விடுமுறை முடிந்து சென்னை திரும்பிய மக்கள்: ஸ்தம்பித்தது போக்குவரத்து

வெளியூர் சென்றவர்கள் கோடை விடுமுறை முடிந்து சென்னை திரும்பியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சென்னையில் வசிக்கும் பலர், கோடை விடுமுறையை கழிக்க குழந்தைகளுடன் சொந்த ஊர் மற்றும் வெளியூர்களுக்கு சென்றிருந்தனர். இந்நிலையில் பள்ளிகள் இன்று திறக்கப்படுவதால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் கார்களிலும் மற்ற வாகனங்களிலும் சென்னை திரும்பி வருகின்றனர். இதனால் நேற்று மாலை மற்றும் இரவில் பெருங்களத்தூர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஜிஎஸ்டி சாலையில் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து செல்லும் … Read more

இன்று 1 முதல் 10 ஆம் வகுப்பு மாணவ – மாணவிகளுக்கு பள்ளிகள் திறப்பு.!!

கோடை விடுமுறைக்கு பின்பு ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. 2022 – 2023 ஆம் ஆண்டுக்கான நேரடி வகுப்புகள் இன்று முதல் ஆரம்பமாகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு வழக்கமாக தொடங்கப்படும் ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. காலை  9:10 மணி முதல் 4:10 மணி வரையில் எட்டு பாடவேளைகளாக ஒரு நாளைக்கு 7 மணி நேர வகுப்புகள் நடத்த … Read more

தமிழகம் முழுவதும் 51 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: உள்துறை செயலர் பணீந்திர ரெட்டி, சுகாதாரத் துறை செயலர் செந்தில்குமார்

சென்னை: தமிழகத்தில் உள்துறை, சுகாதாரத் துறை செயலர்கள் உட்பட 51 ஐஏஎஸ்அதிகாரிகள் ஒரேநாளில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். உள்துறை செயலராக பணீந்திர ரெட்டி, சுகாதாரத்துறை செயலராக செந்தில்குமார் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தலைமைச் செயலர் வெ.இறையன்பு நேற்று வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது, வணிகவரித் துறை ஆணையராக இருந்த கே.பணீந்திர ரெட்டி, உள்துறை செயலராகவும், அப்பதவியில் இருந்தஎஸ்.கே.பிரபாகர், வருவாய் நிர்வாகஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். கூட்டுறவு மற்றும் உணவுத்துறை செயலராக உள்ள முகமது நசிமுத்தீன், தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை செயலராகவும், சுகாதாரத்துறை … Read more

#INDvsSA || டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி., பதிலடி கொடுக்க களமிறங்கும் இந்திய அணி.! 

இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணி, இந்தியாவுடன் 5 டி20 ஆட்டங்களில் விளையாடி வருகிறது. இதில், தலைநகர் டெல்லியில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடரில் 1 – 0 என்ற கணக்கில் தென்னாபிரிக்க அணி முன்னிலையில் பெற்றுள்ளது. இன்று இந்த இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது 20 ஓவர் ஆட்டம் ஒடிசா மாநிலம், கட்டாக்கில் உள்ள … Read more

மின் வாரியத்தில் மீண்டும் பராமரிப்பு பணிகள் தொடக்கம்: மின்தடை தவிர்க்கப்படும் என தகவல்

சென்னை: மின் வாரியத்தில் 2 மாதங்களுக்கு பிறகு மீண்டும் பராமரிப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதனால், அடிக்கடி மின்தடை ஏற்படுவது தவிர்க்கப்படும் என்றுமின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழக மின் வாரியம், துணைமின் நிலையங்களில் இருந்து மின்சாரத்தை அனுப்பி, மின் மாற்றி,மின் விநியோகப் பெட்டி உதவியுடன் வீடுகள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு மின்சாரத்தை விநியோகம் செய்கிறது. மின் வாரிய சாதனங்களில் எப்போதும் மின்சாரம் செல்வதால், அதிக வெப்பத்துடன் இருக்கும். அவற்றில் பழுது ஏற்படாமல் இருக்க, குறிப்பிட்ட இடைவெளியில் … Read more

பைக் ரேஸால் அநிநாயமாக பலியான பெண்.. சென்னையில் நடந்த சோகம்..!

