வாணியம்பாடியில் தோல் கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலையில் விஷவாயு தாக்கி 3 பேர் மருத்துவமனையில் அனுமதி.!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தோல் கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலையில் விஷவாயு தாக்கியதில் பாதிக்கப்பட்ட 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு பகுதியில் உள்ள தனியார் தோல் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பம்ப் அறையில் ஏற்பட்ட பழுதை சரி செய்யும் பணியில் 3 பேர் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, திடீரென கழிவு நீர் வெளியேறியதை அடுத்து விஷவாயு தாக்கியதில் மூன்று தொழிலாளர்களும் மூச்சுத்திணறி மயங்கி விழுந்தனர். பாதிக்கப்பட்ட 3 பேரும் மருத்துவமனையில் … Read more

“அதிமுகவில் ஒற்றைத் தலைமை தேவையில்லை” – ஓபிஎஸ் அடுக்கும் காரணங்கள்

சென்னை: அதிமுகவில் இரட்டைத் தலைமையே தொடர வேண்டும் என்று விரும்பும் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், “ஒற்றைத் தலைமை தேவையில்லை” என்று தன் தரப்பு காரணங்களை அடுக்கியுள்ளார். இது குறித்து அவர் இன்று செய்தித் தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நானும், எடப்பாடி பழனிசாமியும் இணைந்து பொது ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பின் கீழ் கட்சியை வழிநடத்தி வருகிறோம். நாங்கள் இணைய வேண்டுமென தொண்டர்கள் விரும்பினார்கள். அப்படி ஒரு சூழல் … Read more

'அதிமுக உட்கட்சி விவகாரங்களில் பாஜக தலையிட்டது இல்லை' – அண்ணாமலை

‘அதிமுக உட்கட்சி விவகாரங்களில் பாஜக தலையிட்டது இல்லை; தலையிடப்போவதும் இல்லை’ எனக் கூறியுள்ளார் அண்ணாமலை.    கோவை மசக்காளிப்பாளையத்தில் பாஜக அரசின் 8 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் மற்றும் பாஜக நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ”டெல்லியில் ராகுல் காந்தி விசாரணைக்கு ஆஜரானதற்கு தேவையில்லாத போராட்டத்தை காங்கிரஸ் கட்சியின் எம்.பி.க்கள், தலைவர்கள் செய்து வருகிறார்கள். கேரளாவில் … Read more

அமெரிக்க மியூசியத்தில் கும்பக்கோணம் கோவில் சிலைகள்: மீட்குமா தமிழக அரசு?

கும்பகோணம் அருகேயுள்ள சிவபுரம்கிராமத்தைச் சேர்ந்தவர் கே.நாராயணசாமி. இவர், தமிழக காவல் துறையின் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸில் ஒரு புகார் அளித்திருந்தார். அதில், ‘‘சிவபுரம் அருள்மிகு சிவகுருநாத சுவாமி திருக்கோயிலில் இருந்த தொன்மையான பல உற்சவர் சிலைகள் வெளிநாட்டுக்கு கடத்தப்பட்டு விட்டன. எனவே, அவற்றை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று குறிப்பிட்டு இருந்தார். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு டிஜிபி ஜெயந்த் முரளி, ஐ.ஜி. தினகரன் … Read more

மதுரை : மகனுடன் கோவிலுக்கு சென்ற தாய்.. கார் மீது மோட்டார் பைக் மோதி விபத்து.. தாய் உயிரிழப்பு.!

கார் மீது இரு சக்கர வாகனம் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றத்தில் கட்டிட தொழிலாளியான ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்து (வயது 48) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு மனோஜ்(22) என்ற மகன் உள்ளார்.  இத்தகைய நிலையில், மனோஜ் தனது அம்மாவுடன் கோவிலுக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது முன்னால் சென்ற கார் ஓட்டுநர் திடீரென பிரேக் பிடித்தார். … Read more

நியாய விலைக்கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவு.!

