பு சாலையில் சென்று கொண்டிருந்த கார் மீது மரம் முறிந்து விழுந்து பெண் வங்கி மேலாளர் உயிரிழந்தார். மழை நீர் வடிகால் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டபோது, அதில் மண் சரிவு ஏற்பட்டு, மரம் சாய்ந்து, காரில் விழுந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக … Read more

முக்குலத்தோர் சமுதாயத்திற்கு ஒரு நன்மையும் செய்யாதவர் ஓ.பி.எஸ்: திருச்சி குமார் பேட்டி

ADMK Pa Kumar says OPS not doing anything to Mukkulathor community: சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் இ.பி.எஸ் தலைமையில் அ.தி.மு.க தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற அதேவேளையில், திருச்சியில் இ.பி.எஸ் தீவிர ஆதரவாளரும், திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் தமது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் சுயநலத்திற்காக சாதியை பயன்படுத்துகிறார் ஓ.பன்னீர்செல்வம் என்று கூறினார். “ஓபிஎஸ் தனது சுயநலத்திற்காக சாதியை ஒரு … Read more

இவர்களுக்கெல்லாம் 1000 ரூபாய் கிடையாது – தகுதியை வெளியிட்ட தமிழக அரசு.! 

அரசு பள்ளியில் படித்த மாணவியருக்கான ரூ.1000 உயர் கல்வி உதவித் தொகை பெறுவதற்கான தகுதிகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 2022-2023ம் கல்வியாண்டில், மாணவியர்கள் புதிதாக மேற்படிப்பில் முதலாம் ஆண்டு சேர்ந்த பின்னர், இணையதளம் வழியாக இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். தகுதி : 6ம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்து தமிழ்நாட்டில் உயர்கல்வி பயில்பவராக இருத்தல் வேண்டும். தனியார்ப் பள்ளியில் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை … Read more