இலங்கை அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட போராட்டக்காரார்கள்; வீடியோ

Sri Lanka protesters storm presidential palace as economic crisis deepens: இலங்கையின் மிக மோசமான பொருளாதார நெருக்கடி தொடர்பாக இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், வர்த்தக தலைநகர் கொழும்பில் உள்ள அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லம் மற்றும் அவரது செயலகத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர். ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் அதிபர் மாளிகை கட்டிடத்தை நோக்கி அணிவகுத்துச் செல்வதைக் காட்டும் வீடியோ கிளிப்புகள் சமூக ஊடகங்களில் வைரலாகின. செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸின் கூற்றுப்படி, வார இறுதியில் திட்டமிடப்பட்ட … Read more

நாட்டில் அமைதியும், வளமும் பெருக பக்ரீத் திருநாளில் சபதம் ஏற்போம் : தமிழக இஸ்லாமிய அரசியல் தலைவர்கள் வாழ்த்து.!

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் துணைப்பொதுச்செயலாளர் முஹம்மது ஷிப்லி விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், “தியாகத் திருநாள் என்கிற பெருநாளை முஸ்லிம் சமுதாயம் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இந்நன்னாளில் இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் சார்பில் அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவிப்பதில் மகிழ்வுறுகிறேன். இப்ராஹீம் நபியின் வாழ்க்கையை மனித குலத்திற்கு படிப்பினையாக ஆக்கி,அவரது பாதையை முன்மாதிரியாக காட்டித் தருகிறான் இறைவன். படைப்புகள் கடவுள் அல்ல;படைத்தவனே கடவுள் என்ற கொள்கையை முன்வைத்து பிரச்சாரம் செய்ததால் ஏகத்துவ இமாம் இப்ராஹீம் நபி என அவரை முஸ்லிம்கள் போற்றுகிறார் … Read more

கார் மீது தனியார் பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து ; இளம் தம்பதி சம்பவ இடத்திலேயே மரணம்

விருதுநகரில் கார் மீது தனியார் பேருந்து மோதியதில் சென்னையை சேர்ந்த இளம் தம்பதியினர் உயிரிழந்தனர். பெருங்குளத்தூர் பகுதியை சேர்ந்தவர் 30 வயதான மனோஜ். புல்லட் கம்பெனியில் மேலாளராக பணியாற்றிவரும் அவர் 27 வயதான தனது மனைவி நித்திஷா மற்றும் இரு குழந்தைகளுடன் காரில் நெல்லைக்கு சென்றுகொண்டிருந்தார். விருதுநகர் புதிய பேருந்துநிலையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது விருதுநகர் நோக்கி வந்துகொண்டிருந்த தனியார் பேருந்து கார் மீது நேருக்கு நேர் மோதியதில் மனோஜூம் அவரது மனைவியும் சம்பட இடத்திலேயே … Read more

பாலியல் வன்கொடுமையால் சிறுமி கர்ப்பம்: 24 வார கருவை கலைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு 

மதுரை: பாலியல் வன்கொடுமையால் கர்ப்பமான 15 வயது சிறுமியின் வயிற்றில் வளரும் 24 வார கருவை உடனடியாக கலைக்க மருத்துவக் குழுவுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த 15 வயது சிறுமி, வார இறுதி நாட்களில் அங்குள்ள தீப்பெட்டி தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்று வந்தார். அப்போது அதே தொழிற்சாலையில் பணிபுரிந்த தொழிலாளி ஒருவர், சிறுமியை திருமணம் செய்வதாக கூறி அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது தொடர்பாக கோவில்பட்டி அனைத்து … Read more

தற்காலிக ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு

தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்காக விண்ணப்பித்த ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டவர்களில், 28,984 பேர் மட்டுமே ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாக தமிழக பள்ளி கல்வித்துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இடைநிலை ஆசிரியர் பணிக்காக 8 ஆண்டுகள் காத்திருந்தும் பணி வழங்கப்படவில்லை எனவும், பள்ளி நிர்வாக குழு மூலம் தற்காலிக ஆசிரியர் நியமனம் செய்வது இயற்கை விதிக்கு முரணானது என்றும் கூறி ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த ரவி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த … Read more