நியாய விலைக்கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், ஜனவரி 1ஆம் தேதி முதல் பணியாற்றும் விற்பனையாளர்கள், கட்டுநர்களுக்கு 28 சதவீதமாக அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நியாயவிலைக் கடைகளில் பணியாற்றும் 22 ஆயிரத்து 510 பேர் பயனடைவார்கள் என்றும், ஆண்டிற்கு 73 கோடி ரூபாய் கூடுதல் செலவினமாகும் என்றும் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது. Source link

மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சில் கூட்டத்தை ஆண்டுக்கு மூன்று முறை நடத்துக: பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்

சென்னை: மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சில் கூட்டத்தை ஆண்டுக்கு 3 முறை நடத்த வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இந்திய அரசமைப்பு சட்ட பிரிவு 263ன் படி மாநிலங்களுக்கு இடையேயோன கவுன்சில் அமைக்கப்படும். மாநிலங்களுக்கு இடையேயான பிரச்சினைகள், அது தொடர்பான ஆலோசனைகள், மாநிலங்களின் நலனுக்கு தேவையான நடவடிக்கைகள் ஆகியவைகள் குறித்து பரிந்துரைகளை வழங்கி கொள்கை முடிவுகளை ஒருங்கிணைப்பது இந்த கவுன்சிலின் முக்கியப் பணியாகும். இந்தியாவில் முதன்முறையாக சர்க்காரியா கமிஷன் பரிந்துரைப்படி மாநிலங்களுக்கு இடையேயான … Read more

பட்டியலின அதிகாரியை அவமதித்த திமுக அமைச்சர் – நடவடிக்கை எடுக்க உத்தரவு

பட்டியலின பி.டி.ஓ.வை, அமைச்சர் ராஜகண்ணப்பன் அவமதித்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.  சென்னை, பட்டியலின பி.டி.ஓ.வை தமிழக அமைச்சர் ராஜகண்ணப்பன் அவமதித்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்குமாறு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளருக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. புதிய தமிழகம் மற்றும் பறையர் பேரவையின் நிறுவனர் ஏர்போர்ட் மூர்த்தி, பட்டியலின பி.டி.ஓ.வை அவமதித்து சாதி பாகுபாடு காட்டியதற்காக அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரி … Read more

கூரைக் கொட்டகையில் சிலைகளை வைத்து பூஜை: 600 ஆண்டு பழமையான கோவில் நிலை இது!

எஸ்.இர்ஷாத் அஹமது, தஞ்சாவூர் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு பாண்டிய மன்னனால் கட்டப்பட்ட சின்ன ஆவுடையார் கோயில் உரிய பராமரிப்பு இல்லாததால் முற்றிலும் சிதிலமடைந்து, சுவாமி சிலைகளை கூரை கொட்டகையில் வைத்து பூஜை செய்யும் அவல நிலையில் இருந்து வருகிறது. தற்போது அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இப் புராதன கோயிலை சீரமைத்து தருமாறு அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பட்டுக்கோட்டை அருகேயுள்ள கொள்ளுக்காடு ஊராட்சிக்குட்பட்ட பகுதி சின்ன ஆவுடையார்கோயில். … Read more

இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் கூலித்தொழிலாளி உயிரிழப்பு.!

இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் கூலி தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள பெரியகரசப்பாளையத்தை சேர்ந்த அருண்(27)கூலி தொழிலாளி ஆவார். இவர் மனைவி ஐஸ்வர்யாவுடன் இருசக்கர வாகனத்தில் பரமத்திவேலூர் சென்றுள்ளார். பின்பு அங்கிருந்து இருவரும் ஊருக்கு செல்வதற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும்போது பொய்யேரி அருகே ஒழுகூர்பட்டி பிரிவு சாலையில் திரும்ப முயன்ற போது எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனத்தில் மீது நேருக்கு நேர் மோதி விபத்து … Read more