நித்திகிட்ட என்னவோ இருக்கு… திருமணம் செய்ய ஆசைப்படும் முன்னணி தமிழ் நடிகை!

நித்தியாநந்தாவை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக தமிழ் நடிகை ஒருவர் கூறியுள்ள தகவல் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும் அவரை திருமணம் செய்துகொண்டார் தனது பெயரைக்கூட மாற்ற தேவையில்லை என்றும் அவர் கூறியுள்ளார். கடந்த 2009-ம் ஆண்டு ஜெய் நடிப்பில் வெளியான வாமனன் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ப்ரியா ஆனந்த். தொடர்ந்து புகைப்படம், எதிர்நீச்சல், வணக்கம் சென்னை, அரிமா நம்பி, இரும்பு குதிரை, வை ராஜா வை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது தமிழில் … Read more

#திருவள்ளூர் || வாலிபரை கத்தியால் வெட்டி தப்பி ஓடிய மர்ம நபர்கள்.! போலீசார் வலைவீச்சு.!

திருவள்ளூர் மாவட்டத்தில் வாலிபரை கத்தியால் வெட்டி தப்பி ஓடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள காஞ்சிவாயில் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் மெதூர் பெட்ரோல் பங்க் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.  அப்பொழுது மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த இரு பெண்கள் மற்றும் ஒரு வாலிபருடன் இரண்டு மர்ம நபர்கள் வழிமறித்து தகராறு செய்துள்ளனர். இதைப் பார்த்த மணிகண்டன், அதனை தட்டிக் கேட்டுள்ளார். இதனால் கோபமடைந்த மர்ம … Read more

யாரையும் பழிவாங்கும் நோக்கில் முன்னாள் அமைச்சர் வீடுகளில் சோதனை நடத்தப்படவில்லை – அமைச்சர் ரகுபதி

உரிய புகாரின் அடிப்படையிலேயே முன்னாள் அமைச்சர் காமராஜ் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெறுவதாக தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். யாரையும் பழிவாங்கும் நோக்கில் சோதனை நடத்தப்படவில்லை எனவும் அதிமுகவில் தற்போது நடக்கும் குழப்பத்திற்கும், லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கும் சம்பந்தமில்லை என்றும் அமைச்சர் கூறியுள்ளார். Source link

மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்: வங்கிகளுக்கு மநீம வலியுறுத்தல்

சென்னை: வாழ்வாதாரத்தை மீட்கப் போராடும் மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று வங்கிகளுக்கு மக்கள் நீதி மய்யம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து இன்று மநீம வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ”வாழ்க்கையையே சவாலாகக் கொண்டு, வாழ்வாதாரத்தை மீட்கப் போராடும் மாற்றுத் திறனாளிகளின் நீண்டநாள் கோரிக்கையான எளிதில் கடனுதவி, வங்கி, ஏடிஎம் மையங்களில் சாய்தள வசதி உள்ளிட்ட கோரிக்கைகளை வங்கிகள் உடனடியாக நிறைவேற்ற வேண்டும். மாற்றுத் திறனாளிகளின் கூட்டமைப்பான டிசம்பர் 3 இயக்கம் சார்பில், சென்னை வள்ளுவர் … Read more

மூன்று தலைமுறைகள் – குடும்பத்துடன் 101 வது பிறந்த நாளை கொண்டாடிய மூதாட்டி

ஆரோக்கியமான உணவுகளை அளவோடு சாப்பிட்டதால் மூன்று தலைமுறைகளை கடந்து மூதாட்டி தனது 101 வது பிறந்த நாளை கொண்டாடினார். பாரம்பரிய சிறுதானிய உணவு வகைகளை மறந்து தற்போதைய இளைஞர்கள் துரித உணவை உட்கொண்டு உடல் நலம் பாதிக்கப்பட்டு சிறு வயதிலேயே மாரடைப்பு உள்ளிட்ட பல்வேறு நோய்களால் உயிர் இழக்க கூடிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள கோனாபட்டு கிராமத்தைச் சேர்ந்த அலமேலு (101). இவருக்கு 4 மகன்களும் 1 மகளும் ஒன்பது … Read more

பிரமாண்ட கருந்துளையை சுற்றி வரும் மிக வேகமான நட்சத்திரம்.. விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!

