தேசிய தடகள போட்டிகள்: தங்கத்தை தட்டிச் சென்றார் தமிழக வீராங்கனை!

Karnataka’s Aishwarya has qualified for the Commonwealth Games by jumping 6.73 meters in the women’s long jump at the National Senior Athletics Championships in Chennai: 61-வது தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் சென்னையில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நாடு முழுவதும் உள்ள 700-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். மாநிலங்களுக்கு இடையிலான இந்தப் போட்டிகளில் வீரர், வீராங்கனைகள் தங்களின் சாதனையை பதிவு … Read more

#தூத்துக்குடி || சாலையில் வேன் கவிழ்ந்த விபத்தில் 22 பேர் காயம்.!

தூத்துக்குடி மாவட்டத்தில் டயர் வெடித்து வேன் கவிழ்ந்த விபத்தில் 22 பேர் காயமடைந்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை பகுதியை சேர்ந்த 25 பேர், வேளாங்கண்ணி பூண்டி மாதா கோவிலுக்கு சென்றுவிட்டு வாடகை வேனில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். அப்பொழுது திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி திருச்சி மதுரை நெடுஞ்சாலையில், வேனின் முன்பக்க டயர் வெடித்ததில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே உள்ள சென்டர் மீடியன் மீது ஏறி, அடுத்த சாலையை கடந்து வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதையடுத்து … Read more

கொதிக்கும் எண்ணெய் சட்டியில் தவறி விழுந்த ஒன்றரை வயது குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் பெற்றோரின் அஜாக்கிரதையால் கொதிக்கும் எண்ணெயில் ஒன்றரை வயது குழந்தை விழுந்து உயிரிழந்தது. நல்லூரை சேர்ந்த பாலமுருகன், ஷாலினி தம்பதியின் ஒன்றரை வயது குழந்தை, பக்கத்து வீட்டில் விளையாடிய போது பலகாரம் சுட்டு தனியாக வைத்திருந்த கொதிக்கும் எண்ணெய் சட்டியில் தவறி விழுந்தது. கால் தொடை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயத்துடன் மீட்கப்பட்ட குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது.  Source link

கொடுங்கையூர் காவல்நிலைய சம்பவம்: எஸ்.ஐ. உள்பட 5 பேரிடம் மாஜிஸ்திரேட் விசாரணை

சென்னை: சென்னை, கொடுங்கையூர் காவல்நிலைய விசாரணைக் கைதி ராஜசேகர் உயிரிழந்தது தொடர்பாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் உட்பட 5 காவலர்களும் மாஜிஸ்திரேட் முன் ஆஜராகினர். கொடுங்கையூர் காவல்நிலையத்தில் மாஜிஸ்திரேட் லட்சுமி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. சென்னை செங்குன்றம், அடுத்த அலமாதி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர் (31). இவரை, திருட்டு வழக்கு தொடர்பாக கொடுங்கையூர் போலீஸார் அழைத்துச் சென்று விசாரித்துள்ளனர். அப்போது, அவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவரை போலீஸார் … Read more

டிராக்டரை முந்திச்செல்ல விபரீத முயற்சி… 4 வயது குழந்தையுடன் தாயும் பலியான சோகம்

ஈரோடு அருகே சாலை விபத்தில் கரும்பு டிராக்டர் மோதி 4 வயது குழந்தையும், அவரது தாயும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளனர். ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி பூந்துறைசேமூர் பகுதியை சேர்ந்தவர் கோமதி. இவர், தனது 4 வயது குழந்தை சுகுதியுடன் தனது இருசக்கர வாகனத்தில் மொடக்குறிச்சி நோக்கி நேற்று இரவு நேரத்தில் சென்று கொண்டிருந்திருக்கிறார். பட்டறை வேலம்பாளையம் பகுதியில் சென்றபோது முன்னால் சென்றுகொண்டிருந்த கரும்பு பாரம் ஏற்றி சென்றுகொண்டிருந்த டிராக்டரை முந்த கோமதி முயற்சி செய்துள்ளார். அப்போது எதிர்திசையில் மற்றொரு … Read more

