#பெரம்பலூர் || வீடு புகுந்து சிறுமிக்கு பாலியல் தொல்லை.! 3 பேரை பிடித்து அடித்து உதைத்த பொது மக்கள்.!

பெரம்பலூர் மாவட்டம் அருமடல் பகுதியை சேர்ந்த அண்ணன் வீட்டிற்கு, கோடை விடுமுறையை முன்னிட்டு சென்னையைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமி ஒருவர் வந்துள்ளார். நேற்றுமுன்தினம் சிறுமியின் அண்ணனும், அண்ணியும் கூலி வேலைக்காக வெளியே சென்று உள்ளனர். அப்போது சிறுமியும் அவரின் அண்ணன் குழந்தை மட்டும் இருந்துள்ளனர். சிறுமி தனியாக இருப்பதை அறிந்த ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளிகள் சுனில் ராம் (20வயது), காமேஸ்வர் சிங் (19), பெகு நாகசியா (20) ஆகிய மூன்று … Read more

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 2025ல் மக்கள் பயன்பாட்டிற்கு வரும்.. சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல்..!

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 2025ஆம் ஆண்டில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணியை ஆய்வு செய்தபின் பேட்டியளித்த அவர், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இணையாக, தோப்பூரில் அந்த மருத்துவமனை அமையும் என்றார். பிற நாடுகளில் குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அது குறித்து தொடர்ந்து கண்காணிப்பதாக கூறிய ராதாகிருஷ்ணன், மக்கள் கவனக் குறைவாக இருக்க கூடாது என அறிவுறுத்தினார். Source … Read more

மாநிலங்களவைத் தேர்தல்; காங்கிரஸ் சார்பில் ப.சிதம்பரம் போட்டி: நாளை வேட்புமனு தாக்கல்

சென்னை: மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நாளை வேட்புமனு தாக்கல் செய்கிறார். தமிழகம் உட்பட 15 மாநிலங்களில் மாநிலங்களவை உறுப்பினர்கள் 57 பேரின் பதவிக் காலம் வரும் ஜூன் முதல் ஆகஸ்ட் மாதங்களில் முடிவடைகிறது. இதையொட்டி, இந்த பதவியிடங்களுக்கான தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. தமிழகத்தில் திமுக எம்பிக்களான டிகேஎஸ் இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, கேஆர்என் ராஜேஷ்குமார் ஆகியோரது பதவிக் காலமும், அதிமுக … Read more

ஆரணி: காணாமல்போன பள்ளி மாணவி இரண்டு நாட்களுக்குப் பிறகு சடலமாக மீட்பு

ஆரணி அருகே கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு காணமல்போன 11 ஆம் வகுப்பு மாணவி இன்று கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த அகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி ரவி. இவரின் மனைவி பச்சையம்மாள். இவர்களுடைய மகள் ஹரிபிரியா (16) ஆரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு மகளை பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் கோபித்துக் கொண்டு வெளியே சென்ற ஹரிபிரியா. … Read more

அரசு டாக்டர்கள் ஆப்சென்ட் பற்றி நோயாளிகள் புகார் கூறலாம்: டாக்டர் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்

க.சண்முகவடிவேல், திருச்சி தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், இன்று திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில், கொரோனா தொற்று நோய் காட்டுப்பாட்டுக்காக அமைக்கப்பட்டு வரும் புதிய உயர்தர தீவிர சிகிச்சைப் பிரிவில் அமைக்கப்பட்டுள்ள படுக்கைகளை பார்வையிட்டார். கொரோனா தொற்று நோய் காட்டுப்பாட்டுக்காக அமைக்கப்பட்டு வரும் புதிய உயர்தர தீவிர சிகிச்சைப் பிரிவில் ( Emergency COVID response package — ECRP Ward) அமைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு படுக்கையும் தலா … Read more

சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க தலைமைச் செயலாளர் உத்தரவு.!

