விஜயகாந்தின் உடல்நிலையில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளது – பிரேமலதா

விஜயகாந்தின் உடல்நிலையில் சற்று தொய்வு இருப்பதாகவும், விரைவில் அவர் மீண்டு வருவார் என்றும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். சென்னையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசு தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு ஆதரவு தெரிவிக்கும் நிகழ்ச்சியில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் விஜயகாந்தின் உடல்நிலையில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். மருத்துவர்களின் அறிவுறுத்தல் படி தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றும் விரைவில் பூரண … Read more

சென்னை ஆர்ப்பாட்டத்திற்கு புறப்பட்ட மாற்றுத் திறனாளிகள் 14 பேர் காயம்: சமயபுரம் அருகே வேன் விபத்து

14 Differently abled persons injured on accident near Trichy: திருச்சி மாவட்டம் சமயபுரம் சுங்கச்சாவடி அருகே முன்னால் சென்ற லாரி மீது வேன் மோதிய விபத்தில் வேனில் பயணம் செய்த 14 மாற்று திறனாளிகள் படுகாயம் அடைந்தனர். காயமடைந்த அனைவரும் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னை வள்ளுவர் கோட்டம் பகுதியில் நாளை 4-ம் தேதி மாற்றுத்திறனாளிகள் உரிமைக்கான இயக்கம் சங்கம் சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு திண்டுக்கல் மாவட்டம் … Read more

சேலம்.! இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழப்பு.!

சேலம் மாவட்டத்தில் இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த பழனி என்பவரின் மகன் பிரபு(22). இவர் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர் நவீன் உடன் இரு சக்கர வாகனத்தின் வாழப்பாடி அருகே உள்ள முருகன் கோவிலுக்கு சென்றுள்ளார். அப்பொழுது சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில், சேலம் நோக்கி அதிவேகத்தில் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த … Read more

10 ஆயிரம் கடனுக்கு மீட்டர் வட்டி போட்டு ஒரு கோடி.. போலீசாருக்கு வீடியோ அனுப்பிவிட்டு பாஜக நிர்வாகி தற்கொலை..!

கள்ளக்குறிச்சியில் மீட்டர் வட்டி கொடுமையால் பாதிக்கப்பட்டதாகக்கூறி போலீசாருக்கு வீடியோ அனுப்பி விட்டு பாஜக நிர்வாகி தற்கொலை செய்து கொண்டார். நகர பாஜக இளைஞர் அணி துணைத் தலைவராக இருந்த தினேஷ் என்பவர் வேல்முருகன் என்பவரிடம் 10 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். அதற்கு மீட்டர் வட்டி போட்டு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் பணம் தர வேண்டும் எனக்கூறி வேல்முருகன் மிரட்டியதாக சொல்லப்படுகிறது. மேலும், பன்னீர்செல்வம் என்பவர் தினேஷிடமிருந்து பல லட்ச ரூபாயை பெற்று மோசடி செய்ததாகவும் … Read more

அதிமுகவில் பணம் உள்ளது; கொள்கை கிடையாது: சீமான்

சென்னை: “அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களை விலைகொடுத்து வாங்குவதற்கு வாய்ப்பு உள்ளது, அவர்களிடம் பணம் மட்டும்தான் உள்ளது, வேறு ஒன்றும் கிடையாது. கோடிகள் பல உள்ளது, கொள்கை கிடையாது” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். இந்திய ராணுவத்திற்கு ஆட்களைச் சேர்க்க மத்திய அரசு கொண்டுவந்துள்ள அக்னிபாதை திட்டத்தை கைவிடக்கோரி நாம் தமிழர் கட்சியின் சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் … Read more

எடப்பாடி பழனிசாமியிடம் ராகுல்காந்தி பேசினாரா? – பதறிபோய் விளக்கம் கொடுத்த காங்கிரஸ்

யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆதரவாக எடப்பாடி பழனிசாமியிடம் ராகுல் பேசியதாக வெளியான தகவலை மறுத்துள்ள ஜெய்ராம் ரமேஷ் திமுக-காங்கிரஸ் கூட்டணியில் குழப்பத்தை விளைவித்து பலவீனப்படுத்த முயற்சி நடப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.  குடியரசுத் தலைவர் தேர்தல் வரும் 18-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளரான திரௌபதி முர்முவும், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான யஷ்வந்த் சின்ஹாவும் தங்களுக்கான ஆதரவைத் திரட்ட அரசியல் கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்து வருகின்றனர். அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாடு முதல்வர் … Read more

சூரியகாந்தி பூக்களில் மறைந்திருக்கும் பட்டாம்பூச்சி; 20 நொடியில கண்டுபிடிச்சா நீங்க ஜீனியஸ்!

சமீப காலமாக ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நெட்டிசன்களின் அடிக்‌ஷனாக மாறியிருக்கிறது. ஏனேன்றால், மறைந்திருக்கும் குதிரையைக் கண்டுபிடியுங்கள், யானையைக் கண்டுபிடியுங்கல், பறவையைக் கண்டுபிடியுங்கள் என்று ஆப்படிகல் இல்யூஷன் படங்களின் புதிர், எளிதாக கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு சவாலானாவையாக இருப்பதால் நெட்டிசன்களை காந்தம்போல ஈர்த்து வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் முதல் பார்வையில் ஒரு மாதிரியாகவும் இரண்டாவது பார்வையில் வேறு மாதிரியாகவும் தெரியக்கூடியவை. ஆப்டிகல் இல்யூஷன் புதிர்கள் முடிவில்லாத குழப்பத்தை அளித்து இறுதியில் விடை தெரியும்போது ஆச்சரியத்தை அளிப்பவை. அந்த … Read more

ஒருவேளை இப்படி நடந்தால் என்ன செய்வது…? அஇஅதிமுகவின் பொதுக்குழுக்கு மாற்று ஏற்பாடு… வெளியான பரபரப்பு தகவல்.!

அஇஅதிமுகவின் பொதுக்குழு ஜூலை 11ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இன்று, அதிமுகவின் அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் பொதுக்குழுவுக்கான அழைப்பிதழ் சென்று சேர்ந்துள்ளது. மேலும், சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டத்தில் வெளிப்பகுதியில் பொதுக்குழுவை நடத்த ஏற்பாடுகள் தயாராகி வருகின்றன. இந்த பொதுக்குழுவை முடக்கும் அணைத்து வழிமுறைகளையும் ஓபிஎஸ் தரப்பு மேற்கொண்டு வருகிறது. அதே சமயத்தில், எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில்,  “அந்த பொதுக்குழு கூட்டத்தில் … Read more

அரசுப்பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதி பயங்கர விபத்து.. தந்தை, மகள் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு..!

மயிலாடுதுறையில் அரசுப்பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதியதில், தந்தை, மகள் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உறவினர்கள் கண் எதிரே உயிரிழந்தனர் உயிரிழந்தனர். குடும்பத்துடன் கோவிலுக்கு சென்ற குமரவேல், 3 வயது மகள் மற்றும் உறவினர் மகனுடன் இருசக்கர வாகனத்தில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதியதால், நிலைதடுமாறி கீழே விழுந்தவர்கள் மீது அரசு பேருந்து மோதியது. ஆட்டோவில் பின்தொடர்ந்து வந்த உறவினர்கள் கண் எதிரே 3 பேரும் … Read more

வானிலை முன்னறிவிப்பு| தமிழகத்தில்  5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று (ஜூலை 3) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை … Read more