#தமிழகம் || காதல் விவாகரத்தில் வீடு புகுந்து 19 வயது அபர்ணா என்ற இளம் பெண் கழுத்தறுத்து படுகொலை.! நாடக காதலனின் கொடூர செயல்.!

மதுரை பொன்மேனி பகுதியில் வீட்டில் தனியாக இருந்த 19 வயது அபர்ணா என்ற இளம் பெண், வீடு புகுந்து கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் அபர்ணாவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், அபர்ணா கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வெளியான முதல் கட்ட தகவலின் படி காதல் விவகாரத்தில், இளைஞர் ஹரிஹரன் என்பவர் வீடு புகுந்து அபர்ணாவை கழுத்தை அறுத்து கொலை செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.  … Read more

ராஜீவ் கொலையாளிகள் 6 பேர் விடுதலை; சுப்ரீம் கோர்ட்தான் முடிவு எடுக்க வேண்டும்: அமைச்சர் ரகுபதி

க. சண்முகவடிவேல் தமிழக முன்னாள் அமைச்சர் காமராஜ் வீடுகளில் நடைபெற்று பெரும் லஞ்ச ஒழிப்பு சோதனைக்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உட்பட பல்வேறு அதிமுக பிரமுகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், புதுக்கோட்டையில் செய்தியாளர்களை இன்று சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்ததாவது:- ”லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தினால் சோதனையில் சிக்குபவர்கள் பழிவாங்கும் நடவடிக்கை என்று சொல்வது வாடிக்கை தான். அதை விடுத்து தங்கள் வீட்டில் சோதனை நடந்தால் நியாயமானது என்று யாரும் சொல்ல மாட்டார்கள். … Read more

வாடகை கடையை காலி செய்ய மறுத்ததால், கடைக்கு முன் பாராங்கற்களை குவித்து வைத்த அதன் உரிமையாளர்.!

நாகர்கோவில் அருகே வாடகை கடையை காலி செய்ய மறுத்ததால், கடையை திறக்க முடியாத அளவிற்கு கடைக்கு முன், அதன் உரிமையாளர் பாரங்கற்களை குவித்து வைத்துள்ளார். நாகர்கோவில் மணிமேடை சந்திப்பு அருகே சங்கரநாராயணன் என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் பிரசாத், கண்ணன் ஆகியோர் மொபைல் கடை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அந்த கட்டிடத்தை, சங்கரநாராயணன் வேறு ஒரு நபருக்கு விற்பனை செய்யவுள்ளதால்,  மொபைல் கடையை காலி செய்து தருமாறு கண்ணனிடம்  கேட்டுள்ளார். இதற்கு கண்ணன் மறுத்ததால் இருதரப்பினர் இடையே பிரச்னை இருந்து … Read more

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு: ஜூலை 11-ல் உயர் நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: ஜூலை 11-ம் தேதி நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழுக் கூட்டத்திற்கு தடை விதிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், வழக்கின் தீர்ப்பை வரும் திங்கட்கிழமை (ஜூலை 11) காலை 9 மணிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்திருந்த மனுவில், “பொதுக்குழு கூட்டத்திற்கு 15 நாட்களுக்கு முன்பாக அழைப்பு விடுக்க வேண்டும். ஆனால் ஜூலை 11-ம் தேதி பொதுக்குழு கூட்டம் … Read more

வடபழனி டூ அசோக் பில்லர் வரை போக்குவரத்து மாற்றம் செய்யத் திட்டம் – எந்த வழியாக செல்லலாம்?

சென்னை வடபழனி 100 அடி சாலையில் சந்திப்பிலிருந்து அசோக் பில்லர் வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. போக்குவரத்து நெரிசலைக் குறைத்திடும் நோக்கத்தில் நாளை 09.07.2022 முதல் போக்குவரத்து மாற்றங்கள் சோதனை முறையில் மேற்கொள்ளப்படவுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. அதன்படி 100 அடி சாலையில் வடபழனி சந்திப்பிலிருந்து அசோக் பில்லர் வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. 100 அடி சாலை 2-வது நிழற்சாலைச் சந்திப்பிலிருந்து 4-வது நிழற்சாலை சந்திப்பு வரை … Read more

ஃபிக்சட் டெபாசிட்: எந்த வங்கியில் அதிக லாபம்னு பாருங்க?

