'அதிமுக என் தலைமையின் கீழ் இருக்க வேண்டும் என்றே தொண்டர்கள் ஆசைப்படுகின்றனர்' – சசிகலா

திருவள்ளூர்: “என்னைப் பொருத்தவரை, கட்சித் தொண்டர்களும், வாக்களிக்கும் பொதுமக்களும்தான் தலைவரை தீர்மானிப்பார்கள். அவர்கள் என்னுடன் இருக்கிறார்கள். அதனால், நிச்சயமாக இதை சரிசெய்து, மீண்டும் அதிமுக ஆட்சியைக் கொண்டு வருவேன். அது ஏழைகளின் ஆட்சியாக, மக்களின் ஆட்சியாக இருக்கும்” என்று வி.கே.சசிகலா கூறியுள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான வி.கே.சசிகலா இன்று, சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்திலிருந்து, அதிமுக தொணடர்களை சந்திக்கும் சுற்றுப்பயணத்தைத் தொடங்கினார். திருவள்ளூர் மாவட்டம் குண்டலூர் பகுதியில் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது … Read more

சேலம்: உடைக்க முடியாததால் அலேக்காக உண்டியலை தூக்கிச் சென்ற திருடர்கள்!

சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே கோயில் உண்டியலை 2 திருடர்கள் தூக்கி சென்ற சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த மேச்சேரி அருகே 5வது மைலில் உள்ள மாரியம்மன் கோவிலில் நேற்று அதிகாலை இரண்டு திருடர்கள் கையில் ஆயுதங்களுடன் சென்று கோயில் உண்டியலை உடைக்க முயற்சி செய்தனர். உண்டியலை உடைக்க முடியாததால் அப்படியே தூக்கிக்கொண்டு 2 திருடர்கள் சென்ற சிசிடிவி காட்சி தற்பொழுது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. … Read more

தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை; கட் ஆஃப் கூடுமா? குறையுமா?

Tamilnadu Engineering admissions 2022 expected cut off details: பொறியியல் படிப்புகளுக்கான கட் ஆஃப் மதிப்பெண்கள் எவ்வளவு இருக்கும், எந்த கட் ஆஃப் மதிப்பெண்களுக்கு என்ன நிலை கல்லூரிகள் கிடைக்கும் என்பது குறித்து இப்போது பார்ப்போம். 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானதையடுத்து, மாணவர்களும் பெற்றோர்களும் அடுத்து என்ன என்று யோசிக்க தொடங்கியுள்ளனர். மதிப்பெண்களைப் பொறுத்து, எந்த படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம் என மாணவர்களும் பெற்றோர்களும் ஆலோசனை செய்து வருகின்றனர். இந்தநிலையில், 12 … Read more

அமைச்சர் துரைமுருகனுக்கு அவசர கடிதம் எழுதிய பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ்.!

கடலூர் – மயிலாடுதுறை மாவட்டங்களில் கடல் நீர் உட்புகுவதை தடுக்கும்  வகையிலும், நிலத்தடி நீரின் தரத்தை மேம்படுத்தும் வகையிலும் அளக்குடி – திருக்கழிப்பாலை கிராமங்களுக்கு இடையே கடைமடை கட்டமைப்பு சுவர் அமைப்பதற்காக ரூ.540 கோடி நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கேட்டுக் கொண்டிருக்கிறார். இது தொடர்பாக தமிழக முதலமைச்சர், நீர்வளத்துறை அமைச்சருக்கு மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அந்தக் … Read more

திருமணத்தை மீறிய உறவுக்கு இடையூறாக இருந்ததால் இரண்டரை வயது பெண் குழந்தையின் கையை உடைத்த தாய் கைது!

