பல்வேறு காலியிடங்கள்.. மெட்ரோ ரயில்வேயில் வேலை வாய்ப்பு..!

மெட்ரோ ரயில்வேயின் அதிகாரபூர்வ இணையதளத்தில் பல்வேறு நிர்வாகிகள் காலியிடங்களுக்கான  வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக டிப்ளமோ மற்றும் பட்டம் கொடுக்கப்பட்டுள்ளது.  இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக சென்னை கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள்  எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள்.  நிறுவனம் : மெட்ரோ ரயில்வே பணியின் பெயர் : பல்வேறு நிர்வாகிகள் கல்வித்தகுதி : டிப்ளமோ மற்றும் பட்டம் பணியிடம் : சென்னை … Read more

தொழுப்பேடு பேருந்து விபத்து: ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல் 

சென்னை: தொழுப்பேடு பேருந்து விபத்தில் உயிரிழந்த 5 பேரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அடுத்த தொழுப்பேடு அருகே இன்று காலை அரசுப் பேருந்து ஒன்று முன்னால் சென்ற லாரியின் மீது மோதியதில் ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். மேலும், 10 பயணிகள் படுகாயமடைந்தனர். இந்நிலையில், இந்தச் சம்பத்தில் மரணம் அடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுப்ப பதிவில், “செங்கல்பட்டு … Read more

“திமுகவின் கைக்கூலியாக செயல்படுகிறார் கே.பி.முனுசாமி”- கோவை செல்வராஜ் குற்றச்சாட்டு

“அதிமுகவின் ரகசியங்களை திமுகவினரிடம் கூறி , திமுகவின் கைக்கூலியாக செயல்படுகிறார் கே.பி.முனுசாமி” என கோவை செல்வராஜ் பேட்டியளித்துள்ளார். ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்த பின்னர் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்தில் அவரை சந்தித்த பிறகு, அதிமுக செய்தித்தொடர்பாளர் கோவை செல்வராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி முனுசாமி, கடந்த வாரம் ஓபிஎஸ் திமுக-வை ஆதரிப்பதாக குற்றம் சாட்டினார். ஆனால் முனுசாமி மகன் … Read more

நித்திகிட்ட என்னவோ இருக்கு… திருமணம் செய்ய ஆசைப்படும் முன்னணி தமிழ் நடிகை!

நித்தியாநந்தாவை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக தமிழ் நடிகை ஒருவர் கூறியுள்ள தகவல் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும் அவரை திருமணம் செய்துகொண்டார் தனது பெயரைக்கூட மாற்ற தேவையில்லை என்றும் அவர் கூறியுள்ளார். கடந்த 2009-ம் ஆண்டு ஜெய் நடிப்பில் வெளியான வாமனன் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ப்ரியா ஆனந்த். தொடர்ந்து புகைப்படம், எதிர்நீச்சல், வணக்கம் சென்னை, அரிமா நம்பி, இரும்பு குதிரை, வை ராஜா வை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது தமிழில் … Read more

#திருவள்ளூர் || வாலிபரை கத்தியால் வெட்டி தப்பி ஓடிய மர்ம நபர்கள்.! போலீசார் வலைவீச்சு.!

திருவள்ளூர் மாவட்டத்தில் வாலிபரை கத்தியால் வெட்டி தப்பி ஓடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள காஞ்சிவாயில் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் மெதூர் பெட்ரோல் பங்க் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.  அப்பொழுது மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த இரு பெண்கள் மற்றும் ஒரு வாலிபருடன் இரண்டு மர்ம நபர்கள் வழிமறித்து தகராறு செய்துள்ளனர். இதைப் பார்த்த மணிகண்டன், அதனை தட்டிக் கேட்டுள்ளார். இதனால் கோபமடைந்த மர்ம … Read more

யாரையும் பழிவாங்கும் நோக்கில் முன்னாள் அமைச்சர் வீடுகளில் சோதனை நடத்தப்படவில்லை – அமைச்சர் ரகுபதி

