பிஎஸ்என்எல் அலைக்கற்றையை சட்டவிரோதமாக பயன்படுத்திய இருவர் கைது.. 3 மாதங்களாக வெளிநாடுகளுக்கு பேசி வந்தது அம்பலம்..!

தேனியில் பி.எஸ்.என்.எல் அலைக்கற்றை சேவையை சட்டவிரோதமாக பயன்படுத்தி வெளிநாடுகளுக்கு பேசி வந்த கேரளாவைச் சேர்ந்த 2 பேரை கைது செய்த போலீசார், தீவிரவாத செயலா.? என விசாரித்து வருகின்றனர். தேனி பி.எஸ்.என்.எல் அலைக்கற்றை சேவையில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லக்கூடிய ஐ.எஸ்.டி சேவை குறியீட்டுக்கான ஃபிரிக்குவன்சி நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமாக இருந்ததால் சந்தேகமடைந்த அதிகாரிகள் போலீசில் புகாரளித்தனர். விசாரணையில், ஆண்டிப்பட்டியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்த சஜீர், முகமது ஆசிப் ஆகிய இருவர், அவர்கள் வைத்திருக்கும் … Read more

வெறுப்பைத் தூண்டும் ட்விட்டர் பதிவு: பாஜக நிர்வாகி சவுதாமணி கைது

தமிழக பாஜக செயற்குழு உறுப்பினரான சவுதாமணி, கடந்த ஜனவரி மாதம் தனது ட்விட்டர் பக்கத்தில், மதவாத வெறுப்பைத் தூண்டும் வகையில், ஒருவர் பேசிய காணொலியைப் பகிர்ந்து, கருத்தைப் பதிவிட்டிருந்தார். இது தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அவர் மீது புகார் அளிக்கப்பட்டு, 2 பிரிவுகளின் கீழ், வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் சவுதாமணி மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், அவரது மனுவைத் தள்ளுபடி செய்து, சென்னை உயர் … Read more

'நான் ஜெயலலிதா தந்தையின் முதல் மனைவியின் மகன்' – உயர்நீதிமன்றத்தில் புதிய வழக்கு

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தந்தை ஜெயராமின் முதல் மனைவியின் மகன் என கூறி, ஜெயலலிதாவின் சொத்துகளில் பாதி பங்கை தனக்கு வழங்க கோரி மைசூருவை சேர்ந்த வாசுதேவன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளராகவும், தமிழக முதல்வராகவும் இருந்து மறைந்த ஜெயலலிதாவின் சகோதரர் என கூறி, கர்நாடகா மாநிலம் மைசூருவில் உள்ள வியாசராபுரத்தை சேர்ந்த 83 வயது முதியவரான வாசுதேவன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ஜெயலலிதாவின் தந்தையான ஆர்.ஜெயராம் தான் தனக்கும் … Read more

கணவருடன் பிரிவு ஏன்? பர்சனல் சோகத்தை முதல் முறையாக பகிர்ந்த இசைவாணி

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான இசைவாணி தற்போது தனது திருமண வாழக்கை முறிவு குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பர் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், இதில் பங்கேற்கும் பலரும் திரைத்துரையில் வாய்ப்புகளை பெற்று வருகின்றன இதுவரை 5 சீசன்கள் முடிந்துள்ள இந்நிகழ்ச்சியில் விரைவில் 6-வது சீசன் தொடங்க உள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டு நடைபெற்ற 5-வது சீசனில் பங்கேற்று புகழ்பெற்றவர் இசைவாணி. நாட்டுப்புற பாடகியான … Read more

இந்த பக்ரீத் பண்டிகை நம்மை ஊக்குவிக்கட்டும் – பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து.!

பிரதமர் நரேந்திர மோடி இஸ்லாமிய மக்களுக்கு பக்ரீத் பண்டிகை வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இஸ்லாமியர்களின் பெருநாளான பக்ரீத் பண்டியை இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு காலை முதலே இஸ்லாமியர்கள் பள்ளி வாசலில் தொழுகையில் ஈடுபட்டு வருகின்றனர்.  நாட்டின் முக்கியத் தலைவர்களும் இஸ்லாமிய மக்களுக்கு பக்ரீத் பண்டிகை வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த வகையில், பிரதமர் நரேந்திர மோடி இஸ்லாமிய மக்களுக்கு பக்ரீத் பண்டிகை வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி … Read more

