கருப்பு, வெள்ளையில் முதல்வர்.. 44வது செஸ் ஒலிம்பியாட் ப்ரோமோ டீசரை வெளியிட்ட ரஜினி!

தமிழ்நாட்டில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகிற 28-ம் தேதி துவங்க உள்ளநிலையில், அதற்கான புரமோ வீடியோவை நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில், வருகிற 28-ம் தேதி முதல் அடுத்த மாதம் 10-ம் தேதி வரை செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. இதற்கான தொடக்க விழா வருகிற 28-ம் தேதி, நேரு உள் விளையாட்டு அரங்கில் துவங்குகிறது. மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற உள்ள இந்த விழாவில், பிரதமர் நரேந்திர … Read more

சின்னசேலம் தனியார் பள்ளி மாணவி மர்ம மரணம்: உறவினர்கள் சாலை மறியல்

கள்ளக்குறிச்சி: மர்மமான முறையில் உயிரிழந்த சின்னசேலம் தனியார் பள்ளியில் படித்த வந்த பிளஸ் 2 மாணவியின் உயிரிழப்பிற்கு காரணவர்களை கைது செய்ய வலியுறுத்தி மாணவியின் பெற்றோர், உறவினர்கள், ஊர் பொதுமக்கள் வேப்பூரில் சாலை மறியலில் ஈடுபட்டனர். கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்த மாணவி கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் விடுதியில் தங்கி பிளஸ் 2 பயின்று வந்தார். நேற்று அதிகாலையில் அந்த மாணவி, விடுதியின் 2-வது மாடியிலிருந்து … Read more

கொலை முயற்சி முதல் பெரியாருடனான உறவு வரை – காமராஜரை பற்றிய 5 அரிய தகவல்கள்!

கிங் மேக்கர், படிக்காத மேதை, கர்ம வீரர், தென்னாட்டுக் காந்தி என கொண்டாடப்படும் தன்னிரகற்ற பெருந்தலைவர் காமராஜர் வாழ்வில் நிகழ்ந்த 5 முக்கிய சம்பவங்களை காணலாம். கொலை முயற்சி 1966ஆம் ஆண்டில் மத்தியில் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றபோது, பசு விவகாரத்தை ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகள் தீவிரமாகக் கையிலெடுத்தன. பசு வதைக்கு எதிராக உடனடியாக சட்டம் கொண்டுவரக் கோரினார்கள். அதை இந்திரா காந்தி ஏற்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த இந்துத்வா அமைப்பினர் பல்லாயிரக்கணக்கில் டெல்லியில் … Read more

எந்த வயதில் எவ்வளவு மது குடிப்பது பாதுகாப்பு இல்லை

15-39 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கு தீங்கு விளைவிக்கும் அளவுக்கு மது அருந்துவதற்கான மிகப்பெரிய ஆபத்து இருப்பதாக இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது. ஒவ்வொரு பிராந்தியத்திலும், இந்த வயதிற்குட்பட்ட ஆண்கள், பாதுகாப்பற்ற அளவு மது குடிப்பவர்களில் மிகப்பெரிய பங்கைக் கொண்டுள்ளனர். தி லான்செட்டில் வெளியிடப்பட்ட புதிய ஆய்வின்படி, வயதானவர்களை விட இளைஞர்கள் மது அருந்துவதால் அதிக உடல்நல அபாயங்களை எதிர்கொள்கின்றனர். நோயின் உலகளாவிய எண்ணிக்கை (Global Burden of Disease) பகுப்பாய்வு புவியியல் பகுதி, வயது மற்றும் பாலினம் ஆகியவற்றின் அடிப்படையில் … Read more

டாஸ்மாக் காலி மதுபாட்டில் விவகாரம் : மேலும் ஒரு மாதம் அவகாசம்.!

நீலகிரி மாவட்டத்திற்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள், காலி மதுபாட்டில்களை வனப்பகுதிகளில் வீசுவதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாக சமூக ஆா்வலா்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனைக் தடுக்கும் விதமாக, நீலகிரி மாவட்டத்தில் உள்ள மதுபானகடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபான பாட்டில்களில், ‘ஈசி 10’ என்னும் ஸ்டிக்கா் ஒட்டப்பட்டு பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக விற்பனை செய்யும் நடவடிக்கை கொண்டுவரப்பட்டது.  இந்த ஸ்டிக்கா் ஒட்டப்பட்ட மதுபான பாட்டில்கள், பயன்படுத்தப்பட்ட பிறகு மதுபானக்கடைகளில் ஒப்படைத்து 10 ரூபாயை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த … Read more