உரிய புகாரின் அடிப்படையிலேயே முன்னாள் அமைச்சர் காமராஜ் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெறுவதாக தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். யாரையும் பழிவாங்கும் நோக்கில் சோதனை நடத்தப்படவில்லை எனவும் அதிமுகவில் தற்போது நடக்கும் குழப்பத்திற்கும், லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கும் சம்பந்தமில்லை என்றும் அமைச்சர் கூறியுள்ளார். Source link

மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்: வங்கிகளுக்கு மநீம வலியுறுத்தல்

சென்னை: வாழ்வாதாரத்தை மீட்கப் போராடும் மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று வங்கிகளுக்கு மக்கள் நீதி மய்யம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து இன்று மநீம வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ”வாழ்க்கையையே சவாலாகக் கொண்டு, வாழ்வாதாரத்தை மீட்கப் போராடும் மாற்றுத் திறனாளிகளின் நீண்டநாள் கோரிக்கையான எளிதில் கடனுதவி, வங்கி, ஏடிஎம் மையங்களில் சாய்தள வசதி உள்ளிட்ட கோரிக்கைகளை வங்கிகள் உடனடியாக நிறைவேற்ற வேண்டும். மாற்றுத் திறனாளிகளின் கூட்டமைப்பான டிசம்பர் 3 இயக்கம் சார்பில், சென்னை வள்ளுவர் … Read more

மூன்று தலைமுறைகள் – குடும்பத்துடன் 101 வது பிறந்த நாளை கொண்டாடிய மூதாட்டி

ஆரோக்கியமான உணவுகளை அளவோடு சாப்பிட்டதால் மூன்று தலைமுறைகளை கடந்து மூதாட்டி தனது 101 வது பிறந்த நாளை கொண்டாடினார். பாரம்பரிய சிறுதானிய உணவு வகைகளை மறந்து தற்போதைய இளைஞர்கள் துரித உணவை உட்கொண்டு உடல் நலம் பாதிக்கப்பட்டு சிறு வயதிலேயே மாரடைப்பு உள்ளிட்ட பல்வேறு நோய்களால் உயிர் இழக்க கூடிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள கோனாபட்டு கிராமத்தைச் சேர்ந்த அலமேலு (101). இவருக்கு 4 மகன்களும் 1 மகளும் ஒன்பது … Read more

பிரமாண்ட கருந்துளையை சுற்றி வரும் மிக வேகமான நட்சத்திரம்.. விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!

கருந்துளையைச் சுற்றிப் பயணித்து வினாடிக்கு 8,000 கிலோமீட்டர் வேகத்தை எட்டும் வேகமான நட்சத்திரத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். S4716 என்று பெயரிடப்பட்ட இந்த நட்சத்திரம், பால்வீதி விண்மீன் மண்டலத்தின் மையத்தில் உள்ள மிகப்பெரிய கருந்துளையான சிகடரியஸ் A* ஐச் சுற்றி வருகிறது. இது கருந்துளைக்கு 100 வானியல் அலகுகளுக்கு (astronomical unit) அருகில் வருகிறது. ஒரு AU என்பது 149,597,870 கி.மீட்டர்கள், ஆனால் இந்த சூழலில் 100 AU என்பது மிகச் சிறிய தூரம். கொலோன் பல்கலைக்கழகம் மற்றும் … Read more

மது அருந்துவதற்கு பணம் தராததால் விவசாயி விஷம் குடித்து தற்கொலை.!

மது அருந்துவதற்கு பணம் தராததால் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். விழுப்புரம் மாவட்டம் ராமையாம் பாளையம் ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்தவர் விவசாயி கார்த்திகேயன்(60). இவருடைய இரண்டு மகள்களையும் அதே பகுதியில் திருமணம் செய்து கொடுத்துள்ளார். இந்நிலையில் சரியாக வேலைக்கு செல்லாமல் கார்த்திகேயன் அடிக்கடி மது அருந்தி வந்துள்ளார். இதைத்தொடர்ந்து சம்பவத்தன்று மது அருந்துவதற்காக மனைவி மற்றும் இரண்டு மகள்களிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் தர மறுத்ததால், மனவேதனையில் அப்பகுதியை சேர்ந்த ஒரு … Read more