சசிகலாவால் நள்ளிரவில் அலறிய மைக்குகள்; பரபரப்பான காவலர்கள்   

Sasikala car hit by toll plaza stick at Trichy Highway Supporters protest: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான வி.கே.சசிகலா திருச்சியில் இருந்து தஞ்சை நோக்கி சென்ற பொழுது துவாக்குடி சுங்கச்சாவடியில் ஸ்கேன் ஸ்டிக், கார் கண்ணாடியில் அடித்ததை தொடர்ந்து, ஆதரவாளர்கள் நள்ளிரவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான விகே.சசிகலா நேற்று இரவு 11.45 மணிக்கு விழுப்புரத்தில் இருந்து திருச்சி … Read more

வழக்கு வாபஸ்… உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு… சிக்கலில் இருந்து விடுபட்டார் அதிமுக முன்னாள் அமைச்சர்.!

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இயக்குனர் சசிகுமார் நடித்த நாடோடிகள் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தவர் நடிகை சாந்தினி. இவர் அதிமுக ஆட்சி காலத்தில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்த  மணிகண்டன் மீது, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில்புகார் ஒன்றை கொடுத்தார்.  அதில், “மணிகண்டனும் நானும் கடந்த 5 ஆண்டுகளாக ஒரே வீட்டில் கணவன்-மனைவியாக வாழ்ந்தோம். இதனால் கருவுற்ற என்னை மிரட்டி கருவைக் கலைக்க … Read more

விசா முறைகேடு தொடர்பாக ப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை

விசா முறைகேடு வழக்கு தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் சி.பி.ஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். சீன நாட்டினர் 250-க்கும் மேற்பட்டோரிடம் 50 லட்சம் ரூபாய் பெற்று விசா வழங்கி முறைகேடு செய்ததாக கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து சி.பி.ஐ விசாரணை நடத்துகிறது. இது தொடர்பாக கடந்த மே மாதம் கார்த்தி சிதம்பரம் தொடர்புடைய 9 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. அதன் ஒரு பகுதியாக சென்னையில் சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்தின் வீடுகளில் … Read more

சென்னை: பொது இடங்களில் குப்பை கொட்டியோர், போஸ்டர் ஒட்டியோரிடம் 15 நாட்களில் ரூ.15 லட்சம் அபராதம் வசூல்

சென்னை: சென்னையில் விதிகளை மீறி பொது இடங்களில் குப்பை கொட்டியவர்கள் மற்றும் போஸ்டர் ஒட்டியவர்களுக்கு ரூ.15 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் சார்பில் சென்னை மாநகரை தூய்மையாகவும், அழகுடனும் பராமரிக்க சிங்கார சென்னை 2.0 உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின்கீழ் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னை மாநகரை தூய்மையாக பராமரிக்கும் வகையில் சென்னை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள் 2019-ன்படி பொது மற்றும் தனியார் இடங்களில் குப்பைகள் மற்றும் கட்டுமானக் கழிவுகளை கொட்டுபவர்கள் மீது … Read more

கார்த்தி சிதம்பரம் வீட்டில் சி.பி.ஐ மீண்டும் சோதனை

CBI raid at Karthi Chidambaram Chennai house: காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரத்தின் சென்னை இல்லத்தில் சி.பி.ஐ மீண்டும் சோதனை நடத்தி வருகிறது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனான கார்த்தி சிதம்பரம், சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி எம்.பி.,யாக இருந்து வருகிறார். இவரது சென்னை இல்லத்தில் சி.பி.ஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சீனாவைச் சேர்ந்தவர்களுக்கு லஞ்சம் பெற்றுக்கொண்டு முறைகேடாக விசா வழங்கியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக இந்தச் சோதனை நடைபெற்று … Read more