மீம்ஸ் கிரியேட்டர்ஸை வாழ வைக்கும் ‘தெய்வம்’ நீங்கதான் தலைவரே..!

அன்றாட அரசியல் நிகழ்வுகளுக்கு உடனுக்குடன் எதிர்வினையாற்றுவது நம்முடைய மீம்ஸ் கிரியேட்டர்கள்தான். அவர்கள் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, நடுநிலையாளராக இருந்தாலும் சரி, நாகரிகமான மீம்ஸ்கள் மட்டுமே கட்சி பேதங்களைத் தாண்டி கவனம் பெறும். சமூக ஊடகங்களில் இன்று (12.06.2022) கவனம் பெற்ற மீம்ஸ்களை இங்கே தொகுத்து தருகிறோம். அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், “திமுகவின் சாயம் வெளுத்து விட்டது” என்று கூறியதற்கு, “௭ப்புடி கடைசி வரை, ஸ்லீப்பர் செல் … Read more

#BREAKING || வெளியான மரண செய்தியால் பெரும் அதிர்ச்சில் எடப்பாடி பழனிச்சாமி.! 

சென்னையில் மீண்டும் ஒரு விசாரணைக் கைதி மரணம் அடைந்திருப்பது பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. சென்னை கொடுங்கையூர் காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட அன்பு என்கின்ற ராஜசேகர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துவிட்டதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு திருவள்ளூரில் வைத்து செங்குன்றத்தை சேர்ந்த ராஜசேகர் என்பவரை கைது செய்த போலீசார், இன்று மாலை 5 மணிக்கு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட போது உயிரிழந்ததாக தகவல். முதல் முதல்கட்ட தகவலின்படி, சொத்து தொடர்பான ஒரு புகாரின் … Read more

அதிக வட்டி கேட்ட இருவர் ஆப்ரேஷன் கந்துவட்டி திட்டத்தின் கீழ் கைது

திருவாரூர் மாவட்டத்தில் ஆப்ரேஷன் கந்துவட்டி திட்டத்தின் கீழ் இருவரை போலீசார் கைது செய்தனர். திருத்துறைபூண்டியை சேர்ந்த நபர் ஒருவர், விஜயகுமார் என்பவரிடம் 16 ஆயிரம் ரூபாய் கடனாக பெற்று, அதற்கு 80 ஆயிரம் ரூபாய் வட்டியாக செலுத்தியதாக கூறப்படுகிறது. விஜயகுமார், மேலும் 75 ஆயிரம் ரூபாய் கந்துவட்டி கேட்ட நிலையில், புகாரின் பேரில் அவரை போலீசார் கைது செய்தனர். அதேபோல் மன்னார்குடியை சேர்ந்த பெண், குடும்பத்தேவைக்காக 50 ஆயிரம் ரூபாயை ஐந்து பைசா வட்டிக்கு பாலமுருகன் என்பவரிடம் … Read more

மக்களை பாதிக்காத வகையில் சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டல விஸ்தரிப்பு: விவசாயிகள் கோரிக்கை

சென்னை: மக்களை பாதிக்காத வகையில் சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தை விஸ்தரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ”இந்திய உச்சநீதிமன்றம் கடந்த ஜூன் 3 ஆம் தேதி வழங்கியுள்ள சுற்றுச்சூழல் தொடர்பான தீர்ப்பின் சில அம்சங்கள் பொது மக்களை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது. வன விலங்கு சரணாலயங்கள் மற்றும் தேசிய பூங்காக்கள் அமைந்துள்ள சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தின் பரப்பளவை … Read more

பொன்னேர் பூட்டி உழுது குறுவை சாகுபடி பணிகளை தொடங்கிய விவசாயிகள்!

எஸ். இர்ஷாத் அஹமது, தஞ்சாவூர் குறுவை சாகுபடிக்காக மேட்டூரில் கோடைக் காலத்திலேயே தண்ணீர் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆறுகள், வாய்க்கால்களில் தண்ணீர் வர தொடங்கியுள்ளது. இதையடுத்து டெல்டா விவசாயிகள் குறுவை சாகுபடி பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். தஞ்சை மாவட்டம், பூதலூர் அருகேயுள்ள செல்லப்பன்பேட்டை பகுதியில் விவசாயிகள் குல தெய்வத்தை வழிபட்டு பொன்னேர் பூட்டி வயல்களை உழுது குறுவை சாகுபடி பணியை தொடங்கினர். டெல்டா பாசனத்திற்காக ஆண்டுதோறும் ஜுன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த … Read more

கடலூர் வாகன ஓட்டிகள் உஷார்., போலீஸ் தரப்பில் வெளியான எச்சரிக்கை.! 

