சென்னை விமான நிலைய புதிய வாகன நிறுத்தத்தில் மின்சார வாகன சார்ஜிங் வசதி

சென்னை: சென்னை விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய வாகன நிறுத்தத்தில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் வசதி செய்யப்பட்டுள்ளது. சென்னை விமான நிலைய விரிவாக்க திட்டத்தின் கீழ் பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து, வரும் 1ம் தேதி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட உள்ளது. 2.5 லட்சம் சதுர அடி பரப்பளவிலான இந்த வாகன நிறுத்துமிடத்தில் ஒரே நேரத்தில் 2,000-க்கும் மேற்பட்ட கார்களை நிறுத்துவதற்கான வசதி உள்ளது. இதைத் தவிர்த்து பார்வையாளர்களுக்காக வணிக … Read more

லாரியை வழிமறித்து கரும்பை தின்ற காட்டு யானைகள் – போக்குவரத்து பாதிப்பு

மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் கரும்பு லாரியை வழிமறித்து கரும்பு எடுத்து சாப்பிட்ட யானைகளால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சத்தியமங்கலம் அடுத்த ஆசனூர் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் யானைகள் தீவனம் மற்றும் தண்ணீர் தேடி சாலையை கடப்பது வழக்கம். அதேபோல் அவ்வழியாக வரும் கரும்பு லாரிகளில் இருந்து வீசப்படும் கரும்புகளை சாப்பிட்டு பழகிய யானைகள் தேசிய நெடுஞ்சாலையில் கரும்பு லாரிகளை எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றன. இந்நிலையில் ஆசனூர் காரப்பள்ளம் சோதனைச்சவாடி அருகே கரும்புபாரம் ஏற்றிய லாரி வருவதைக் கண்ட யானைகள் … Read more

பொறியியல் கல்லூரிகள் ரேங்கிங்: அண்ணா பல்கலை. செய்தது சரியா?

TNEA counselling: Impacts of Anna University Engineering colleges rank list: பொறியியல் கல்லூரிகளுக்கான தரவரிசையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள நிலையில், இப்படி தரவரிசை வெளியிடுவது சரியா? இது மாணவர்களிடையே என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்? கல்லூரிகளுக்கு சாதகமா? பாதகமா? என்பது போன்ற விஷயங்களை இப்போது பார்ப்போம். தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான சேர்க்கையை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. இதற்கான விண்ணப்பச் செயல்முறை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் அண்ணா பல்கலைக்கழகம் அதன் கீழ் உள்ள பொறியியல் … Read more

சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி..!

4 நாட்களுக்கு சதுரகிரி மலையேற பக்தர்களுக்கு அனுமதி அளித்திருப்பதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது.தரைமட்டத்தில் இருந்து சுமார் 4700 அடி உயரத்தில் சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு  தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தருவர்.  இங்கு ஒவ்வொரு மாதமும் பிரதோ‌ஷம், அமாவாசை, பவுர்ணமி நாட்களில் மட்டுமே பக்தர்களுக்கு மலையேற அனுமதி அளிக்கப்பட்டு வந்தது. அதன் படி, ஆனி பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு வருகிற 11-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் … Read more

அரசியலில் ஓபிஎஸ் உடன் பயணித்ததற்கு வெட்கப்படுகிறேன் – கே.பி.முனுசாமி

அரசியலில் ஓபிஎஸ் உடன் இணைந்து பணியாற்றியதற்கு தாம் வெட்கப்படுவதாகவும், வேதனைப்படுவதாகவும் அதிமுக மூத்த நிர்வாகி கே பி முனுசாமி தெரிவித்துள்ளார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுகவுடன் இணைந்து ஓபிஎஸ் செயல்படுவது போன்ற சூழல் வந்ததால் தான் அவரை விட்டு தாம் விலகியதாக கூறினார். இதனிடையே, ஓபிஎஸ்-ன் சொந்த மாவட்டமான தேனி மாவட்டத்திலிருந்து இன்று மேலும் 9 பொதுக்குழு உறுப்பினர்கள் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை … Read more

