திருப்பத்தூர்.! இருசக்கர வாகன விபத்தில் வியாபாரி உயிரிழப்பு.!

திருப்பத்தூர் மாவட்டத்தில் இருசக்கர வாகன விபத்தில் வியாபாரி உயிரிழந்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் மேல் அக்ரவாரம் பகுதியை சேர்ந்தவர் வியாபாரி அனுமந்தன்(55). இவர் நேற்று இருசக்கர வாகனத்தில் வெலக்கல் நத்தம் பகுதிக்கு சென்று கொண்டிருந்தார். அப்பொழுது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அனுமந்தன் ஒட்டிச்சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அனுமந்தன்னன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், … Read more

எச்சரிக்கையை மீறி குட்கா விற்பனையில் ஈடுபட்டு வந்த கடைகளுக்கு சீல்.!

தேனி மாவட்டத்தில் எச்சரிக்கையை மீறி 100 கடைகள் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை தொடர்ச்சியாக விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினருடன் இன்று அந்த கடைகளுக்கு சென்ற உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உரிமையாளர்களிடம் நோட்டீஸ் கொடுத்துவிட்டு, பூட்டி சீல் வைத்தனர்.   Source link

முன்னாள் அமைச்சர் காமராஜ் தொடர்புடைய  இடங்களில் இருந்து ரூ.41 லட்சம் பறிமுதல்

சென்னை: முன்னாள் அமைச்சர் காமராஜ் தொடர்புடைய இடங்களில் இருந்து ரூ.41 லட்சம் தொகையை லஞ்ச ஒழிப்புத் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக முன்னாள் அமைச்சர் காமராஜ், அவரது மகன்கள் இனியன் மற்றும் இன்பன், காமராஜின் நண்பர்கள் உதயகுமார், கிருஷ்ணமூர்த்தி, சந்திரசேகர் ஆகிய 6 பேர் மீது லஞ்ச ஒழிப்பு துறை வழக்குப் பதிவு செய்தது. இதைத் தொடர்ந்து திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள காமராஜ் வீடு மற்றும் அவரது உறவினர்கள் நண்பர்கள் வீடு … Read more

பொதுக்குழு பணிகளை பார்வையிட்டபோது தவறி கீழே விழுந்த நத்தம் விஸ்வநாதன்!

சென்னையை அடுத்த வானகரத்தில், அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பான பணிகளை ஆய்வு செய்தபோது முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தவறி கீழே விழுந்தார். உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வரும் அதே நேரத்தில் பொதுக்குழுவுக்கான பணிகள் வானகரத்தில் நடைபெற்று வந்தன. இந்த பணிகளை ஆய்வு செய்ய மூத்த நிர்வாகிகள் சென்றனர். அப்போது முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கால் இடறி கீழே விழுந்தார். அருகில் இருந்த மற்ற நிர்வாகிகள் தண்ணீர் கொடுத்து அவரை ஆசுவாசப்படுத்தினர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

அவர் விஜயின் அம்மா… ஆனால் எனக்கு மனைவி அல்ல… இயக்குனர் எஸ்.ஏ.சி

80-களில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநகராக திகழ்ந்தவர் எஸ்.ஏ.சந்திரசேகர். முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்து இவர், நடிகர் விஜயகாந்தை நாயகான வைத்து பல படங்களை இயக்கியுள்ளார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் வெற்றி கண்டவர் எஸ்.ஏ.சந்திரசேகர். தொடர்ந்து 90-களின் தொடக்கத்தில் தனது மகன் விஜய்யை நாயகனாக்கி சில படங்களை இயக்கினார். தற்போது நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்துகொண்டிருக்கிறார். 70 படங்களுக்கு மேல் இயக்கியுள்ள … Read more

#கோவை || கஞ்சா விற்பனை செய்த மூன்று பேர் கைது.!

கோவை மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்த மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோவை மாவட்டம் செல்வபுரம் அருகே உள்ள அசோக் நகர் பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து போலீசார் அப்பகுதியில் சென்று விசாரணை செய்ததில் கஞ்சாவை பதுங்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த நல்லூசாமி(46) என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 1 கிலோ கஞ்சா மற்றும் 530 ரூபாயை பறிமுதல் செய்தனர். இதேபோல் மதுக்கரை … Read more

10ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை.. தனியார் பள்ளியின் தாளாளர் ”காவேரி” யுவராஜ் கைது.!

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே 10ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் தனியார் பள்ளியின் தாளாளர் ”காவேரி” யுவராஜ் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். சேங்கல் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் பயின்று வரும் 10ஆம் வகுப்பு மாணவிக்கு, 4 மாதமாக பாலியல் தொல்லை கொடுத்து வந்த தமிழ் ஆசிரியர் நிலவொளி போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், விசாரணை தீவிரமடைந்தது. அதில், மாணவியிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில்  மாணவிக்கு பள்ளியின் … Read more

ஓவேலியில் மீண்டும் யானை தாக்கி தேயிலைத் தொழிலாளி உயிரிழப்பு

கூடலூர்: ஓவேலியில் கடந்த மே மாதம் இருவர் யானை தாக்கி உயிரிழந்த நிலையில், இன்று மீண்டும் தேயிலை தொழிலாளியை யானை தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நீலகிரி மாவட்டம்‌, கூடலூர்‌ சட்டப்பேரைவை தொகுதி, ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட ஆரூட்பாறை பகுதியில்‌ கடந்த மே மாதம் ஆனந்த்(43) என்பவரை யானை தாக்கி கொன்றது. மறுநாள், ஓவேலி கிராமம்‌ பாரம்‌ எஸ்டேட்‌ பகுதியில்‌ வசிக்கும்‌ மாலு(30) என்ற பெண்னை யானை தாக்கிக் கொன்றது. தொடர்ந்து இரண்டு பேர் அடுத்தடுத்து … Read more

தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த தாயை ஓடிச் சென்று கட்டியணைத்த சிறுமி! – தேனியில் சோகம்

போடி அருகே குடும்ப வறுமை காரணமாக தீக்குளித்து தாய் மகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் போடி அருகே மேலச்சொக்கநாதபுரம் தெற்கு ராஜா வீதியில் வசித்து வருபவர்கள் நல்லுச்சாமி (34) முத்துலட்சுமி என்ற ஷோபனா (27) தம்பதியினர். இவர்களுக்கு திருமணம் ஆகி 9 ஆண்டுகள் ஆன நிலையில் இவர்களுக்கு ஹேமா ஸ்ரீ என்ற 8 வயது பெண் குழந்தை உள்ளார். இந்நிலையில் வழக்கம் போல் காலை நல்லுச்சாமி வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில், அவரது வீட்டில் … Read more

#தமிழகம் || காதல் விவாகரத்தில் வீடு புகுந்து 19 வயது அபர்ணா என்ற இளம் பெண் கழுத்தறுத்து படுகொலை.! நாடக காதலனின் கொடூர செயல்.!

மதுரை பொன்மேனி பகுதியில் வீட்டில் தனியாக இருந்த 19 வயது அபர்ணா என்ற இளம் பெண், வீடு புகுந்து கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் அபர்ணாவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், அபர்ணா கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வெளியான முதல் கட்ட தகவலின் படி காதல் விவகாரத்தில், இளைஞர் ஹரிஹரன் என்பவர் வீடு புகுந்து அபர்ணாவை கழுத்தை அறுத்து கொலை செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.  … Read more