சென்னையில் இந்த இடங்களில் இன்று (ஜூலை:12) மின்வெட்டு!

சென்னையில் இன்று (ஜூலை:12) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தண்டையார்பேட்டை, தி.நகர், மயிலாப்பூர், அடையார், தாம்பரம், கிண்டி, ஐடி காரிடர், போரூர், அம்பத்தூர், ஆவடி, அண்ணாநகர், அரும்பாக்கம், பெரம்பூர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது. மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும். தண்டையார்பேட்டை; மணலி கலைஞர் நகர், பர்மா … Read more

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெடில் வேலைவாய்ப்பு.!!

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெடின் அதிகாரபூர்வ இணையதளத்தில் அதிகாரி காலியிடங்களுக்கான  வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக டிப்ளமோ, பட்டதாரி, பி.இ, பி.டெக் கொடுக்கப்பட்டுள்ளது.  இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக சென்னை கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள்.  நிறுவனம் : ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன்  பணியின் பெயர் : அதிகாரி கல்வித்தகுதி : டிப்ளமோ, பட்டதாரி, பி.இ, பி.டெக் … Read more

அதிமுக பொதுக்குழுவில் இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு.!

அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் இரட்டைத் தலைமையை ரத்துச் செய்து, பொதுச்செயலாளரைத் தேர்வு செய்யத் திருத்தம் கொண்டுவந்தும், எடப்பாடி பழனிசாமியை இடைக்காலப் பொதுச்செயலாளராக நியமித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  சென்னை வானகரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து வந்த பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் பெரியார், அண்ணா, ஜெயலலிதா ஆகியோருக்குப் பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசை வலியுறுத்தித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதிமுகவில் இரட்டைத் தலைமையை ரத்துச் செய்து பொதுச்செயலாளரைத் தேர்வு செய்யக் … Read more

மதுரை உட்பட 14 மாவட்டங்களில் தற்காலிக ஆசிரியர் பணி நியமன தடை தொடர்கிறது

மதுரை உட்பட 14 மாவட்டங்களில் தற்காலிக ஆசிரியர் பணி நியமனத்துக்கான தடை நீடிக்கிறது. தமிழகத்தில் நிரந்தர ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப காலதாமதம் ஆகும் என்பதால் காலியாக உள்ள 13,331 இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தற்காலிகமாக நிரப்ப பள்ளிக் கல்வித் துறை முடிவெடுத்தது. இதை எதிர்த்து ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்தனர். ஆசிரியர் தகுதித் … Read more

அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் ஆம்புலன்ஸ்கள் மீது கடும் நடவடிக்கை – மா.சுப்ரமணியன்

தனியார் ஆம்புலன்ஸ் அதிகப்படியான கட்டணம் வசூலிப்பது பற்றி புகார் வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற சுகாதாரத்துறை அமைச்சர் செய்தியாளர்கள் சந்தித்தார் அப்போது … கொரோனா பரவி வரும் தற்போதைய சூழலில் கட்டுபாடு விதிக்க வாய்ப்புள்ளதா என கேட்டதற்கு ஒவ்வொரு பகுதியிலும் எடுக்கப்படும் பரிசோதனையில் 10 சதவீதத்திற்கு மேல் வரும்போது மத்திய அரசு கூறியுள்ள கட்டுப்பாடுகள் அப்பகுதிக்கு விதிக்கப்படும். மேலும் … Read more

மாவு இல்லையா? ரவை, பொரியில் இன்ஸ்டன்ட் இட்லி… எப்படினு பாருங்க!

Instant Idli recipes in tamil: தென்னிந்தியாவில் உணவுகளில் மிகவும் பிரபலமான உணவாக ஒன்றாக இட்லி உள்ளது. இவற்றுக்கு சூடான சாம்பார், தேங்காய் மற்றும் கார சட்னிகள் அசத்தலாக இருக்கும். மேலும், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பப்படும் முக்கிய உணவுகளில் ஒன்றாகவும் இவை உள்ளது. கலோரிகள் மிகவும் குறைவாக காணப்படும் இந்த அருமையான உணவை தயார் செய்ய பலர் சிரம படுகிறார்கள். ஆனால், அவற்றை நாம் எளிதில் தயார் செய்து விடலாம். அப்படி சுலபமாக தயார் … Read more

ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமிக்கு அடுத்தடுத்து பறந்த நோட்டீஸ்.. நாள் குறித்த வருவாய்த்துறை.!!

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்து வந்த நிலையில், நேற்று அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் 16 தீர்மானங்களை நிறைவேற்றப்பட்டது.  அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு ரத்து செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.   அதிமுக பொது செயலாளர் கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் தேர்வு செய்யும் வகையில் விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழுவில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  இதனிடையே, ஓ பன்னீர்செல்வம் நேற்று அதிமுக … Read more

சசிகலாவுக்கு பினாமிகளாக செயல்பட்டோர் மீது எடுத்த நடவடிக்கை செல்லும் – உயர்நீதிமன்றம்

பணமதிப்பிழப்பு கரன்சி நோட்டுக்கள் மூலம் சொத்துக்களை வாங்க சசிகலாவுக்கு பினாமிகளாக செயல்பட்டவர்கள் மீது எடுத்த நடவடிக்கை செல்லும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சுமார் ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்பிழப்பு செய்த கரன்சிகள் மூலம், சொத்துக்களை வாங்க பினாமியாக செயல்பட்டதாகக்கூறி கங்கா பவுண்டேஷன் உள்ளிட்ட நிறுவனங்களின் சொத்துக்களை வருமான வரித்துறை முடக்கியது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தனி நீதிபதி தள்ளுபடி செய்தார். இதற்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கின் விசாரணையில், தனி நீதிபதியின் உத்தரவில் தலையிட … Read more

மதுராந்தகம் | அதிமுக பொதுக்குழுவுக்கு வந்த 2 பேர் விபத்தில் உயிரிழப்பு

மதுராந்தகம்: திருவண்ணாமலை மாவட்டம் கொடுங்கலூர் கிராமத்தைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட நபர்கள் சென்னை வானகரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக, வேனில் திருச்சி – சென்னை சாலை வழியாக நேற்று அதிகாலை சென்று கொண்டிருந்தனர். அப்போது, செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரை அடுத்த சிறுநாகலூர் ரெட்டை ஏரிக்கரை அருகே சென்னையிலிருந்து திண்டிவனம் நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக்கொண்டிருந்த லாரி ஒன்று, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் நடுவே உள்ளே சென்டர் மீடியனில் ஏறிச் சென்று எதிரே வந்துக் … Read more

Tamil News Live Update: இ.பி.எஸ் அணியினர் 14 பேர் சிறையில் அடைப்பு: ஓ.பி.எஸ் தரப்பு மீதும் போலீசில் புகார்

Go to Live Updates Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது. Tamil News Latest Updates அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக இபிஎஸ் தேர்வு சென்னை வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியும், கழக … Read more