தனியார் நிறுவன மேலாளரின் வீட்டுப் பூட்டை உடைத்து திருட்டு… 80 சவரன் தங்க நகைகள் கொள்ளை

கன்னியாகுமரி மாவட்டம் வடலிவிளையில் தனியார் நிறுவன மேலாளரின் வீட்டில் 80 சவரன் தங்க நகைகளை திருடிச் சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். மேலாளர் ஆண்டேஸ்வரன் தன் மனைவி மற்றும் இளைய மகன் ஆகியோருடன், சென்னையில் தங்கி படிக்கும் மூத்த மகனை காணச் சென்ற நிலையில் நகை கொள்ளை போனது தெரிய வந்தது. நகையுடன் சேர்த்து சிசிடிவி காட்சிகள் பதிவாகும் டி.வி.ஆரையும் கொள்ளையர்கள் திருடிச் சென்றதால் கைரேகை உள்ளிட்டவைகளை சேகரித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். Source link

11-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் | 90.07% தேர்ச்சி; மாணவிகள் 94.99%, மாணவர்கள் 84.86% தேர்ச்சி

சென்னை: தமிழகத்தில் 11-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (ஜூன் 27) வெளியானது. இதில், மாணவர்கள் 84.86 சதவீதம், மாணவிகள் 94.99 சதவீதம் என மொத்தம், 90.07 சதவீதம் தேர்ச்சிப் பெற்றுள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த மே 10-ம் தேதி தொடங்கி, மே 31-ம் தேதி வரை 11-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடந்தன. இந்த தேர்வை 4 லட்சத்து 33 ஆயிரத்து 319 மாணவிகள், 4 … Read more

சமூக நீதியை ஸ்டாலின் கடைபிடித்தால் பாஜக ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிக்க வேண்டும்: அண்ணாமலை

சமூக நீதியை உண்மையாக கடைபிடிப்பவராக மு.க.ஸ்டாலின் இருந்தால், பாஜக ஜனாதிபதி வேட்பாளரான திரவுபதி முர்முவை அவர் ஆதரிக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பாஜகவின் 8 ஆண்டுகால ஆட்சியின்  சாதனைகளை விளக்கும் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய இணையமைச்சர்  எல் . முருகன், பாஜக தலைவர்கள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் அண்ணாமலை பேசுகையில், ‘வாஜ்பாய் பிரதமாராக இருந்தபோது, இஸ்லாமிய மதத்தை சேர்ந்த அப்துல் கலாமை ஜனாதிபதி ஆக்கினார். அவரை இரண்டாவது … Read more

பொருளாளர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்க முடிவு.? அதிர்ச்சியில் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள்.!!

அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் எடப்பாடிபழனிசாமி தலைமையில் தொடங்கியது.  ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை காலாவதி ஆகி விட்டதாக எடப்பாடிபழனிசாமி தரப்பு கூறிவரும் நிலையில், தலைமை நிலைய செயலாளர் என்ற பெயரில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த பதவியை வகிக்கும் எடப்பாடி பழனிசாமியின் பெயரை குறிப்பிடாமல் அறிக்கை வெளியிடப்பட்டது அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.  சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் வருகை; செங்கோட்டையன், ஆர்.பி.உதயகுமார், செம்மலை, தம்பிதுரை உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் … Read more

தற்கொலை செய்ய 100அடி பள்ளத்தில் சொகுசு காருடன் விழுந்த நபர்.. கார் மரத்தில் மோதியதால் காயங்களுடன் மீட்பு..!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் – பழனி பிரதான மலைச்சாலையில் தற்கொலை செய்வதற்காக சொகுசு காருடன் 100அடி பள்ளத்தில் விழுந்தவர் காயங்களுடன் உயிர்தப்பினார். புல்லூர் எஸ்டேட் அருகே 100 அடி பள்ளத்தில் சொகுசு கார் ஒன்று விழுந்து கிடப்பதாக வந்த தகவலை அடுத்து 108 ஆம்புலென்ஸ் பணியாளர்கள் அங்கு விரைந்து வந்து காரில் இருந்த நபரை மீட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுதொடர்பாக கொடைக்கானல் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அந்த நபர் தஞ்சாவூரைச் சேர்ந்த அன்பரசன் என்பதும் … Read more

