காரைக்காலில் வயிற்றுப் போக்கால் யாரும் உயிரிழக்கவில்லை: புதுவை அரசு விளக்கம்

காரைக்கால்: காரைக்காலில் வயிற்றுப் போக்கால் யாரும் உயிரிழக்கவில்லை என புதுவை அரசு விளக்கமளித்துள்ளது. காரைக்காலில் வயிற்றுப் போக்கால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு, காலரா தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டுள்ளதால் பொது சுகாதார அவசர நிலை பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காரைக்காலில் வயிற்றுப் போக்கால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 2 பேர் உயிரிழந்ததாக இன்று(ஜூலை 3) பிற்பகலில் செய்திகள் வெளியாயின. இதனை நலவழித்துறை மறுத்துள்ளது. இது குறித்து காரைக்கால் மாவட்ட நலவழித்துறை துணை இயக்குநர் டாக்டர் ஆர்.சிவராஜ்குமார் கூறியது: காரைக்காலில் … Read more

IBPS Clerk 2022; பட்டப் படிப்பு தகுதி; 6,035 கிளர்க் பணியிடங்கள்; உடனே அப்ளை பண்ணுங்க!

IBPS Clerk recruitment 2022 for 6,035 posts How to apply online: நாட்டிலுள்ள பொதுத்துறை வங்கிகளில் கிளர்க் காலிப் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் வெளியிட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பில் நாடு முழுவதும் 6,035 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 288 காலிப்பணியிடங்கள் உள்ளன. பொதுத்துறை வங்கிகளில் கிளர்க் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசம் வாரியாக செய்யப்படுவதால், ஒரு விண்ணப்பதாரர், ஒரே ஒரு மாநிலத்திற்கு … Read more

#புதுக்கோட்டை || கார் மோதியதில் சாலையோரம் நின்று கொண்டிருந்த கணவன்-மனைவி உயிரிழப்பு.!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கார் மோதியதில் சாலையோரம் நின்று கொண்டிருந்த கணவன்-மனைவி உயிரிழந்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் விராலூர் பகுதியை சேர்ந்தவர் செல்வம்(50). இவரது மனைவி கல்யாணி(45). இவர்களுக்கு நான்கு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் இன்று காலை விராலூர் பேருந்து நிலையம் அருகே சாலையோரம் பேருந்திற்காக கணவன்-மனைவி இருவரும் நின்று கொண்டிருந்தனர். அப்பொழுது அவ்வழியாக அதிவேகத்தில் வந்த கார் ஒன்று கணவன்-மனைவி மீது மோதி சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் கணவன்-மனைவி இருவரும் தூக்கி வீசப்பட்ட நிலையில் சம்பவ … Read more

75 வயது மாமியாரை கட்டையால் அடித்து கொலை செய்த மருமகள்.. மாமியார் உயிரிழந்த செய்தி கேட்ட மருமகள் தூக்கிட்டு தற்கொலை..!

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே மாமியாரை கட்டையால் அடித்த மருமகள் அவர் உயிரிழந்த செய்தி கேட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறால் தைலம்மாள் என்ற 75 வயது மூதாட்டியை அவரது மருமகள் செல்வி கட்டையால் சரமாரியாகத் தாக்கியதாக கூறப்படுகிறது. ரத்த காயங்களுடன் முனகி கொண்டிருந்த தைலம்மாளை அவரது மகன் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். வீட்டில் இருந்த செல்வி … Read more

ஒழுங்கீனமும், முறைகேடும் தலைதூக்கினால் சர்வாதிகாரியாக மாறுவேன்: முதல்வர் ஸ்டாலின் 

நாமக்கல்:” உள்ளாட்சிப் பிரதிநிதிகள் அனைவரும் சட்டப்படி, விதிமுறைப்படி, நியாயத்தின்படி மக்களுக்காக நடந்துகொள்ள வேண்டும். இதனை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கடுமையாக நான் எச்சரிக்கிறேன். கட்சி ரீதியான நடவடிக்கை மட்டுமல்ல, சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் ” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். நாமக்கல்லில் திமுக உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு இன்று நடைபெற்றது. பொம்மை குட்டைமேடு என்ற பகுதியில் நடந்த இந்த மாநாட்டில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது அவர் … Read more

`ஒழுங்கீனமாக இருந்தால், சர்வாதிகாரி போல் நடவடிக்கை எடுப்பேன்’- முதல்வர் ஸ்டாலின் உரை!

