ஜூலை 1 முதல் கார்டு-டோக்கனைசேஷன்; டெபிட், கிரெடிட் கார்டு விதிகளில் என்னென்ன மாற்றம்?

RBI new rules on credit and debit cards Tamil News: ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வரும் கார்டு-டோக்கனைசேஷன், வாடிக்கையாளர்கள் கார்டு பரிவர்த்தனைகளை நடத்தும் முறையை மாற்றும் வகையில் அமைத்துள்ளது. பாதுகாப்பு மற்றும் தனியுரிமைக் காரணங்களுக்காக, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஜூன் 30 ஆம் தேதிக்குள் வாடிக்கையாளர்களின் கார்டு தரவை வணிகர்கள் தங்கள் சர்வர்களில் சேமித்து வைப்பதை தடை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது. கார்டின் கார்டு-ஆன்-ஃபைல் டோக்கனைசேஷன் செய்ய வணிகருக்கு ஒரு நிலையான அறிவுறுத்தலை வழங்கவும், … Read more

ராஜசேகரை மூன்று முறை மருத்துவமனை அழைத்துச் சென்று சிகிச்சை அளித்ததோம். ஆனால்.., – காவல் ஆணையரகம் விளக்கம்.! 

சென்னை கொடுங்கையூர் காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட ராஜசேகர் என்பவர் விசாரணையின்போது மரணமடைந்த சம்பவம் தொடர்பாக சென்னை பெருநகர காவல் துறை சார்பில் விளக்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “பி-6 கொடுங்கையூர் காவல் நிலைய எல்லையில் சமீபத்தில் ஒரு வீட்டில் 8 சவரன் தங்க நகைகள் திருடு போனது தொடர்பான வழக்கிலும், 2020-ம் ஆண்டு, கொடுங்கையூர் பகுதியில் பத்மாவதி என்பவரின் வீட்டில் 28 சவரன் தங்க நகைகள் திருடியது தொடர்பான வழக்கிலும், செங்குன்றம், அலமாதியைச் சேர்ந்த … Read more

அரசியல் தலையீடு காரணமாக காவல்துறையினர் தவறு செய்கின்றனர் – அண்ணாமலை

தமிழகத்தில் அடுத்தடுத்து லாக்கப் மரணங்கள் நடப்பதாகவும், அரசியல் தலையீடு காரணமாக காவல்துறையினர் தவறு செய்வதாகவும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோயம்புத்தூரில் பேட்டியளித்த அவர், முதலமைச்சர் உத்தரவிடப்பின் அமைக்கப்பட்ட, காவல் ஆணையத்தின் நிலை என்ன? என்றும் போலீசாரின் பணிச்சுமையை குறைக்க என்ன திட்டம் எடுக்கப்பட்டுள்ளது ? என்றும் கேள்வி எழுப்பினார். மேலும், அதிமுகவுடன் எதிர்க்கட்சிக்கு போட்டி போடும் மனப்பான்மை பா.ஜ.க.விற்கு இல்லை என்றும், பா.ஜ.க.வை வளர்க்கவே பாடுபடுவதாகவும் அண்ணாமலை கூறினார். Source link

தருமபுரி அருகே தேர் கவிழ்ந்து விபத்து | இருவர் உயிரிழப்பு; பலர் காயம் – ரூ.5 லட்சம் நிவாரணமாக அறிவிப்பு

தருமபுரி: தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே தேர்த் திருவிழாவின்போது அச்சு முறிந்து தேர் கவிழ்ந்த விபத்தில் இருவர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். பென்னாகரம் வட்டம் பாப்பாரப்பட்டி அருகிலுள்ள மாதே அள்ளி கிராமத்தில் காளியம்மன் கோயில் தேர்த் திருவிழா இன்று(13-ம் தேதி) மாலை நடந்தது. கரோனா காரணமாக 2 ஆண்டுகளுக்கு பின்னர் திருவிழா நடந்த நிலையில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த திரளான மக்கள் தேர்த் திருவிழாவில் பங்கேற்றனர். பக்தர்கள் பலரும் வடம் பிடித்து இழுக்க, தேர் வழக்கமான … Read more

ஆழ்துளை கிணற்றில் விழுந்த நாய்க்குட்டி.. 5 மணி நேரம் போராடி மீட்ட தீயணைப்புத் துறையினர்

