டிப்பர் லாரி மீது தனியார் பள்ளி வாகனம் மோதி விபத்து.! 3 மாணவர்கள் படுகாயம்.!

டிப்பர் லாரி மீது தனியார் பள்ளி வாகனம் மோதி விபத்தில் 3 மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் மண்ணிவாக்கம் பகுதியில் டிப்பர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்பொழுது சாலையின் குறுக்கே மாடு ஒன்று வந்ததால் டிப்பர் லாரி ஓட்டுநர் திடீரென பிரேக் பிடித்தார். இந்நிலையில் பின்னால் வந்த பள்ளி வாகனம் ஒன்று டிப்பர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மூன்று மாணவர்கள் பலத்த காயம் அடைந்துள்ளனர். இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் காயம் … Read more

போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு ஜூலை 11-ல் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை – அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நடக்கிறது

சென்னை: போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான 14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில் சென்னை குரோம்பேட்டை பயிற்சி மைய வளாகத்தில், வரும் 11-ம் தேதி நடக்க உள்ளது. தமிழகத்தில் உள்ள 8 அரசு போக்குவரத்துக் கழகங்களில் 1.20 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு ஒப்பந்தம் அமைக்கப்பட வேண்டும். கடந்த 2016-ம் ஆண்டு இறுதி செய்யப்பட வேண்டிய 13-வது ஊதிய ஒப்பந்தம் ஓராண்டு தாமதமாக 2017-ம்ஆண்டு அமைக்கப்பட்டது. பின்னர், … Read more

ராணிப்பேட்டை.! விஷம் குடித்து விவசாயி தற்கொலை.!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டுள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அருகே கோபாலபுரம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி துறை(54). இவர் உடல்நல பாதிப்பால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.  இதனால் இவர் மனம் உடைந்து தற்கொலை செய்து கொள்வதற்காக விவசாய நிலத்திற்கு சென்று பூச்சி மருந்தை குடித்து மயங்கி கிடந்துள்ளார். அவ்வழியாக சென்றவர்கள் விஷம் குடித்து மயங்கி கிடந்த துறையை மீட்டு சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி … Read more

மேகேதாட்டு விவகாரம் | “ஓரணியாய் நின்று போராட வேண்டிய கட்டாயத்தில் தமிழகம்” – வேல்முருகன்

சென்னை: “தமிழகத்திற்கும், தமிழினத்திற்கும் தொடர்ந்து துரோகத்தையும் வஞ்சத்தையும் விளைவித்து வரும் கர்நாடகம், மத்திய அரசுக்கு எதிராக தமிழகம் ஓரணியாய் நின்று போராட வேண்டிய கட்டாயமும் நமக்கு ஏற்பட்டுள்ளது” என்று தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”1974க்கு பிறகு கர்நாடக அரசு எந்த காலத்திலும் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை முறையாக வழங்கியதில்லை. காவிரி நடுவர்மன்ற இடைக்கால உத்தரவுப்படி மாதவாரியாக 205 டி.எம்.சி தண்ணீரையோ, இறுதித் தீர்ப்பின்படி … Read more

#BREAKING || சுமார் 1000 சவரன் நகை… கட்டுக்கட்டாக பணம்…?! ரெய்டில் சிக்கியது என்ன? அதிமுக முன்னாள் அமைச்சர் பேட்டி.!

அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதிமுக ஆட்சி காலத்தில் உணவுத்துறை அமைச்சராக இருந்தவர் காமராஜர்.  இந்நிலையில், முன்னாள் அமைச்சர் காமராஜர் வீட்டில் இன்று அதிகாலை முதல் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.  திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் உள்ள காமராஜரின் வீடு, அவரது உறவினர்கள், நண்பர்கள் வீடு என தமிழக முழுவதும் 49 இடங்களில் காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர். … Read more

அமிர்தா ஸ்கூல் ஆஃப் இன்ஜினீயரிங் – ‘இந்து தமிழ் திசை’ சார்பில் ‘உயர்வுக்கு உயர்கல்வி’ வழிகாட்டி நிகழ்ச்சி: சென்னையில் நாளை தொடக்கம்

