ஒற்றைத் தலைமை தீர்மானம்: ஒப்புதல் கேட்டு ஓ.பி.எஸ் இடம் சமரசம் பேசிய இ.பி.எஸ் முகாம்

ஒற்றைத் தலைமை விவாதம் எழுந்து அதிமுகவில் மீண்டும் ஒரு புயல் வீசத் தொடங்கியுள்ளது. ஒற்றைத் தலைமையாக அதிமுக பொதுச் செயலாலர் பதவியைக் கைப்பற்ற ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் இடையே பலப்பரீட்சை நடத்திவரும் நிலையில், அதிமுக பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை தீர்மானம் கொண்டுவர ஒப்புதல் அளிக்க வேண்டும் என ஓ.பி.எஸ் இடம் இ.பி.எஸ் முகாம் பேச்சுவார்த்தை நடத்தியதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதிமுகவில் தற்போது ஒருங்கிணைப்பாளராக ஓ. பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் பதவி வகித்து இரட்டைத் தலைமையாக … Read more

#BigBreaking || டிடிவி தினகரன், சசிகலா, பிரதமர் மோடி – ஒற்றை தலைமை விவகாரத்தில் பழசை தோண்டி எடுத்த ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி.!

 அதிமுகவில் பொதுக்குழு கூட்டம் வருகின்ற 23ம் தேதி நடைபெற உள்ள நிலையில், நேற்று அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், ஒற்றை தலைமை விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது. இதனால், கடந்த இரு தினங்களாக அதிமுகவில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வரும் நிலையில், சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் தெரிவிக்கையில்,  “ஒற்றைத் தலைமை என்ற பேச்சு எழுந்தது ஏன் என்று எனக்கே தெரியவில்லை. எந்த அதிகார ஆசையும் எனக்கு இல்லை. ஒற்றை தலைமை வேண்டும் என்ற புதிய … Read more

ஆளுநர் மாளிகை நோக்கி செல்ல முயன்ற காங்கிரஸ் கட்சியினர் கைது.!

நேஷனல் ஹெரால்டு ‘ பத்திரிகை முறைகேடு தொடர்பான புகாரில் ராகுல்காந்தியிடம் அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆளுநர் மாளிகை நோக்கி செல்ல முயன்ற காங்கிரஸ் கட்சியினரை காவல்துறையினர் தடுத்ததால் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சைதாப்பேட்டை ராஜீவ் காந்தி சிலை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பின்னர் ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணியாக செல்ல முயன்றவர்களை போலீசார் தடுத்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் ஆளுநர் மாளிகை வாயில் அருகே வைக்கப்பட்டிருந்த பேரிகார்டுகளில் ஏறி குதித்து செல்ல முற்பட்டனர். … Read more

தமிழகத்திலும் அக்னி வீரர்களுக்கு காவல் துறையில் இடஒதுக்கீடு அறிவிக்க வேண்டும்: அண்ணாமலை

கோவை: “உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் போலவே அக்னி வீரர் திட்டத்தில் தேர்வானவர்களுக்கு தமிழகத்திலும் காவல் துறை பணியில் இடஒதுக்கீடு அறிவிக்க வேண்டும்” என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். மத்திய அரசின் நலத்திட்ட உதவிகளை பெற்ற பயனாளிகளை கோவையில் மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் முரளிதரன் இன்று (ஜூன் 16) சந்தித்து கவுரவித்தார். இந்த சந்திப்பில் கலந்துகொண்டபின் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியது: ”அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் மத்திய அரசின் அனைத்துத் துறைகளிலும் 10 … Read more

'அறியாமையில் இருக்கிறார் ஆளுநர்' – கி.வீரமணி

ரிஷிகளையும், ஞானிகளையும் நம்பும் ஆளுநர் ரவி எதற்காக பீகாருக்கு விமானத்தில் செல்கிறார். ஆளுநருடைய சனாதனத்தை பற்றிய கருத்து அவருடைய அறியாமையை காட்டுகிறது என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பேசியுள்ளார். ஆளுநரை கண்டித்து திராவிடர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே நடைபெற்றது. அதில் திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி, முன்னாள் நீதியரசர் ஹரிபரந்தாமன், துணை தலைவர் கலி. பூங்குன்றன், சுப.வீரபாண்டியன், அருள்மொழி ஆகியோர் கலந்து கொண்டனர். செய்தியாளர்களிடம் பேசிய திராவிடர் … Read more

பிராமணர்களை இனப்படுகொலை செய்திருக்க வேண்டும் –  திமுகவுக்கு கடும் கண்டனம்.! முதல்வர் ஸ்டாலினுக்கு பறந்த கோரிக்கை.!

