டெல்லி : அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் குடியரசு தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு உடன் சந்திப்பு.!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், குடியரசு தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு உடன் சந்தித்து பேசினார். குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், புதிய குடியரசு தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக அடுத்த மாதம் 18-ந் தேதி தேர்தல் நடக்கிறது.  இதில், மத்தியில் ஆளும் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளராக திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் இன்று மதியம் பிரதமர் மோடி முன்னிலையில்  வேட்புமனு தாக்கல் செய்கிறார். அப்போது மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்கள், கூட்டணி கட்சி … Read more

வீட்டின் வெளியே நின்றிருந்த கல்லூரி பேராசிரியரை அரிவாளால் தாக்க முயன்ற கூலித்தொழிலாளி கைது..!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே மதுபோதையில் கல்லூரி பேராசிரியரை அரிவாளால் தாக்க முயன்ற கூலித்தொழிலாளி கைது செய்யப்பட்டார். தெள்ளந்தி பகுதியை சேர்ந்த தனியார் கல்லூரி பேராசிரியை அஜிதாவுக்கும், அவரது வீட்டின் அருகே வசிக்கும் அஜித் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. நேற்றிரவு மதுபோதையில் இருந்த அஜித், வீட்டின் வாசலில் நின்றிருந்த அஜிதாவை ஓடி வந்து அரிவாளால் தாக்க முயன்றார். தன்னை தாக்க வந்ததை பார்த்த பேராசிரியை உடனே வீட்டிற்குள் சென்றதால் உயிர்தப்பினார். இந்நிலையில், தலைமறைவாக இருந்த … Read more

மதுரையில் ரூ.10 கோடி மதிப்புள்ள திமிங்கலம் எச்சம் பறிமுதல்: மூவர் கைது

மதுரை: மதுரையில் ரூ.10 கோடி மதிப்புள்ள திமிங்கலம் எச்சத்தை வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். 3 பேரை கைது செய்து, அவற்றை எங்கிருந்து கடத்தி வந்தனர், எதற்காக அவற்றை கள்ளச்சந்தைகளில் விற்கின்றனர் என்று விசாரிக்கின்றனர். மதுரை தெற்குமாசி வீதி சின்னக்கடை தெருவில் உள்ள ஒரு கடை ஒன்றில் விலை உயர்ந்த வாசனை திரவயங்கள் மற்றும் மருந்துபொருட்களை தயாரிக்க பயன்படும் அரசால் தடை செய்யப்பட்ட திமிங்கல எச்சத்தினை சிலர் கள்ளச்சந்தையில் விற்க பதுக்கிவைத்திருப்பதாக மதுரை வனஉயிர் பாதுகாப்பு பிரிவு … Read more

இனி புதிய ஸ்டைலில் ரேஷன் கட்டிடம்.. தமிழக அரசு வெளியிட்ட மாதிரி வரைபடம்

தமிழகம் முழுவதும் உள்ள நியாயவிலைக் கடைகளை மேம்படுத்தி புதிய தோற்றத்துடன் கட்டடம் கட்ட முடிவுசெய்து அதற்கான மாதிரி கட்டட வரைபடத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் நியாயவிலைக் கடைகள் மூலம், அனைத்து அட்டைதாரர்களுக்கும் குறைந்த விலையிலும், இலவசமாகவும் அரிசி, பருப்புகள் உள்ளிட்ட பொருட்கள் போன்றவை வழங்கப்பட்டு வருகின்றன. இதனால் கோடிக்கணக்கான மக்கள் நேரடியாகவே பல பலன்களை அடைந்து வருகின்றனர். அரசு விநியோகிக்கும் இந்த பொருட்களினால், அவர்களின் வாழ்வாதாரமும் காக்கப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் சுமார் 34 ஆயிரத்திற்கும் … Read more

திருச்சி சிறையில் இலங்கை தமிழ் கைதி திடீர் தீக்குளிப்பு: போலீஸ் விசாரணை

திருச்சி மத்தியசிறை வளாகத்திலுள்ள அகதிகள் சிறப்பு முகாமில் வெளிநாட்டிலிருந்து முறையாக விசா மூலம் இந்தியாவுக்குள் வராமல் நேரடியாக வந்தவர்கள், காலாவதியான பாஸ்போர்ட் உள்ளவர்கள் என 84 இலங்கை தமிழர்கள் உட்பட பல்கேரியா, சூடான், நைஜீரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 110 பேர் திருச்சி அகதிகள் முகாமில் தமிழக அரசால் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதில் இலங்கை அகதிகள் பலர் தங்கள் தண்டனைக் காலம் முடிந்தும் சட்ட விரோதமாக தங்களை அடைத்து வைத்திருப்பதாகவும், தங்களை உடனடியாக விடுதலைச் செய்து, தங்கள் … Read more

#BREAKING : தமிழகத்தில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 27ம் தேதி வெளியீடு – தேர்வுத்துறை அறிவிப்பு.!

