‘என்னய்யா… திடீர்னு காவி கலரா மாறுது!’: அன்பில் மகேஷ் தொகுதி ஆச்சரியம்

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொகுதியில் உள்ள நீர்த்தேக்க தொட்டி காவி நிறத்திற்கு மாற்றப்பட்டு வருவது குறித்து அப்பகுதி  திமுகவினர் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர். இது குறித்த விபரம் வருமாறு : திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றிய கிராம ஊராட்சி பகுதிகள் மற்றும் கூத்தைப்பார்  பேரூராட்சி, துவாக்குடி நகராட்சி ஆகிய பகுதிகளில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் மேலே பச்சை நிற வண்ணத்தில் நடுவில் இளம் மஞ்சளில் கீழே பச்சை வண்ணத்தில்  பளிச்சென்று இது நாள் வரை … Read more

தஞ்சாவூர்.! குடும்ப பிரச்சினை காரணமாக தொழிலாளி தற்கொலை.!

தஞ்சாவூர் மாவட்டத்தில் குடும்ப பிரச்சினை காரணமாக தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் குலசேகரநல்லூர் தோப்பு தெருவை சேர்ந்தவர் தொழிலாளி ராமதுரை(52). இவருடைய மனைவி பழனியம்மாள். இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் ராமதுரை குடும்ப பிரச்சனை காரணமாக மன வேதனையடைந்து தற்கொலை செய்வதற்காக விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் விஷம் குடித்து மயங்கி கிடந்த ராமதுரையை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு … Read more

டிப்பர் லாரி மீது தனியார் பள்ளி வாகனம் வேகமாக மோதியதில் 3 மாணவர்கள் படுகாயம்.!

செங்கல்பட்டில் முன்னால் சென்று கொண்டிருந்த டிப்பர் லாரி மீது தனியார் பள்ளி வாகனம் வேகமாக மோதியதில் ஓட்டுநர் மற்றும் 3 மாணவர்கள் பலத்த காயமடைந்தனர். மண்ணிவாக்கம் பகுதியில் சாலையின் குறுக்கே மாடு ஒன்று வந்த நிலையில், டிப்பர் லாரி ஓட்டுநர் திடீரென பிரேக் பிடித்தார். அப்போது பின்னால் வந்த பள்ளி வாகனம் டிப்பர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த காட்சிகள் சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ள நிலையில் மண்ணிவாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர். மாடுகளை சாலையில் விட்ட … Read more

தி.மலையில் மாற்றுத்திறனாளி சிறுவன் சிவானந்தத்தை சந்தித்த முதல்வர் ஸ்டாலின் 

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் கிராமத்தில் வசித்து வரும் மாற்றுத்திறனாளி சிறுவன் சிவானந்தத்தின் இல்லத்திற்குச் சென்ற தமிழக முதல்வர் மு.க.ஸாட்லின், அப்பயனாளிக்கு மருத்துவ உபகரணங்களை வழங்கி நலம் விசாரித்தார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி: தமிழக முதல்வர் இன்று (ஜூலை 8) திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் கிராமத்தில் வசித்து வரும் சிறுவன் சிவானந்தம் (வயது 14) என்ற மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளியின் இல்லத்திற்கு சென்று, அவருக்கு அரசின் அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு மறுவாழ்வு பெற்ற விவரங்களை … Read more

அண்ணா ஆர்ச் பகுதியில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம் – இனிமே இப்படித்தான் போகணும்!

அண்ணா ஆர்ச் பகுதியில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. சென்னை ஈ.வே.ரா சாலையானது சென்னையில் முக்கிய சாலைகளில் ஒன்றாகும். பெருகி வரும் வாகன போக்குவரத்தால் காலை மற்றும் மாலை வேளைகளில் இந்த சாலையில் போக்குவரத்து நெரிசல்கள் அதிக அளிவில் ஏற்படுகிறது. எனவே ஈ.வே.ரா சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க போக்குவரத்து மாற்றங்கள் நாளை 09.07:2022 முதல் 10 நாட்களுக்கு சோதனை ஓட்டமாக அமல்படுத்தப்பட உள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. … Read more

உங்கள் குழந்தையின் உயரம் அதிகமாகனுமா… அப்போ இந்த உணவுகளை மறக்காம கொடுங்க!

உங்கள் குழந்தையின், உயரத்தைப் பற்றி நிங்கள் கவலைக்கொள்கிறீர்களா? ஆனால் உயர்த்தை அதிகப்படுத்துவதைக் காட்டிலும் இருக்கும் உயரத்தை தக்க வைக்க வேண்டும். இது கேட்பதற்கு பொருந்தாமல் இருந்தாலும், இதுதான் உண்மை. இந்நிலையில், நாம் சில உணவுகளை குழந்தைகளுக்கு சாப்பிடக்கொடுத்தால், அவர்கள் உயரம் அதிகமாகும். கால்சியம், வைட்டமின் டி, மெக்னீஷியம்,  பாஸ்பரஸ் உள்ள உணவுகளை சாப்பிட்டால், ஆரோக்கியமான எலும்புகள் வளரவும், தசைகள் உருவாகவும் உதவுகிறது. தயிர் இதில் கால்சியம் சத்து அதிகம் இருக்கிறது. எலும்புகளை வலுவாக்க உதவுகிறது. சிறு வயதில் … Read more

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக கணவர் விஷம் குடித்து தற்கொலை.!

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். கடலூர் மாவட்டம் பெத்தநாயக்கன் குப்பம் பகுதியை சேர்ந்தவர் வாசுதேவன். இவரது மனைவி வளர்மதி. இவர்களுக்கு இரண்டு மகளும், ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் மகனை கல்லூரியில் சேர்ப்பது தொடர்பாக கணவன் மனைவியிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த கணவர் வாசுதேவன், தற்கொலை செய்வதற்காக பூச்சி மருந்தை குடித்துவிட்டு மயங்கி கிடந்துள்ளார். இதையடுத்து வாசுதேவனை குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். பின்பு … Read more

தொழுப்பேடு பேருந்து விபத்தில் பலியான 6 பேர் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே தொழுப்பேடு என்னும் இடத்தில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் பலியான 6 பேரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.5 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் வழங்கவும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “இன்று (ஜூலை 8) காலை செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் … Read more

விஜிலன்ஸ் ரெய்டில் சிக்கிய மாஜி அமைச்சர் காமராஜ்: 49 இடங்களில் சோதனை

 Former AIADMK minister Kamaraj  Tamil News: கடந்த அதிமுக ஆட்சிகாலத்தில் அமைச்சர்களாக இருந்த எம்.ஆர். விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, கே.சி.வீரமணி, சி.விஜயபாஸ்கர், கேபி அன்பழகன் ஆகியோரது வீடுகளில் ஏற்கனவே வருமான வரி சோதனை நடைபெற்றது. இந்நிலையில், அதிமுக ஆட்சியில் உணவுத்துறை அமைச்சராக இருந்த காமராஜின் வீடு உள்பட அவருக்கு தொடர்புடைய 49 இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அதிமுக ஆட்சியில் 2015 முதல் 2021-ம் ஆண்டு வரை உணவுத்துறை அமைச்சராக … Read more

பல்வேறு காலியிடங்கள்.. மெட்ரோ ரயில்வேயில் வேலை வாய்ப்பு..!

மெட்ரோ ரயில்வேயின் அதிகாரபூர்வ இணையதளத்தில் பல்வேறு நிர்வாகிகள் காலியிடங்களுக்கான  வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக டிப்ளமோ மற்றும் பட்டம் கொடுக்கப்பட்டுள்ளது.  இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக சென்னை கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள்  எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள்.  நிறுவனம் : மெட்ரோ ரயில்வே பணியின் பெயர் : பல்வேறு நிர்வாகிகள் கல்வித்தகுதி : டிப்ளமோ மற்றும் பட்டம் பணியிடம் : சென்னை … Read more