ஸ்டாலின் கான்வாயில் செய்தியாளரை தள்ளிவிட்ட பாதுகாப்பு போலீஸ்: வேறு பணிக்கு மாற்றி உத்தரவு

எஸ்.இர்ஷாத் அஹமது – தஞ்சாவூர் மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தமிழக முதல்வர் கலந்து கொண்ட நிகழ்ச்சியின்போது வீடியோ எடுத்த வேந்தர் தொலைக்காட்சி சேனலின் செய்தியாளரை முதலமைச்சரின் பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் நெட்டித் தள்ளி தாக்கியதில் அச்செய்தியாளர் காயமடைந்து சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் பத்திரிகையாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிரச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து, செய்தியாளரைத் தாக்கியதாகக் கூறப்படும் முதல்வரின் பாதுகாப்பு அதிகாரி அப்பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தஞ்சாவூர் உள்ளிட்ட … Read more

குரங்கு அம்மை பாதிப்பு : விமான நிலையங்களில் அதிரடி சோதனை.!

குரங்கு அம்மை பாதிப்புகள் பரவி உள்ள நாடுகளில் இருந்து தமிழகம் வருபவர்களை கண்காணிக்க வேண்டும் என்று, தமிழ்நாடு பொதுசுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் உத்தரவு பிறப்பித்துள்ளார். பெரியம்மை வகையைச் சோ்ந்த குரங்கு அம்மை வைரஸ் இங்கிலாந்து, ஸ்பெயின், பெல்ஜியம், இத்தாலி உள்ளிட்ட வெளிநாடுகளில் பரவி வருகிறது. காய்ச்சல், கொப்புளம் மற்றும் கணுக்களில் வீக்கம் உள்ளிட்ட அறிகுறிகளுடன் காணப்படும் இந்த தொற்று விலங்குகளிடம் இருந்து மனிதனுக்கும், மனிதர்களுக்கு இடையேயும் பரவி வருவதாக கண்டறியப்பட்டு உள்ளது. இது ஆப்பிரிக்க நாடுகளிலும், ஐரோப்பிய … Read more

காற்றாலை, சூரியசக்தி மூலம் தமிழகத்தில் மின் உற்பத்தி அதிகரிப்பு – செந்தில் பாலாஜி

தமிழகத்தில் காற்றாலை மற்றும் சூரியசக்தி மூலம் மின் உற்பத்தி அதிகரித்துள்ளதால், அனல் மின் நிலையங்களில் மின் உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளதாக  அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். கரூர் மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டத்திற்கு தலைமை தாங்கிய பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகளுக்கு தங்கு தடையின்றி மின்சாரம் வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். Source link

கப்பற்படை அதிகாரி ஆன நீலகிரியைச் சேர்ந்த படுகர் சமூகப் பெண்

உதகை: நீலகிரி மாவட்டம் உதகமண்டலம் அருகே உள்ள கேத்தி கிராமத்திலுள்ள படுகர் சமுதாயத்தைச் சேர்ந்த மீரா என்பவர் கப்பல் படையில் அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். நீலகிரி மாவட்டம், உதகை அருகே கேத்தி கிராமத்தில் உள்ள அச்சனக்கல் பகுதியைச் சேர்ந்தவர் ரவீந்திரநாத். இவரது மனைவி மாலதி. இவர்களது மகள் மீரா (23). ராணுவ மருத்துவமனையில் தொழில்நுட்ப நிபுணராக இருந்த ரவீந்திரநாத், வெலிங்டன் மருத்துவமனை மட்டுமின்றி நாட்டின் பல்வேறு ராணுவ மருத்துவமனைகளில் பணியாற்றியுள்ளார். இதன் காரணமாக பணி மாறுதலாகி செல்லும் … Read more

கேக் வெட்டி நண்பர்களுடன் பிறந்த நாள் விழா கொண்டாடிய இளைஞர் – மதுபோதையில் நடந்த அதிர்ச்சி

திருவள்ளூரில் பிறந்தநாள் விழா கொண்டாடிய இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நண்பர்களுடன் மது அருந்தியபோது நடந்த சம்பவத்தில், 2 பேரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த அலமாதி கிருஷ்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து (21). இவர் பிளம்பிங் மற்றும் எலக்ட்ரிக்கல் பணி செய்து வந்துள்ளார். இந்நிலையில், தமது பிறந்த நாளில் நண்பர்களுக்கு, இளைஞர் மாரிமுத்து மது விருந்து வைத்துள்ளார். அலமாதி ஏரியில் மாரிமுத்து, … Read more