கருந்துளையைச் சுற்றிப் பயணித்து வினாடிக்கு 8,000 கிலோமீட்டர் வேகத்தை எட்டும் வேகமான நட்சத்திரத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். S4716 என்று பெயரிடப்பட்ட இந்த நட்சத்திரம், பால்வீதி விண்மீன் மண்டலத்தின் மையத்தில் உள்ள மிகப்பெரிய கருந்துளையான சிகடரியஸ் A* ஐச் சுற்றி வருகிறது. இது கருந்துளைக்கு 100 வானியல் அலகுகளுக்கு (astronomical unit) அருகில் வருகிறது. ஒரு AU என்பது 149,597,870 கி.மீட்டர்கள், ஆனால் இந்த சூழலில் 100 AU என்பது மிகச் சிறிய தூரம். கொலோன் பல்கலைக்கழகம் மற்றும் … Read more

மது அருந்துவதற்கு பணம் தராததால் விவசாயி விஷம் குடித்து தற்கொலை.!

மது அருந்துவதற்கு பணம் தராததால் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். விழுப்புரம் மாவட்டம் ராமையாம் பாளையம் ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்தவர் விவசாயி கார்த்திகேயன்(60). இவருடைய இரண்டு மகள்களையும் அதே பகுதியில் திருமணம் செய்து கொடுத்துள்ளார். இந்நிலையில் சரியாக வேலைக்கு செல்லாமல் கார்த்திகேயன் அடிக்கடி மது அருந்தி வந்துள்ளார். இதைத்தொடர்ந்து சம்பவத்தன்று மது அருந்துவதற்காக மனைவி மற்றும் இரண்டு மகள்களிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் தர மறுத்ததால், மனவேதனையில் அப்பகுதியை சேர்ந்த ஒரு … Read more

வருமானத்துக்கு அதிகமாக 500 சதவீதம்சொத்துக்குவிப்பு.? முன்னாள் அமைச்சர் வீட்டில் ரெய்டு

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரின் பேரில், அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் தொடர்புடைய 49 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வருமானத்திற்கு அதிகமாக 58 கோடியே 44 லட்சம் ரூபாய் சொத்து குவித்ததாக காமராஜ் மற்றும் அவரது மகன்கள் உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் 2015 முதல் 2021-ம் ஆண்டு வரை உணவுத்துறை அமைச்சராக இருந்தவர் காமராஜ். தற்போது நன்னிலம் தொகுதி சட்டமன்ற … Read more

பக்ரீத் | புகழ்பெற்ற மோர்பாளையம் சந்தையில் ரூ.2 கோடி வரை ஆடுகள் விற்பனை 

நாமக்கல்: புகழ்பெற்ற மோர்பாளையம் சந்தையில் பக்ரீத் பண்டிகையை ஒட்டி ஆடுகள் வியாபாரம் களைகட்டியதை அடுத்து இங்கு ரூ.2 கோடி வரை ஆடுகள் விற்பனையாகியுள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள மோர்பாளையம் கால்நடை சந்தை பிரசித்தி பெற்றது. இங்கு வாரந்தோறும் வெள்ளிக்கிழமை ஆடு, மாடு, எருமை கோழி உள்ளிட்ட கால்நடைகள் வாங்கவும் விற்கவும் விவசாயிகளும் வியாபாரிகளும் வருவது வழக்கம். இந்த ஆண்டு பக்ரீத் பண்டிகைக்கு ஒரு நாளே உள்ள நிலையில் வியாபாரிகளும் இஸ்லாமியர்களும் போட்டி போட்டுக் கொண்டு … Read more

கடலூர்: மாணவிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை – இன்று பள்ளிக்கு விடுமுறை

ஆவினங்குடி பள்ளி மாணவியை சக மாணவர்கள் 4பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தொடர்பாக இன்று பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ஆவினங்குடி அரசுப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்த மாணவியை, அவருடன் படிக்கும் சக மாணவர்கள் 4 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக நேற்று 4 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், இன்று ஆவினன்குடி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் … Read more