ஆசியக் கோப்பை டி20 போட்டியில் அதிரடி மாற்றம்.!

இலங்கையில் நடைபெற இருந்த ஆசியக் கோப்பை டி20 போட்டி, இலங்கையிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டு உள்ளது. வரும் ஆகஸ்ட் 27 – செப்டம்பர் 11 வரை நடைபெற உள்ள ஆசியக் கோப்பை டி20 போட்டி இலங்கை நாட்டில் நடத்துவதற்கு பதில், ஐக்கிய அரபு அமீரக்த்தில் உள்ள துபை மற்றும் ஷார்ஜாவில் நடத்துவதற்கு, ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.  இலங்கையில் பொருளாதார வீழ்ச்சி காரணமாக எரிபொருள் தட்டுப்பாடு தொடா்ந்து அதிகரித்து வருகிறது. நாளுக்குநாள் பெட்ரோல், … Read more

தமிழகத்தில் போலி மருந்து விற்பனை குறித்து கண்காணிப்பு: மா.சுப்பிரமணியன் தகவல்

ஈரோடு: தமிழகத்தில் போலி மருந்துகள் மற்றும் தடை செய்யப்பட்ட மருந்துகள் புழக்கத்தில் உள்ளதா என்பது குறித்து கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். ஈரோடு மாவட்டம் தாளவாடியில், கர்ப்பிணிப் பெண்களுக்கான ஹீமோகுளோபினோபதி திட்டத்தினைத் தொடங்கி வைத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியது: “தமிழகத்தில் பழங்குடியின மக்கள் வசிக்கும் 12 கிராமங்களில், கருவுற்ற தாய்மார்களிடையே ஹீமோகுளோபினோபதி, தலசீமியா நோய் உள்ளதா என்பதைக் கண்டறியும் பரிசோதனை செய்து, சிகிச்சை வழங்க ரூ 1.68 கோடி … Read more

மாதம் தோறும் ரூ.2,500 வேணுமா? போஸ்ட் ஆபீஸில் முதலீடு பண்ணுங்க!

சிறுக சிறுக சேமிக்கும் பழக்கம் கொண்டவர்களுக்கும், பூஜ்ய அபாயம் கொண்ட திட்டங்களில் முதலீடு செய்யும் நபர்களுக்கும் அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் மிகுந்த பலனைக் கொடுக்கும்.அஞ்சல் அலுவலகங்களில் பல்வேறு முதலீடு திட்டங்கள் இருந்தாலும் மாதாந்திர சேமிப்பு திட்டங்கள் மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளன. இதில் தேசிய சேமிப்பு மாதாந்திர பராமரிப்பு திட்டம் மிக முக்கியமான திட்டமாகும்.இந்தத் திட்டத்தில் முதலீடு செய்தால் மத்திய அரசு 6.6 சதவீதம் வட்டி வழங்குகிறது. இது மற்ற வங்கிகளில் உள்ள நிலையான வைப்புநிதி (ஃபிக்சட் … Read more

முன் விரோதத்தால் ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு…!

சென்னை விருகம்பாக்கம் கங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சேகர். இவருக்கும் ஆட்டோ டிரைவர் பரணி என்பவருக்கும் ஆட்டோ நிறுத்துவதில் ஏற்கனவே தகராறு இருந்ததாக கூறப்படுகிறது.  இந்த நிலையில் நேற்று இரவு மதுபோதையில் இருந்த இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த பரணி நண்பர்களை அழைத்து கொண்டு சேகரை சரமாரியாக தாக்கியுள்ளார்.  இதில், படுகாயமடைந்த அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். … Read more

அ.தி.மு.க.வின் புதிய பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் செயல்பட இபிஎஸ் அளித்த கடிதத்தை ஏற்றது வங்கிகள்..

