கூரைக் கொட்டகையில் சிலைகளை வைத்து பூஜை: 600 ஆண்டு பழமையான கோவில் நிலை இது!

எஸ்.இர்ஷாத் அஹமது, தஞ்சாவூர் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு பாண்டிய மன்னனால் கட்டப்பட்ட சின்ன ஆவுடையார் கோயில் உரிய பராமரிப்பு இல்லாததால் முற்றிலும் சிதிலமடைந்து, சுவாமி சிலைகளை கூரை கொட்டகையில் வைத்து பூஜை செய்யும் அவல நிலையில் இருந்து வருகிறது. தற்போது அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இப் புராதன கோயிலை சீரமைத்து தருமாறு அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பட்டுக்கோட்டை அருகேயுள்ள கொள்ளுக்காடு ஊராட்சிக்குட்பட்ட பகுதி சின்ன ஆவுடையார்கோயில். … Read more

இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் கூலித்தொழிலாளி உயிரிழப்பு.!

இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் கூலி தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள பெரியகரசப்பாளையத்தை சேர்ந்த அருண்(27)கூலி தொழிலாளி ஆவார். இவர் மனைவி ஐஸ்வர்யாவுடன் இருசக்கர வாகனத்தில் பரமத்திவேலூர் சென்றுள்ளார். பின்பு அங்கிருந்து இருவரும் ஊருக்கு செல்வதற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும்போது பொய்யேரி அருகே ஒழுகூர்பட்டி பிரிவு சாலையில் திரும்ப முயன்ற போது எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனத்தில் மீது நேருக்கு நேர் மோதி விபத்து … Read more

தேவை ஒற்றை தலைமை.. அதிமுகவில் வலுக்கும் கோரிக்கை..!

அதிமுகவில் ஒற்றை தலைமை கோரிக்கை வலுத்து வரும் நிலையில் அதிமுகவுக்கு ஒற்றை தலைமை தேவையில்லை இரட்டை தலைமையே தொடர வேண்டும் என்று ஓ பன்னீர் செல்வம் கருத்து தெரிவித்துள்ளார். கட்சிக்கு ஒற்றை தலைமை தேவை என்ற கோரிக்கை கடந்த சில நாட்களாக அதிமுக வட்டாரத்தில் பரபரப்பாக எழுப்பப்பட்டு வருகிறது. சென்னையில் கடந்த இரு நாட்களை போலவே கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வத்தை மூத்த நிர்வாகிகள் மனோஜ் பாண்டியன், அலெக்சாண்டர் உள்ளிட்டோர் சந்தித்து ஆலோசனை நடத்தினர். சென்னையில் … Read more

“அதிமுகவில் என்னை ஓரம் கட்ட முடியாது; ஒற்றைத் தலைமை தேவையில்லை” – ஓபிஎஸ் திட்டவட்டம்

சென்னை: “அதிமுகவில் ஒற்றைத் தலைமை தேவையில்லை. ஜெயக்குமார் பேட்டியால்தான் இந்தப் பிரச்சினை உருவானது” என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். அதிமுக பொதுக்குழு வரும் 23-ம் தேதி நடைபெறவுள்ளது. இது தொடர்பாக தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்களுடன், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் கடந்த 14-ம் தேதி சென்னையில் ஆலோசனை நடத்தினர். இந்தக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “ஒற்றைத் தலைமை குறித்தும் இன்று … Read more

பாலாற்றில் 10 கி.மீ. இடைவெளியில் தடுப்பணை கோரி வழக்கு – அபராதத்துடன் வழக்கு தள்ளுபடி

பாலாற்றில் ஒவ்வொரு 10 கிலோமீட்டர் இடைவெளியில் தடுப்பணைகளை கட்டக் கோரிய வழக்கை, 10 ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் உள்ள நந்திதுர்க் என்ற இடத்தில் உருவாகும் பாலாறு நதி கர்நாடகாவில் 90 கிலோமீட்டரும், ஆந்திராவில் 32 கிலோமீட்டரும் கடந்து, தமிழகத்தில் வேலூர் மாவட்டத்தில் நுழைந்து 222 கிலோமீட்டர் பாய்ந்து கூவத்தூர் அருகே வங்கக்கடலில் கலக்கிறது. தமிழகத்தில் பாலாற்றில் 10 கிலோ மீட்டர் இடைவெளியில் தடுப்பணைகள் … Read more

