காமராசர் பல்கலை.யில் உயர்வகுப்புக்கு இட ஒதுக்கீடு சமூக அநீதி : திரும்பப் பெறுக – பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ்.!

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில், மத்திய அரசின் நிதியுதவியுடன் நடத்தப்படும் முது அறிவியல்  உயிரிதொழில்நுட்பவியல் (எம்.எஸ்சி- பயோ டெக்னாலஜி) படிப்பில் உயர்வகுப்பு ஏழைகளுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாட்டில் உயர்வகுப்பு ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படாத நிலையில், அது திணிக்கப்படுவது சமூக அநீதியாகும் என்று, பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், “மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முது அறிவியல் உயிரிதொழில்நுட்பவியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை அறிவிக்கை … Read more

பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட தனியார் நர்சிங் கல்லூரி சேர்மன் பாஜகவில் இருந்து நீக்கம்!

பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட அருப்புக்கோட்டை தனியார் நர்சிங் கல்லூரி சேர்மன் தாஸ்வின் ஜான் கிரேஸ் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். தாஸ்வின், பாஜக சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவராக பதவி வகித்த நிலையில், அவர் கட்சிப் பொறுப்பில் சரியாக செயல்படாததால் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அந்த பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். Source link

புதுச்சேரி | சுண்ணாம்பாறு படகுக்குழாமில் சூரிய உதய படகுசவாரி அறிமுகம்

புதுச்சேரி: சுண்ணாம்பாறு படகு குழாமில் சூரிய உதய படகு சவாரி அறிமுகமாகிறது. அதே நேரத்தில் 24 மணி நேரம் மதுவிற்பனை அனுமதிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. புதுச்சேரி சுண்ணாம்பாறு படகு இல்ல வளாகத்தில் உணவகம் பொதுமக்களின் வசதிக்காக, உணவு மற்றும் குளிர்பானங்களுக்காக நாள் முழுவதும் (24 × 7) செயல்படும். அத்துடன் மதுபானங்கள் விற்பனை செய்யப்படும். சுண்ணாம்பாற்றில் நீர் விளையாட்டுகள், சூரிய உதய – படகு சவாரி காலை 06.00 மணி முதல் தொடங்கப்படும். காலை 06.00 … Read more

ஆவடி கனரக தொழிற்சாலை வேலைவாய்ப்பு; 214 காலியிடங்கள்; டிகிரி, டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

Avadi HVF recruitment 2022 for 214 apprentices jobs apply soon: ஆவடி கனரக தொழிற்சாலையில் பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளிவந்துள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் 05.07.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். இந்திய பாதுகாப்புத் துறையின் கீழ் சென்னை ஆவடியில் செயல்பட்டு வரும் கனரக தொழிற்சாலை நிறுவனத்தில் டிகிரி, டிப்ளமோ படித்தவர்களுக்கான அப்ரண்டிஸ் பயிற்சி இடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மொத்தம் 214 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் … Read more

இப்படி குறுந்தகவல் வந்தால் நம்பாதீர்கள்.. திருவள்ளூவர் ஆட்சியர் எச்சரிக்கை..!

ஆட்சியர் பெயரில் போலி வாட்ஸ்அப் கணக்கு தொடங்கப்பட்டுள்ளதாகவும், அதனை யாரும் நம்ப வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சமீபகாலமாக பிரபலங்கள், அரச்சு அதிகாரிகள் பெயரில் போலி வாட்ஸ் அப் கணக்குகள் தொடங்கி மோசடி செய்வது அதிகரித்து வருகிறது. அதனை தடுக்க பல  முயற்சிகளில் காவல்துறையினர் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், திருவள்ளூர் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் பெயரில் போலியாக கணக்கு தொடங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஆட்சியர் புகைப்படம் வைத்த போலி கணக்கில் இருந்து அமேசான் பரிசு பொருட்களை அனுப்புமாறு அதிகாரிகல் கேட்பது போல … Read more

காரின் மீது மோதியதால் ஆத்திரம்.. இருசக்கர வாகன ஓட்டியை சரமாரியாக தாக்கிய கார் உரிமையாளர்!

சென்னையை அடுத்த தாம்பரம் பேருந்து நிலையம் அருகே, காரின் மீது மோதிய இருசக்கர வாகன ஓட்டியை, கார் உரிமையாளர் சரமாரியாக தாக்கிய வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. நேற்றிரவு ஜி.எஸ்.டி சாலையில் போக்குவரத்து நெரிசலின் போது, முன்னே சென்ற கார் மீது இருசக்கர வாகனம் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் காரின் பின்பக்கத்தில் லேசான கீறல்கள் ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த கார் உரிமையாளர், இருசக்கர வாகன ஓட்டி கீழே விழுந்ததையும் பொருட்படுத்தாமல் அவரை சரமாரியாக தாக்கினார். அந்த நபர் … Read more

சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்பட 37 அதிகாரிகள் மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழக உள்துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர், சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 37 ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், பணீந்தர ரெட்டி உள்துறை செயலாளராகவும் , உள்துறைச் செயலாளராக இருந்த எஸ்.கே.பிரபாகர் கூடுதல் தலைமைச் செயலாளர் / வருவாய் நிர்வாக ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சுகாதாரத்துறை செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணன் கூட்டுறவு, உணவு, நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளராகவும், செந்தில்குமார் சுகாதாரத்துறையின் முதன்மைச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். தொழிலாளர் … Read more

கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்… படத்தில் ஜொலிக்கும் வெள்ளை நிறம்; காரணம் தெரியுமா?

சமீப காலமாக ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தை ஒரு புயல் போல தாக்கி வருகிறது. எப்போதும் இல்லாத அளாவில் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் அதிக அளவில் பகிரப்பட்டுவருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் வேலை தருகிற ஒரு சுவாரஸ்யமான பொழுதுபோக்கு புதிராக இருக்கிறது. அது மட்டுமல்லாமல், ஒருவரின் முதல் பார்வையில் என்ன தெரிகிறதோ அதை வைத்து அவர்களின் ஆளுமையையும் வெளிப்படுத்தி ஆச்சரியப்படுத்தி வருகின்றன. ஆனால் இந்த படம் பரிணாம வளர்ச்சியையும் குறிக்கிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்காகவே … Read more

பரோலில் வந்த மத்திய சிறை கைதி இருசக்கர வாகன விபத்தில் படுகாயம்.!

பரோலில் வந்த மத்திய சிறை கைதி இருசக்கர வாகன விபத்தில் படுகாயம் அடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் பாறைக்குட்டம் பகுதியை சேர்ந்தவர் மாடசாமி. இவர் கொலை வழக்கு ஒன்றில் சீவலப்பேரி போலீசாரால் கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 7ஆம் தேதி பரோலில் வீட்டிற்கு சென்றுள்ளார். இதை அடுத்து நேற்று இரு சக்கர வாகன விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்த நிலையில், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு, … Read more

விபத்தில் பலியான காவலர்கள்… 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் உடல் தகனம்!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த இரண்டு காவலர்களின் உடல்களுக்கும், 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம் ஏகே சமுத்திரம் தேசிய நெடுஞ்சாலையில், இன்று அதிகாலை கார் சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானதாக கிடைத்த தகவலின் பேரில் புதுச்சத்திரம் மற்றும் ராசிபுரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, தாறுமாறாக வந்த லாரியும் மண்மேட்டில் மோதி நின்றதையடுத்து, இரு வாகனங்கள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி, போக்குவரத்தை … Read more