கோவில் கும்பாபிஷேகத்துக்கு ஹெலிகாப்டரில் பறந்த இரும்பு வியாபாரி.. வியந்து போன மக்கள்.!

குடும்பத்தினரின் ஹெலிகாப்டர் பயண கனவை நிறைவேற்றும் விதமாக, இரும்பு வியாபாரி ஒருவர், தூத்துக்குடி மாவட்டத்தில் தனது சொந்த கிராமத்தில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவிற்கு குடும்பத்தினரை ஹெலிகாப்டரில் அனுப்பி வைத்தார். கும்மிடிப்பூண்டியில் இரும்புக்கடை நடத்தி வரும் பாலசுப்பிரமணியன் என்பவரின் மூத்த மகனும், பேரனும் ஹெலிகாப்டரில் பயணம் செய்ய ஆசைபட்டு வந்ததாக கூறப்படுகிறது. அதனை நிறைவேற்ற நினைத்த பாலசுப்பிரமணியன், பெங்களூருவில் உள்ள தனியார் ஹெலிகாப்டர் நிறுவனத்தின் மூலம் தனது குடும்பத்தினர் 5 பேர் தூத்துக்குடி மாவட்டத்தில் சொந்த கிராமத்தில் நடைபெறும் … Read more

கார்த்திக் கோபிநாத்தின் வங்கி கணக்கு விவரங்களைத் தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: பாஜக ஆதரவாளரும், யூடியூபருமான கார்த்திக் கோபிநாத்தின் வங்கிக் கணக்கு விவரங்களைத் தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில் உள்ள மதுரகாளியம்மன் கோயில் திருப்பணிக்களுக்காக முறைகேடாக பணம் வசூலித்து, அதை கோயில் பணிகளுக்கு பயன்படுத்தாமல் வேறு நோக்கத்திற்காக பயன்படுத்தியதாக சமூக ஆர்வலர் பியூஷ்மனுஷ் மற்றும் கோயிலின் செயல் அலுவலர் ஆகியோர் பாஜக ஆதரவாளரும், யூடியூபருமான கார்த்திக் கோபிநாத்துக்கு எதிராக ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் அளித்திருந்தனர். இந்தப் புகாரின் அடிப்படையில் கடந்த … Read more

'எந்த ஒரு சமூகத்தை பற்றியும் தவறாக பேசுவதை ஒரு போதும் அனுமதிக்கக் கூடாது' – நீதிமன்றம்

அனைத்து தரப்பு மக்களும் சமமானவர்கள் என்று குறிப்பிட்டுள்ள உயர் நீதிமன்றம், எந்த ஒரு சமூகத்தை பற்றியும் தவறாக பேசுவதை ஒரு போதும் அனுமதிக்கக் கூடாது எனவும் தெரிவித்துள்ளது. பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் திரைத்துறையில் முன்னேறியுள்ளது குறித்து அவதூறாக பேசிய  நடிகை மீரா மிதுன், அந்த வீடியோவை  சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். இதுதொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பலரும் சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகாரின் அடிப்படையில், மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக் ஆகியோர் … Read more

தமிழ் வழி படித்தவர்களுக்கு அரசு பணியில் முன்னுரிமைக்கு எதிரான வழக்கு; ஐகோர்ட் முக்கிய உத்தரவு

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கும் சட்டத் திருத்தம் குறித்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை புழல் சிறையில் உதவி சிறை அதிகாரியாக பணிபுரிந்து வருபவர் ஷாலினி. இவர் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கும் சட்டத் திருத்தம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். ஷாலினி தொடர்ந்த வழக்கில், “அவர் நீலகிரி மாவட்டம் கேரள எல்லையில் உள்ள சேரம்பாடி … Read more

கண்ணீர் விட்டு கதறி அழுத இசைஞானி இளையராஜா – வைரல் வீடியோ.! 

பிரபல தனியார் பொழுதுபோக்கு தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில், எஸ் பி பாலசுப்ரமணியன் 75ஆவது நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது.  இதில், இசைஞானி இளையராஜா கண்ணீர் விட்டு கதறி அழும் காட்சிகளைப் பார்க்கும் ரசிகர்களுக்கு மனம் நெகிழ்ந்து போய் உள்ளனர். பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியன் பிறந்த நாளை முன்னிட்டு, கடந்த ஜூன் 3ஆம் தேதி முதல் எஸ்பிபி 75 என்ற நிகழ்ச்சியை விஜய் தொலைக்காட்சி நடத்தி வருகிறது. இதில், இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா, இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான், … Read more

கோவில் திருவிழாவின் போது கவிழ்ந்து விபத்துக்குள்ளான சப்பரம்.. பதறவைக்கும் வீடியோ காட்சிகள்.!

தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே கோவில் திருவிழாவின் போது சப்பரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர். மாதேஹள்ளி கிராமத்தில் காளியம்மன் கோவிலில் திருவிழா நடைபெறும் நிலையில், முக்கிய நிகழ்ச்சியாக இன்று சப்பர ஊர்வலம் நடைபெற்றது. அப்போது, வயல்வெளி அமைந்த பகுதியில் சப்பரம் சென்றபோது போது திடீரென அதன் சக்கரத்தின் அச்சாணி முறிந்தாக கூறப்படுகிறது. இதனை அடுத்து, சப்பரம் சரிந்து விழுந்ததில் அதற்கு அருகே நின்றவர்கள் அதில் சிக்கிக் கொண்டனர். இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்த … Read more

கும்பகோணத்தில் ஆணவக் கொலை: திருமணமான 5 நாட்களில் காதல் தம்பதி வெட்டிக் கொலை

கும்பகோணம்: கும்பகோணம் அருகே காதல் திருமணம் செய்துகொண்ட தம்பதியை, அப்பெண்ணின் அண்ணன் அரிவாளால் வெட்டில் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கும்பகோணம் அருகே சோழபுரம் துலுக்கவேலி அய்யாகோயில் தெருவைச் சேர்ந்தவர் சேகர். இவரது மகள் சரண்யா (24). இவர் நர்சிங் படித்துவிட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்தார். அதேபோல், திருவண்ணாமலை மாவட்டம் பொன்னூரைச் சேர்ந்தவர் வடிவேல் மகன் மோகன் (31). இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள், இருவரும் … Read more

முதுபெரும் எழுத்தாளர் கு.சின்னப்பபாரதி உடல் நலக் குறைவால் காலமானார்

முதுபெரும் எழுத்தாளர் கு.சின்னப்பபாரதி உடல் நலக் குறைவு காரணமாக நாமக்கல்லில் இறந்தார். சர்க்கரை, சங்கம், தாகம், சுரங்கம், ஆகிய நாவல்களை இவர் எழுதியுள்ளார்.  1935 ஆம் ஆண்டு மே மாதம் 2 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். இடதுசாரி சித்தாந்தந்தங்களை உள்ளடக்கி இலக்கியங்களைப் படைத்துள்ளார். இவரது புதினங்கள் இந்திய மொழிகளிலும், ஆங்கிலம், பிரெஞ்சு, சிங்கள போன்ற அயல் மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. கரும்பு விவசாயியாக, தொழிற்சங்க ஊழியராக, படைப்பாளியாக பல பரிமாணங்களில் இவர் இயங்கினார். நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த … Read more

அதானிக்காக மோடி அழுத்தம் கொடுத்ததாக கூறிய இலங்கை அதிகாரி பதவி விலகல்

தொழிலதிபர் அதானிக்கு மின் திட்டத்தை வழங்குமாறு இலங்கை அதிபர் கோட்டபய ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி அழுத்தம் கொடுத்ததாகக் கூறிய இலங்கை உயர் அதிகாரி பதவி விலகினார். இலங்கை மின்சார வாரியத் தலைமை அதிகாரியான எம்.எம்.சி ஃபெர்டினாண்டோ, தொழிலதிபர் அதானிக்கு மின் திட்டத்தை வழங்குமாறு இலங்கை அதிபர் கோட்டபய ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி அழுத்தம் கொடுத்ததாகக் கூறியதை விரைவாக திரும்பப் பெற்றார். இருப்பினும், அவருடைய பேசு இலங்கையில் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியது. இலங்கையில் மோடியின் நண்பர்கள் பின்வாசல் வழியாக … Read more

ஸ்பீக்கர் பாக்ஸ் விழுந்து மூன்று மாத குழந்தை பலி.. திருவண்ணாமலை அருகே நிகழ்ந்த சோகம்..!

ஸ்பீக்கர் விழுந்து மூன்று மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், பிச்சானந்தல் பகுதியை சேர்ந்தவர் பரணி. இவருக்கு சுபஸ்ரீ என்ற மூன்றுமாத குழந்தை உள்ளது. இந்நிலையில், சம்பவதன்று ஹாலில் சுபஸ்ரீ படுக்க வைத்துவிட்டு பரணி வீட்டு வேலை செய்து வந்துள்ளார். அப்போது அங்கு அலமாரியில் உள்ள ஸ்லாப்பில் அடுக்கி வைத்திருந்த ஸ்பீக்கர் குழந்தை மீது விழுந்தது. இதனை கண்டு பரணி கூச்சலிட்டார். அவரின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கதினர் குழந்தையை மீட்டு … Read more