#BigBreaking || திடீர் திருப்பம்… நாளையே தீர்ப்பு…? சற்றுமுன் ஓபிஎஸ் எடுத்த அதிரடி முடிவு… பரபரப்பு தகவல்.!

அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க கோரி ஓ பன்னீர்செல்வம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் ஒருவர் தரப்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு இன்று இரண்டாவது நாளாக நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்த போது, எடப்பாடி பழனிச்சாமி தரப்பில், அதிமுக பொதுக்குழு நிகழ்ச்சி நிரல்கள் கட்சி அலுவலகத்தால் விநியோகிக்கப்பட்டவை என்றும், வரைவு நிகழ்ச்சி நிரலுக்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் வழங்கவில்லை என்றும், ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகள் காலியானாலும் எந்த வெற்றிடமும் ஏற்படாது … Read more

அரசுப் பள்ளியில் பயிலும் 19 மாணவர்ளுக்கு கொரோனா தொற்று.. பள்ளிக்கு 2 நாள் விடுமுறை அறிவிப்பு.!

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் ஒரே பள்ளியில் பயிலும் 19 மாணவர்களுக்கு கொரோனா உறுதியான நிலையில் பள்ளி மூடப்பட்டது. ஊராட்சி ஒன்றிய பள்ளி மாணவர்களில் சிலருக்கு சளி, காய்ச்சல் இருந்த நிலையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 19 மாணவர்களுக்கும், பெற்றோர்களில் 9 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பள்ளிக்கு 2 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டதோடு, பள்ளியிலும் மாணவர்கள் வசிக்கும் இடங்களிலும் நோய்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. Source link

ராமநாதபுரம் | ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்களிடையே மோதல்: இருக்கைகள் வீச்சு, தொண்டர்கள் மண்டை உடைப்பு

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்களிடையே ஏற்பட்ட மோதலில் இருக்கைகள் வீசப்பட்டன. இரு தொண்டர்களுக்கு மண்டை உடைந்தது. கார் கண்ணாடிகளும் உடைக்கப்பட்டன. ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியார் மஹாலில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை ராமநாதபுரம் சட்டப்பேரவை தொகுதி சார்பில், முன்னாள் முதல்வர் பழனிச்சாமியை அதிமுகவின் பொதுச்செயலாளராக ஆக்குவது தொடர்பான அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் சுவாமிநாதன் தலைமை வகித்தார். அதிமுக மாவட்டச் செயலாளர் முனியசாமி, அதிமுக மகளிரணி மாநில … Read more

காலையில் வெறும் வயிற்றில் பாகற்காய் ஜீஸ்… இவ்வளவு நன்மைகள் இருக்கா !

பாகற்காய் ஜீஸில் இருக்கும் நன்மைகளைப் பற்றிதான் தெரிந்துகொள்ளப்போகிறோம். பாகற்காய் என்பது அனைவராலும் விரும்பப்படாத காய்கறியாகும். ஆனால் அதில் இருக்கும் நன்மைகள் பல. இது கசப்பாக இருந்தாலும், இதில் ஆண்டி ஆக்ஸிடண்ட் மற்றும் வீக்கத்தை தடுக்கும் குணம் உள்ளது. இதில் நார்சத்து, வைட்டமின் ஏ இருக்கிறது. இந்த சத்துக்களால் உடல் எடையை குறைக்க உதவுகிறது. மேலும் இதில் மருத்துவ குணம் நிறைந்து இருக்கிறது. பாகற்காய் சமைத்து சாப்பிடுவதில் இருக்கும், அதே பயன் பாகற்காய் ஜீஸில் இருக்கிறது. வைட்டமின் சி … Read more

7499 கோடி ரூபாய் உபரி வருவாய்… டெல்லி மாநில அரசு போல, தமிழக அரசு வருமா?