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்கும்படி தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகள், CITIIS திட்டத்தின் கீழ் சென்னைப் பள்ளிகளில் சீரமைப்பு பணிகள் மற்றும் கொரட்டூர் தாங்கல் ஏரி புனரமைப்பு பணிகளை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு பார்வையிட்டு ஆய்வு செய்தார். பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சிங்கார சென்னை … Read more

குறைந்த விலையில் தங்கம் தருவதாக ஆசை காட்டிய கும்பல்.. 2 கிலோ அலுமினிய செயின்களை கொடுத்து ரூ.1 லட்சத்துடன் தலைமறைவு..!

கோவையில், குறைந்த விலைக்கு தங்கம் தருவதாகக் கூறி 2 கிலோ அலுமினிய குண்டுகளை கொடுத்து, பெண்ணிடம் ஒரு லட்ச ரூபாய் மோசடி செய்து தலைமறைவான மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கோவை பாப்பநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்த இந்திராணியின் கடைக்கு வந்த 3 பேர், 3 மில்லி கிராம் அளவிலான தங்கத்தை கொடுத்து, தாங்கள் குறைந்த விலைக்கு தங்கம் தருவதாக கூறி ஆசை காட்டியுள்ளனர். இதனை நம்பிய அவர், ஒரு லட்ச ரூபாயை மர்ம நபர்களிடம் … Read more

கருணாநிதி சிலை திறப்பு விழாவுக்கு வருகை தந்த அனைவருக்கும் இதயபூர்வ நன்றி: மு.க.ஸ்டாலின்

சென்னை: கருணாநிதி சிலை திறப்பு விழாவுக்கு வருகை தந்த அனைவரும் இதயபூர்வ நன்றி என்று தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள கடித வடிவில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ”நன்றி! வெறும் சொற்களால் அல்ல, கொள்கைமிகு செயல்களால்! நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் நன்றி மடல். ‘வாழ்வில் ஒரு பொன்னாள்’ என்பதற்கான உண்மையான பொருளை விளக்கிடும் நாளாக மே 28 அமைந்திருந்தது … Read more

குற்றாலத்தில் குவியும் கூட்டம் – வரிசையில் நின்று குளிக்கும் சுற்றுலாப் பயணிகள்

விடுமுறையில் குற்றாலத்தில் சுற்றுலாப்பயணிகள் குவிந்தனர். அதிகமான கூட்டம் குவிந்ததால் குறைவாக விழுந்த தண்ணீரில் குளிக்க நீண்ட வரிசையில் காத்திருந்து குளித்துச் சென்றனர். தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் கடந்த சில தினங்களாக பெய்த மழையால் அருவிகளில் தண்ணீர் வரத்து இருந்ததால் குற்றாலத்திற்கு கடந்த சில தினஙகளாக சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. இன்று விடுமுறை தினம் என்பதால் வழக்கத்திற்கு மாறான கூட்டம் அனைத்து அருவிகளிலும் இருந்த நிலையில் கடந்த இரு தினஙகளாக இருக்கும் வெயிலின் காரணமாக அனைத்து அருவிகளிலும் … Read more

சாஃப்ட் இட்லி ரகசியம்… 2 டீஸ்பூன் இந்தப் பொருளை சேர்த்து மாவு அரைச்சுப் பாருங்க!

மல்லிகைப் பூவைவிட சாஃப்ட்டான இட்லி செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களா, சாஃப்ட் இட்லி செய்வதற்கான ரகசியம் இதோ… 2 டீஸ்பூன் இந்த பொருளை மட்டும் சேர்த்து மாவு அரைச்சு பாருங்க! மல்லிகைப்பூவே தோற்றுவிடும் அளவுக்கு சாஃப்ட் இட்லி கிடைக்கும் பாருங்க… ஆயக் கலைகள் 64 என்பார்கள். அதில் சமையல் கலையும் ஒன்று. அதிலும் இட்லிக்கு மாவு அரைப்பது என்பது நிஜமாகவே கலைதான். ஏனென்றால், இட்லி சாஃப்ட்டாக இருந்தால்தான் சாப்பிடுவதற்கு நன்றாக இருக்கும் இல்லையென்றால். இட்லி என்பது இரும்பாக … Read more