சென்னையில் கார்த்தி சிதம்பரம் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை

சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரத்தின் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் வீட்டில், சிபிஐ அதிகாரிகள் இன்று மீண்டும் சோதனை நடத்தினர். சீன நாட்டைச் சேர்ந்தவர்களிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு விசா வழங்கியதாக கார்த்தி சிதம்பரம் மீது வழக்கப் பதிவு செயய்ப்பட்டது. அதன் அடிப்படையில் கடந்த மே மாதம் டெல்லியிலிருந்து சென்னை வந்த சிபிஐ அதிகாரிகள் கார்த்தி சிதம்பரத்தின் … Read more

நகைகளை கழற்றி வைத்துவிட்டு தூங்கிய தொழிலதிபருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

தொழிலதிபரின் வீடு புகுந்து 65 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை திருச்செந்தூர் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திருச்செந்தூரில் கீழ வெயிலுகந்தம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர்கள் முருகேசன் – கலாவதி தம்பதியர் இவரது மகன் பாலகுமார் என்பவர் திருச்செந்தூரில் விடுதி ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில், தொழிலதிபர் பாலகுமார் தனது வீட்டின் மாடியில் தூங்கும்போது தான் அணிந்திருந்த 20 பவுன் தங்க நகையை கழற்றி அலமாரியிலுள்ள லாக்கரில் வைத்துவிட்டு தூக்குவது வழக்கம், அதேபோல் … Read more

குடும்ப உறவுகளை கொண்டாட வரும் ‘செவ்வந்தி’: சன் டி.வி புதிய சீரியல்

சன் டி.வி.யில் புதிதாக ஒளிபரப்பாக உள்ள செவ்வந்தி சீரியலின் ப்ரமோ தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தமிழில் சீரியல்கள் ஒளிபரப்புவதில் முன்னணியில் உள்ள சன். டி.வி.யின் பூவே உனக்காக சீரியல் கடந்த சில வாரங்களுக்கு முன்பு திடீரென முடிக்கப்பட்டது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில், எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் தமிழ் சீரியல் வட்டாரத்திலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஆனால் எந்த சேனலாக இருந்தாலும் ஒரு சீரியல் முடிந்துவிட்டால் அடுத்து சில நாட்களில் புதிய … Read more

ஆன்லைன் ரம்மி விளையாடியதை தட்டிகேட்ட மனைவி.. கணவன் துணிகரம்..!

ஆன்லைன் ரம்மி விளையாடியதை கண்டித்த மனைவியை கொலை செய்த கணவனை காவல்துறையினர் கைது செய்தனர். திருச்சி மாவட்டம், தாளக்குடி பகுதியை சேர்ந்தவர் நரசிம்மராஜ்.  இவருக்கு திருமணமாகி சிவரஞ்சனி என்ற மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர். கடந்த சில நாட்களாக சிவரஞ்சனியின் பெற்றோர் அவரை தொடர்ப்பு கொள்ள முயற்சித்தனர். ஆனால்,   அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என கூறப்படுகிறது. இதனால், வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர்.  ஆனால் வீடு பூட்டியிருந்ததை கண்டு ஆத்திரமடைந்த அவர்கள்  நரசிமன்னின் சகோதரிக்கு அழைத்து … Read more

அரசு மருத்துவமனை கழிப்பறையில் சடலமாக கிடந்த ஆண் சிசு

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அரசு மருத்துவமனையில் உள்ள கழிப்பறையில் குறைபிரசவத்தில் 7 மாதத்தில் பிறந்த ஆண் சிசு சடலமாக கண்டெடுக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவமனையின் தலைமை மருத்துவர் அளித்த புகாரின் பேரில், குறை பிரசவத்தில் பிறந்த குழந்தையை கழிவறையில் வீசிச் சென்றவர்கள் யார் என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. Source link