தேர்தல் நிதியாக ரூ.477 கோடியை பெற்ற பாஜக, காங்கிரஸ் ரூ.74.5 கோடி; ஆணையம் தகவல்

BJP received Rs 477 crore worth of contributions in FY 21, Congress Rs 74.5 crore: ECI: 2020-21 நிதியாண்டில் ரூ.20,000க்கு மேல் பெறப்பட்ட நன்கொடைகள் குறித்து இந்திய தேர்தல் ஆணையத்திடம் கட்சிகள் சமர்ப்பித்த அறிக்கைகளின்படி பாஜக ரூ.477.54 கோடி மதிப்பிலான நன்கொடைகளைப் பெற்றுள்ளது, அதே நேரத்தில் காங்கிரஸ் ரூ.74.5 கோடியைப் பெற்றுள்ளது. தேர்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை பொது தளத்தில் வெளியிட்ட இரு கட்சிகளின் பங்களிப்பு அறிக்கையின்படி, பல்வேறு நிறுவனங்கள், தேர்தல் அறக்கட்டளைகள் … Read more

#தமிழகம் || பாஜகவுக்கு ஆதரவாக முகநூலில் கருத்து தெரிவித்த காவலர் பணியிடை நீக்கம்.!

திண்டுக்கல் அருகே அரசியல் கட்சி சார்பாக கருத்துக்களை முகநூலில் பதிவிட்டு வந்த காவலர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டம், அம்பத்தூரை காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்த சுரேஷ் என்பவர், தனது முகநூல் பக்கத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவாக பதிவுகளை பதிவிட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. காவல்துறையில் பணியாற்றும் நபர் நடுநிலையோடு இயங்க வேண்டும் என்ற அடிப்படை விதிகளின் அடிப்படையில், காவலர் சுரேஷை திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பணி இடைநீக்கம் செய்து உத்தரவு … Read more

மாநிலங்களவை தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் நிறைவு.. 6 பேரும் போட்டியின்றி தேர்வாகின்றனர்

மாநிலங்களவை தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், திமுக, காங்கிரஸ், அதிமுக வேட்பாளர்கள் ஆறு பேரும் போட்டியின்றி தேர்வாக உள்ளனர். தமிழகம் உள்ளிட்ட 15 மாநிலங்களில் உள்ள 57 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல், ஜூன் 10ஆம் தேதி நடைபெறவுள்ளது.  திமுக சார்பில் கல்யாணசுந்தரம், கிரிராஜன், ராஜேஸ்குமாரும், அதிமுக சார்பில் சி.வி.சண்முகம் மற்றும் தர்மர் ஆகியோரும், காங்கிரஸ் சார்பில் ப.சிதம்பரமும் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். சுயேட்சை வேட்பாளர்கள் 7 பேரும் தங்களை முன்மொழிய … Read more

மதுரை, ராமேஸ்வரம் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணிகளை கவனித்து வரும் பொறியாளர் தம்பதியர்

மதுரை: மதுரை மற்றும் ராமேஸ்வரம் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணிகளை தலைமை தாங்கி கவனித்து வருகின்றனர் பொறியாளர் தம்பதியர். தம்பதியர்களில் கணவர் மதுரை ரயில் நிலைய பணிகளையும், மனைவி ராமேஸ்வரம் ரயில் நிலைய பணிகளையும் கவனித்து வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி கடந்த 26-ஆம் தேதி நடைபெற்ற விழாவில் எழும்பூர், ராமேஸ்வரம், மதுரை, காட்பாடி, கன்னியாகுமரி ஆகிய ரயில் நிலையங்களை சுமார் 1800 கோடி ரூபாய் மதிப்பில் மறுசீரமைப்பு செய்வதற்கான பணிகளை துவக்கி வைத்தார். இதில் மதுரை … Read more

FIR மட்டும் போட்டிருந்தால் பாஸ்போர்ட் வழங்க தடையில்லை – நீதிமன்றம்

முதல் தகவல் அறிக்கை நிலையில் குற்ற வழக்கு நிலுவையில் இருக்கும் நபருக்கு பாஸ்போர்ட் வழங்குவதற்கு எந்த தடையும் இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. திருச்சியைச் சேர்ந்த ஷேக் அப்துல்லா என்பவர் மலேசியாவில் தொழில் செய்துவருகிறார். தமது பாஸ்போர்ட் தொலைந்துவிட்ட நிலையில் இந்தியா திரும்புவதற்காக தமக்கு புதிய பாஸ்போர்ட் வழங்கக்கோரி மலேசியாவில் இந்திய தூதரகத்தில் விண்ணப்பித்தார். ஆனால் அவர் கடந்த 2017 மற்றும் 2018 ஆண்டுகளில் திருச்சியில் இருந்தபோது சில குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ளதாகக்கூறி அவருக்கு … Read more