மருத்துவப் படிப்பில் பதக்கங்கள் பெற்ற 28 மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து

சென்னை: மருத்துவப் படிப்பில் பதக்கங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை பெற்ற 28 மாணவ, மாணவியர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்தினார். 2016-ஆம் ஆண்டு நீட் தேர்வு அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்னர் மாநில பாடத்திட்டத்தின்படி அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு தேர்வு செய்யப்பட்டு 2022-ஆம் ஆண்டு இளங்கலை மருத்துவப் படிப்பை நிறைவு செய்த தமிழகத்தின் பல்வேறு கல்லூரிகளைச் சேந்த 28 மாணவ, மாணவியர்கள் மருத்துவப் படிப்பில் பதக்கங்கள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களைபெற்றுள்ளனர். அரசு மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் … Read more

'என்ன ஒரு டேஸ்ட்' – லாரியை வழிமறித்து கரும்பை சுவைத்த ஒற்றை காட்டுயானை

சத்தியமங்கலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரியை வழிமறித்து கரும்பை எடுத்துத் தின்ற காட்டுயானையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. இந்த வனப்பகுதி வழியாக தமிழகம் கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதியில் விவசாயிகள் அதிகளவில் கரும்பு பயிரிட்டுள்ளனர். தற்போது தாளவாடி மலைப்பகுதியில் கரும்பு அறுவடை செய்யப்பட்டு லாரிகளில் பாரம் ஏற்றி அடர்ந்த வனப்பகுதி சாலை வழியாக சத்தியமங்கலம் … Read more

தமிழகம் முழுவதும் மதுபான விற்பனை குறைவு; இதுதான் காரணமா?

தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் மூலம் விற்பனை செய்யப்படும் மதுபானத்தின்  விற்பனை 6 சதவிகிதம் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் மதுபான விற்பனையிலிருந்து அரசுக்கு அதிக வருவாய் கிடைக்கிறது. இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் மதுபானத்தின் விலை சற்று உயர்த்தப்பட்டதிலிருந்து விற்பனை குறைதுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகம் முழுவதும் சுமார் 4 முதல் 6 % வரை மதுமான விற்பனை குறைந்துள்ளது. மீடியம் வகை மதுபானத்தை அதிகம் வாங்கிய மதுப்பிரியர்கள் தற்போது விலை உயர்வால், சாதாரண … Read more

பழம்பெரும் இசையமைப்பாளரான திரை இசை சக்கரவர்த்தி எம்.எஸ்.விஸ்வநாதன் பிறந்த தினம்.!!

எம்.எஸ்.விஸ்வநாதன் :  பழம்பெரும் இசையமைப்பாளரான திரை இசை சக்கரவர்த்தி எம்.எஸ்.விஸ்வநாதன் 1928ஆம் ஆண்டு ஜூன் 24ஆம் தேதி, கேரள மாநிலம் பாலக்காட்டில் பிறந்தார். இவரது முழுப்பெயர் மனயங்கத் சுப்ரமணியன் விஸ்வநாதன். 1953ஆம் ஆண்டு வெளிவந்த ஜெனோவா திரைப்படத்திற்கு முதன்முதலாக இசையமைத்தார். இவர் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். மேலும், தமிழ்த்தாய் வாழ்த்தான நீராடும் கடலுடுத்த பாடலுக்கு மோகன இராகத்தில் இசையமைத்துள்ளார். கலைமாமணி, இசைப்பேரறிஞர் விருது, ஃபிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருது உட்பட பல விருதுகளையும், சிறந்த இசையமைப்பாளருக்கான … Read more

ஒமைக்ரான் BA-4, BA-5 வேகமாகப் பரவும் தன்மை கொண்டதாக உள்ளது – அமைச்சர் மா.சுப்பிரமணியன்.!

