தமிழக அரசு டெண்டர் ஆவணங்களை இனி எங்கும் தேட வேண்டாம்: மொத்தமாக காட்சிப் படுத்தும் அறப்போர் இயக்கம்

லஞ்சம், ஊழலுக்கு எதிராக செயல்பட்டு வரும் அறப்போர் இயக்கம் ஒரு புதிய முயற்சியாக, தமிழ்நாடு அரசின் 60க்கும் மேற்பட்ட துறைகளில் வெளியிடப்பட்ட 36,000 டெண்டர்களைப் பற்றிய ஆவணங்களை சேகரித்து இணையதளத்தையும் ‘ஆப்’பையும் வெளியிட்டுள்ளது. இதன் மூலம், டெண்டர் பணிகள் முறையாக நடைபெறுகிறதா என்று கண்காணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மாநகராட்சியில் பல கோடி ரூபாய்க்கான டெண்டர் ஒப்பந்தங்களை தனது உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களுக்கு சட்டவிரோதமாக வழங்கி முறைகேடு செய்துள்ளதாக அறப்போர் இயக்கம்தான் … Read more

இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் உயர்வு.!

தமிழகத்தின் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்துள்ளது. தொழில்துறை தேக்கத்தை தொடர்ந்து உலகம் முழுவதும்  முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு பக்கம் திரும்பினர். பங்கு சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தின் முதலீடு செய்து வருகின்றனர். நேற்று 22 கார்ட் தங்கம் விலை ஒரு கிராம் ரூ. 4740 ஆகவும், 8 கிராம் ஆபரண தங்கம் ரூ. 37920-க்கு விற்பனை செய்யப்பட்டது. 24 காரட் தங்கம் விலை, … Read more

ஒட்டன் சத்திரத்தில் கோவில் திருவிழாவில் நடனம் ஆடிய அமைச்சர் மற்றும் எம்.பி..!

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன் சத்திரம் அருகே பெயில் நாயக்கன் பாளையத்ததில் நடைபெற்ற காளியம்மன் கோவில் திருவிழாவில் தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி ஆகியோர் ஊர் மக்களுடன் சேர்ந்து தேவராட்டம் ஆடினர் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினரும் கோவில் விழாவில் ஆடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகின்றன. Source link

பாரத ரத்னா, தாதா சாகேப் பால்கே விருதுகளையும் இளையராஜா பெற வேண்டும்: அன்புமணி வாழ்த்து

சென்னை: இந்தியாவின் இரண்டாவது மிக உயரிய பத்ம விபூஷன் விருதை பெற்றுள்ள இளையராஜா, பாரத ரத்னா, தாதா சாகேப் பால்கே விருதுகளையும் வென்று புதிய உச்சங்களைத் தொட வேண்டும் என்பதே எனது விருப்பம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது வாழ்த்தை கூறியுள்ளார். இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்: “முத்து விழா ஆண்டில், 80வது வயதில் அடியெடுத்து வைக்கும் உலகின் தலைசிறந்த இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜாவுக்கு எனது வாழ்த்துகளைத் … Read more

தலைமைச் செயலகம் முன் தீக்குளித்த நபரிடம் வீடியோ வாக்குமூலம் சேகரிப்பு

தலைமைச் செயலகம் முன்பு தனக்குத்தானே பெட்ரோல் ஊற்றி தீ வைத்து தற்கொலைக்கு முயன்ற முதியவர் மாஜிஸ்திரேட்டிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். திருவள்ளுர் மாவட்டம் திருவிளாங்காடு பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது 75). இவர் நேற்று தலைமைச் செயலகம் முன்பு தனக்குத் தானே பெட்ரோலை தலையில் ஊற்றி தீ வைத்துக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு பிரிவு போலீசார் தண்ணீர் ஊற்றி அவரை காப்பாற்றி இருந்தனர். பின் அவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தற்போது 59 சதவீத … Read more

