இந்த மனிதர் உங்களை நோக்கி வருகிறாரா? எதிர்திசையில் ஓடுகிறாரா?

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஒரு மனிதர் உங்களை நோக்கி ஓடி வருகிறாரா அல்லது உங்களுக்கு எதிர் திரையில் ஒடுகிறாரா? படத்தை கவனமாகப் பாருங்கள். இந்த படம் உங்கள் ஆளுமை, உடலியல், உறவுகள், உங்கள் மூளை எவ்வாறு செயல்படுகிறது போன்றவற்றை குறிப்பிடுகிறது தெரிந்துகொள்ளுங்கள். ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் முதல் பார்வையில் ஒரு மாதிரியாகவும் உற்று கவனித்தால் வேறு மாதிரியாகவும் தெரியக்கூடியவை. இவை பார்ப்பவரின் … Read more

அடடா அருமை – ஆலமரத்தை அலேக்காக இடம் மாற்றிய போலீசார்.! குவியும் பாராட்டு.!

புதுச்சேரி : பழமையான ஆலமரம் ஒன்றை, வேருடன் அகற்றி மற்றொரு இடத்தில் நட்டு வைத்த காவல்துறையினர் அதிகாரிகளுக்கு வனத்துறை அதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.  மேலும் அந்த பகுதி பொதுமக்கள் காவல்துறையினரின் இந்த செயலுக்கு தங்களது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். புதுச்சேரி மூலகுளம் பகுதியில் புதிய காவல் நிலையம் கட்டுவதற்கான பணிகள் நடந்து வருகிறது. இதில் அந்த காவல் நிலையம் அமைய உள்ள இடத்தில், 15 வருட பழமையான ஒரு ஆல மரத்தை அகற்ற வேண்டிய சூழ்நிலை … Read more

நீலகிரியில் 2 பேரின் உயிரை பறித்த காட்டு யானை.. கும்கி யானைகளின் உதவியுடன் காட்டு யானையின் இருப்பிடத்தை தேடும் வனத்துறையினர்..!

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே 2 பேரின் உயிரை பறித்த காட்டு யானை இருக்கும் இடத்தை 2 கும்கி யானைகள் மற்றும் டிரோன் கேமிரா உதவியுடன் வனத்துறையினர் தேடி வருகின்றனர். ஓவேலியில் குடியிருப்பு பகுதிகளில் உலா வந்து கொண்டிருந்த காட்டு யானை ஒன்று, கடந்த 26-ம் தேதி கோவிந்தன் கடை என்ற இடத்தில் ஆனந்த் என்பவரையும், 27-ம் தேதி இரவில் பாரம் பகுதியை சேர்ந்த மும்தாஜ் என்ற பெண்ணையும் தாக்கி கொன்றது. அவர்களது உறவினர்கள் வனத்துறையினரை முற்றுகையிட்டு … Read more

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு 30,000 டன் அரிசி அனுப்ப ஏற்பாடு தீவிரம்

இலங்கை மக்களுக்கு வழங்குவதற்காக, தமிழக அரசு மூலம் தூத்துக்குடி வஉசி துறைமுகம் வழியாக 30 ஆயிரம் டன் அரிசி அனுப்பப்பட உள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு அங்குள்ள மக்களுக்கு உதவும் வகையில் தமிழகத்தில் இருந்து ரூ.80 கோடிமதிப்பில் 40,000 டன் அரிசி, ரூ.28 கோடி மதிப்பிலான மருந்து பொருட்கள் மற்றும் ரூ.15 கோடி மதிப்பிலான 500 டன் பால் பவுடர் ஆகிய அத்யாவசியப் பொருட்கள் தமிழகத்தில் இருந்து அனுப்பப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் … Read more

ராதிகாவிடம் போதையில் உளறிய கோபி.. அடுத்து என்ன ? எதிர்பார்ப்பை எகிற வைத்த பாக்கியலட்சுமி புரோமோ