தற்போது பரவி வரும் ஒமைக்ரான் பி.எ-4, பி-எ-5 வகை கொரோனா உயிர் கொல்லியாக இல்லாமல், வேகமாகப் பரவும் தன்மை கொண்டதாக உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கவிஞர் கண்ணதாசனின் 96-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், மு.பெ.சாமிநாதன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். Source link

அடையாறு ஆற்றில் வீடு கட்டும் திட்டம்; சிஎம்டிஏ. ஒப்புதல் அளிக்கக் கூடாது: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: அடையாறு ஆற்றின் வெள்ள நீர் கொள்ளும் திறன் குறித்து வல்லுனர் குழுவைக் கொண்டு ஆய்வு நடத்தி பின்னர் வீடு கட்டும் திட்டம் குறித்து முடிவையும் அரசு எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “சென்னை நந்தம்பாக்கத்தில் அடையாறு ஆற்றின் ஓர் அங்கமாக குறிப்பிடப்பட்டுள்ள சர்வே எண் 170-ஐக் கொண்ட 6 ஏக்கர் நிலத்தை குடியிருப்பு மற்றும் தொழிற்சாலைப் பகுதியாக அறிவிக்க சென்னை பெருநகர வளர்ச்சிக் … Read more

கிண்டி கிங்ஸ் மருத்துவமனை கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்படும் – அமைச்சர் மா.சுப்ரமணியன்

கிண்டி கிங்ஸ் மருத்துவமனையை மீண்டும் கொரோனா சிகிச்சை மையமாக மாற்றுவதற்கு திட்டமிடப்பட்டு வருகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை கிண்டியில் உள்ள தனியார் கார் நிறுவன பராமரிப்பு நிலையத்தை அமைச்சர் மா.சுப்பிரணியன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்நிகழ்வில் துணை மேயர் மகேஷ் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்… உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் தினசரி 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை கொரோனா பரவல் அதிகரித்து … Read more

21 செகண்ட் டைம் தர்றோம்… இதில் ஒளிந்திருக்கும் 5 எலுமிச்சை பழங்களை கண்டுபிடிங்க!

Optical Illusion game: ஒளியியல் மாயைகள் (Optical illusions) காட்சி ஏமாற்றத்தால் உருவாக்கப்பட்டவை மற்றும் அவை காட்சி மாயைகள் என்றும் அழைக்கப்படுகின்றன. இத்தகைய மாயைகள் ஒருவரின் மூளை எவ்வாறு செயல்படுகிறது என்பதை வெளிப்படுத்துகிறது. இது படங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட விதம், வண்ணங்களின் விளைவு, ஒளி மூலங்களின் தாக்கம் அல்லது பிற காரணிகளைப் பொறுத்தது. பல்வேறு தவறான காட்சி விளைவுகள் மனித கண்களால் உணரப்படுகின்றன. மேலும், எல்லோரும் ஒரே மாதிரியான காட்சி மாயைகளை அனுபவிக்க வேண்டும் என்பது அவசியமில்லை. சிலருக்கு … Read more

இந்த வழிமுறைகளை மேற்கொண்டால் மட்டுமே இதனை நிறுத்த முடியும் – ஆலோசனை சொல்லு டிடிவி தினகரன்.!

கடலூர் மாவட்டம் எம்.புதூர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான சிறிய அளவிலான பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வந்தது. அதில் நேற்று வழக்கம்போல ஊழியர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக வானவேடிக்கை பட்டாசுகள் வெடித்து சிதறியுள்ளது. இதனால் பட்டாசு ஆலை உருகுலைந்த நிலையில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். மேலும்,  இருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.  அதில் ஒருவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  இதற்கிடையே, கடலூர் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட … Read more

தேர்தல் ஆணையத்தை நாடினார் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்

ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் இன்றி பொதுக்குழுவுக்கு அழைப்பு விடுக்க முடியாது என ஓ.பன்னீர்செல்வம் டெல்லி தேர்தல் ஆணையத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். டெல்லி சென்றுள்ள ஓ.பன்னீர்செல்வம், தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், கட்சி விதிகளில் மாற்றம் செய்து ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு பதிலாக பொதுச்செயலாளர் பதவியை கொண்டு வர முயற்சிப்பதாகவும் தெரிவித்துள்ளார். Source link