கழிவுநீர் மேலாண்மையில் அசத்தும் பாப்பாங்குழி: 100% தன்னிறைவு பெற்ற தமிழக கிராமம்

புதுடெல்லி: தமிழகத்தைச் சேர்ந்த பாப்பாங்குழி என்ற கிராமம் கழிவுநீர் மேலாண்மையில் 100 சதவீதம் தன்னிறைவு பெற்று விளங்குவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஜல்சக்தி அமைச்சகம் வெளியிட்ட தகவல்: தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் உள்ள பாப்பாங்குழி கிராமப் பஞ்சாயத்து சமுதாய உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகளின் ஒருங்கிணைந்த முயற்சி காரணமாக, கழிவுநீர் மேலாண்மை திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளது. தூய்மை இந்தியா இயக்கம், கிராமப்புற திட்டத்தின் 2-ம் கட்டத்தின் ஒருங்கிணைந்த அம்சமாக கழிவுநீர் மேலாண்மை … Read more

கறிவிருந்துக்கு வந்த மாப்பிள்ளையை வெட்டிக்கொன்ற மாமனார்.. பதிலுக்கு நண்பர்கள் செய்த செயல்!

திருத்துறைப்பூண்டி அருகே கறி விருந்துக்கு சென்ற புதுமாப்பிள்ளை முத்தரசனை அவரது மாமனாரே கொலைசெய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. தன்னுடைய நண்பன் முத்தரசன் கொலை செய்யப்பட்ட நிலையில், அவரது மாமனர் வீட்டை அவர்கள் சூறையாடி தீ வைத்தனர். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே வீரபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சிற்றரசு மகன் முத்தரசன் (23). முத்தரசனுக்கும் திருத்துறைப்பூண்டி நகர் பகுதியில் உள்ள மங்கலநாயகிபுரத்தைச் சேர்ந்த அரவிந்தியாவிற்கும் திருமணம் நடைபெற்றது. கடந்த ஜூன் 15 ஆம் தேதி மாமனார் வீட்டில் நடைபெற்ற விருந்துக்கு … Read more

எஸ்.டி.எஸ், எஸ்.ஆர் ராதா, வைத்தி வரிசையில்… டெல்டா அ.தி.மு.க-வில் அடுத்த தளபதி யார்?

அதிமுகவின் டெல்டா மாவட்ட தளபதியாக முடி சூட்டப்போவது யார்? என்பது குறித்து க. சண்முக வடிவேல் விவரிப்பதை பார்க்கலாம். இதற்கிடையே ஜெயலலிதா மறைவையடுத்து முதல்வர் பதவியை அப்போதைக்கு கட்சியை வழிநடத்திய சசிகலா எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். கட்சியை ஓபிஎஸ்-எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இணைந்து ஒருங்கிணைப்பாளர்களாக பொறுப்பு வகித்து வழிநடத்த அதிமுகவின் நிர்வாகிகளால் ஏகமனதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து கட்சியை தமது கட்டுப்பாட்டிற்குள் மெல்ல, மெல்ல கொண்டு வந்த எடப்பாடி பழனிசாமி, … Read more

“செல்ஃபி வித் அண்ணா என்ற பரப்புரை வெட்கக் கேடானது” – அண்ணாமலை மீது கே.எஸ்.அழகிரி சாடல்

சென்னை: “கல்லூரி மாணவிகளிடம் ‘செல்ஃபி வித் அண்ணா’ என்று பரப்புரை மேற்கொள்வது மிகுந்த வெட்கக் கேடானது” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “தமிழகத்தில் பாஜகவை காலூன்ற வைப்பதற்கு பல்வேறு அதிரடி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு அனைத்தும் தோல்வியிலேயே முடிந்து வருகின்றன. எட்டு ஆண்டுகால பாஜக ஆட்சியில் வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடி வருகிற நிலையிலும், பொருளாதார பேரழிவை சந்தித்துக் கொண்டிருக்கிற சூழலிலும் பாஜக மீது மக்கள் கடும் சினத்துடன் உள்ளனர். … Read more

தமிழ்நாட்டின் கல்விக் கண்ணை திறந்த 'படிக்காத மேதை'.. கர்ம வீரரின் ஆட்சி ஏன் பொற்கால ஆட்சி?

பெருந்தலைவர், கர்ம வீரர், கல்விக் கண் திறந்தவர், கிங் மேக்கர், படிக்காத மேதை என பல்வேறு அடைமொழிகளால் புகழப்பட்டவர், காமராஜர். தன்னலம் கருதாமல், மக்களுக்காக கடைசி வரை வாழ்ந்து மடிந்தவர். மடிந்து பல ஆண்டுகள் ஆனாலும் இன்றும் அனைவரது மனதிலும் நேர்மை என்றால் காமராஜர் என்று சொல்லும் அளவிற்கு வாழ்ந்து வருபவர். அவருக்கு இன்று பிறந்தநாள். படிக்காத மேதை காமராஜர் விருதுநகரில் 1903-ஆம் ஆண்டு ஜூலை 15-ஆம் தேதி பிறந்தார். இவர்தம் பெற்றோர் குமாரசாமி நாடார் மற்றும் … Read more