விஜய் டிவியின் முன்னணி சீரியலான பாக்கியலட்சுமி சீரியலில், 40களின் இறுதியில் இருக்கும் கோபி தனது மனைவி பாக்கியலட்சுக்கு தெரியாமல் தனது கல்லூரி கால காதலி ராதிகாவை திருமணம் செய்துகொள்ள திட்டம் போட்டிருந்த நிலையில், கோபி போதையில் ராதிகாவிடம் உண்மையை உளறியுள்ளார். இதனால், இந்த வார புரோமோ அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்ப்பார்ப்பை எகிற வைத்துள்ளது. விஜய் டிவியில் டி.ஆர்.பி ரேட்டிங்கில் முன்னணியில் இருக்கிறது பாக்கியலட்சுமி சீரியல். இந்த சீரிய விறுவிறுப்பான காட்சிகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது. குடும்பமே … Read more

தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்.!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால், தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மைய இயக்குனர் வெளியிட்ட அறிக்கையில் தெரித்ததாவது, கேரளா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது. அதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். இன்று நீலகிரி, தேனி, திண்டுக்கல், கோவை, திருப்பூர், விருதுநகர், … Read more

டி.ராஜேந்தரை நேரில் சென்று நலம் விசாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகரும் இயக்குனருமான டி.ராஜேந்தரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். நெஞ்சுவலி காரணமாக கடந்த 19ஆம் தேதி சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட டி.ராஜேந்தருக்கு, வயிற்றில் ரத்தக் கசிவு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து உயர்சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அந்த மருத்துவமனைக்கு சென்ற முதலமைச்சர், டி.ராஜேந்தரை நலம் விசாரித்ததுடன், அவருக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். Source link

ஓசூரில் தற்காலிக மொத்த காய்கறிகள் விற்பனை சந்தையால் போக்குவரத்து நெரிசல், திருட்டு, சுகாதார சீர்கேடு

ஓசூரில் தற்காலிகமாக செயல் படும் மொத்த காய்கறிகள் விற்பனை சந்தையால், போக்குவரத்து நெரிசல், திருட்டு உள்ளிட்டவையால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அவதியுற்று வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சியில் மையப் பகுதியில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இது தமிழகத்தின் 2-வது மிகப்பெரிய சந்தை ஆகும். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கரோனா பரவலை தடுக்கும் வகையில், ஒசூர் உழவர் சந்தை தற்காலிகமாக மூடப்பட்டது. அப்போது, மாநகராட்சிக்கு உட்பட்ட 4 இடங்களில் தற்காலிக சந்தைகள் … Read more

தென்காசி: அனுமதியின்றி யானை வைத்திருந்தவர்களுக்கு வனத்துறையினர் அபராதம்

கடையம் அருகே அனுமதியின்றி யானை வைத்திருந்தவர்களுக்கு வனத்துறையினர் அபராதம் விதித்தனர்.  தென்காசி மாவட்டம் கடையம் அடுத்த பொட்டல்புதூர் அருகே அனுமதியின்றி யானை வைத்திருப்பதாக கடையம் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது, தொடர்ந்து நேரில் சென்ற வனத்துறையினர் யானை வைத்திருந்தவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் கேரளாவில் இருந்து அந்த யானையை இனாமாக பெற்றுவந்தது தெரியவந்தது. மேலும் அதற்கு உரிய அனுமதி இல்லாமல் வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அம்பை கோட்ட வனத்துறை துணை இயக்குநர் செண்பக பிரியா உத்தரவின்படி அந்த யானையை … Read more

காங்கிரஸ் தலைவர், பஞ்சாபி பாடகர் சித்து மூஸ் வாலா சுட்டுக் கொலை; பகவந்த் மான் அரசு மீது பாஜக குற்றச்சாட்டு

காங்கிரஸ் தலைவரும் பஞ்சாபி பாடகருமான சுப்தீப் சிங் சித்து மூஸ் வாலா ஞாயிற்றுக்கிழமை மான்சா அருகே சுட்டுக் கொல்லப்பட்டார். ஜவஹர் கே கிராமத்தில் உள்ள ஒரு கோயிலுக்கு அருகில் அவர் மீது குறைந்தபட்சம் 10 முறை சுடப்பட்டதாகவும், அவர் மான்சாவில் உள்ள மருத்துவமனையில் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. சித்து மூஸ் வாலாவின் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்ட ஒரு நாள் கழித்து அவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். விஐபி கலாச்சாரத்தை முறியடிக்கும் பகவந்த் மான் அரசின் நடவடிக்கையின் ஒரு பகுதியாக … Read more