இயக்குனர் டி ராஜேந்திரனின் உடல்நலக்குறைவு குறித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் நேரில் நலம் விசாரிப்பு.!

உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகரும், இயக்குனருமான டி ராஜேந்திரரை, முதலமைச்சர் மு க ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார். நெஞ்சுவலி காரணமாக கடந்த 19ஆம் தேதி சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் இயக்குனர் டி ராஜேந்தர் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு வயிற்றில் இரத்தக்கசிவு ஏற்பட்டு இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்து, அவருக்கு உயர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இன்று அந்த தனியார் மருத்துவமனைக்கு நேரில் சென்ற தமிழக … Read more

கடந்த ஓராண்டில் 102 டன் போதைப் பொருட்கள் பறிமுதல்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழகம் முழுவதும் கடந்த ஓராண்டில் 6 கோடியே 80 லட்சம் மதிப்பிலான 102 டன் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். சென்னை பெசன்ட் நகரில் பிரம்மகுமாரிகள் சமாஜமும், ரேலா மருத்துவமனையும் இணைந்து உலக புகையிலை நாள் மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நடைப்பயணம் நடத்தப்பட்டது. இந்த நடைபயணத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (மே 29) தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்குப் … Read more

ஆவடி: திருமணமான 9 மாதத்தில் பெண் எடுத்த விபரீத முடிவு – ஆர்டிஓ விசாரணை

ஆவடி அருகே திருமணமான 9 மாதத்தில் புதுப்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆவடி அடுத்த திருமுல்லைவாயல், செந்தில் நகர் பிருந்தாவன் அவென்யூவில் வசிப்பவர் ஐயப்பன் (35). இவர் பிராட்வேயில் உள்ள பாத்திரக் கடையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி தரண்யா (25). உறவினர்களான இவர்களுக்கு கடந்த 9 மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் ஐயப்பன் வேலைக்குச் சென்ற நிலையில், தனது மனைவி தரண்யாவை கைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் … Read more

மேன் நீ வேற லெவல் அரசியல் பண்றய்யா!

Tamil Political Memes: அச்சு ஊடகங்களில் அன்றாட அரசியல் நிகழ்வுகளை, அரசியல்வாதிகளை விமர்சிப்பதில் கார்ட்டூன்கள் ஒரு முக்கிய பகுதியாக இருந்தன. சமூக ஊடகங்கள் கோலோச்சும் காலத்தில், அரசியல் நிகழ்வுகளை, அரசியல்வாதிகளின் கருத்துகளை விமர்சிக்க் மீம்ஸ்கள் பெரிய அளவில் இடம்பெறுகின்றன. கார்ட்டூன் வரைவதற்கு ஓவியம் வரைய தெரிந்திருக்க வேண்டும். ஆனால், மீம்ஸ் கிரியேட்டராக இருப்பதற்கு, நல்ல நகைச்சுவை உணர்வு, நகைச்சுவை படங்களைப் பார்க்கிற வழக்கமும் அரசியலும் தெரிந்திருந்தால் போதும் எளிதாக மீம்ஸ் கிரியேட்டர்கள் ஆகிவிடலாம். சமூக ஊடகங்களில் இன்றைக்கு, … Read more

தமிழகத்தில் போதை பொருளே இருக்க கூடாது என்பதுதான் முதல்வர் ஸ்டாலினின் எண்ணம் – அமைச்சர் பரபரப்பு பேட்டி.!

தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்ததாவது, “தமிழகத்தில் 2021-ஆம் ஆண்டு மே 23-ம் தேதி வரை 799.8 டன் போதைப் பொருட்களை காவல் துறை, மக்கள் நல்வாழ்வுத் துறை, உணவு பாதுகாப்பு துறை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் தமிழகத்தில் ரூ.6 கோடி மதிப்பிலான 102 டன் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழத்தில் குட்கா விற்பனை செய்த மூன்றாயிரத்துக்கும் மேற்பட்ட கடைகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. … Read more

தமிழக முதல்வருடன் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்திப்பு

சென்னை: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை இன்று (மே 29) சந்தித்து வாழ்த்துப் பெற்றார். பாமகவின் புதிய தலைவராக அன்புமணி ராமதாஸ் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில் இன்று காலை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.பின்னர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: ” நேற்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக பொறுப்பேற்ற பிறகு, தமிழகத்தில் … Read more

பணி நேரத்தில் மருத்துவமனையில் இல்லாத மருத்துவர்கள் மீது நடவடிக்கை – ராதாகிருஷ்ணன்

பணி நேரத்தில் மருத்துவமனையில் இல்லாத மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். திருச்சி அரசு பொது மருத்துவமனையில் ஆய்வு செய்த மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசும்போது… நோய்த்தொற்று பரவலை முற்றிலும் தடுப்பதற்கு அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். அரசு மருத்துவமனையில் பணி நேரத்தில் மருத்துவர்கள் பணி செய்கிறார்களா என்பதை அரசு பொது மருத்துவமனை … Read more

போலி மெயில் ஜாக்கிரதை… பேஸ்புக், ட்விட்டர் அனுப்பும் ஒரிஜினல் மெயிலை கண்டறிய சில டிப்ஸ்

பேஸ்புக், ட்விட்டர் உட்பட பல நிறுவன ஊழியர்கள் என்கிற போர்வையில், தனிப்பட்ட நபர்களுக்கு போலியான மெயில்கள் வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்த மெயில்கள் உங்கள் தனிப்பட்ட தகவலை பெறும் நோக்கத்திலும், ஆபத்தான வெப்சைட்களுக்கு மாற்றும் லிங்க்-களை கொண்டிருக்கலாம். எனவே, இன்றைய செய்தி தொகுப்பில், போலி மெயில்களை கண்டறியும் டிப்ஸ்களை காணலாம் மெயிலை ஒப்பன் செய்கையில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் என்பதை கூகுள் தரப்பில் வீடியோவாகவே வெளியிடப்பட்டுள்ளது. இது, போலி மெயில்களை அடையாளம் காண உதவும் ட்விட்டர் … Read more

வழிப்பறியில் ஈடுப்பட்ட இளைஞர்.. நையப்புடைத்து காவல்துறையில் ஒப்படைத்த பொதுமக்கள்..!

கத்தியை காட்டி மிரட்டி வழிபறியில் ஈடுப்பட்ட இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த அய்யனார் என்ற இளைஞர் அந்த பகுதி பொதுமக்களிடம் வழிப்பறியில் ஈடுப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில்ஆர்.பேட்டை என்ற பகுதியில் உள்ள ஆசை தம்பி என்பவருக்கு சொந்தமான கடையில் கத்தியை காட்டி மிரட்டி கொள்ளையடித்துள்ளார். அதனை தொடர்ந்து மேல்எடையாளம் என்னும் விவசாயிடம் வழிப்பறியில் ஈடுப்பட்டுள்ளார். இந்நிலையில், அந்த பகுதி பொதுமக்கள்  அவரை மடக்கி பிடித்து அவரை தாக்கியுள்ளனர். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரை … Read more

காசி விநாயகர் கோவில் வளாகத்திற்குள் முப்பெரும் சித்த மருத்துவ மையத்தை திறந்து வைத்தார் எம்.பி., ராஜேஷ் குமார்.!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஆண்டலூர்கேட் பகுதியில் காசி விநாயகர் கோவில் வளாகத்திற்குள் தனியார் அறக்கட்டளை சார்பில் அமைக்கப்பட்டுள்ள முப்பெரும் சித்த மருத்துவ மையத்தை எம்.பி., ராஜேஷ்குமார் திறந்து வைத்தார். மைய திறப்பு விழாவை முன்னிட்டு, சித்த மருத்துவ சிகிச்சை முகாம் மற்றும் அரியவகை மூலிகை செடிகள் கண்காட்சியுடன் தனியார் கல்லூரி மாணவிகள் பங்கேற்ற யோகக்கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது.  Source link