எஃப்டி கணக்குகளின் முதிர்வு காலம் 7 ​​நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரை இருக்கும். 5 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால், பிரிவு 80சி-ன் கீழ் வரிச் சலுகைகளையும் பெறலாம். இந்தியாவில் நிலவி வரும் பணவீக்கம் வங்கிகளின் எஃப்டி கணக்குகளுக்கான வட்டி விகிதத்தை அதிகரித்து செய்துள்ளது. இதனால் பிஎன்பி, எஸ்பிஐ, ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி மற்றும் கனரா வங்கி உள்ளிட்ட பல முன்னணி வங்கிகள் தங்கள் வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளன. எனவே, இந்த தருணத்தில் … Read more

நடிகர் விக்ரமுக்கு என்ன ஆனது… மருத்துமனை வெளியிட்ட அதிகாரபூர்வ அறிக்கை.!

நடிகர் விக்ரம் மாரடைப்பு (தகவல்) காரணமாக, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நடிகர் விக்ரமுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.  வெளியான முதல் கட்ட தகவல் படி அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரின் மகன் விடுத்துள்ள செய்தியில், “அப்பாவுக்கு மாரடைப்பு இல்லை. வதந்திகளை பரப்பாதீங்க, நம்பாதீங்க. இந்த மாதிரி … Read more

அதிமுக பொதுக்குழு நடக்குமா ?… 11 -ந் தேதி 9 மணிக்கு தீர்ப்பு, 9.15 -க்கு பொதுக்குழு ?

பொதுக்குழு நாளிலேயே தீர்ப்பு வெளியாகிறது…. வரும் 11-ந் தேதி காலை 9 மணிக்கு பொதுக்குழுவுக்கு தடைகோரிய வழக்கில் தீர்ப்பு அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் வரும் 11-ந் தேதி தீர்ப்பு வழங்கப்படும் – நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அதிமுக பொதுக்குழுவுக்கு தடைகோரிய வழக்கில் நேற்றும், இன்றும் விரிவான வாதங்கள் நடைபெற்ற நிலையில் வரும் 11-ல் தீர்ப்பு இபிஎஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், ஓபிஎஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ண குமார் உள்ளிட்டோர் … Read more

கோவையில் அதிமுக பிரமுகர் தொடர்புடைய இடங்களில் 3-வது நாளாக வருமான வரித் துறையினர் சோதனை

கோவை: கோவையில் அதிமுக பிரமுகர் தொடர்புடைய இடங்களில், மூன்றாவது நாளாக இன்றும் வருமான வரித் துறையினர் சோதனை ஈடுபட்டனர். கோவை வடவள்ளியில் உள்ள தொண்டாமுத்தூர் சாலை, நாராயணசாமி நகரைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவர், முன்னாள் அமைச்சரும், அதிமுக கொறடாவுமான எஸ்.பி. வேலுமணிக்கு நெருக்கமானவர். மேலும், “நமது அம்மா” நாளிதழ் வெளியீட்டாளராகவும், அதிமுக தெற்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலராகவும் உள்ளார். தவிர, சில தனியார் நிறுவனங்கள், அறக்கட்டளைகளை நடத்தி வருகிறார். வரி ஏய்ப்பு தொடர்பாக, வருமான வரித்துறை … Read more

'அன்று ஒரு பேச்சு, இன்று ஒரு பேச்சு'.. இபிஎஸை கலாய்த்த புகழேந்தி

எடப்பாடி பழனிசாமி அன்று ஒரு பேச்சு இன்று ஒரு பேச்சு என பேசி வருகிறார் என அதிமுக மூத்த தலைவர் புகழேந்தி தெரிவித்துள்ளார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM