அவர் விஜயின் அம்மா… ஆனால் எனக்கு மனைவி அல்ல… இயக்குனர் எஸ்.ஏ.சி

80-களில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநகராக திகழ்ந்தவர் எஸ்.ஏ.சந்திரசேகர். முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்து இவர், நடிகர் விஜயகாந்தை நாயகான வைத்து பல படங்களை இயக்கியுள்ளார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் வெற்றி கண்டவர் எஸ்.ஏ.சந்திரசேகர். தொடர்ந்து 90-களின் தொடக்கத்தில் தனது மகன் விஜய்யை நாயகனாக்கி சில படங்களை இயக்கினார். தற்போது நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்துகொண்டிருக்கிறார். 70 படங்களுக்கு மேல் இயக்கியுள்ள … Read more

#கோவை || கஞ்சா விற்பனை செய்த மூன்று பேர் கைது.!

கோவை மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்த மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோவை மாவட்டம் செல்வபுரம் அருகே உள்ள அசோக் நகர் பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து போலீசார் அப்பகுதியில் சென்று விசாரணை செய்ததில் கஞ்சாவை பதுங்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த நல்லூசாமி(46) என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 1 கிலோ கஞ்சா மற்றும் 530 ரூபாயை பறிமுதல் செய்தனர். இதேபோல் மதுக்கரை … Read more

10ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை.. தனியார் பள்ளியின் தாளாளர் ”காவேரி” யுவராஜ் கைது.!

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே 10ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் தனியார் பள்ளியின் தாளாளர் ”காவேரி” யுவராஜ் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். சேங்கல் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் பயின்று வரும் 10ஆம் வகுப்பு மாணவிக்கு, 4 மாதமாக பாலியல் தொல்லை கொடுத்து வந்த தமிழ் ஆசிரியர் நிலவொளி போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், விசாரணை தீவிரமடைந்தது. அதில், மாணவியிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில்  மாணவிக்கு பள்ளியின் … Read more

ஓவேலியில் மீண்டும் யானை தாக்கி தேயிலைத் தொழிலாளி உயிரிழப்பு

கூடலூர்: ஓவேலியில் கடந்த மே மாதம் இருவர் யானை தாக்கி உயிரிழந்த நிலையில், இன்று மீண்டும் தேயிலை தொழிலாளியை யானை தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நீலகிரி மாவட்டம்‌, கூடலூர்‌ சட்டப்பேரைவை தொகுதி, ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட ஆரூட்பாறை பகுதியில்‌ கடந்த மே மாதம் ஆனந்த்(43) என்பவரை யானை தாக்கி கொன்றது. மறுநாள், ஓவேலி கிராமம்‌ பாரம்‌ எஸ்டேட்‌ பகுதியில்‌ வசிக்கும்‌ மாலு(30) என்ற பெண்னை யானை தாக்கிக் கொன்றது. தொடர்ந்து இரண்டு பேர் அடுத்தடுத்து … Read more

தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த தாயை ஓடிச் சென்று கட்டியணைத்த சிறுமி! – தேனியில் சோகம்

போடி அருகே குடும்ப வறுமை காரணமாக தீக்குளித்து தாய் மகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் போடி அருகே மேலச்சொக்கநாதபுரம் தெற்கு ராஜா வீதியில் வசித்து வருபவர்கள் நல்லுச்சாமி (34) முத்துலட்சுமி என்ற ஷோபனா (27) தம்பதியினர். இவர்களுக்கு திருமணம் ஆகி 9 ஆண்டுகள் ஆன நிலையில் இவர்களுக்கு ஹேமா ஸ்ரீ என்ற 8 வயது பெண் குழந்தை உள்ளார். இந்நிலையில் வழக்கம் போல் காலை நல்லுச்சாமி வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில், அவரது வீட்டில் … Read more

#தமிழகம் || காதல் விவாகரத்தில் வீடு புகுந்து 19 வயது அபர்ணா என்ற இளம் பெண் கழுத்தறுத்து படுகொலை.! நாடக காதலனின் கொடூர செயல்.!

மதுரை பொன்மேனி பகுதியில் வீட்டில் தனியாக இருந்த 19 வயது அபர்ணா என்ற இளம் பெண், வீடு புகுந்து கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் அபர்ணாவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், அபர்ணா கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வெளியான முதல் கட்ட தகவலின் படி காதல் விவகாரத்தில், இளைஞர் ஹரிஹரன் என்பவர் வீடு புகுந்து அபர்ணாவை கழுத்தை அறுத்து கொலை செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.  … Read more

ராஜீவ் கொலையாளிகள் 6 பேர் விடுதலை; சுப்ரீம் கோர்ட்தான் முடிவு எடுக்க வேண்டும்: அமைச்சர் ரகுபதி

க. சண்முகவடிவேல் தமிழக முன்னாள் அமைச்சர் காமராஜ் வீடுகளில் நடைபெற்று பெரும் லஞ்ச ஒழிப்பு சோதனைக்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உட்பட பல்வேறு அதிமுக பிரமுகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், புதுக்கோட்டையில் செய்தியாளர்களை இன்று சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்ததாவது:- ”லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தினால் சோதனையில் சிக்குபவர்கள் பழிவாங்கும் நடவடிக்கை என்று சொல்வது வாடிக்கை தான். அதை விடுத்து தங்கள் வீட்டில் சோதனை நடந்தால் நியாயமானது என்று யாரும் சொல்ல மாட்டார்கள். … Read more

வாடகை கடையை காலி செய்ய மறுத்ததால், கடைக்கு முன் பாராங்கற்களை குவித்து வைத்த அதன் உரிமையாளர்.!

நாகர்கோவில் அருகே வாடகை கடையை காலி செய்ய மறுத்ததால், கடையை திறக்க முடியாத அளவிற்கு கடைக்கு முன், அதன் உரிமையாளர் பாரங்கற்களை குவித்து வைத்துள்ளார். நாகர்கோவில் மணிமேடை சந்திப்பு அருகே சங்கரநாராயணன் என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் பிரசாத், கண்ணன் ஆகியோர் மொபைல் கடை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அந்த கட்டிடத்தை, சங்கரநாராயணன் வேறு ஒரு நபருக்கு விற்பனை செய்யவுள்ளதால்,  மொபைல் கடையை காலி செய்து தருமாறு கண்ணனிடம்  கேட்டுள்ளார். இதற்கு கண்ணன் மறுத்ததால் இருதரப்பினர் இடையே பிரச்னை இருந்து … Read more

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு: ஜூலை 11-ல் உயர் நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: ஜூலை 11-ம் தேதி நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழுக் கூட்டத்திற்கு தடை விதிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், வழக்கின் தீர்ப்பை வரும் திங்கட்கிழமை (ஜூலை 11) காலை 9 மணிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்திருந்த மனுவில், “பொதுக்குழு கூட்டத்திற்கு 15 நாட்களுக்கு முன்பாக அழைப்பு விடுக்க வேண்டும். ஆனால் ஜூலை 11-ம் தேதி பொதுக்குழு கூட்டம் … Read more

வடபழனி டூ அசோக் பில்லர் வரை போக்குவரத்து மாற்றம் செய்யத் திட்டம் – எந்த வழியாக செல்லலாம்?

சென்னை வடபழனி 100 அடி சாலையில் சந்திப்பிலிருந்து அசோக் பில்லர் வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. போக்குவரத்து நெரிசலைக் குறைத்திடும் நோக்கத்தில் நாளை 09.07.2022 முதல் போக்குவரத்து மாற்றங்கள் சோதனை முறையில் மேற்கொள்ளப்படவுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. அதன்படி 100 அடி சாலையில் வடபழனி சந்திப்பிலிருந்து அசோக் பில்லர் வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. 100 அடி சாலை 2-வது நிழற்சாலைச் சந்திப்பிலிருந்து 4-வது நிழற்சாலை சந்திப்பு வரை … Read more