அ.தி.மு.க.வின் புதிய பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் செயல்பட, எடப்பாடி பழனிசாமி அளித்த கடிதங்களை வங்கிகள் ஏற்றுள்ளன. அக்கட்சியின் பொருளாளராக இருந்த பன்னீர்செல்வம் நீக்கப்பட்டு, திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டார். இதனை அடுத்து, புதிய பொருளாளரே வங்கி கணக்குகளை கவனிப்பார் என குறிப்பிட்டு, அ.தி.மு.க. கணக்கு வைத்திருக்கும் வங்கிகளுக்கு பழனிசாமி கடிதம் எழுதினார். அதனை சரிபார்த்த வங்கிகள் புதிய பொருளாளரை ஏற்றுக்கொண்டன. இதனிடையே, அ.தி.மு.க. அலுவலகத்திற்கு சீல் வைத்ததை எதிர்த்து பழனிசாமி, பன்னீர் செல்வம் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் புதன்கிழமை … Read more

மேட்டூர் அணையிலிருந்து 1.33 லட்சம் கன அடி தண்ணீர் திறப்பு: வறண்டு கிடக்கும் ஏரி, குளங்களை நிரப்ப வலியுறுத்தல்

திருச்சி: மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் விநாடிக்கு 1.33 லட்சம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதை பயன்படுத்தி, வறண்டு கிடக்கும் ஏரிகள், குளங்களை நிரப்ப நீர்வளத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். மேட்டூர் அணையில் ஜூலை 10-ம் தேதி நீர்மட்டம் 98 அடியாகவும், நீர்வரத்து 3,458 கன அடியாக இருந்தது. கர்நாடக மாநிலத்தில் காவிரிநீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பியதால், உபரி நீர் வெளியேற்றப்பட்டு, மேட்டூர் … Read more

கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு – வாட்ஸ்அப் குழுவில் வதந்தி பரப்பிய கல்லூரி மாணவர்கள் கைது

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் குறித்து தவறான வதந்திகளை பரப்பிய திண்டுக்கல் கல்லூரி மாணவர்கள் இரண்டு பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் மெட்ரிகுலேஷன் பள்ளியில் கடந்த வாரம் பிளஸ் டூ மாணவி உயிரிழந்தார். இது தொடர்பாக திண்டுக்கல்லை அடுத்துள்ள GTN கலைக்கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வரும் உதயகுமார் மற்றும் பார்வதி கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் (17 வயதுடைய மற்றொரு கல்லூரி மாணவன் … Read more

இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து.. கர்ப்பிணி பெண் பரிதாப பலி..!

டிராக்டர் மோதிய விபத்தில் கர்பிணி பெண் மற்றும் 1½ வயது குழந்தை பரிதாபமாக உயிரிழ்ந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், தானகவுண்டம்புதூர் பகுதியை சேர்ந்த ராஜதுரை. இவர் அவரது மனைவி மணிமேகலை மற்றும் அவரது குழந்தை ஆகியோருடன் அவர் இருசக்கர வாகனத்தில் செங்கம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். . அப்போது, முத்தனூர் அருகே சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், படுகாயமடைந்த இருவரையும் மீட்டு மருத்துமனைக்கு … Read more

வன்முறை திட்டமிட்டதா? – சின்னசேலம் தனியார் பள்ளியில் தடய அறிவியல் நிபுணர்கள் ஆய்வு

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் தனியார் பள்ளியில் கடந்த 17-ம் தேதி நடைந்த வன்முறை சம்பவங்கள் திட்டமிட்டு நடத்தப்பட்டதா என்பது குறித்து விழுப்புரம் மாவட்ட தடய அறிவியல் துணை இயக்குநர் சண்முகம் தலைமையில் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். சின்னசேலம் தனியார் மெட்ரிக் மேநிலைப்பள்ளியில் மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக கடந்த 17-ம் தேதி பள்ளி வளாகத்தில் பெரிய அளவிலான வன்முறை ஏற்பட்டு, பள்ளி சூறையாடப்பட்டது. இது தொடர்பாக இதுவரை 300 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். சிபிசிஐடி போலீஸார் … Read more

அரசு ஊழியரின் 2வது மனைவிக்கு ஓய்வூதியம் வழங்கலாமா? -உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

அரசு ஆசிரியரின் இரண்டாவது மனைவிக்கு ஓய்வூதியம் வழங்க மறுத்த தமிழக அரசின் உத்தரவை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் அரசு ஆரம்பப் பள்ளி ஆசிரியராக பணியாற்றிய தனுஷ் கோடி என்பவர், முதல் மனைவி உயிருடன் இருந்தபோது, முதல் மனைவியின் சகோதரியை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். கடந்த 1997-ல் ஓய்வு பெற்ற தனுஷ் கோடி, 2010-இல் மரணமடைந்தார். இதையடுத்து தனக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கக்கோரி ஆசிரியரின் இரண்டாவது மனைவி சாந்தி அரசுக்கு … Read more