தனக்கு தானே கல்லறை கட்டிய மூதாட்டி உயிரிழப்பு.. கன்னியாகுமரி அருகே நிகழ்ந்த சோகம்..!

தனக்கு தானே கல்லறை கட்டிய மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், சூழால் கொல்லன்விளை பகுதியை சேர்ந்தவர் ரோசி (70). இவர் திருமணம் செய்து கொள்ளாமல் தனியே வசித்து வந்துள்ளார். அந்த பகுதியில் கிடைக்கும் வேலைகளையும் அரசின் 100 நாள் வேலை திட்டத்தில் பணிக்கும் சென்று வாழ்வை நடத்தி வந்தார். அவரை உறவினர்  விஜயன் என்பவர் அடிக்கடி சந்தித்து பேசிவந்துள்ளார். இந்நிலையில், அவரின் வீட்டில் இருந்து  துர்நாற்றம் வீசியதாக அக்கம்பக்கதினர் விஜயனுக்கு தகவல் தெரிவித்தனர். … Read more

தனியார் ஜவுளிக்கடையில் ஊழியரை திசை திருப்பி புடவைகளை திருடிச்சென்ற கும்பலின் சிசிடிவி காட்சி.!

நாமக்கல் பள்ளிபாளையத்தில் தனியார் ஜவுளிக்கடை ஒன்றில் ஊழியரை திசை திருப்பி 14 ஆயிரம் ரூபாய் மதிப்புடைய புடவைகளை திருடிச்சென்ற கும்பலை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர். புடவைகளின் எண்ணிக்கை குறைந்திருந்ததையடுத்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பார்த்தபோது அந்த கும்பல் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்த பின்னர் பள்ளிபாளையம் போலீசில் கடை உரிமையாளர் புகாரளித்தார். Source link

மதுரை அரசு மருத்துவமனையில் ரூ.6 கோடியில் அமைகிறது கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம்

மதுரை: மதுரை அரசு மருத்துவமனை வளாகத்தில் ஜெயில் வார்டு அருகே ரூ.6 கோடியில் மருத்துவக் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. 4 மாதத்தில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுவிடும் என்று மருத்துவமனை முதல்வர் ரத்தினவேலு கூறியுள்ளார். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஒரு நாளைக்கு 3500 உள் நோயாளிகள், 15 ஆயிரம் வெளி நோயாளிகள் சிகிச்சைக்கு வருகிறார்கள். மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், தூய்மைப்பணியாளர் 1000 பேர், பார்வையாளர்கள் 10 ஆயிரம் பேர் … Read more

சென்னை – மதுரை இடையேயான தேஜஸ் ரயிலால் இவ்வளவு நஷ்டமா?

சென்னை – மதுரை இடையே இயக்கப்படும் தேஜஸ் ரயில் மூலம் ரயில்வே துறைக்கு எவ்வளவு கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்பது தகவலறியும் உரிமைச் சட்டம் மூலம் தெரியவந்துள்ளது. சென்னை – மதுரை இடையே தேஜஸ் சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் இந்த ரயில் திருச்சி, திண்டுக்கல் ஆகிய நிலையங்களில் மட்டுமே நிற்கும் என்பதால் விரைவாக மதுரையை சென்றடைந்து விடுகிறது. அதேபோல, மதுரையில் இருந்து புறப்படும் தேஜஸ் ரயில் 6 மணிநேரத்துக்குள்ளாகவே சென்னையை … Read more

பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு? லேட்டஸ்ட் நிலவரம் என்ன?

Petrol, diesel shortage news in tamil: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் 26-வது நாளாக எந்த மாற்றமும் இல்லாமல் பெட்ரோல்,டீசல் விலை தொடர்கிறது. அதன்படி இன்று (16-ம் தேதி), சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், ஒரு லிட்டர் டீசல் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த … Read more

ஈரோடு.! ஓடையில் குதித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர்.!

