சத்துணவு சாப்பிட்ட 35-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பாலி புதுகாலனியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. சத்துணவு சாப்பிடுவதற்கு முன்பாக மாணவ, மாணவிகள் பள்ளியில் வழங்கப்பட்ட இரும்புச்சத்து மாத்திரை சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர்கள் சிகிச்சை பெற்றுவரும் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சென்று எடக்கல் போலீசார் விசாரித்து வருகின்றனர். Source link

விவசாய மின் இணைப்பு வழங்குவதில் சிக்கல்: 6 மாதங்களாக காட்சிப் பொருளாக நிற்கும் மின்கம்பங்கள் – விவசாயிகள் வேதனை

தஞ்சாவூர்: மின் வாரியத்துக்கு தேவையான தளவாடப் பொருட்கள் கொள்முதல் செய்வதில் தொய்வு ஏற்பட்டுள்ளதால், முதல்வர் அறிவித்த சிறப்பு திட்டத்தில் விவசாய மின் இணைப்புகள் வழங்க முடியாத நிலை உள்ளது. இதனால், கடந்த 6 மாதங்களாக பல இடங்களில் மின்கம்பங்கள் மட்டுமே நடப்பட்டுள்ளன. இதனால் விவசாயிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். தமிழகத்தில் 1 லட்சம் இலவச மின் இணைப்புகள் வழங்கப்படும் என்ற சிறப்புத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிவித்தார். அதன்படி, 2005-ம் ஆண்டு வரை சாதாரணப் … Read more

”பேச எழுந்தபோது மைக்கை ஆஃப் செய்து ஓபிஎஸ்ஸை அவமானப்படுத்தினார்கள்” – ஜேசிடி பிரபாகர்

சென்னை சேத்துப்பட்டில் உள்ள தனது அலுவலகத்தில் அதிமுக ஒ.பன்னீர்செல்வதின் ஆதரவாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஜே.சி.டி. பிரபாகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இபிஎஸ் – ஓபிஎஸ் தொண்டர்களால் தேர்வு செய்யப்பட்டவர்கள். மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு முன், ஒற்றை தலைமைக்கு இடம் இல்லை என்று பேட்டியில் சொன்னார் எடப்பாடி பழனிசாமி, இப்போது நிர்வாகிகள் அவர் பக்கமும், தொண்டர்கள் ஓபிஎஸ் பக்கமும் உள்ளனர். கட்டுப்பாடுகளை மீறி பொதுக்குழு, செயற்குழுக்கூட்டம் நடந்தது. அதிமுக ஓபிஎஸ் – இபிஎஸ் கட்சி அல்ல; தொண்டர்கள் கட்சி. ஓபிஎஸ்க்கு … Read more

பெல் தொழிற்சங்க தேர்தல்: அ.தி.மு.க-வை வீழ்த்திய தி.மு.க

திருவெறும்பூர் அருகே உள்ள பெல் நிறுவனத்தில்  தொழிற்சங்கங்களுக்கான அங்கீகார தேர்தலில் தொமுச 2 உறுப்பினர்களை பெற்று மீண்டும் முதன்மை சங்கமாக தேர்வு பெற்றுள்ளது.   திருவெறும்பூர் அருகே மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பெல் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் பல்வேறு தொழிற்சங்கங்கள் உள்ளது. இதில் தொழிலாளர்களின் பிரச்சனைகள், சலுகைகள், உரிமைகள் ஆகியவற்றை பெல் நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி பெற்றுத் தருவதற்கான அதிகாரம் கொண்ட சங்க உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுவது வழக்கம். … Read more

தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் வேலைவாய்ப்பு : பயிற்சியின் போதே 80 ஆயிரம் சம்பளம்.! 

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக அதிகாரசபையில் பைலட் பதவிக்கு விண்ணப்பிக்காத விண்ணப்பதாரர்களுக்கு கடைசி தேதி மீண்டும் நினைவூட்டல்.  * விண்ணப்பதாரர்கள் முதுகலை (FG) தகுதிச் சான்றிதழின் தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும்.  * ஒரு வெளிநாட்டுத் தகுதிச் சான்றிதழ் (COC) மற்றும் இந்தியாவால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு இந்தியக் குடிமகன், இந்திய அரசாங்கத்தின் DG ஷிப்பிங்கிலிருந்து பொருத்தமான ஒப்புதலைப் பெற வேண்டும்.  * விண்ணப்பதாரர்கள் தலைமை அதிகாரியாக ஓராண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும் மற்றும் வெளிநாடு செல்லும் கப்பலில் சிஓசியை … Read more

விழுப்புரத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் படம் ஸ்பிரே பெயிண்ட் கொண்டு அழிப்பு..!