ஓர் அரசும், அமைச்சரவையும் நேர்மையுடன் செயல்பட வேண்டுமென்பதே மநீம-வின் அடிப்படைக் கொள்கை என்று, அக்கட்சியின் டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், “டெல்லி ஆம் ஆத்மி அரசுக்கு 2015-16 முதல் 2019-2020 வரை உபரி வருவாய்(surplus) இருப்பதாகவும், 2019-2020-ல் உபரி வருவாய் ரூ.7499 கோடி என்றும் தலைமை கணக்குத் தணிக்கை அறிக்கை தெரிவித்துள்ளது பாராட்டுக்குரியது.  உயர்தரமான அரசுப் பள்ளிகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட பல நலத் திட்டங்களைச் செயல்படுத்தியும், அரசு லாபத்தில் இயங்குவது நேர்மைக்குச் சான்று. ஓர் … Read more

வருமானத்துக்கு அதிகமாக 500 சதவிகிதம் சொத்துக்குவிப்பு.? முன்னாள் அமைச்சர் வீட்டில் ரெய்டு.!

அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துச் சேர்த்ததாக வழக்குப் பதிந்துள்ள லஞ்ச ஒழிப்புத்துறையினர், தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் அவருக்குத் தொடர்புடைய 52 இடங்களில் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில் 963 சவரன் நகைகளும், 41 இலட்ச ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர். அதிமுக ஆட்சியில் உணவுத்துறை அமைச்சராக இருந்த காமராஜ் மீதும், அவர் மகன்கள் இனியன், இன்பன், நண்பர்கள் சந்திரசேகரன், உதயகுமார், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் மீதும் திருவாரூர் லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப் பதிந்துள்ளனர். முறைகேடாகச் … Read more

கடலில் காற்றாலை அமைத்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம்: தமிழகம் தேர்வானது எப்படி?

தமிகத்தில் உள்ள கடல் பகுதியில் காற்றாலை அமைத்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை மத்திய அரசு விரைவில் தொடங்கவுள்ளது. இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் 2030-ம் ஆண்டுக்குள் 140 கிகாவாட் திறன் உற்பத்தி செய்யும் அளவுக்கு காற்றலைகளை நிறுவ திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் உள்ள கடல் பரப்பின் எண்ணிக்கை கொண்டு கடல் காற்றாலைகள் மூலம் 174 கிகா வாட் மின்சாரம் தயாரிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. 2 மாநிலங்கள்: இந்த கடல் காற்றாலைகள் அமைக்க இந்தியாவில் 2 நகரங்களில் மட்டும்தான் சாத்தியக்கூறு … Read more

தமிழகத்தில் இந்த மாவட்டங்களிலெல்லாம் கனமழை தொடரும் – சென்னை வானிலை மையம்

தமிழ்நாட்டில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாடு , புதுச்சேரியில் வரும் 12 ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குமரிக்கடல், மன்னார்வளைகுடா, தென் தமிழக … Read more

இவங்க சூரிக்கே டஃப் கொடுப்பாங்க போல: நாயகி சீரியல் ரீ-யூனியன் பாருங்க…

தமிழில் சீரியல்கள் ஒளிபரப்புவதில் சன் டி.வி.க்கு முக்கிய இடம் உண்டு. சன் டி.வி.யின் சீரியல் நிறைவு பெற்றாலும் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடிக்க தவறுவதில்லை. அந்த வகையில் சீரியல் ரசிகர்கள் மத்தியில் சிம்மாசனம் அமைத்து அமர்ந்துள்ள சீரியல்களில் ஒன்று நாயகி. வித்யா பிரதீப், திலிப் ராயன், மீரா கிருஷ்ணன், அம்பிகா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்த இந்த சீரியலில் முக்கிய கேரக்டரான ஆனந்தி கேரக்டரில் முதலில் விஜயலட்சுமி நடித்து வந்தார். ஆனால் சில எபிசோடுகள் கடந்த … Read more

கல்லூரி நிர்வாகத்தின் மீது தமிழ்நாடு அரசு இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன்? – சீமான் கேள்வி.!

அரசு உதவிப்பெறும் சென்னை ஜெயின் கல்லூரியைத் தனியார் கல்லூரியாக மாற்றும் முயற்சியைத் தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், “சென்னை துரைப்பாக்கத்தில் தமிழ்நாடு அரசின் உதவியுடன் இயங்கி வரும் ஜெயின் கல்லூரியைச் சுயநிதிக் கல்லூரியாக மாற்றி லாபம் சம்பாதிக்கும் நோக்கத்துடன், அக்கல்லூரி நிர்வாகம் செயல்பட்டு வருவது மாணவர்களிடமும், பெற்றோர்களிடமும் மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.  கடந்த ஐம்பது ஆண்டுகளாக தலைநகரில் … Read more