வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு.. சென்னையில் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம்.!!

100 அடி சாலையில் வடபழனி சந்திப்பிலிருந்து அசோக் பில்லர் வரை போக்குவரத்து நெரிசலைக் குறைத்திடும் நோக்கத்தில் 09.07.2022 முதல் கீழ்க்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் பரிசார்த்த முறையில் சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையினரால் மேற்கொள்ளப்படவுள்ளது.  1. 100 அடி சாலை 2வது நிழற்சாலைச் சந்திப்பிலிருந்து 4வது நிழற்சாலை சந்திப்பு வரை ஒரு வழிப்பாதையாக மாற்றப்படுகிறது. அசோக் பில்லர் வழியாக இருந்து கோயம்பேடு, வடபழனி மற்றும் கே.கே.நகர் செல்லும் வாகனங்கள் எந்தவித மாற்றமும் இன்றி வழக்கம் போலச்செல்லலாம்  2. … Read more

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் ரெய்டு

முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் ரெய்டு 41 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை சொத்துக் குவிப்பு புகாரில் மன்னார்குடியில் உள்ள காமராஜ் வீட்டில் சோதனை நடப்பதாகத் தகவல் முந்தைய ஆட்சியில் உணவுத்துறை அமைச்சராகப் பதவி வகித்தவர் காமராஜ் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரில் சோதனை நடைபெறுவதாகத் தகவல் முன்னாள் அமைச்சர் காமராஜ் தொடர்புடைய 41 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் … Read more

தமிழ் இளைஞர்கள் 2 பேர் மியான்மரில் சடலமாக மீட்பு – பியூ ஷா ஹடீ போராளிகள் சுட்டனரா?

இம்பால்: மணிப்பூரில் மியான்மர் எல்லைக்கு அருகில் மோரே நகரம் உள்ளது. இந்தநகரைச் சேர்ந்த பி.மோகன் (27), எம்.அய்யனார் (28) என்ற 2 தமிழ் இளைஞர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை மியான்மரின் தாமு நகரில் உள்ள நண்பர் ஒருவரை காணச் சென்றுள்ளனர். இந்நிலையில் அங்கு மதியம் 1 மணியளவில் இவர்கள் இருவரும் துப்பாக்கிகுண்டு காயங்களுடன் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர். இதுகுறித்து மோரே காவல்துறை அதிகாரி ஆனந்த் கூறும்போது, “தமிழ் இளைஞர்கள் கொலைக்கான விவரம் கிடைக்கவில்லை. அவர்களின் உடல்களை இங்கு கொண்டுவர பேச்சுவார்த்தை … Read more

'இளையராஜாவுக்கு யுவன்சங்கர் ராஜா கூட ஓட்டுப்போட மாட்டார்' – சீமான் கடும் விமர்சனம்

திராவிட மாடல் என்பது செயல் அரசியலோ, சேவை அரசியலோ கிடையாது, அது செய்தி அரசியல் மட்டுமே என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் இரட்டை மலை சீனிவாசனின் பிறந்த நாள் விழா கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் பேசிய போது… இளையராஜா பாஜகவில் சேர்ந்தாலும், அவர் மகன் யுவன்சங்கர் ராஜா ஒட்டுப் போட மாட்டார். பட்டியலினத்தவர் பழங்குடியினரை குடியரசு … Read more

Today Rasi Palan 08th July 2022: இன்றைய ராசிபலன்

Rasipalan 08th July 2022, Friday ராசிபலன் ஜூலை 08 வெள்ளிக்கிழமை 2022: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம். Today Rasi Palan 08th July 2022: இன்றைய ராசி பலன், ஜூலை 08ம் தேதி 2022 … Read more

மீண்டும் தடை விதிக்க கோரி மனு.. மோதல் ஏற்பட வாய்ப்பு.. காவல் நிலையத்தை நாடிய அதிமுக நிர்வாகி.!!

சசிகலா கடந்த சில நாட்களாக தொகுதி வாரியாக சென்று ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்களை சந்தித்து பேசி வருகிறார். அவ்வப்போது அதிமுக நிலை குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்து வருகிறார்.  இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்தில் அதே பகுதியை சார்ந்த அதிமுக கள்ளக்குறிச்சி மாவட்ட வழக்கறிஞர் அணி பிரிவு துணைத் தலைவர் பிரேம்குமார் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகார் மனுவில் அதிமுகவில் எந்த தொடர்பும் இல்லாத சசிகலா திருவெண்ணெய்நல்லூர் பகுதியில் நாளை (இன்று) சுற்றுப்பயணம் … Read more

நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர் செய்யாதுரை வீட்டில் இரண்டு நாட்களாக நடைபெற்ற ஐ.டி ரெய்டு நிறைவு!

விருதுநகர் அருகே நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர் செய்யாத்துரை வீடு மற்றும் அலுவலகத்தில் இரண்டு நாட்களாக நடைபெற்று வந்த வருமான வரித்துறையினரின் சோதனை நிறைவடைந்ததையடுத்து, தங்கநகைகள்-பணம் மற்றும் சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அருப்புக்கோட்டையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் எஸ்.பி.கே குழுமத்துக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் சுமார் 20க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.  Source link

இணைய வழியில் பொதுக்குழு கூட்டம் நடத்த முடியுமா? – அரசியல் ஆலோசகர் ஆஸ்பயர் சுவாமிநாதன் விளக்கம்

சென்னை: அதிமுக பொதுக்குழுவை இணைய வழியில் நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அது சாத்தியமா என்பது குறித்து அரசியல் ஆலோசகர் ஆஸ்பயர் சுவாமிநாதன் விளக்கம் அளித்துள்ளார். பழனிசாமி தரப்பினர் வரும் 11-ம் தேதி அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டங்களை நடத்துவதற்கான பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். கூட்டத்தில் பங்கேற்போருக்கு அழைப்பு கடிதமும் கட்சி தலைமை அலுவலகம் மூலமாக அனுப்பப்பட்டு வருகிறது. இரு தரப்பிலும், சட்டப் போராட்டம் ஒருபுறம் தீவிரமாக நடந்தாலும், சென்னையில் அதிகரித்து வரும் கரோனா … Read more

திருநெல்வேலி.! விஷம் குடித்து விவசாயி தற்கொலை.!

திருநெல்வேலி மாவட்டத்தில் விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டம் கடம்போடுவாழ்வு தெற்கு தெருவை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன்(60). விவசாயி. இவருக்கு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் காலில் படுகாயம் ஏற்பட்டுள்ளது.  இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அதே இடத்தில் மீண்டும் காயம் ஏற்பட்டதால் முத்துக்கிருஷ்ணன் மனவேதனையில் இருந்துள்ளார். இதனால் முத்துக்கு தற்கொலை செய்வதற்காக முத்துகிருஷ்ணன் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக … Read more