அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு: ஜூலை 11-ல் உயர் நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: ஜூலை 11-ம் தேதி நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழுக் கூட்டத்திற்கு தடை விதிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், வழக்கின் தீர்ப்பை வரும் திங்கட்கிழமை (ஜூலை 11) காலை 9 மணிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்திருந்த மனுவில், “பொதுக்குழு கூட்டத்திற்கு 15 நாட்களுக்கு முன்பாக அழைப்பு விடுக்க வேண்டும். ஆனால் ஜூலை 11-ம் தேதி பொதுக்குழு கூட்டம் … Read more

வடபழனி டூ அசோக் பில்லர் வரை போக்குவரத்து மாற்றம் செய்யத் திட்டம் – எந்த வழியாக செல்லலாம்?

சென்னை வடபழனி 100 அடி சாலையில் சந்திப்பிலிருந்து அசோக் பில்லர் வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. போக்குவரத்து நெரிசலைக் குறைத்திடும் நோக்கத்தில் நாளை 09.07.2022 முதல் போக்குவரத்து மாற்றங்கள் சோதனை முறையில் மேற்கொள்ளப்படவுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. அதன்படி 100 அடி சாலையில் வடபழனி சந்திப்பிலிருந்து அசோக் பில்லர் வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. 100 அடி சாலை 2-வது நிழற்சாலைச் சந்திப்பிலிருந்து 4-வது நிழற்சாலை சந்திப்பு வரை … Read more

ஃபிக்சட் டெபாசிட்: எந்த வங்கியில் அதிக லாபம்னு பாருங்க?

எஃப்டி கணக்குகளின் முதிர்வு காலம் 7 ​​நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரை இருக்கும். 5 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால், பிரிவு 80சி-ன் கீழ் வரிச் சலுகைகளையும் பெறலாம். இந்தியாவில் நிலவி வரும் பணவீக்கம் வங்கிகளின் எஃப்டி கணக்குகளுக்கான வட்டி விகிதத்தை அதிகரித்து செய்துள்ளது. இதனால் பிஎன்பி, எஸ்பிஐ, ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி மற்றும் கனரா வங்கி உள்ளிட்ட பல முன்னணி வங்கிகள் தங்கள் வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளன. எனவே, இந்த தருணத்தில் … Read more

நடிகர் விக்ரமுக்கு என்ன ஆனது… மருத்துமனை வெளியிட்ட அதிகாரபூர்வ அறிக்கை.!

நடிகர் விக்ரம் மாரடைப்பு (தகவல்) காரணமாக, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நடிகர் விக்ரமுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.  வெளியான முதல் கட்ட தகவல் படி அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரின் மகன் விடுத்துள்ள செய்தியில், “அப்பாவுக்கு மாரடைப்பு இல்லை. வதந்திகளை பரப்பாதீங்க, நம்பாதீங்க. இந்த மாதிரி … Read more

அதிமுக பொதுக்குழு நடக்குமா ?… 11 -ந் தேதி 9 மணிக்கு தீர்ப்பு, 9.15 -க்கு பொதுக்குழு ?

பொதுக்குழு நாளிலேயே தீர்ப்பு வெளியாகிறது…. வரும் 11-ந் தேதி காலை 9 மணிக்கு பொதுக்குழுவுக்கு தடைகோரிய வழக்கில் தீர்ப்பு அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் வரும் 11-ந் தேதி தீர்ப்பு வழங்கப்படும் – நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அதிமுக பொதுக்குழுவுக்கு தடைகோரிய வழக்கில் நேற்றும், இன்றும் விரிவான வாதங்கள் நடைபெற்ற நிலையில் வரும் 11-ல் தீர்ப்பு இபிஎஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், ஓபிஎஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ண குமார் உள்ளிட்டோர் … Read more

கோவையில் அதிமுக பிரமுகர் தொடர்புடைய இடங்களில் 3-வது நாளாக வருமான வரித் துறையினர் சோதனை

கோவை: கோவையில் அதிமுக பிரமுகர் தொடர்புடைய இடங்களில், மூன்றாவது நாளாக இன்றும் வருமான வரித் துறையினர் சோதனை ஈடுபட்டனர். கோவை வடவள்ளியில் உள்ள தொண்டாமுத்தூர் சாலை, நாராயணசாமி நகரைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவர், முன்னாள் அமைச்சரும், அதிமுக கொறடாவுமான எஸ்.பி. வேலுமணிக்கு நெருக்கமானவர். மேலும், “நமது அம்மா” நாளிதழ் வெளியீட்டாளராகவும், அதிமுக தெற்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலராகவும் உள்ளார். தவிர, சில தனியார் நிறுவனங்கள், அறக்கட்டளைகளை நடத்தி வருகிறார். வரி ஏய்ப்பு தொடர்பாக, வருமான வரித்துறை … Read more

'அன்று ஒரு பேச்சு, இன்று ஒரு பேச்சு'.. இபிஎஸை கலாய்த்த புகழேந்தி

எடப்பாடி பழனிசாமி அன்று ஒரு பேச்சு இன்று ஒரு பேச்சு என பேசி வருகிறார் என அதிமுக மூத்த தலைவர் புகழேந்தி தெரிவித்துள்ளார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

விஜிலன்ஸ் ரெய்டு: காமராஜ் வீட்டு முன்பு திரண்ட அ.தி.மு.க-வினர்

க. சண்முகவடிவேல் தமிழக முன்னாள் உணவுத்துறை அமைச்சரும், அ.தி.மு.க திருவாரூர் மாவட்ட செயலாளராகவும் உள்ள ஆர்.காமராஜ் எம்எல்ஏவுக்கு சொந்தமான திருச்சி பிளாசம் நட்சத்திர ஹோட்டல் மற்றும் வீடு உள்ளிட்ட அவரது உறவினர்கள், நண்பர்கள் வீடு உட்பட 49 இடங்களில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இன்று காலை 5 மணி அளவில் மன்னார்குடி வடக்கு வீதியில் உள்ள அவரது இல்லத்துக்கு லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சத்தியசீலன் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட போலீஸார் … Read more

#BigBreaking || பதவி காலி… சற்றுமுன் ஓபிஎஸ் தரப்பு பரபரப்பு வாதம்.!

அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க கோரி ஓ பன்னீர்செல்வம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் ஒருவர் தரப்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு இன்று இரண்டாவது நாளாக நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்த போது, எடப்பாடி பழனிச்சாமி தரப்பில், அதிமுக பொதுக்குழு நிகழ்ச்சி நிரல்கள் கட்சி அலுவலகத்தால் விநியோகிக்கப்பட்டவை என்றும், வரைவு நிகழ்ச்சி நிரலுக்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் வழங்கவில்லை என்றும், ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகள் காலியானாலும் எந்த வெற்றிடமும் ஏற்படாது … Read more

உணவகங்கள், மருந்தகங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக், கெட்டுப்போன உணவு பொருட்கள் பறிமுதல்.!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பார்த்திபனூரில் உணவகங்கள், மருந்தகங்கள் மற்றும் மளிகைக்கடைகளில் உணவு பாதுகாப்புத்துறையினர் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 600 கிலோ அளவிலான தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் 27 கிலோ அளவிலான கெட்டுப்போன உணவுப்பொருட்கள், காலாவதியான மருந்துகள் மற்றும் 10 வீட்டு உபயோக சிலிண்டர்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்ததுடன் விதிமுறைகளை பின்பற்றாமல் தொடர்ந்து செயல்படும் பட்சத்தில் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை … Read more