”பெண்ணின் கழுத்தில் இருக்கும் தாலி புனிதமான ஒன்று” – சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதிகள் கருத்து 

தாலியை கழுத்திலிருந்து  நீக்கும் செயல் ஒரு வித மனக்கொடுமையை  கணவர்களுக்கு ஏற்படுத்தும் எற்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது சி. சிவகுமார் என்பவர் ஈரோட்டில் உள்ள மருத்துவக் கல்லூரியில் பேராசியராக பணியாற்றி வருகிறார். இவரும் இவரது மனவியும் கருத்துவேறுபாடு காரணமாக 2011ம் ஆண்டு முதல் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் சிவகுமாருக்கு விவாகரத்து வழங்க இயலாது என்று 2016ம் ஆண்டு ஜூன் 15ம் தேதி குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில்  மேல்முறையீடு செய்துள்ளார். … Read more

தமிழக முதல்வர் ஸ்டாலின் வேகமாக குணமடைந்து வருகிறார்: மருத்துவமனை அறிக்கை

சென்னை: கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வேகமாக குணமடைந்து வருவதாக காவேரி மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடந்த 12 ஆம் தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். இந்நிலையில் மருத்துவப் பரிசோதனைக்காக நேற்று காலை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் முதல்வர் வேகமாக குணமடைந்து வருவதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ள … Read more

International Space Station: இனி விண்வெளி கழிவுகளை அகற்றுவது சுலபம்..

டெக்சாஸை தளமாகக் கொண்ட விண்வெளி தொழில்நுட்ப நிறுவனமான நானோராக்ஸ் உருவாக்கிய, புதிய கழிவுகளை அகற்றும் தொழில்நுட்பத்தை சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) நாசா வெற்றிகரமாக சோதித்துள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து கழிவுகளை அகற்றுவதற்கான மிகவும் திறமையான மாதிரியை சோதனை நிரூபித்தது. வழக்கமாக, சர்வதேச விண்வெளி வீரர்கள், குப்பைகளை சேகரித்து, சிக்னஸ் கார்கோ வாகனம், நிலையத்திற்கு வரும் வரை, பல மாதங்களுக்கு காத்திருப்பார்கள். சிக்னஸ் என்பது விண்வெளி நிலையத்திற்கு பொருட்களை கொண்டு செல்வதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு ’டிஸ்போஸபிள்’ விண்கலமாகும். … Read more

இதுதான் திமுகவின் சமூகநீதியா? – பெரியார் பல்கலை., கேள்வித்தாள் விவரகாரத்தில் இபிஎஸ் கேள்வி

சென்னை: சேலம் பெரியார் பல்கலைக்கழக கேள்வித்தாளில் சாதிய ஏற்றத்தாழ்வுகளை ஊக்குவிக்கும் கேள்விகள் கேட்டிருப்பதுதான் திமுகவின் சமூக நீதியா என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட சாதி எது? என்று பெரியார் பல்கலைக்கழக தேர்வில் கேட்கப்பட்ட கேள்வியால் சர்ச்சை எழுந்துள்ளது. இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளர். இந்நிலையில் இதுதான் திமுகவின் சமூக நீதியா என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் … Read more

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான ரவிச்சந்திரனுக்கு 9-வது முறையாக பரோல் நீட்டிப்பு!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்து கடந்த நவம்பர் மாதம் பரோலில் வெளியே வந்த ரவிச்சந்திரனுக்கு, தொடர்ந்து ஒன்பதாவது முறையாக தற்போது மேலும் 30 நாள் பரோலை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மதுரை மத்திய சிறையில் தண்டனை கைதியாக அடைக்கப்பட்டிருந்த ரவிச்சந்திரன், தனக்கு உடல்நல குறைவு காரணமாக பாதிக்கப்பட்ட இருப்பதாகக் கூறி அதனால் தனக்கு சிகிச்சை மேற்கொள்ளவும் மற்றும் உடல்நிலை … Read more

பாப்புலர் பிராண்ட் ஆஃப் இந்தியாவுடன் தொடர்பு: முன்னாள் காவல் அலுவலர் உள்பட மூவர் கைது

