உபேர் ஃபைல்ஸ்: சட்டத்தின் ஓட்டைகள் வழியே சவாரி செய்தவர்கள் யார்?

வெளிநாட்டு வரி ஏய்ப்புகளில் பணக்காரர்களின் பணப் பரிவர்த்தனையைக் கண்காணித்த பிறகு, அது இப்போது ஒரு தொழில்நுட்ப நிறுவனத்தைப் பற்றியதாக மாறி உள்ளது. அது வணிக நடவடிக்கை உடன் வாடிக்கையாளர் வசதி ஆகியவற்றை இணைத்து, உலகம் முழுவதும் உள்ள கால் டாக்ஸி நிறுவனமான உபேர் மறுவடிவமைப்பு செய்துள்ளது. சர்வதேச புலனாய்வுப் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு (ICIJ) உடனான தனது எட்டாவது கூட்டு நடவடிக்கையில், இந்தியன் எக்ஸ்பிரஸ் நான்கு மாதங்கள் உபேர் (Uber) நிறுவனத்தின் கோப்புகளை ஆய்வு செய்தது. மேலும், உபேர் … Read more

அதிமுக பொதுச்செயலாளரின் முகாம் அலுவலகம் என்ற பெயரில் வெளியான அறிவிப்பு.!

அதிமுகவின் பொதுச் செயலாளரின் முகாம் அலுவலகம் என்ற பெயரில் சசிகலா விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவித்திருந்தாவது, “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிடர் கழகம் இணைப்பு விழா”  புரட்சித்தாய் சின்னம்மா அவர்களின் சீரிய தலைமையில், தாய் கழகமான, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தோடு, அண்ணா திராவிடர் கழகத்தை இணைக்கும் விழா வருகின்ற செவ்வாய்க்கிழமை (12-07-2022) அன்று காலை 11.00 மணிக்கு, தஞ்சாவூரில் அமைந்துள்ள தமிழரசி திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.  … Read more

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப்பணி 5 மாதங்களில் தொடங்கும்: அமைச்சர் மா.சுப்பிரமணியம்

மதுரை: ”மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டமைப்பு வரைபடம் வெளியிடப்பட இருக்கிறது. 2 மாதங்களில் கட்டுமானப்பணிகளுக்கான டெண்டர் பணிகள் தொடங்கும். 5 மாதங்களில் கட்டுமானப்பணி தொடங்கிவிடும்” என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்தார். மதுரை அருகே கொட்டாம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்தது. பள்ளி மாணவர்களுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி ஆகியோர் முன்னிலையில் மருத்துவர்கள் செவிலியர்கள் தடுப்பூசி போட்டனர். மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர் மற்றும் எம்எல்ஏ-க்கள் கலந்து … Read more

காளி தேவியின் ஆசீர்வாதம் இந்தியாவுக்கு எப்போதும் உண்டு – மோடி

Goddess Kali’s blessings are with country: PM Modi: உலக நலனுக்காக ஆன்மிக ஆற்றலுடன் முன்னேறி வரும் நாட்டிற்கு காளி தேவியின் அருள் எப்போதும் உண்டு என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கொல்கத்தாவில் ராமகிருஷ்ணா மிஷனால் ஏற்பாடு செய்யப்பட்ட சுவாமி ஆத்மஸ்தானந்தாவின் நூற்றாண்டு விழாவில் உரையாற்றிய பிரதமர், சுவாமி ராமகிருஷ்ண பரமஹம்சா காளி தேவியின் தரிசனம் பெற்றதாகவும், அவளது உணர்வால் அனைத்தும் வியாபித்திருப்பதாக நம்புவதாகவும் கூறினார். இதையும் படியுங்கள்: இலங்கையில் மக்கள் கிளர்ச்சி; இந்தியா … Read more

குடும்ப தகராறு.. தந்தையை கொலை செய்த மகன்.. ஹரியானாவில் நடந்த சோகம்..!