சென்னை வண்ணாரப்பேட்டையில் திருமணத்தை மீறிய உறவுக்கு இடையூறாக இருந்ததாக, இரண்டரை வயது பெண் குழந்தையின் கையை உடைத்த தாயை போலீசார் கைது செய்தனர். தமிழரசி என்ற இந்த இளம்பெண்ணுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி பெண் குழந்தை பிறந்த நிலையில், கணவர் அவரை பிரிந்து சென்றுள்ளார். இந்நிலையில் தமிழரசிக்கு அதே பகுதியைச் சேர்ந்த நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதற்கு இடையூறாக இருந்த குழந்தையை பிரம்பால் தாக்கியதோடு, குழந்தையின் கையை உடைத்ததாக உறவினர்கள் புகாரளித்தனர். அதன் பேரில், … Read more

மாஸ்க் அணியாவிடில் அபராதம்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: மாஸ்க் அணிதல் உள்ளிட்ட கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் இன்று மட்டும் தமிழகத்தில் 1472 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மாஸ்க் அணிதல் உள்ளிட்ட கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், … Read more

ஸ்கூலுக்கு போகச் சொல்லி வற்புறுத்தியதால் சங்கடம்.. 9ம் வகுப்பு மாணவன் எடுத்த விபரீத முடிவு

ஓமலூரில் பள்ளி செல்ல மறுத்து ஒன்பதாம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள காமராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் கார்த்தி. இவரது மனைவி உமா. இவர்களுக்கு ஜீவன், கிஷோர், முருகவேல் ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர். பெயிண்ட் அடிக்கும் கூலி வேலை செய்யும் கார்த்திகிற்கும், அவரது மனைவி உமாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்தநிலையில், உமா 15 வயதான தனது மூத்த மகன் ஜீவன் … Read more

‘தவழ்வதைக்’ கண்டாதான் அவங்க சந்தோஷப்படுவாங்க தெய்வமே..!

சமூக ஊடகங்களின் காலத்தில், அன்றாட அரசியல் நிகழ்வுகளுக்கு உடனுக்குடன் எதிர்வினையாற்றுபவர்கள் நமது மீம்ஸ் கிரியேட்டர்கள்தான். நகைச்சுவை உணர்வு, நகைச்சுவைப் படங்கள் பார்க்கும் பழக்கம், அரசியல் புரிதல் இருந்தால் போதும் நீங்களும் மீம்ஸ் கிரியேட்டர்கள் ஆகலாம். ஆனால், நாகரிகமான மொழியில் நகைச்சுவையாக உருவாக்கப்படும் அரசியல் மீம்ஸ்களே கட்சி பேதங்களைத் தாண்டி கவனம் பெறும். இன்று கவனம் பெற்ற மீம்ஸ்களை இங்கே தொகுத்து தருகிறோம். கடந்த 2 வாரங்களாக அதிமுகவில் எழுந்துள்ள ஒற்றைத் தலைமை விவகாரம் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் … Read more

#BigBreaking || தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம்.! சற்றுமுன் தமிழ்க அரசு வெளியிட்ட அறிவிப்பு.!

தமிழகத்தின் கொரோனா அதிகரித்த 6 மாவட்டங்களில் முகக்கவசம் கட்டாயம் அணியாவிட்டால், அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் நோய்த்தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் நகரங்களில் கொரோனா பரவல் சற்று அதிகரித்துள்ளது. அந்த மாவட்டங்களில் இருக்கக்கூடிய பொதுமக்கள் சமூக இடைவெளி, முக கவசம் அணியாமல் இருத்தல் போன்ற தடுப்பு வழிமுறைகள் கடைப்பிடிக்காத தன் … Read more

80 வயதிலும் கம்பு ஊன்றிச் சென்று பனையேறும் தொழிலாளி.. முதியோர் உதவித்தொகை வழங்கும்படி அரசுக்குக் கோரிக்கை!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே கடாட்சபுரத்தில் 80 வயதிலும் கம்பு ஊன்றிச் சென்று பனை ஏறும் தொழிலாளி முதியோர் உதவித்தொகை வழங்கும்படி அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார். மனைவி, மகன்கள் முன்னரே இறந்துவிட்ட நிலையில் மகளின் ஆதரவில் பனையேறிப் பிழைப்பு நடத்தும் பனைத்தொழிலாளி சாலமோன், பனையேற்றுத் தொழில் இல்லாக் காலங்களில் பிழைப்பு நடத்துவது சிரமமாக உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.  Source link