ஒற்றைத் தலைமை தீர்மானம்: ஒப்புதல் கேட்டு ஓ.பி.எஸ் இடம் சமரசம் பேசிய இ.பி.எஸ் முகாம்

ஒற்றைத் தலைமை விவாதம் எழுந்து அதிமுகவில் மீண்டும் ஒரு புயல் வீசத் தொடங்கியுள்ளது. ஒற்றைத் தலைமையாக அதிமுக பொதுச் செயலாலர் பதவியைக் கைப்பற்ற ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் இடையே பலப்பரீட்சை நடத்திவரும் நிலையில், அதிமுக பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை தீர்மானம் கொண்டுவர ஒப்புதல் அளிக்க வேண்டும் என ஓ.பி.எஸ் இடம் இ.பி.எஸ் முகாம் பேச்சுவார்த்தை நடத்தியதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதிமுகவில் தற்போது ஒருங்கிணைப்பாளராக ஓ. பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் பதவி வகித்து இரட்டைத் தலைமையாக … Read more

#BigBreaking || டிடிவி தினகரன், சசிகலா, பிரதமர் மோடி – ஒற்றை தலைமை விவகாரத்தில் பழசை தோண்டி எடுத்த ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி.!

 அதிமுகவில் பொதுக்குழு கூட்டம் வருகின்ற 23ம் தேதி நடைபெற உள்ள நிலையில், நேற்று அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், ஒற்றை தலைமை விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது. இதனால், கடந்த இரு தினங்களாக அதிமுகவில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வரும் நிலையில், சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் தெரிவிக்கையில்,  “ஒற்றைத் தலைமை என்ற பேச்சு எழுந்தது ஏன் என்று எனக்கே தெரியவில்லை. எந்த அதிகார ஆசையும் எனக்கு இல்லை. ஒற்றை தலைமை வேண்டும் என்ற புதிய … Read more

ஆளுநர் மாளிகை நோக்கி செல்ல முயன்ற காங்கிரஸ் கட்சியினர் கைது.!

நேஷனல் ஹெரால்டு ‘ பத்திரிகை முறைகேடு தொடர்பான புகாரில் ராகுல்காந்தியிடம் அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆளுநர் மாளிகை நோக்கி செல்ல முயன்ற காங்கிரஸ் கட்சியினரை காவல்துறையினர் தடுத்ததால் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சைதாப்பேட்டை ராஜீவ் காந்தி சிலை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பின்னர் ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணியாக செல்ல முயன்றவர்களை போலீசார் தடுத்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் ஆளுநர் மாளிகை வாயில் அருகே வைக்கப்பட்டிருந்த பேரிகார்டுகளில் ஏறி குதித்து செல்ல முற்பட்டனர். … Read more

தமிழகத்திலும் அக்னி வீரர்களுக்கு காவல் துறையில் இடஒதுக்கீடு அறிவிக்க வேண்டும்: அண்ணாமலை

கோவை: “உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் போலவே அக்னி வீரர் திட்டத்தில் தேர்வானவர்களுக்கு தமிழகத்திலும் காவல் துறை பணியில் இடஒதுக்கீடு அறிவிக்க வேண்டும்” என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். மத்திய அரசின் நலத்திட்ட உதவிகளை பெற்ற பயனாளிகளை கோவையில் மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் முரளிதரன் இன்று (ஜூன் 16) சந்தித்து கவுரவித்தார். இந்த சந்திப்பில் கலந்துகொண்டபின் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியது: ”அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் மத்திய அரசின் அனைத்துத் துறைகளிலும் 10 … Read more

'அறியாமையில் இருக்கிறார் ஆளுநர்' – கி.வீரமணி

ரிஷிகளையும், ஞானிகளையும் நம்பும் ஆளுநர் ரவி எதற்காக பீகாருக்கு விமானத்தில் செல்கிறார். ஆளுநருடைய சனாதனத்தை பற்றிய கருத்து அவருடைய அறியாமையை காட்டுகிறது என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பேசியுள்ளார். ஆளுநரை கண்டித்து திராவிடர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே நடைபெற்றது. அதில் திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி, முன்னாள் நீதியரசர் ஹரிபரந்தாமன், துணை தலைவர் கலி. பூங்குன்றன், சுப.வீரபாண்டியன், அருள்மொழி ஆகியோர் கலந்து கொண்டனர். செய்தியாளர்களிடம் பேசிய திராவிடர் … Read more