அயோத்தி மத்தியஸ்தரின் பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டது ஏன்? பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

அயோத்தி ராமர் கோயில் நிலம் தொடர்பான வழக்கில் மத்தியஸ்தராக செயல்பட்ட உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சுவுக்கு வழங்கப்பட்ட இசட் பிரிவு பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அயோத்தியில் ராமர் கோயில் இடம் தொடர்பான வழக்கில் தீர்வு காண்பதற்கான மத்தியஸ்தக் குழுவில் உச்ச நீதிமன்றத்தால் 2019-ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டவர் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு. அப்போது அவருக்கு இசட் பிரிவு … Read more

தி.மு.க உட்கட்சி தேர்தலில் முறைகேடு; ஸ்டாலின், துரைமுருகனுக்கு ஆலங்குளம் நீதிமன்றம் நோட்டீஸ்

Tenkasi court issues notice to Stalin for malpractices in DMK intra party election: தென்காசி மாவட்ட தி.மு.க உட்கட்சி தேர்தலில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் பொதுச்செயலாளர் துரைமுருகன் ஆகியோருக்கு ஆலங்குளம் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தமிழகம் முழுவதும் தி.மு.க உட்கட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில், தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பதவிக்கான தேர்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிலையில், இந்த தேர்தலில் … Read more

பள்ளி மாணவ – மாணவிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடி உத்தரவு.!

கோடை விடுமுறைக்கு பின்பு ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கு நேற்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது. 2022 – 2023 ஆம் ஆண்டுக்கான நேரடி வகுப்புகள் நேற்று முதல் ஆரம்பமாகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு வழக்கமாக தொடங்கப்படும் ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. 1-12ம் வகுப்பு வரை முழு பாடங்களையும் நடத்த வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா காரணமாக 2 ஆண்டுகளாக பாடங்கள் குறைந்து … Read more

சுரங்கத் தொழிலாளர்களின் சமூக வாழ்வை துல்லியமாக பிரதிபலித்தவர் சின்னப்பபாரதி: முத்தரசன் புகழஞ்சலி

சென்னை: சுரங்கத் தொழிலாளர்களின் சமூக வாழ்வை துல்லியமாக பிரதிபலித்தவர் சின்னப்பபாரதி என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் புகழஞ்சலி செலுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் கூறியுள்ளதாவது: ”இலக்கிய உலகின் முன்னணி படைப்பாளி கு.சின்னப்பபாரதி (87) காலமானார் என்ற துயரச் செய்தி கேட்டு வேதனையுற்றோம். நாமக்கல் மாவட்டம், பரமத்தியில் விவசாயக் குடும்பத்தில் பிறந்த சின்னப்பாரதி சமூக சீர்திருத்தங்களில் முனைப்புக் காட்டியவர். பகுத்தறிவு சார்ந்த அறிவியல் கருத்துக்களை முன்னெடுத்து வந்தவர். மாணவப் பருவத்தில் … Read more

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு – முக்கிய சாலையில் போக்குவரத்து மாற்றம்: ஏன் எதற்கு?

மவுண்ட் ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து மாற்றத்தை அறிவித்துள்ளது சென்னை போக்குவரத்து காவல்துறை. சென்னை மவுண்ட் பாலாஜி மருத்துவமனை அருகில் ஜி.எஸ்.டி சாலை, உள்செல்லும் சாலையில் பின்னர் வெளி செல்லும் சாலையிலும் போக்குவரத்து மாற்றம். இந்த இடங்களில் நெடுஞ்சாலை துறையினரால் நிரந்தர மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற இருப்பதால் வாகன போக்குவரத்தை மாற்றுப் பாதையில் செல்லும் படி சோதனை அடிப்படையில் 14.06.2022 மற்றும் 15.06.2022 ஆகிய இரு நாட்களும் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 … Read more

தமிழ்நாடு, புதுச்சேரிக்கு விமானம் மற்றும் படகு சேவை; இலங்கை ஒப்புதல்

Nirupama Subramanian  Sri Lanka clears projects linking Jaffna with Tamil Nadu, Puducherry: பிரதமர் நரேந்திர மோடியின் உத்தரவின் பேரில், இலங்கையின் வடமேற்கில் காற்றாலை ஆற்றல் திட்டத்திற்கான அதானி குழுமத்தின் முன்மொழிவை இலங்கை முன்வைத்ததாக குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எதிரொலித்த ஒரு நாளில், இலங்கை அமைச்சரவை நீண்டகாலமாக நிலுவையில் இருந்த இரண்டு இணைப்புத் திட்டங்களுக்கு பச்சைக்கொடி காட்டியது. யாழ்ப்பாணத்திலிருந்து தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளிக்கு விமான சேவை, மற்றும் யாழ்ப்பாணத்தில் காங்கேசன்துறையிலிருந்து புதுச்சேரியில் காரைக்காலுக்கு ஒரு படகு சேவை. … Read more

திடீர் திருப்பமா? அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் இருந்து வெளியேறிய முக்கிய புள்ளி.! காரணம் என்ன? பரபரப்பு தகவல்.!

ஜூன் 23 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளதாக அதிமுக தலைமைகள் ஓபிஎஸ், ஈபிஎஸ் அறிவித்துள்ளனர். இதுகுறித்து அதிமுகவின் தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் 23.6.2022 – வியாழக் கிழமை காலை 10 மணிக்கு, சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில், அவைத் தலைவர் டாக்டர் அ. தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெற உள்ளது” என்று … Read more

கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த 2 கார்கள் மீது மோதிய கார்.. படுகாயமடைந்து, 8 பேர் மருத்துவமனையில் அனுமதி..!

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே வேகமாக வந்த கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த இரண்டு கார்கள் மீது மோதி ஏற்பட்ட விபத்தில் 8 பேர் படுகாயம் அடைந்த நிலையில், விபத்து குறித்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. திண்டுக்கல்லில் இருந்து மதுரை நோக்கி சென்ற கார் ஒன்று, பள்ளப்பட்டி மாவூர் அணை பிரிவு பகுதியில் சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பில் மோதி, சாலையின் மற்றோரு பாதைக்கு சென்றது. அப்போது எதிரே வந்த இரண்டு … Read more

குடியரசுத் தலைவர் தேர்தல் | எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக கிறிஸ்தவரை நிறுத்திடுக: திருமாவளவன்

சென்னை: “இந்திய சுதந்திரத்தின் பவள விழா கொண்டாடப்பட இருக்கும் இந்நேரத்தில் கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவது இந்திய ஜனநாயகத்தின் மாண்பை உலகுக்கு உணர்த்துவதாக அமையும்” என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “எதிர்வரும் ஜூலை 18-ம் தேதி நடைபெற உள்ள குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக கிறிஸ்தவர் ஒருவரை நிறுத்த வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம். … Read more

'இந்த இளைஞர் என்ன ஃபாலோ பண்றாரு!' – போலீஸில் புகார் தந்த பிக் பாஸ் பிரபலம்

“பிக் பாஸ்” நிகழ்ச்சியில் பிரபலமான மற்றும் ஆர் ஜே வுமான வைஷ்ணவி, வாலிபர் ஒருவர் பின் தொடர்ந்து தொந்தரவு செய்வதாக வீடியோ ஆதாரங்களுடன் சமூகவலைதளத்தில் புகார் அளித்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய “பிக் பாஸ்” நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்றவர் வைஷ்ணவி. இவர் ரேடியோ ஜாக்கி ஆகவும் பிரபலமானவர். நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவரைப் பற்றி பரபரப்பு புகார் அளித்துள்ளார். அதில் இருசக்கர வாகனத்தில் … Read more