கடலூர் மாநகராட்சி : சாலை ஓரங்களில் வாகனங்களை நிறுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று, போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாநகரத்தில் மையப் பகுதியாக உள்ள திருப்பாதிரிப்புலியூரில் சாலை அமைந்துள்ளது. இந்த சாலையில் பேருந்து நிலையம், பூ மார்க்கெட், வணிக வளாகம், துணிக்கடை, நகைக்கடை, பிரபலமான கோவில்கள், ரயில் நிலையம் ஆகியவை அமைந்துள்ளன. இதன் காரணமாக நாள் முழுவதும் இந்த சாலையில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் போவதும் வருவதுமாக பரபரப்பாக காணப்படும். குறிப்பாக இருசக்கர வாகனம், ஆட்டோ, கார், … Read more

பேண்டேஜ் வாங்க சென்று கடைகாரருக்கு பேண்டேஜ் போட வைத்த குடிமக்கள் : கத்தியால் தாக்கிவிட்டு தப்பியோட்டம்

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் பேண்டேஜ் வாங்க சென்ற நபர்கள், வாக்குவாதத்தில் ஈடுபட்டு மெடிக்கல் கடை பணியாளரை கத்தியால் தாக்கினர். இதுகுறித்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போடிநாயக்கனூர் பேருந்து நிலையம் அருகே உள்ள மருந்தகம் ஒன்றில், நேற்று இரவு கண்ணன், வடிவேல் ஆகியோர் பேண்டேஜ் வாங்க சென்றனர். குடிபோதையில் இருந்த அவர்கள் போதிய பணம் தராமல் பேண்டேஜை வாங்க முயன்ற நிலையில், கடை உரியமையாளர் அதனை தரமறுத்ததாக கூறப்படுகிறது. பின்னர், இருவரும் வாக்குவாதம் … Read more

ஆளுநர் ஆர்எஸ்எஸ்-ஆல் உருவாக்கப்பட்ட ஆளுமை: திருமாவளவன்

சென்னை: “ஆளுநர் ஆர்எஸ்எஸ்-ஆல் உருவாக்கப்பட்ட ஒரு ஆளுமை. அவர் சனாதன தர்மமே இந்தியாவை உருவாக்கியிருக்கிறது, இந்த தேசத்திற்கான ஆன்மாவான அரசமைப்பு சட்டத்தை வழங்கியிருக்கிறது என்றெல்லாம் அவர் உளற ஆரம்பித்திருக்கிறார். இது தேசத்திற்கு நல்லதல்ல. அவர் வகிக்கும் பொறுப்புக்கும் அழகல்ல” என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். சர்வதே குழந்தை தொழில்முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் விசிக தலைவர் திருமாவளன் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: ” நுபுர் சர்மாவையும், … Read more

மருத்துவத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் பணியிட மாற்றம்

IAS officers transferred in Tamilnadu, Health secretary Radhakrishnan transferred: தமிழ்நாடு மருத்துவத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் மாற்றப்பட்டு, புதிய செயலாளராக கு.செந்தில்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இதையும் படியுங்கள்: சனாதன தர்மத்தின் ஒளியால் உருவாக்கப்பட்டதே இந்தியா; ஆளுநரின் பேச்சுக்கு வலுக்கும் எதிர்ப்பு மருத்துவத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் புதிய செயலாளராக கு.செந்தில்குமார் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார். உள்துறைச் செயலாளராக இருந்த எஸ்.கே.பிரபாகர் … Read more

ஜெய்பீம் பட விவகாரம் : ஒரு கோடி ரூபாய் ஏமாற்றியதாக நடிகர் சூர்யா மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் புகார்.! 

ஒரு சமூகத்தின் மீது வன்மத்தை விதைக்கும் வகையில், உண்மையை மறைத்து எடுக்கப்பட்ட ஜெய் பீம் திரைப்படம் மீது தொடர்ந்து புகார்கள் குவிந்து வருகின்றன. ஜெய்பீம் என்ற திரைப்படத்தை உண்மை கதை என்று சொல்லி விளம்பரப்படுத்திய படக்குழு, பின்னர் அது புனையப்பட்ட கதை என்று பின்வாங்கியது. இதற்கு காரணம் திரைப்படத்தில் வேண்டுமென்றே தமிழகத்தில் பெரும்பான்மையாக இருக்கக் கூடிய வன்னிய இன மக்களை எதிரியாக சித்தரித்து, படத்தில் கதாபாத்திரங்கள் அமைக்கப்பட்டிருந்தது. படத்தின் மையக் கருவில் அமைக்கப்பட்ட வில்லன் கதாபாத்திரம் உண்மையில் … Read more