திருவாரூர் மாவட்டத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த நாய்க்குட்டியை 5 மணி நேரம் போராடி தீயணைப்புத் துறையினர் மீட்டனர். குன்னியூரில் ஆழ்துளை கிணற்றில் விழுந்து குரைத்து அபயக்குரல் எழுப்பிய நாய்க்குட்டியை பார்த்த மூர்த்தி என்பவர், தீயணைப்புத் துறையின் உதவியை நாடினார். இதையடுத்து நாய்க்குட்டியை வெளியே கொண்டுவர கையாண்ட உத்திகள் தோல்வியில் முடிந்தன. இதையடுத்து ஆழ்துளை கிணற்றில் அருகே பொக்லைன் இயந்திரம் மூலம் 15 அடிக்கு மற்றொரு குளியை தோண்டினர், பின்னர், அதில் இறங்கிய தீயணைப்புத் துறையினர், ஆழ்துளை கிணற்றில் … Read more

கோவை – சீரடி நாளை முதல் தனியார் ரயில்; டிக்கெட் கட்டணத்தைப் பார்த்து மக்கள் ஷாக்

Coimbatore to Shirdi Train , கோவையிலிருந்து சீரடிக்கு நாளை முதல் தனியார் ரயில் சேவை தொடங்கப்பட உள்ள நிலையில் டிக்கெட் கட்டணம் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. ஷீரடிக்கு 5 நகரங்களில் இருந்து தனியார் ரயில்களை இயக்குவதற்கு பிரதமர் மோடியின் ‘பாரத் கௌரவ்’ என்ற திட்டத்தின் கீழ் ரயில்வே துறை அனுமதி அளித்தது. அதில் கோவையும் இடம்பெற்றது. இந்நிலையில் நாளை அதாவது  ஜூன் 14 மாலை 6 மணியளவில் வட கோவையில் இருந்து சீரடிக்கு முதல் தனியார் … Read more

தருமபுரி தேர் திருவிழாவின்போது சப்பரம் கவிழ்ந்த விபத்து – முதலமைச்சர் ஸ்டாலின் நிதிஉதவி அறிவிப்பு.!

தருமபுரி மாவட்டத்தில் தேர் திருவிழாவின்போது சப்பரம் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவியையும் அறிவித்துள்ளார். இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், “தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே அமைந்துள்ள மாதேஹள்ளி கிராமத்தில் நடைபெற்ற கோவில் தேர் திருவிழாவின் போது சப்பரம் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.  அவர்களில் அப்பகுதியினைச் சேர்ந்த திரு.மனோகரன் ( வயது 57 ) மற்றும் திரு.சரவணன் ( வயது 50 ) ஆகியோர் … Read more

அனைத்து தரப்பு மக்களும் சமமானவர்களே – சென்னை உயர்நீதிமன்றம்

அனைத்து தரப்பு மக்களும் சமமானவர்கள் என்றும், எந்த ஒரு சமூகத்தை பற்றியும் தவறாக பேசுவதை ஒரு போதும் அனுமதிக்கக் கூடாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறாக பேசிய புகாரில் நடிகை மீரா மிதுன், அவரது நண்பர் ஷாம் அபிஷேக்கு கடந்த ஆகஸ்ட்டில் கைதாகியிருந்த நிலையில், வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி ஷாம் வழக்கு தொடர்ந்தார். அதன் விசாரணையில், மீரா மிதுன் பேசுவதற்கு ஷாம் உறுதுணையாக இருந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் தரப்பில் வழக்கை … Read more

“தமிழகத்தில் பாஜகதான் கருத்தியல் அடிப்படையில் செயல்படும் எதிர்க்கட்சி” – அண்ணாமலை கருத்து

கோவை: “தமிழகத்தில் கருத்தியல் அடிப்படையில் எதிர்கட்சியாக செயல்பட்டுக் கொண்டிருப்பது பாஜக” என அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். இது தொடர்பாக கோவையில் இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது: ”மேகதாது அணை விவகாரத்தில் காவிரி மேலாண்மை ஆணையம் முடிவெடுக்க எந்த அதிகாரமும் இல்லை. மேகதாதுவில் அணை கட்ட வேண்டும் எனில் தமிழகத்தின் சம்மதம் அவசியம். அதற்கு தமிழகம் சம்மதம் தெரிவிக்கப்போவதில்லை. தமிழக அரசின் அந்த முடிவை பாஜக ஆதரிக்கும். எதிர்க்கட்சி அந்தஸ்து என்பது மக்கள் அளிக்கும் வாக்கு … Read more

விசாரணை கைதி மரணம் – மனித உரிமை ஆணையம் அதிரடி உத்தரவு.. போலீஸ் கொடுத்த பரபரப்பு அறிக்கை

சென்னையில் விசாரணை கைதி ராஜசேகர் மரணம் தொடர்பாக தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ள மாநில மனித உரிமை ஆணையம், சென்னை மாநகர காவல் ஆணையர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே உள்ள அலமாதி வேட்டைக்காரன் பாளையத்தைச் சேர்ந்த அப்பு என்ற ராஜசேகர் என்பவரை திருட்டு வழக்கு தொடர்பாக கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரித்தபோது, திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ராஜசேகர் ஏற்கனவே … Read more