நாமக்கல்லில் நடைபெற்று வரும் நகர்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “நீங்கள் (உள்ளாட்சி பிரதிநிதிகள்) இந்த இடத்திற்கு வந்துள்ளீர்கள் என்றால் அது சாதாதணமானது அல்ல. உங்கள் உழைப்பு, உங்கள் திறமை, உங்கள் தியாகம் போன்றவையே அதற்கு காரணம். இங்கு ஆண்களை விட பெண்களே உள்ளாட்சி பொறுப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள். உள்ளாட்சி அமைப்புகள் மக்களாட்சியின் உயிர் நாடி. மக்கள் பணியில் முதல் பணி என்பது உள்ளாட்சிகள். இங்குதான் மக்கள் பணியாற்ற பயிற்சியும், வாய்ப்பும் கிடைக்கும். திமுகவை … Read more

இந்த பூனை உட்கார்ந்திருக்கிறதா? அந்தரத்தில் இருக்கிறதா? சரியா சொல்லுங்க!

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சமீப காலமாக இணையத்தை புயல் போல தாக்கி வருகிறது. ஒரு சுவாரசியமான பொழுதுபோக்கு புதிராக நெட்டிசன்களை காந்தம் போல ஈர்த்து வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மூளைக்கு நல்ல பயிற்சியை அளிக்கின்றன. அதோடு, யதார்த்தத்தைக் கேள்விக்குட்படுத்தி, உண்மை இது அல்ல என்று எடுத்துரைக்கிறது. எல்லாமே தோற்ற மயக்கம், காட்சிப் பிழை என்று மனிதனை சிந்திக்க வைக்கிறது. பொதுவாக ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் முதல் பார்வையில் ஒரு மாதிரியாகவும் இரண்டாவது பார்வையில் வேறு மாதிரியாகவும் … Read more

கடலில் சிக்கிய மீனவர்கள் சடலமாக மீட்பு.. சோகத்தில் குடும்பத்தினர்..!

கடல் சீற்றத்தில் சிக்கி மாயமான மீனார்கள் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், மங்களேஸ்வரி நகரில் இருந்து நேற்று முன்தினம் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் மீன் பிடிக்க சென்றனர். அவர்கள் மீன் பிடித்து விட்டு கரைக்கு திரும்பும் போது எதிர்பாராத விதமாக அவர்கள் கடல் சீற்றத்தில் படகு கவிழ்ந்தது. அதில், படகில் பயணித்தவர்கள் கடலில் மூழ்கினர். அவர்களில் இருவரை சக மீனவர்கள் மீட்டனர். மற்ற இருவரும் கடலில் மாயமாகினர்.  அவர்களை தேடும் பணியில் மீனவர்களும், … Read more

புதுவையில் காங்கிரஸ் கூட்டணி யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆதரவு: நாராயணசாமி

புதுச்சேரி: புதுச்சேரியில் காங்கிரஸ், திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆதரவாக உள்ளது என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: ”குடியரசுத் தலைவர் என்பவர் சுதந்திரமாக செயல்பட வேண்டும். ரப்பர் ஸ்டாம்ப்பாக இருக்கக் கூடாது. பிரதமர், அமைச்சர்கள், நீதிபதிகளுக்கு எப்படி தனி அதிகாரம் உள்ளதோ, அதேபோல் குடியரசுத் தலைவருக்கும் உள்ளது. ஆளுங்கட்சிக்கு ஜால்ரா போடுபவராக குடியரசுத் தலைவர் இருக்கக் கூடாது. அவர் முடிவு எடுக்கும்போது இந்திய … Read more

விஜயகாந்தின் உடல்நிலையில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளது – பிரேமலதா

விஜயகாந்தின் உடல்நிலையில் சற்று தொய்வு இருப்பதாகவும், விரைவில் அவர் மீண்டு வருவார் என்றும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். சென்னையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசு தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு ஆதரவு தெரிவிக்கும் நிகழ்ச்சியில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் விஜயகாந்தின் உடல்நிலையில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். மருத்துவர்களின் அறிவுறுத்தல் படி தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றும் விரைவில் பூரண … Read more