சப்பரம் கவிழ்ந்து உயிரிழந்த 2 பேர் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் உதவி.. அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் நேரில் வழங்கினார்..!

தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் சப்பரம் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த இருவரின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரண நிதியை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் நேரில் சென்று வழங்கினார். தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள மனோகரன் மற்றும் சரவணன் உடல்களுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய அமைச்சர், பின்னர் சிகிச்சை பெற்றுவரும் 4 பேரையும் சந்தித்து ஆறுதல் கூறி தலா 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை அவர்களிடம் வழங்கினார்.  Source link

டாடா நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்: தொழில்நுட்ப மையங்களாக மாறும் தொழிற்பயிற்சி நிலையங்கள் – பலன்கள் என்னென்ன?

சென்னை: அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறைக்கும், டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்திற்கும் இடையில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது. 2021-22ம் ஆண்டு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் மானியக் கோரிக்கையில், தொழிற் பயிற்சி நிலையங்களில் பயிற்சி முடித்துச் செல்லும் பயிற்சியாளர்கள், தொழில் நிறுவனங்களில் உடனடி வேலைவாய்ப்பு பெறும் வகையில், பயிற்சியின் தரம் உயர்த்திட, அனைத்து அரசு தொழிற்பயிற்சி நிலையங்களும் புனரமைக்கப்பட்டு, நவீன … Read more

போலி வாக்காளர் அடையாள அட்டைகளை அச்சிட்ட கம்யூட்டர் செண்டர் சீல்

போலி வாக்காளர் அடையாள அட்டையை அச்சிட்டதற்காக சென்னை திண்டிவனத்தில் உள்ள கம்யூட்டர் சென்டரை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். 57 வயதான செல்வராஜ், விழுபுரத்தில் உள்ள நடுவந்தல் கிராமத்தை சேர்ந்தவர். இவர் திண்டிவனத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் ராகவேந்திர ப்ரிண்டர்ஸ் என்ற கம்யூட்டர் செண்டரிடம் இருந்து வாக்காளர் அடையாள அட்டையை பெற்றிருக்கிறார். இவருக்கு ஆதார் அட்டையில் மாற்றங்கள் செய்ய வேண்டும்  என்று திண்டிவனம் இ- சேவை மையத்திற்கு சென்றுள்ளார். அப்போது இவரது வாக்களர் அடையாள அட்டையை காண்பித்துள்ளார். போலியான அடையாள அட்டை … Read more

அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் எடுத்த முடிவு.. அதிர்ச்சியில் சசிகலா ஆதரவாளர்கள்.!!

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் 23.6.2022 – வியாழக் கிழமை காலை 10 மணிக்கு, சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில், அவைத் தலைவர் டாக்டர் அ . தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெற உள்ளது.   வரும் 23 ஆம் தேதி நடைபெறும் அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் தொடர்பாக இன்று ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினர். அதிமுக தலைமை கழக நிர்வாகிகள், … Read more

அதிமுக பொதுக்குழுக்கான ஏற்பாடு: ஓபிஎஸ், இபிஎஸ் தலைமையில் ஆலோசனை

சென்னை: வரும் ஜூன் 23-ம் தேதியன்று நடைபெறவுள்ள அதிமுக செயற்குழு, பொதுக்குழுக் கூட்டம் தொடர்பாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில், தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள கூட்டறிக்கை: “அதிமுக ஒருங்கிணைப்பாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் … Read more

அயோத்தி மத்தியஸ்தரின் பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டது ஏன்? பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

அயோத்தி ராமர் கோயில் நிலம் தொடர்பான வழக்கில் மத்தியஸ்தராக செயல்பட்ட உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சுவுக்கு வழங்கப்பட்ட இசட் பிரிவு பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அயோத்தியில் ராமர் கோயில் இடம் தொடர்பான வழக்கில் தீர்வு காண்பதற்கான மத்தியஸ்தக் குழுவில் உச்ச நீதிமன்றத்தால் 2019-ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டவர் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு. அப்போது அவருக்கு இசட் பிரிவு … Read more

தி.மு.க உட்கட்சி தேர்தலில் முறைகேடு; ஸ்டாலின், துரைமுருகனுக்கு ஆலங்குளம் நீதிமன்றம் நோட்டீஸ்

Tenkasi court issues notice to Stalin for malpractices in DMK intra party election: தென்காசி மாவட்ட தி.மு.க உட்கட்சி தேர்தலில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் பொதுச்செயலாளர் துரைமுருகன் ஆகியோருக்கு ஆலங்குளம் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தமிழகம் முழுவதும் தி.மு.க உட்கட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில், தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பதவிக்கான தேர்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிலையில், இந்த தேர்தலில் … Read more

பள்ளி மாணவ – மாணவிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடி உத்தரவு.!

கோடை விடுமுறைக்கு பின்பு ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கு நேற்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது. 2022 – 2023 ஆம் ஆண்டுக்கான நேரடி வகுப்புகள் நேற்று முதல் ஆரம்பமாகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு வழக்கமாக தொடங்கப்படும் ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. 1-12ம் வகுப்பு வரை முழு பாடங்களையும் நடத்த வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா காரணமாக 2 ஆண்டுகளாக பாடங்கள் குறைந்து … Read more

சுரங்கத் தொழிலாளர்களின் சமூக வாழ்வை துல்லியமாக பிரதிபலித்தவர் சின்னப்பபாரதி: முத்தரசன் புகழஞ்சலி

சென்னை: சுரங்கத் தொழிலாளர்களின் சமூக வாழ்வை துல்லியமாக பிரதிபலித்தவர் சின்னப்பபாரதி என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் புகழஞ்சலி செலுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் கூறியுள்ளதாவது: ”இலக்கிய உலகின் முன்னணி படைப்பாளி கு.சின்னப்பபாரதி (87) காலமானார் என்ற துயரச் செய்தி கேட்டு வேதனையுற்றோம். நாமக்கல் மாவட்டம், பரமத்தியில் விவசாயக் குடும்பத்தில் பிறந்த சின்னப்பாரதி சமூக சீர்திருத்தங்களில் முனைப்புக் காட்டியவர். பகுத்தறிவு சார்ந்த அறிவியல் கருத்துக்களை முன்னெடுத்து வந்தவர். மாணவப் பருவத்தில் … Read more

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு – முக்கிய சாலையில் போக்குவரத்து மாற்றம்: ஏன் எதற்கு?

மவுண்ட் ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து மாற்றத்தை அறிவித்துள்ளது சென்னை போக்குவரத்து காவல்துறை. சென்னை மவுண்ட் பாலாஜி மருத்துவமனை அருகில் ஜி.எஸ்.டி சாலை, உள்செல்லும் சாலையில் பின்னர் வெளி செல்லும் சாலையிலும் போக்குவரத்து மாற்றம். இந்த இடங்களில் நெடுஞ்சாலை துறையினரால் நிரந்தர மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற இருப்பதால் வாகன போக்குவரத்தை மாற்றுப் பாதையில் செல்லும் படி சோதனை அடிப்படையில் 14.06.2022 மற்றும் 15.06.2022 ஆகிய இரு நாட்களும் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 … Read more