மோடி அரசின் கொள்கைகள் தமிழர்களுக்கு எதிரானது – பாஜகவை சாடிய அதிமுக பொன்னையன்

 Arun Janardhanan பாஜகவுடன் அதிமுக தேர்தல் கூட்டணி அமைத்து ஐந்தாண்டுகள் ஆன நிலையில், அதிமுகவிற்குள் நிலவும் பாஜகவுக்கு எதிரான குரல் ஒலிக்க தொடங்கியுள்ளது. மத்திய அரசின் தமிழக நலனுக்கு எதிரான கொள்கைகள் அதற்கு பின்னணியில் உள்ளது. தமிழக நலனுக்கு எதிரான கொள்கைகள் கடந்த செவ்வாய்க்கிழமை கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அதிமுக அமைப்பு செயலாளர் சி பொன்னையன், பாஜக தலைமையிலான மத்திய அரசு மாநில வருவாயை திருடுகிறது. மேலும் தேர்தல் தோல்விக்கு சிறுபான்மை சமூகத்தின் ஆதரவை இழந்ததும், … Read more

மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியம்.. தமிழக அரசு அரசாணை வெளியீடு.!!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியம் அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மாற்று திறனாளிக்களுக்கான மாநில ஆலோசனை வாரியத்தின் அலுவல் சார்ந்த உறுப்பினர்களாக 3 சட்டப் பேரவை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இவ்வாரியத்தில் உறுப்பினராக அந்தியூர் எம்எல்ஏ ஏ.ஜி வெட்கடாசலம் இடம் பெற்றுள்ளார். மாநில அளவில் மாற்று திறனாளிகளின் நலன் குறித்து கலந்தாய்வு மற்றும் ஆலோசனை வழக்கும் அமைப்பாக இவ்வாரியம் இருக்கும். மாற்று திறனாளிகளின் உரிமைகள், கொள்கைகளை … Read more

பாஜகவில் சசிகலாவை ஏற்பது குறித்து கட்சி மேலிடம் முடிவு செய்யும்: அண்ணாமலை

நெல்லை/திருச்சி: பாஜகவில் சசிகலாவை ஏற்பது குறித்து கட்சி மேலிடம் தான் முடிவு செய்யும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். முன்னதாக புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், “அதிமுகவில் சசிகலாவை சேர்த்துவிட்டால் அக்கட்சி இன்னும் வலுவாக இருக்கும். பாஜகவுக்கு அவர் வந்தால் வரவேற்கத் தயாராக இருக்கிறோம். அவரது வருகை பாஜகவினருக்கு உறுதுணையாக இருக்கும். அவரை அதிமுகவில் சேர்க்காவிட்டால், பாஜகவில் இணைப்பதற்கான பணிகளை நாங்கள் முன்னெடுப்போம்” என்றார். பேட்டியின்போது, சசிகலாவின் பெயரைச் சொல்லாமல் … Read more

பங்களிப்பு ஓய்வூதிய திட்ட நிதி: அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு அமைச்சர் விளக்கம்

பங்களிப்பு ஓய்வூதிய திட்ட நிதி முற்றிலும் அரசு ஊழியர்களின் ஓய்வூதியத்திற்கு மட்டுமே ஒதுக்கீடு செய்யப்படுவதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசுப் பயணியாளர்களின் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் குறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது மற்றும் உண்மைக்குப் புறம்பானது. அரசுப் பணியாளர்களின் ஓய்வூதிய திட்டத்தின் வைப்புத் தொகை கடந்த மார்ச் மாதம் வரை ரூ.53,555 கோடி ரூபாயாக உள்ளது. இந்தத் தொகை எல்.ஐ.சி.யின் பணத்திரட்சியுடன் கூடிய புதிய … Read more

Tamil News Live Update: தக்காளி விலை குறைந்தது.. கிலோ 40 ரூபாய்க்கு விற்பனை!

Go to Live Updates Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது. 6.5 லட்சம் மாணவர்கள் பங்கேற்கவில்லை! தமிழகத்தில் நடைபெற்ற 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் மொத்தம் 6.5 லட்சம் மாணவர்கள் பங்கேற்கவில்லை. அதன்படி 12ம் வகுப்பு தேர்வுகளில் 1.95 லட்சம், 11ம் வகுப்பு … Read more