பைக் ரேஸில் ஈடுபட்ட மோட்டார் சைக்கிள் மோதி  பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தாம்பரம் அடுத்த மண்ணிவாக்கம் அருகே உள்ள வண்டலூர் மீஞ்சூர் சாலையில் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தனது தோழியுடன் பேசிக் கொண்டே இரு சக்கர வாகனத்தில் சென்ற போது அந்த வழியாக மின்னல் வேகத்தில் வந்த ஏராளமான இருசக்கர வாகனங்கள் பயமுறுத்தும் வகையிபல் பைக் ரேசில் ஈடுபட்டு வந்தனர். அப்போது வாலிபர் ஒருவர் அதே வேகத்தில் ஓட்டி வந்த … Read more

டிஎன்பிஎஸ்சி தலைவராக முனியநாதன் நியமனம்

சென்னை: தமிழக அரசுத் துறைகளில் உள்ளகாலி பணியிடங்கள் தமிழ்நாடுஅரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. டிஎன்பிஎஸ்சி தலைவராக 2020-ல் ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் பொறுப்பேற்றார். இவர் கடந்த ஜூன் 9-ம் தேதி ஓய்வு பெற்றார். இதையடுத்து, புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், தற்காலிக அடிப்படையில் டிஎன்பிஎஸ்சி உறுப்பினரான ஐஏஎஸ் அதிகாரிசி.முனியநாதன், தேர்வாணையத்தின் பொறுப்பு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கெனவே நாகை மாவட்ட ஆட்சியர், ஆதிதிராவிடர் … Read more

கிரிவல பாதையில் கஞ்சா போதையில் ரகளையில் ஈடுப்பட்ட வாலிபரால் பரபரப்பு..!

கஞ்சா போதையில் இளைஞர் ரகளையில் ஈடுப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை கிரிவல பாதையில் சுமார் 12 மணியளவில் கிரிவலப்பாதையில் உள்ள பழனியாண்டவர் கோவில் அருகில் இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் ஒருவர் அந்த பகுதியில் உள்ள சாதுக்கள் மற்றும் மக்களிடம் தகாத வார்த்தையால் பேசியுள்ளார். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரை பிடித்து விசாரனை நடத்திய போது அவர் கஞ்சா போதையில் இருப்பது தெரியவந்தது. ஆந்திராவை சேர்ந்த அந்த வாலிபர் போதையில் இருந்ததால் அவரின் இருசக்கர … Read more

திருச்சியில் சுதந்திரப் போராட்ட வீரர் ராஜதுரை மைக்கேல் வயதுமுதிர்வு காரணமாக காலமானார்.!

திருச்சியில் வசித்து வந்த சுதந்திரப் போராட்ட தியாகி பி. ராஜதுரை மைக்கேல் வயதுமுதிர்வு காரணமாக காலமானார். அவருக்கு வயது 101. இவரது குடும்பம் திருநெல்வேலி மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்டது என்றாலும் திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் பிறந்தார். இவருக்கு, 2 மகன்கள், 4 மகள்கள், பேரன், பேத்திகள், கொள்ளுப் பேரன், பேத்திகள் உள்ளனர். நேதாஜியின் படையில் இணைந்து சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு 3 முறை சிறை சென்றுள்ளார். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் போலீஸாரின் துப்பாக்கிச் சூட்டிலிருந்து தப்பிய பெருமைக்குரிய … Read more

நாமக்கல் சாலை விபத்தில் உயிரிழந்த காவலர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம்: முதல்வர் அறிவிப்பு

சென்னை: நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட வேன் விபத்தில் உயிரிழந்த இரண்டு காவலர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் தேசிய நெடுஞ்சாலையில் கட்டுமானப் பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், அந்தப் பகுதியில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட கார் விபத்து குறித்து விசாரிப்பதற்காக, ராசிபுரம் காவல் நெடுஞ்சாலை ரோந்து வாகனம் 49-ல் … Read more