விழுப்புரம் மற்றும் தூத்துக்குடியில் அதிமுகவின் சுவர் விளம்பரங்கள் உள்ளிட்டவற்றில் இருந்த ஓ.பன்னீர்செல்வத்தின் பெயரை அக்கட்சியினர் அழித்தனர். விழுப்புரத்தில் பேனர்கள், சுவர்களில் இருந்த பன்னீர்செல்வத்தின் பெயர் மற்றும் புகைப்படத்தை முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகத்தின் ஆதரவாளர்கள் வெள்ளை நிற ஸ்பிரே பெயிண்ட் கொண்டு அழித்தனர். அதேபோல், தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக அலுவலகம் அருகே அக்கட்சி சார்பில் எழுதப்பட்டிருந்த சுவர் விளம்பரத்தில் பன்னீர்செல்வத்தின் பெயர் அழிக்கப்பட்டது. Source link

அக்னி பாதைக்கு ஜூன் 27-ல் காங். மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்: சேலத்தில் கே.எஸ்.அழகிரி தகவல்

சென்னை: ”தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் அக்னி பாதை திட்டத்தை எதிர்த்து வரும் 27-ம் தேதி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்” என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வந்த காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “மத்திய அரசின் அக்னிபாதை திட்டம் நாடு முழுவதும் இளைஞர்களிடையே பெரும் எதிர்ப்பை சம்பாதித்துள்ளது. இந்த திட்டம் எதிர்கால இளைஞர்களுக்கு எதிரான திட்டமாகும் … Read more

சென்னை கேகே நகரில் மரம் விழுந்து பெண் வங்கி மேலாளர் பலி

சென்னை கேகே நகரில் மரம் விழுந்ததில் வங்கி மேலாளர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். சென்னை கேகே நகரில் கழிவுநீர் கால்வாய் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் மண் சரிவு ஏற்பட்டு அருகில் இருந்த பெரிய மரம் கீழே விழுந்திருக்கிறது. அந்த நேரத்தில் அந்த பக்கமாக வந்த கார் மீது மரம் விழுந்து விபத்து ஏற்பட்டது. அதில் காரில் பயணம் செய்த வங்கி மேலாளர் வாணி கபிலன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயரிழந்தார். மேலும் காரில் அவருடன் பயணம் செய்த அவரது … Read more

இணைய அடிமைகளாக மாணவர்கள்; மாற்றுத் திட்டம் என்ன? திருச்சி பேராசிரியர் விளக்கம்

சர்வதேச ஒலிம்பிக் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு சிலம்ப கோர்வை கழகம் மற்றும் உலக சிலம்ப இளையோர் சம்மேளனம் சார்பில் சிலம்ப விழிப்புணர்வு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச ஒலிம்பிக் தினமான ஜூன் 23 அன்று விளையாட்டு மற்றும் ஆரோக்கியத்திற்கான நாளாக கொண்டாடப்படுகிறது., இதில் விளையாட்டுடன் தொடர்புடையவர்கள் வெகுஜன விளையாட்டுகளை ஊக்குவிக்கவும் பயிற்சி செய்யவும் ஒன்று கூடுகின்றனர். மக்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த அனுமதிக்கும் பரந்த அளவிலான விளையாட்டு, கலாச்சார மற்றும் கல்வி நடவடிக்கைகளுக்கான ஆதரவையும் … Read more

ESIC ஆட்சேர்ப்பு : மாதம் ஒரு லட்சம் ரூபாய் சம்பளம்.! எழுத்து தேர்வு இல்லை – நேர்காணல் மட்டுமே.. பயன்படுத்திக்கொள்ளுங்கள்.! 

ESIC ஆட்சேர்ப்பு 2022 அவுட் எம்ப்ளாய்ஸ் ஸ்டேட் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் (Employees State Insurance Corporation- ESIC) மூத்த குடியுரிமை மற்றும் முழு நேர/பகுதி நேர நிபுணர் பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  மொத்தம் 26 காலியிடங்கள் உள்ளன. நேர்முகத் தேர்வு 11.07.2022 அன்று நடைபெறும். தகுதியான விண்ணப்பதாரர்கள் தேதியின்படி நேர்காணலில் கலந்து கொள்ளலாம். வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் நேர்காணலின் தேதியில் 67 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். பட்டியல் இன பிரிவினருக்கு விதிகளின்படி தளர்வு. தகுதி/படிப்பு … Read more