Tamil news today live : அரசு பள்ளிகளில் எண்ணும் எழுத்தும் திட்டத்தை துவக்கி வைத்தார் முதலமைச்சர்

Go to Live Updates பெட்ரோல்- டீசல் விலை சென்னையில் 22வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை . பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.102.63க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ. 94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அணை நீர்மட்டம் பவானிசாகர் அணை நீர்மட்டம் – 82.67 அடி, நீர் இருப்பு – 17.1 டிஎம்சி, நீர்வரத்து – 361 கனஅடி, நீர் வெளியேற்றம் – 1,005 கன அடி. போராட்டம் நடத்த அனுமதி மறுப்பு காங்கிரஸ் தலைமை … Read more

முதல்வர் ஸ்டாலினால் தொடங்கிவைக்கப்பட்ட 'சூதாட்ட சொகுசு கப்பல்' விரட்டியடிப்பு.! 

தமிழக முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்ட சொகுசு கப்பல் இரண்டாவது முறையாக புதுச்சேரியில் நுழைய முயன்றபோது, தடுத்து நிறுத்தி எச்சரித்து துரத்தி அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை துறைமுகத்தில் இருந்து ‘சூதாட்ட சொகுசு கப்பல்’ என்று குற்றம் சாட்டப்படும் கப்பலை முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடந்த வாரம் தொடங்கி வைத்தார். அந்த சொகுசு கப்பல் சென்னையிலிருந்து விசாகப்பட்டினம், புதுச்சேரி மற்றும் ஆழ் கடல் பகுதிகளுக்கு பயணிகளை அழைத்துச் சென்று வர பயணத் திட்டம் கொண்டு … Read more

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு: முதல் ஒரு வாரம் புத்துணர்ச்சி பயிற்சி.. உளவியல் ரீதியான வகுப்புகள்.!

கோடை விடுமுறை முடிவடைந்ததை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும், இன்று, அரசு மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. மாணவ, மாணவிகள் புதிய உற்சாகத்துடன் தங்கள் கல்வி கற்றலைத் தொடங்கியுள்ளனர். பள்ளிக்கு வந்த மாணவர்களை, நுழைவு வாயிலிலேயே ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகத்தினர் வரவேற்றனர். அனைத்து அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளுக்கும், பாடம் மற்றும் நோட்டு புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டு இன்று வழங்கப்படும். கொரோனாவுக்கு பிந்தைய முழு கல்வியாண்டு தொடங்குவதால், முதல் வாரம், அனைத்து மாணவர்களுக்கும் புத்துணர்வு பயிற்சியும், நல்லொழுக்கம் … Read more

பள்ளிகள் திறப்பு: கனிவுடன் வரவேற்று, அரவணைப்புடன் பாடங்களைக் கற்பிக்க முதல்வர் அறிவுறுத்தல்

தமிழகம் முழுவதும் இன்று பள்ளிகள் திறக்கப்படும் சூழலில் மாணவர்களை கனிவுடன் வரவேற்று அரவணைப்புடன் பாடங்களைக் கற்பிக்க வேண்டும் என ஆசிரியர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். கோடை விடுமுறை முடிந்து மாநிலம் முழுவதும் 1முதல் 10ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணர்களுக்கு இன்று (ஜூன் 13ஆம் தேதியன்று) பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்திருந்தார். அதன்படி இன்று காலை பள்ளிகள் திறக்கப்பட்டன. இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது சமூகவலைதள பக்கத்தில், “இன்று பள்ளிகள் … Read more

லாரி மீது சொகுசு பஸ் மோதி விபத்து.! 7 பேர் படுகாயம்.!

லாரி மீது சொகுசு பஸ் மோதிய விபத்தில் 7 பேர் படுகாயமடைந்துள்ளனர். சென்னையில் இருந்து பெங்களூர் நோக்கி சொகுசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது வேலூரிலிருந்து கிருஷ்ணகிரி நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த லாரி மீது நாட்டறம்பள்ளி அருகே வெலக்கல்நந்தம் பகுதியில் சொகுசு பஸ் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 7 பேர் காயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த நட்டறாம்பள்ளி … Read more