தமிழ்நாடு பிராமணர் சங்கத் தலைவர் என்.நாராயணன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, “அண்மைக்காலமாக திமுகவினைச் சார்ந்த ஒருசில நிர்வாகிகள் பிராமண சமூகத்தினை தாக்கிப் பேசுவதும், சம்மந்தமில்லாமல் சாடுவதும் அதிகரித்து வருகிறது.  திமுகவின் பேச்சாளர் ராஜிவ் காந்தி, சமீபத்தில் பிராமணர்களை இனப்படுகொலை செய்திருக்க வேண்டும் என்று அநாகரீகமாகவும், சட்டத்திற்கு புறம்பாகவும் பேசி உள்ளதை தமிழ்நாடு பிராமணர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வாய்ப்பு கிடைக்கின்ற பொழுதெல்லாம் பிராமண சமூகத்தினை சாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.  கட்சிகளுக்கோ, … Read more

ஓ.பி.எஸ்- இ.பி.எஸ் கண்ணும் இமையும் போல இணைந்து நிற்கிறார்கள்: பொன்னையன்

அதிமுகவில் ஒ.பி.எஸ், இ.பி.எஸ் இருவரும் கண்ணும் இமையும்போல நகமும் சதையும்போல ஒற்றுமையுடன் இருக்கிறார்கள் என்று அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் கூறியுள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறப்பிற்கு பின் அதிமுகவில் கடந்த 5 வருடங்களாக பல சச்சைகள் எழுந்து வருகிறது. இதில் தற்போது புதிதாக உருவெடுத்துள்ளது ஒற்றை தலைமை. கடந்த இரு தினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அதிமுகவில் ஒற்றை தலைமை அவசியம் என்றும், ஒற்றை தலைமை இல்லாததே சட்டமன்ற தேர்தல் … Read more

பஞ்சாயத்தில் தன்னை விட இளையவர்களின் காலில் விழுந்த முதியவர் மாரடைப்பால் உயிரிழப்பு.!

திருவாரூர் அருகே, பஞ்சாயத்தில் தன்னை விட இளையவர்களின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்க நேர்ந்ததால் மனமுடைந்ததாக கூறப்படும் முதியவர் மாரடைப்பால் உயிரிழந்தார். 65 வயதான அஞ்சுகண்ணு என்ற முதியவரின் மகனுக்கும் நாகூர்மீரான் என்பவருக்கும் கோவில் திருவிழாவில் மோதல் ஏற்பட்டது. இதில் நாகூர் மீரான் காயமடைந்த நிலையில், பஞ்சாயத்து கூட்டப்பட்டு அஞ்சுகண்ணுவுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அதை செலுத்த முடியாத முதியவர், நாகூர் மீரான் உள்ளிட்டோர் காலில் விழுந்ததாக கூறப்படுகிறது. அன்றிரவே முதியவர் மாரடைப்பால் உயிரிழந்த … Read more

தமிழகத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படி 28% ஆக உயர்வு

சென்னை: நியாய விலைக் கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களுக்கு அகவிலைப்படி 28 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட அறிவிப்பில், “கூட்டுறவுத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நியாய விலைக்கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களுக்கு 22.02.2021 முதல் ஊதியம் மறுநிர்ணயம் செய்யப்பட்டு 14% அகவிலைப்படி பெற அனுமதிக்கப்பட்டிருந்தது. 1.01.2022 முதல் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட 14% அகவிலைப்படி உயர்வினை வழங்குமாறு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்கத்தினர் விடுத்த கோரிக்கையினை … Read more

பள்ளி வாகனத்தை மறித்து 'சாவு பயத்தை' காட்டிய காட்டுயானை

கோத்தகிரியிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் நெடுஞ்சாலையிலுள்ள ‘முள்ளூர்’ பகுதியில் பள்ளி வாகனத்தை ஒற்றை காட்டு யானை வழிமறித்து கண்ணாடியை உடைத்தது. பள்ளி வாகனத்தில் குழந்தைகள் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. கோத்தகிரி முள்ளூர் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக ஒற்றை காட்டு யானைகள் நடமாட்டம் இருந்து வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் வெளியே வர முடியாமல் அச்சத்துடன் இருந்து வருகின்றனர். வனப்பகுதியில் இருந்து அவ்வப்போது நெடுஞ்சாலையில் உலாவரும் இந்த ஒற்றை காட்டு யானையால் வாகன ஓட்டிகளும் அச்சமடைந்து … Read more