தருமபுரி: 18 கிராம மக்கள் நடத்திய திருவிழாவில் தேர் கவிழ்ந்து விபத்து – இருவர் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே தேர் கவிழ்ந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள மாதேஹள்ளி கிராமத்தில் காளியம்மன் தேர் திருவிழா கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் நடைபெறும் இந்த கோவில் திருவிழாவை 18 கிராம மக்கள் ஒன்றிணைந்து நடத்தி வருகின்றனர். திருவிழாவின் முக்கிய நாளான இன்று தேர் ஊர்வலம் நடைபெற்றது. அப்பொழுது வயல்வெளிகளில் தேர் வந்து கொண்டிருக்கும்போது திடீரென தேர் சக்கரத்தின் அச்சாணி முறிந்து தேர் சாய்ந்தது. … Read more

தாலுகா ஆபீஸில் ஜெயலலிதா, ஈ.பி.எஸ் புகைப்படங்கள் அகற்றம்; அ.தி.மு.க.,வினர் திரண்டதால் பரபரப்பு

EPS photos removed from Thiruvannamalai Taluk office issue: திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி புகைப்படங்கள் அகற்றப்பட்டது, சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், அ.தி.மு.க.,வினர் அங்கு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. முன்னாள் முதல்வர்களின் புகைப்படங்கள் அங்கு மீண்டும் வைக்கப்பட்டன. திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் அறையில் முன்னாள் முதல்வர்களின் புகைப்படங்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்தநிலையில், இன்று தாலுகா அலுவலகத்தில் கலெக்டர் முருகேஷ் தலைமையில் ஜமாபந்தி நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இன்று தாசில்தார் அறையில் … Read more

#BigBreaking || தருமபுரி அருகே கோவில் தேர் சரிந்து விழுந்து கொடூர விபத்து.! அதிர்ச்சி காணொளி.! 2 பேர் பலி, 3 பேர் படுகாயம்.!

தர்மபுரி அருகே காளியம்மன் கோவில் திருவிழாவின் போது சப்பரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே காளியம்மன் கோவில் திருவிழாவின் போது, பக்தர்களால் இழுத்து வரப்பட்ட சப்பரம் சரிந்து விழுந்ததில், இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மூன்று பேர் படுகாயமடைந்துள்ளதாக முதல்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. பாப்பாரப்பட்டி அருகே … Read more

ஆழ்குழாய் கிணற்றில் விழுந்த நாய்க்குட்டி.. 5 மணி நேரம் போராடி மீட்பு.. ஜேசிபி மூலம் குழி தோண்டி உதவிய மூர்த்திக்கு மக்கள் பாராட்டு

திருவாரூர் அருகே ஆழ்குழாய் கிணற்றில் விழுந்த நாய்க் குட்டியை 5 மணி நேரம் போராடி உயிருடன் மீட்க உதவியவரை பலரும் பாராட்டி வருகின்றனர். குன்னியூரைச் சேர்ந்த மூர்த்தி என்பவரின் வீட்டிற்கு பின்புறம் உள்ள இடத்தில் குடிநீருக்காக 30 அடி ஆழ்குழாய் கிணறு தோண்டிய நிலையில், தண்ணீர் கிடைக்காததால் அதனை அப்படியே கைவிட்டுள்ளார். இந்நிலையில், அங்கு விளையாடிக் கொண்டிருந்த நாய்க்குட்டி ஒன்று, ஆழ்குழாய் கிணற்றில் விழுந்தது. இதனை அடுத்து, மூர்த்தி அளித்த தகவலை அடுத்து அங்கு வந்த தீயணைப்புத்துறையினர், … Read more

தமிழகத்தில் புதிதாக 255  பேருக்கு கரோனா பாதிப்பு

சென்னை: தமிழகத்தில் இன்று ஆண்கள் 130, பெண்கள் 125 என மொத்தம் 255 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக சென்னையில் 127 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 34 லட்சத்து 57,637 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 34 லட்சத்து 18,159 பேர் குணமடைந்துள்ளனர். இன்று மட்டும் 134 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர். தமிழகம் முழுவதும் 1,453 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று உயிரிழப்பு இல்லை. தமிழகத்தில் நேற்று கரோனா தொற்று … Read more