பாப்புலர் பிராண்ட் ஆஃப் இந்தியா அமைப்புடன் தொடர்பில் இருந்த ஜார்க்கண்ட் முன்னாள் காவல் அலுவலர் உள்பட மூவர் வியாழக்கிழமை (ஜூலை14) கைது செய்யப்பட்டனர்.இவர்கள், ஜார்க்கண்ட் முன்னாள் காவல் உதவி ஆய்வாளர் முகம்மது ஜலாலுதீன், தடை செய்யப்பட்ட இஸ்லாமிய அடிப்படைவாத மாணவர் அமைப்பான சிமி இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் அக்தர் பர்வேஷ் மற்றும் அர்மன் மாலிக் ஆகியோர் ஆவார்கள்.இவர்கள் மீது பாப்புலர் பிராண்ட் ஆஃப் இந்தியா அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், இஸ்லாமிய இளைஞர்களுக்கு ஆயுதப் … Read more

கோவை, நீலகிரியில் பெய்துவரும் தொடர் கனமழையால் நிரம்பிய அணைகள்: பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

கோவை, நீலகிரி மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. குந்தா, பில்லூர், சோலையாறு அணைகளிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கடந்த மூன்று நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து, நீலகிரி மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்துவருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள அப்பர்பவானி, காட்டு குப்பை, பார்சன்ஸ்வேலி, மரவக்கண்டி, பைக்காரா உள்ளிட்ட பகுதிகளிலுள்ள நீரோடைகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், குந்தா அணை மற்றும் பைக்காரா மின் வட்டத்துக்குட்பட்ட அப்பர் பவானி, அவலாஞ்சி, … Read more

`தாழ்த்தப்பட்ட சாதி எது’-பெரியார் பல்கலை வினாத்தாளிலிருந்த கேள்விக்கு துணைவேந்தர் விளக்கம்

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தற்போது நடைபெற்றுவரும் பருவ தேர்வில் `தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட சாதி எது’ என்ற கேள்வியை கேட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூகநல ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் இந்த வினாத்தாள் வேறு பல்கலைக்கழக பேராசிரியர்களால் எடுக்கப்பட்டவை என பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் விளக்கமளித்துள்ளார். சேலம் பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்ற கல்லூரிகள் ஆகியவற்றில் தற்போது இரண்டாம் பருவ தேர்வுகள் நடைபெற்று வருகிறது. பெரியார் … Read more

1985 ஏர் இந்தியா குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ரிபுதமன் சிங் மாலிக் கனடாவில் சுட்டுக் கொலை

1985 ஆம் ஆண்டு ஏர் இந்தியா குண்டுவெடிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட ரிபுதமன் சிங் மாலிக், கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள சர்ரேயில் வியாழக்கிழமை காலை சுட்டுக் கொல்லப்பட்டதாக கனேடிய செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. மூன்று முறை புல்லட் ஷாட் சத்தம் கேட்டதாகவும், இது மாலிக் கழுத்தில் தாக்கியதாகவும் நேரில் கண்ட சாட்சிகள் கூறியதாக, சிபிசி நியூஸ் தெரிவித்துள்ளது. உள்ளூர் நேரப்படி காலை 9.30 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும், மாலிக் சம்பவ இடத்திலேயே காயம் அடைந்து … Read more

பிரதமர் மோடி, மருத்துவர் இராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட வாழ்த்து செய்தி.!

கல்விக்கண் திறந்த காமராசரின் பிறந்தநாளில் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து செய்தி வெளியிட்டு வருகின்றனர்.  அந்த வகையில், பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “திரு காமராஜர் அவர்களை அவரது பிறந்தநாளில் நினைவு கூர்கிறேன். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மறக்கவொண்ணா பங்களிப்பு செய்தவர், கனிவும் அக்கறையும் கொண்ட சிறந்த நிர்வாகி. ஏழ்மையை ஒழிக்க மக்களின் துயரைப் போக்க கடினமாக உழைத்தவர். சுகாதாரம், கல்வியை மேம்படுத்த கவனம் செலுத்தியவர்” என்று தெரிவித்துள்ளார். பாமக நிறுவனர் மருத்துவர் … Read more