தமிழகத்தில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் ஜூன் 27ம் தேதி வெளியிடப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. ஜூலை 7ம் தேதி வெளியாகும் என அறிவித்திருந்த நிலையில், தற்போது முன்கூட்டியே வெளியீடப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. மேலும், dge.tn.nic.in மற்றும் dge.tn.gov.in என்ற இணையதளங்கள் வாயிலாக காலை 10 மணிக்கு முடிவுகள் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. Source link

சத்துணவு சாப்பிட்ட 35-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பாலி புதுகாலனியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. சத்துணவு சாப்பிடுவதற்கு முன்பாக மாணவ, மாணவிகள் பள்ளியில் வழங்கப்பட்ட இரும்புச்சத்து மாத்திரை சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர்கள் சிகிச்சை பெற்றுவரும் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சென்று எடக்கல் போலீசார் விசாரித்து வருகின்றனர். Source link

விவசாய மின் இணைப்பு வழங்குவதில் சிக்கல்: 6 மாதங்களாக காட்சிப் பொருளாக நிற்கும் மின்கம்பங்கள் – விவசாயிகள் வேதனை

தஞ்சாவூர்: மின் வாரியத்துக்கு தேவையான தளவாடப் பொருட்கள் கொள்முதல் செய்வதில் தொய்வு ஏற்பட்டுள்ளதால், முதல்வர் அறிவித்த சிறப்பு திட்டத்தில் விவசாய மின் இணைப்புகள் வழங்க முடியாத நிலை உள்ளது. இதனால், கடந்த 6 மாதங்களாக பல இடங்களில் மின்கம்பங்கள் மட்டுமே நடப்பட்டுள்ளன. இதனால் விவசாயிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். தமிழகத்தில் 1 லட்சம் இலவச மின் இணைப்புகள் வழங்கப்படும் என்ற சிறப்புத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிவித்தார். அதன்படி, 2005-ம் ஆண்டு வரை சாதாரணப் … Read more

”பேச எழுந்தபோது மைக்கை ஆஃப் செய்து ஓபிஎஸ்ஸை அவமானப்படுத்தினார்கள்” – ஜேசிடி பிரபாகர்

சென்னை சேத்துப்பட்டில் உள்ள தனது அலுவலகத்தில் அதிமுக ஒ.பன்னீர்செல்வதின் ஆதரவாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஜே.சி.டி. பிரபாகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இபிஎஸ் – ஓபிஎஸ் தொண்டர்களால் தேர்வு செய்யப்பட்டவர்கள். மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு முன், ஒற்றை தலைமைக்கு இடம் இல்லை என்று பேட்டியில் சொன்னார் எடப்பாடி பழனிசாமி, இப்போது நிர்வாகிகள் அவர் பக்கமும், தொண்டர்கள் ஓபிஎஸ் பக்கமும் உள்ளனர். கட்டுப்பாடுகளை மீறி பொதுக்குழு, செயற்குழுக்கூட்டம் நடந்தது. அதிமுக ஓபிஎஸ் – இபிஎஸ் கட்சி அல்ல; தொண்டர்கள் கட்சி. ஓபிஎஸ்க்கு … Read more

பெல் தொழிற்சங்க தேர்தல்: அ.தி.மு.க-வை வீழ்த்திய தி.மு.க

திருவெறும்பூர் அருகே உள்ள பெல் நிறுவனத்தில்  தொழிற்சங்கங்களுக்கான அங்கீகார தேர்தலில் தொமுச 2 உறுப்பினர்களை பெற்று மீண்டும் முதன்மை சங்கமாக தேர்வு பெற்றுள்ளது.   திருவெறும்பூர் அருகே மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பெல் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் பல்வேறு தொழிற்சங்கங்கள் உள்ளது. இதில் தொழிலாளர்களின் பிரச்சனைகள், சலுகைகள், உரிமைகள் ஆகியவற்றை பெல் நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி பெற்றுத் தருவதற்கான அதிகாரம் கொண்ட சங்க உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுவது வழக்கம். … Read more