’தவறான தகவலால் 3500 குழந்தைகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது’ – சின்னசேலம் தனியார் பள்ளி செயலாளர் 

கள்ளக்குறிச்சி: ” சின்னசேலம் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில், மாணவியின் தாயார் அனுப்பிய தகவல்கள் அனைத்து உண்மை கிடையாது. அது அத்தனையுமே தவறான தகவல்கள். இறந்த மாணவி மற்றும் அவரது தாயாரின் செல்போனை ஆய்வு செய்தால் மாணவியின் மரணத்திற்கான உண்மையான காரணத்தை மக்கள் தெரிந்துகொள்ளலாம்” என்று தீக்கிரையாக்கப்பட்ட பள்ளியின் செயலாளர் சாந்தி ரவிக்குமார் கூறியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியின் செயலாளர் சாந்தி ரவிக்குமார் காணொலி காட்சி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அவர் … Read more

மதுரையில் நீட் தேர்வு எழுதிய 55 வயது விவசாயி: மருத்துவராகி மக்களுக்கு சேவை புரிய விருப்பம்

மதுரை: மதுரையில் நீட் நுழைவுத் தேர்வு எழுதிய 55 வயதான விவசாயி, மருத்துவராகி பொது மக்களுக்கு சேவை புரிய போவதாக நம்பிக்கை தெரிவித்தார். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகிலுள்ள அம்பட்டையன்பட்டியைச் சேர்ந்தவர் ராஜியக்கொடி (55). தற்போது, மதுரை மாடக்குளம் பகுதியில் வசிக்கிறார். பிஎஸ்சி இயற்பியல் முடித்துவிட்டு, விவசாயம் பார்க்கிறார். இவருக்கு சக்திபெருமாள், வாசுதேவன் என்ற இரு மகன்கள் உள்ளனர். வாசுதேவன் கடலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் இரண்டாமாண்டு படிக்கிறார். சக்திபெருமாள் சொந்தமாக கட்டிட ஒப்பந்த நிறுவனம் வைத்திருக்கிறார். … Read more

"நேர்த்தியாக நடிப்பவர்; மிகவும் ஒழுக்கமானவர்"..தனுஷ் குறித்து தி கிரே மேன் நடிகர் புகழாரம்

நடிகர் தனுஷ் நடிப்பில், தற்போது உருவாகியுள்ள ஹாலிவுட் படமான ‘தி கிரே மேன்’ (The Grey Man) படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியிடப்பட்டு மாபெரும் வரவேற்பை பெற்றது. ‘அவெஞ்சர்ஸ் இன்ஃபினிடி வார்’ படத்தை இயக்கிய ஆண்டனி ரூசோ, ஜோ ரூசோ ஆகிய சகோதர்களின் இயக்கத்தில் உருவாகியுள்ள ஹாலிவுட் படம் தான் ‘தி கிரே மேன்’. இந்தப் படத்தில் தனுஷுடன், ரையான் காஸ்லிங், கிறிஸ் இவான்ஸ், அனா டி அர்மாஸ், ஜெசிக்கா ஹென்விக் ஆகிய முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர். … Read more

தி.மு.க ஆட்சியில் மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லை: எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்திற்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமி பேட்டி

EPS slams DMK government on Kallakurichi issue: கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தையடுத்து ஏற்பட்ட வன்முறை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி இந்த ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என தி.மு.க அரசை தாக்கியுள்ளார். சென்னையில் உள்ள தனியார் விடுதியில் அ.தி.மு.க எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது. இதையும் படியுங்கள்: சின்ன சேலத்தில் 144 தடை உத்தரவு: சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு தலைவர்கள் கோரிக்கை பின்னர் செய்தியாளர்களைச் … Read more

'தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துவிட்டது' – இபிஎஸ்

சென்னை: ” சின்ன சேலம் தனியார் பள்ளி மாணவி மர்ம மரணம் தொடர்பாக 3 நாட்கள் நடைபெற்று வரும் போராட்டம் குறித்து உளவுத்துறை உரிய முறையில் காவல்துறைக்கு தகவல் கொடுத்து, அதன்பேரில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்திருந்தால், இதுபோன்ற அசாதாரண சூழல் உருவாகியிருக்காது. எனவே இதற்கு முழுகாரணம் ஸ்டாலின் தலைமையில் இருக்கிற அரசாங்கமும், அவர் கையில் இருக்கிற காவல்துறையும்தான்” என்று அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சென்னையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று … Read more

தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை முதல் சைலேந்திர பாபு ஆய்வு வரை – லேட்டஸ்ட் தகவல்கள்

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பகுதியில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு மாணவி இறந்த விவகாரத்தில் நீதி கேட்டு கடந்த 5 நாட்களாக உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சென்னை – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை நடைபெற்ற மறியல் போராட்டத்தை காவல்துறையினர் கலைக்க முயன்றனர். அப்போது போராட்டம் வன்முறையாக மாறியது. “நாளை முதல் தனியார் பள்ளிகள் இயங்காது” கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளியில் நேரிட்ட தாக்குதலை … Read more

“உள்கட்சி மோதலை திசைதிருப்ப மாணவி மரணத்தை அரசியலாக்கும் இபிஎஸ்” – திமுக குற்றச்சாட்டு

சின்னசேலம்: “கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு மூன்று நாட்களாக போராடியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்று எடப்பாடி பழனிசாமி ஒரு மாணவியின் மரணத்தை கூட அரசியலாக்கி தன் உள்கட்சி மோதலை திசைதிருப்பப் பேட்டியளித்திருப்பதாக பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாணவி மரணத்தைப் பொறுத்தவரை அச்செய்தி வெளிவந்தவுடன் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சி தலைவரும், காவல்துறைக் கண்காணிப்பாளரும் நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து வந்தார்கள். மாணவியின் பெற்றோருக்கு ஆறுதல்கூறி போலீஸ் … Read more

’வன்முறைக்கு மாணவர் சங்கம் காரணமல்ல; இவர்களாகத்தான் இருக்கும்!’ – மாணவியின் தாயார் பேட்டி!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பகுதியில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு மாணவி இறந்த விவகாரத்தில் நீதி கேட்டு கடந்த 5 நாட்களாக உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சென்னை – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை நடைபெற்ற மறியல் போராட்டத்தை காவல்துறையினர் கலைக்க முயன்றனர். அப்போது போராட்டம் வன்முறையாக மாறியது. இவ்வழக்கு தற்போது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், இன்று நிகழ்ந்த வன்முறைக்கு மாணவர் சங்கம் காரணம் அல்ல என்று … Read more

கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றம் – டி.ஜி.பி

Kallakuruchi Girl student death case transferred to CBCID: கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி மரண வழக்கு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளதாக டி.ஜி.பி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம், பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீமதி என்ற மாணவி கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விடுதியில் தங்கி பிளஸ் 2 படித்து வந்தார். கடந்த 13-ம் தேதி மாணவி விடுதியின் 2-வது மாடியிலிருந்து குதித்து மரணம் … Read more

சின்னசேலம் மாணவி உயிரிழந்த விவகாரம் | சிபிசிஐடிக்கு வழக்கு மாற்றம் – பள்ளித் தாளாளர் உள்ளிட்ட 3 பேர் கைது

சின்னசேலம்: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை அடுத்த கனியாமூரில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த பிளஸ் 2 படித்து வந்த மாணவி ஒருவர், கடந்த 13-ம் தேதி பள்ளியில் உள்ள விடுதியில் 3-வது மாடியில் இருந்து கீழே விழுந்ததால் உயிரிழந்தார் எனக் கூறி, பள்ளி நிர்வாகம் தகவல் தெரிவித்த நிலையில், பெற்றோர் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது, மாணவி உடலில் காயங்கள் இருப்பதாகவும், தங்கள் மகளை கொலை செய்ததாகக் … Read more