தனியார் துறையினர் சொந்தமாக இமேஜிங் செயற்கைகோள் வைத்துக்கொள்ள அனுமதி

விண்வெளி கொள்கை 2022-ன் அடிப்படையில், தனியார் நிறுவனங்களும் புகைப்படம் எடுக்கக்கூடிய வகையிலான செயற்கைகோள்களை சொந்தமாக வைத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படவுள்ளதாக இஸ்ரோ தலைவர் சோமநாத் தெரிவித்துள்ளார். இஸ்ரோ மற்றும் பாதுகாப்புத்துறையை தொடர்ந்து, தனியார் நிறுவனங்களுக்கு இந்த வசதி அனுமதிக்கப்படுகிறது. புதிய விண்வெளி கொள்கை, தனியார் துறையினர் செயற்கைக்கோள்களை சொந்தமாக வைத்துக்கொள்ள அனுமதிப்பதுடன், அவற்றை ஏவுவதற்கான ராக்கெட் ஏவுதளத்தையும் அமைத்துகொள்ள வழிவகை செய்கிறது.   Source link

‘ஹீரோ டர்ட் பைக்கிங் சேலஞ்ச்’ | பைக் ரைடிங் இளைஞர்களுக்கு சவாலான போட்டி – ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் அறிவிப்பு

சென்னை: உலகின் மாபெரும் மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர் உற்பத்தியாளரான ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp) நிறுவனம் ‘ஹீரோ டர்ட் பைக்கிங் சேலஞ்ச்’ (Hero Dirt Biking Challenge (HDBC) போட்டியை அறிவித்துள்ளது. ஓர் அசல் உபகரண உற்பத்தி நிறுவனம் பான்-இந்தியா அளவில் நடத்தும் முதல் திறமை சவால் இது. இதுகுறித்து ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி: ‘ஆஃப்-ரோடு’ பந்தயத்தில் சாதிக்க விரும்புகிற வளரும் ரைடர்கள், ஆர்வலர்கள், அமெச்சூர்களுக்கு இது சிறந்த வாய்ப்பை வழங்குகிறது. இதற்காக, நாட்டின் … Read more

ரோஜா சீரியலில் புது ட்விஸ்ட்: திடீரென வந்த இன்னொரு பிரியங்கா

தமிழில் ஒளிபரப்பாகும் சீரியல்களிரல் சன் டி.வி. சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. காலை முதல் நள்ளிரவு வரை சீரியலை ஒளிபரப்பி இல்லத்தரசிகளை தனது கட்டுக்குள் வத்திருப்பதில் சன் டி.வி.க்கு முக்கிய பங்கு உண்டு. மேலும் சன்.டி.வியில் பல வருடங்களுக்கு முன்பு வெளியான சீரியல்கள் கூட மக்கள் மத்தியில் நீங்க இடம் பெற்றுள்ள நிலையில், தற்போது ஒளிபரப்பாகி வரும் சீரியல்களும் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பையும் விறுவிறுப்பையும் ஏற்படுத்த தவறுவதில்லை. அந்த வகையில் சின்னத்திரை ரசிகர்கள் … Read more

325 காலியிடங்கள்.. பரோடா பேங்கில் வேலைவாய்ப்பு.!!

பரோடா பேங்கில் அதிகாரபூர்வ இணையதளத்தில்  சிறப்பு அதிகாரிகள் (SO)  காலியிடங்களுக்கான  வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக டிப்ளமோ, பட்டம் கொடுக்கப்பட்டுள்ளது.  இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக கன்னியாகுமரி கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள்.  நிறுவனம் : பரோடா பேங்கில் பணியின் பெயர் : சிறப்பு அதிகாரிகள் கல்வித்தகுதி : டிப்ளமோ, பட்டம் பணியிடம் : தமிழ்நாடு தேர்வு … Read more

ராமதாஸ், அன்புமணி மீதான வழக்குகள் ரத்து – உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் பாமக தலைவர் அன்புமணி மீதான வழக்குகளை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2012 மற்றும் 2013-ம் ஆண்டுகளில் மாமல்லபுரத்தில் நடைபெற்ற வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாட்டில் இரவு 10 மணிக்கு மேல் கூட்டம் நடத்தி பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தியதாக பாமக நிறுவனர் ராமதாஸ், தற்போதைய பாமக தலைவர் அன்புமணி, முன்னாள் தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் இணை அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, திருக்கச்சூர் ஆறுமுகம் ஆகியோர் மீது மாமல்லபுரம் … Read more