ஈரோடு மாவட்டத்தில் ஓடையில் குதித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஈரோடு மாவட்டம் மாணிக்கம்பாளையம் தென்றல் நகர் பகுதியை சேர்ந்தவர் குமார்(வயது 23). இவர் சிறிய வயதாக இருக்கும்போது அவரது பெற்றோர் இறந்து விட்டதால், அவரது சகோதரியின் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இதையடுத்து சகோதரிக்கு திருமணமாகி குழந்தை இல்லை என்பதால் கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் சகோதரி உயிரிழந்துள்ளார். இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்து மனவேதனையில் இருந்த குமார் நேற்று இரவு சூளை … Read more

தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.!

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல  கீழடுக்கு சுழற்சி காரணமாக, 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்த செய்திக்குறிப்பில், ஜூன் 17ஆம் தேதி நீலகிரி, கோவை உள்ளிட்ட 9 மாவட்டங்களிலும், ஜூன் 18ஆம் தேதி திருப்பத்தூர், வேலூர் உள்ளிட்ட 16 மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை … Read more

திருச்சி | தமிழ் பிராமி எழுத்துகளில் 1,330 குறட்பாக்களை கையால் எழுதி வெளியிட்ட தமிழாசிரியர்: பல்வேறு தமிழ் அமைப்பினர் பாராட்டு

திருச்சி: திருச்சியைச் சேர்ந்த தமிழாசிரியர் ஒருவர் தமிழ் பிராமி எழுத்துகளில் 1330 குறட்பாக்களை கையால் எழுதி அச்சிட்டு அதை நூலாக வெளியிட்டுள்ளார். திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் ஆலம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சைவ.சற்குணன். தற்போது திருச்சியில் வசித்து வரும்இவர், தமிழில் முனைவர் பட்டம்,திருக்குறள் புலமையர் பட்டம், ஓலைச்சுவடியியல், கல்வெட்டியியல் பட்டயம், சமஸ்கிருதத்தில் பட்டயம் பெற்றுள்ளார். பட்டதாரி ஆசிரியர், முதுநிலைதமிழாசிரியர் மற்றும் தலைமையாசிரியராக 20 ஆண்டுகள் பணியாற்றியவர். தற்போது திருச்சி முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளராக பணியாற்றி … Read more

60 அடி ஆழ கிணற்றில் விழுந்து தத்தளித்த மயில் – பத்திரமாக மீட்ட தீயணைப்புத் துறை

60அடி ஆழ கிணற்றில் விழுந்த மயிலை உயிருடன் மீட்டு வனத்துறையினரிடம் தீயணைப்புத் துறை வீரர்கள் ஒப்படைத்தனர். திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மலையாண்டிபட்டினத்தில் நடராஜன் என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில் உள்ள கிணற்றில் இருந்து விவசாயத்திற்கு தண்ணீர் பாய்ச்ச மோட்டாரை இயக்கச் சென்றுள்ளார். அப்போது கிணற்றில் உயிருடன் மயில் தத்தளித்துக் கொண்டிருந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், அருகில் உள்ளவர்களின் உதவியுடன் உடுமலை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி துறையினருக்கும் வனத்துறையினருக்கும் தகவல் கொடுத்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து … Read more

நீங்க மனிதனா இல்லை ரோபாட்டா ஒரு டெஸ்ட்; இந்த ஓவியத்தில் இருக்கிற பெண்ணை கண்டுபிடிங்க

ஆப்டிகல் இல்யூஷன் ஒரு புயலைப் போல இணையத்தையும் சமூக ஊடகங்களையும் தாக்கி வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒரு பொழுதுபோக்கு புதிர் விளையாட்டாக மட்டுமில்லாமல் பார்ப்பவர்களின் ஆளுமையை வெளிப்படுத்துவதால் நெட்டிசன்கள் ஆர்வத்துடன் ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து வருகின்றனர். ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் முதல் பாரவையில் என்ன தெரிகிறதோ அதை வைத்து பார்ப்பவர்களின் ஆளுமையைக் குறிப்பிடுகிறது. இது நெட்டிசன்களை முடிவில்லாத ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படம் ஒரு பயனுள்ள உளவியல் கருவி. அது உங்கள் … Read more