குடும்ப தகராறில் தந்தையை கொலை செய்த மகனை காவல்துறையினர் கைது செய்தனர். ஹரியானா மாநிலம்,  பானிபட், ஜவஹர் நகர் பகுதியை சேர்ந்தவர் மங்கத் ராம். இவருக்கு பிரேம் என்ற மகன் இருக்கிறார். பிரேமிற்கும் அவரது தந்தைக்கும் அடிக்கடி தகராறு ஏற்படும் என கூறப்படுகிறது. இந்நிலையில், சம்பவதன்று இருவருக்கும் இடையில் சம்பவதன்று இருவருக்கும் இடையில் மீண்டும் தகராறு ஏற்பட்டது.  ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த  அவர் தந்தையை  அங்கிருந்த கட்டையால் தாக்கியுள்ளார்.  அவரை தடுக்க முயன்ற  தாயையும் சரமாரியாக தாக்கியுள்ளார். … Read more

பூந்தமல்லி – கோயம்பேடு இடையே நாளை போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு: காவல் துறை எச்சரிக்கை

சென்னை: அதிமுக பொதுக்குழு காரணமாக நாளை (ஜூலை11) பூந்தமல்லி முதல் கோயம்பேடு வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை சார்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுக் குழு நாளை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெறுகிறது. இதன் காரணமாக பூந்தமல்லி முதல் கோயம்பேடு வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக போக்குவரத்து காவல்துஐ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக போக்குவரத்து காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வானகரத்தில் நடைபெறும் அரசியல் நிகழ்வு … Read more

கூட்டம் முடியுமுன்னே பேனர்கள் கிழிக்கப்பட்டதால் பாஜகவினர் போராட்டம்.. வேலூரில் பரபரப்பு

வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் ஒட்டப்பட்டிருந்த பாஜக பேனர், போஸ்டர் மாநகராட்சி ஊழியர்களால் கிழிக்கப்பட்டதையடுத்து பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் வேலூர் அடுத்த அரப்பாக்கத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று மற்றும் இன்று என இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது. இதனையொட்டி வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் பாஜக சார்பாக வால் போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் ஒட்டப்பட்டிருந்தன. இந்நிலையில் நிகழ்ச்சி முடிவுறும் … Read more

3.8 பில்லியன் டாலர் உதவி; இலங்கை மக்களுடன் இந்தியா நிற்கும் – வெளியுறவுத்துறை

Shubhajit Roy  India stands with people of Sri Lanka, has extended support of over $3.8 billion this year: MEA: இலங்கையில் ஏற்பட்டுள்ள சமீபத்திய சூழலுக்கு முதல் எதிர்வினையாக, அதாவது இலங்கை அதிபர் கோட்டபய ராஜபக்சேவின் இல்லத்தை ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் சனிக்கிழமை முற்றுகையிட்ட பின்னர், “ஜனநாயக வழிமுறைகள் மற்றும் மதிப்புகள், நிறுவப்பட்ட நிறுவனங்கள் மற்றும் அரசியலமைப்பு கட்டமைப்பின் மூலம் செழிப்பு மற்றும் முன்னேற்றத்திற்கான அவர்களின் எண்ணங்களை நனவாக்க இலங்கை மக்களுடன் நாங்கள் … Read more

#Breaking || நாளை அதிமுக பொதுக்குழு நடக்கவுள்ள நிலையில்., சற்றுமுன் சென்னை பெருநகர போக்குவரத்து காவல் விடுத்த அறிவிப்பு.!

அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நாளை நடைபெற உள்ளது. அதை சமயத்தில் ஓபிஎஸ் அதிமுக பொது குழு கூட்டத்திற்கு தடைக்குரிய வழக்கின் தீர்ப்பும் நாளை காலை 9 மணிக்கு வரவுள்ளது. இந்த தீர்ப்பில் அதிமுக பொது குழு கூட்டத்திற்கு ஏதேனும் நிபந்தனைகள் அல்லது கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருந்த போதிலும் அதிமுகவின் பொதுக்குழுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.   இந்நிலையில், சென்னை பெருநகர போக்குவரத்து காவல் விடுத்துள்ள அறிவிப்பில், “சென்னை, வானகரம் அருகில் நாளை (11.06.2022 … Read more

விழுந்து விழுந்து சிரித்த பொன்முடி: அப்படி என்னதான் சொன்னீங்க? – முதல்வரிடம் கேட்கும் நெட்டிசன்கள்

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதைக் கேட்டு அமைச்சர் பொன்முடி விழுந்து விழுந்து சிரித்த வீடியோ இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது. அரசு நிகழ்ச்சி ஒன்றில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் உயர்கல்வி துறை அமைச்சர் ஆகியோர் ஒன்றாக சிரித்து கொண்டு இருக்கும் வீடியோவை அமைச்சர் பொன்முடி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைச்சர் பொன்முடியின் காதில் ஏதோ ஒன்றை கூறுகிறார். அதைக் கேட்டவுடன் அமைச்சர் பொன்முடி விழுந்து விழுந்து சிரிக்கிறார். முதல்வர் … Read more