அதிமுக தொண்டர்கள் என் பக்கமே உள்ளனர்: ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி

மதுரை: அதிமுக தொண்டர்கள் என் பக்கம்இருக்கின்றனர் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். ஒற்றைத் தலைமை பிரச்சினையால் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோருக்கு இடையேயான மோதல் முற்றியுள்ளது. இப்பிரச்சினையால் அதிமுக இரண்டாக பிரிந்து செயல்படும் சூழல் உருவாகி உள்ளது. இந்நிலையில், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், சென்னையில் இருந்து விமானத்தில் நேற்றுபிற்பகல் மதுரை வந்தார். விமானநிலையத்தில் அவருக்கு ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்தஏராளமான நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டு … Read more

சின்னவர் என்று என்னை அழையுங்கள்: உதயநிதி ஸ்டாலின்

திமுக தொண்டர்கள் கோஷம்போடும்போது தன்னை மூன்றாம் கலைஞர், இளம் தலைவர் என்று அழைப்பதில் தனக்கு துளிகூட விருப்பமில்லை, சின்னவர் என்று அழைக்கிறார்கள். அதனால், சின்னவர் என்றே அழையுங்கள் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ-வுமான உதயநிதிக்கு அமைச்சர் பதவி அளிக்க வேண்டும் என்று சீனியர் அமைச்சர்கள் பலரும் தங்கள் விருப்பங்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், புதுக்கோட்டை வடக்கு, தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் உசிலங்குளம் தடி கொண்ட … Read more

ஒற்றைத் தலைமை விவகாரம்.. இபிஎஸ் தனது இல்லத்தில் ஆலோசனை.!!

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்து வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி அணியினர் அதிமுகவிலிருந்து பன்னீர்செல்வத்தை புறக்கணிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  அதிமுக கழக நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெறுவதாக அறிவித்துள்ளனர். இதுகுறித்து, அதிமுக தலைமை கழகம் என்ற பெயரில் அதிமுக தலைமை நிலைய செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, 27ஆம் தேதி திங்கள்கிழமை (இன்று) காலை 10 மணிக்கு தலைமை அலுவலகத்தில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் கூட்ட … Read more

ஸ்கேட்டிங் மூலம் பரதம் ஆடும் பள்ளி மாணவி.. பரதக்கலை குறித்து விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த முயற்சி..!

காஞ்சிபுரத்தில் பள்ளி மாணவி ஒருவர் ஸ்கேட்டிங் விளையாட்டு மூலம் பரதக்கலை குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தி வருகிறார். மாமல்லன் நகரைச் சேர்ந்த ரகுபதி- நித்தியா தம்பதியினரின் மகள் தனுஷ்யா அங்குள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். பரதக்கலையை நன்கு பயின்றுள்ள இவர் தற்போது ஸ்கேட்டிங் உபகரணங்கள் அணிந்து நடனமாடி வருவது பலரின் பாராட்டுக்களை பெற்றுள்ளது. Source link

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை இன்று கூடுகிறது: ஆன்லைன் ரம்மி தடை குறித்து ஆலோசித்து முடிவு

சென்னை: தமிழக அமைச்சரவைக் கூட்டம், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடக்கிறது. இதில், புதிய தொழில் திட்டங்களுக்கு அனுமதி அளித்தல், ஆன்லைன் ரம்மிதடைக்கான அவசரச் சட்டம் கொண்டுவருதல், செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்கான சட்டம் கடந்த ஆட்சியில் அமல்படுத்தப்பட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அரசின் தடை சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டது. இந்நிலையில், ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளில் … Read more