சென்னை: பிளஸ் 2 படித்துவிட்டு, அடுத்த என்ன படிப்பது, எங்கே படிப்பது, எந்தப் படிப்புக்கு வேலைவாய்ப்பு அதிகம் என பல கேள்விகள் மாணவர்களுக்கு எழும். அத்தகைய மாணவ-மாணவிகளுக்கு ஆலோசனைகளையும், வழிகாட்டுதலையும் வழங்கும் வகையில், அமிர்தா ஸ்கூல் ஆஃப் இன்ஜினீயரிங், ‘இந்து தமிழ் திசை’ சார்பில் ‘உயர்வுக்கு உயர்கல்வி’ எனும் வழிகாட்டு நிகழ்ச்ச்சி சென்னையில் நாளை (ஜூலை 9) தொடங்கி, இரு நாட்கள் நடைபெறுகிறது. சென்னை மயிலாப்பூரில் உள்ள சாந்தோம் மேல்நிலைப் பள்ளியின் மான்ட்ஃபோர்ட் இண்டோர் ஆடிட்டோரியத்தில் காலை … Read more

செல்போனின் பேசியபடியே தண்டவாளத்தை கடந்த இளைஞருக்கு நேர்ந்த சோகம்..!

செல்போன் பேசியடியே சென்ற மாணவன் ரயில் மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், அம்மாபட்டியைச் சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகன்  ஜெகன் அங்குள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றில் முதலாமாண்டு படித்து வருகிறார்.  சம்பவதன்று, கல்லூரி முடித்து விட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது , அங்குள்ள தண்டவாளத்தை  செல்போன் பேசியப்படியே கடக்க முயன்றார்.  அப்போது, எதிர்பாராத  விதமாக திருநெல்வேலியில் இருந்து தாதர் நோக்கி சென்ற தாதர் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே … Read more

எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் இரு பிரிவினர் நாற்காலிகளை வீசி தாக்குதல்.!

ராமநாதபுரத்தில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் இருபிரிவினர் நாற்காலிகள் வீசி தாக்கியதில் சிலருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. புதிய பேருந்து நிலையம் அருகே தனியார் மண்டபத்தில், அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர் முனியசாமி தலைமையில் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் பங்கேற்ற சிலர் திடீரென இ.பி.எஸ்.க்கு எதிராக கருத்து தெரிவித்ததாக கூறப்படும் நிலையில், அங்கிருந்தவர்களுக்கு இடையே கைக்கலப்பில் ஈடுபட்டு நாற்காலிகளை எடுத்து வீசி தாக்குதல் நடத்தினர். இதில், சிலர் காயமடைந்த நிலையில், கூட்டம் நடந்த இடத்திற்கு வெளியே … Read more

ஓசூரில் புத்தகத் திருவிழா: குளிர்சாதன வசதியுடன் கோலாகலமாக தொடக்கம்

ஓசூர்: ஓசூர் நகரில் மாநிலத்திலேயே முதல் முறையாக அரசு ஒத்துழைப்புடன் புத்தகத் திருவிழா குளிர்சாதன வசதியுடன் கோலாகலமாக தொடங்கியது. கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து ஓசூரில் 11-வது புத்தகத் திருவிழா ஹில்ஸ் ஹோட்டல் அரங்கில் இன்று காலை 10.3 0மணியளவில் தொடங்கியது. இந்த தொடக்க நிகழ்வுக்கு புத்தகத் திருவிழா குழு தலைவர் அறம்கிருஷ்ணன் வரவேற்புரை நிகழ்த்தினார். கோட்டாட்சியர் தேன்மொழி முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் முனைவர் சேதுராமன் புத்தகத்திருவிழா நோக்கம் மற்றும் அறிமுக உரையாற்றினார். … Read more

Vijay Tv Serial: ராதிகா- கோபி உறவை போட்டு உடைத்த பாக்யா; என்ன நடக்கும் இனி?

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் உச்ச கட்ட பரபரப்பை அடைந்துள்ளது. இந்த சீரியலின் முக்கிய கதாபாத்திரம் பாக்கியலட்சுமி என்கிற பாக்கியா. 40களின் இறுதியில் இருக்கும் பாக்கியாவுக்கு வளர்ந்த 2 மகன்கள், அதில் ஒரு மகனுக்கு திருமணமாகி மருமகள் இருக்கிறாள். ஒரு மகள் பள்ளிக்கூடம் படிக்கிறாள். கணவன் கோபி படித்தவன் தனியாக ஒரு நிறுவனம் நடத்துகிறான். பாக்கியா ஓரளவுக்கு மட்டுமே படித்தவள். குடும்பமே உலகம் என நினைப்பவள். ஒரு சிறிய கேட்டரிங் நிறுவனத்தை … Read more