ராஜ்ய சபா தேர்தல்: காங்கிரஸ் சார்பில் ப.சிதம்பரம் போட்டி; கர்நாடகாவில் நிர்மலா சீதாராமன் தேர்வு

ராஜ்ய சபா தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ஒரு இடத்தில் போட்டியிட காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிட ப.சிதம்பரம் நாளை (மே 30) வேட்புமனு தாக்கல் செய்கிறார். தமிழகம் உட்பட 15 மாநிலங்களில் மாநிலங்களவை உறுப்பினர்கள் 57 பேரின் பதவிக் காலம் வரும் ஜூன் முதல் ஆகஸ்ட் மாதங்களில் முடிவடைகிறது. இதையொட்டி, இந்த பதவியிடங்களுக்கான தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதில், தமிழ்நாட்டில் ராஜ்ய … Read more

மாநிலங்களவை தேர்தல்.. அதிமுக மற்றும் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்.. இன்று வேட்பு மனு தாக்கல்.!!

தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட டிகேஎஸ் இளங்கோவன், ஆர் எஸ் பாரதி, ராஜேஷ்குமார், நவநீத கிருஷ்ணன், விஜயகுமார், எஸ். ஆர் சுப்பிரமணியன் ஆகிய 6 பேரின் பதவி காலம் ஜூன் 29-ஆம் தேதி முடிவடைய உள்ளது. இந்த பதவிகளுக்கு ஜூன் 10ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திமுக கூட்டணி சார்பில் 4 இடங்களில் உள்ளது.  அதில் திமுக சார்பில் 3 பேரும், காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது. திமுக சார்பில் தஞ்சை கல்யாணசுந்தரம், … Read more

திரையுலக சாதனையாளருக்கு கருணாநிதி பெயரில் விருது: தேர்வுக் குழு அமைத்து அரசு உத்தரவு

தமிழ் திரையுலகில் சிறந்து விளங்கிய வாழ்நாள் சாதனையாளருக்கு கருணாநிதி பெயரில் ‘கலைஞர் கலைத் துறை வித்தகர் விருது’ இந்த ஆண்டு முதல் வழங்கப்பட உள்ளது. விருதாளரை தேர்ந்தெடுக்க எஸ்பி.முத்துராமன் தலைமையில் தேர்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ் திரையுலகில் சிறந்துவிளங்கிய வாழ்நாள் சாதனையாளருக்கு கருணாநிதி பெயரில் ‘கலைஞர் கலைத் துறை வித்தகர் விருது’ வழங்கப்படும் என்று ஆணை வெளியிடப்பட்டுள்ளது. வரும் ஜூன் 3-ம் தேதி முதல் ஒவ்வொரு ஆண்டும் இந்த … Read more

உணவு தேடி ஊருக்குள் புகுந்து கரும்புத் தோட்டத்தை துவம்சம் செய்த காட்டு யானைகள்

காரிமங்கலம் அருகே உணவு தேடி வந்து கரும்புத் தோட்டத்தில் புகுந்த 3 யானைகளை 12 மணி நேரத்திற்குப் பிறகு வனத்திற்குள் விரட்டியடிகப்பட்டது. தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த முக்குளம் பஞ்சாயத்து குட்டகாட்டூர் பகுதியில் சீனிவாசன் என்பவருக்கு சொந்தமான கரும்புத் தோட்டம் உள்ளது. இன்று அதிகாலை தண்ணீர் தேடி 3 காட்டு யானைகள் வனத்தை விட்டு வெளியேறி, குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது. அப்பொழுது சீனிவாசனின் கரும்புத் தோட்டத்திற்குள் நுழைந்துள்ளது. இதையடுத்து யானை பிளிறும் சத்தம் கேட்டு அச்சமடைந்த சீனிவாசன், … Read more

குப்பை தொட்டியில் கண்டெடுக்கப்பட்ட் பிறந்து சில மணி நேரங்களே ஆன பெண் குழந்தை…!

பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் குழந்தையை விட்டுச் சென்ற பெற்றோர் கொடுத்த காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடலூர் மாவட்டம், திருப்பாதிரிப்புலியூர் பகுதியிலுள்ள குப்பைத் தொட்டியில் குழந்தையின் அழுகுரல் கேட்டது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் குப்பை தொட்டி அருகே சென்று பார்த்தபோது பிறந்த சில மணி நேரங்களே ஆன பெண் சிசு இருந்துள்ளது. – இதனையடுத்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு … Read more

டெல்டா மாவட்டங்களில் இன்று ஆய்வு செய்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்டா மாவட்டங்களில் ஆய்வு செய்கிறார். கடந்த 24 ஆம் தேதி குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இந்நிலையில் டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகள் மற்றும் வடிகால் பணிகளை முதலமைச்சர் பார்வையிடுகிறார். இன்று புதுக்கோட்டை மாவட்டத்திலும் நாளை நாகை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி மாவட்டங்களிலும் ஆய்வு செய்து விவசாயிகளின் கருத்துகளை ஸ்டாலின் கேட்டறிய உள்ளார். Source link

சமத்துவ சிந்தனையை வளர்க்கும் விதத்தில் பயிற்சிப் பாசறை கூட்டங்களை நடத்த வேண்டும்: திமுகவினருக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: சுயமரியாதை உணர்வையும், சமத்துவ சிந்தனையையும் மேலும்வளர்த்தெடுக்கும் விதத்தில் பயிற்சிப் பாசறை கூட்டங்களை நடத்த வேண்டும் என்று திமுகவினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து கட்சித் தொண்டர்களுக்கு அவர் நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது. நவீன தமிழகத்தின் தந்தை கருணாநிதிக்கு தமிழக அரசு சார்பில் நிறுவப்பட்ட சிலையை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு திறந்து வைத்த நிகழ்வு, பெருமைக்குரிய ஒன்று. ‘தமிழகத்தின் வளர்ச்சிப் பாதையில் என்றும் அழியாத தடத்தை விட்டுச் சென்றுள்ள உண்மையான பன்முகஆளுமை கொண்டவர் … Read more

4 மாவட்டங்களில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று ஆய்வு.!!

மேட்டூர் அணை மற்றும் கல்லணையைகளில் இருந்து குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்படுவதால், விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். இதையடுத்து கடைமடை பகுதியில் விவசாயிகளுக்கு தண்ணீர் சென்று சேரும் வகையில் காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் நடைபெற்ற வருமாறு கால்வாய்களை தூர்வாரும் பணிகள் நிறைவடைய உள்ளது.  இந்த பணிகளை ஆய்வு செய்வதற்காக  முக ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் சென்று இன்று திருச்சி செல்கிறார். அங்கு ஆய்வு செய்த பின்னர் … Read more

ரஷ்யாவில் இருந்து கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு செறிவூட்டப்பட்ட யுரேனியம் எரிகோல்கள் வரத்து

ரஷ்யாவில் இருந்து கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு செறிவூட்டப்பட்ட யுரேனியம் எரிகோல்கள் நேற்று வந்து சேர்ந்தன. திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் தலா ஆயிரம் மெகாவாட் உற்பத்தி திறனுள்ள 2 அணு உலைகளில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. 3, 4, 5 மற்றும் 6-வது அணு உலைகளுக்கான கட்டுமானப் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. அணு உலைகளில் மின்உற்பத்தி செய்வதற்காக, செறிவூட்டப்பட்ட யுரேனியம் எரிகோல்கள் எரிபொருளாக பயன்படுத்தப்படுகின்றன. இந்த எரிகோல்கள் ரஷ்யாவின் அரசுத்துறை நிறுவனமான ரோஸாட்டம் நிறுவனத்திலிருந்து பெறப்படுகின்றன. கூடங்குளம் … Read more