காதல் திருமணம் செய்த புதுமண தம்பதி வெட்டிக்கொலை – வீட்டிற்கு வரவழைத்து சகோதரர் வெறிச்செயல்

கும்பகோணம் அருகே பத்து நாட்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்த தம்பதியர் படுகொலை செய்யப்பட்டனர். சோழபுரம் அருகேயுள்ள விளந்தகண்டம் அய்யா காலனியைச் சேர்ந்தவர் சரண்யா (28) இவரும் சென்னையைச் சேர்ந்த மோகன் என்பவரும் பத்து நாட்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்;து கொண்டதாக தெரிகிறது. இந்த நிலையில் விளந்தகண்டத்தில் உள்ள தனது வீட்டுக்கு கணவருடன் சரண்யா இன்று வந்திருந்தார். இதையடுத்து சரண்யாவின் அண்ணன் சக்திவேல் மற்றும் அவரது மைத்துனரும் சரண்யாவின் முன்னாள் காதலருமான ரஞ்சித் ஆகிய இருவரும் … Read more

கோரைப் புற்களுடன் வந்து கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்த விவசாயிகள்!

Armed with nut grass, farmers present petition to Thanjai collector: மழைக் காலம் தொடங்குவதற்கு முன்பாக வடிகால் வாய்க்கால்களை போர்க்கால அடிப்படையில் தூர்வார வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் புதர் மண்டிய கோரைப் புற்களுடன் வந்து தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை கொடுத்தனர். இதுகுறித்து தமிழ்நாடு விவசாய சங்க அம்மாபேட்டை ஒன்றியச் செயலாளர் எம்.வெங்கடேசன் கூறுகையில், தஞ்சை-நாகை தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தச் சாலையின் … Read more

அரும்பாக்கம் அருகே மொபட்டில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்த இளைஞர்.! ஆம்னி பஸ் சக்கரத்தில் சிக்கி உயிரிழப்பு.!

அரும்பாக்கம் அருகே மொபட்டில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்த இளைஞர் ஆம்னி பஸ் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். சென்னை பூந்தமல்லி கீழ்மாநகர் பகுதியை சேர்ந்த ஜம்புவின் மகன் அஸ்வின்(வயது 25). இவர் கோயம்பேடு சாலையில் அரும்பாக்கம் அருகே மொபட்டில் சென்றுகொண்டிருக்கும்போது எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது பின்னால் வந்த ஆம்னி பஸ், கீழே விழுந்து கிடந்த அஷ்வின் தலை மீது ஏறி இறங்கி உள்ளது. இதில் சக்கரத்தில் சிக்கிய அஸ்வின் தலை நசுங்கி … Read more

போலி வாக்காளர் அடையாள அட்டை தயார் செய்த நெட் சென்டர்.. சீல் வைத்த சார் ஆட்சியர்..

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் போலி வாக்காளர் அடையாள அட்டை தயார் செய்த நெட் சென்டருக்கு, சார் ஆட்சியர் சீல் வைத்தார். திண்டிவனம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு ஆதார் அட்டையில் பெயர் மாற்றம் செய்ய வந்த நபர், போலி வாக்காளர் அடையாள அட்டையை ஆதாரமாக கொடுத்துள்ளார். அவரிடம் நடத்திய விசாரணையில், ராகவேந்திரா பிரிண்டர்ஸ் என்னும் நெட் சென்டரில் பல்வேறு போலி ஆவணங்கள் தயார் செய்வது கண்டறியப்பட்டது. இதனையடுத்து நெட் சென்டருக்கு சார் ஆட்சியர் சீல் வைத்த நிலையில், கடை உரிமையாளர் … Read more

“ஓராண்டில் 7 லாக்கப் மரணங்கள்… தமிழகத்தில் அரசு இயங்குகிறதா?” – அண்ணாமலை கேள்வி 

சென்னை: தமிழகத்தில் ஓராண்டில் ஏழு லாக்கப் மரணங்கள் நடந்துள்ளதாக கூறியுள்ள மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, “தமிழகத்தில் அரசு இயங்குகிறதா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை கொடுங்கையூரில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட ராஜசேகர் என்பவர் காவல் நிலையத்தில் மரணமடைந்தார். இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், தமிழகத்தில் அரசு இயங்குகிறதா என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள … Read more