அதிமுக பொதுக்குழு கூட்ட வழக்கு: ஓபிஎஸ் – இபிஎஸ் தரப்பின் 3 மணி நேர வாதங்களின் விவரம்

சென்னை: ஜூலை 11-ம் தேதி நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழுவுக்கு ஓபிஎஸ் தரப்பில் கூட்டத்திற்கு தடை விதிக்க கோரியும், இபிஎஸ் தரப்பில் வழக்கை தள்ளுபடி செய்யக் கோரியும் மூன்று மணி நேரம் வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, வழக்கின் தீர்ப்பை வரும் திங்கட்கிழமைக்கு (ஜூலை 11) ஒத்திவைத்து உத்தரவிட்டார். சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்திருந்த மனுவில், "பொதுக்குழு கூட்டத்திற்கு 15 நாட்களுக்கு முன்பாக அழைப்பு விடுக்க வேண்டும். … Read more

செங்கல்பட்டு அருகே லாரி மீது பேருந்து மோதி விபத்து – 2 பெண்கள் உட்பட 6 பேர் பலி

செங்கல்பட்டு அருகே லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் 2 பெண்கள் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

பொன்னியின் செல்வன் பங்க்ஷன் ரவுண்ட் அப்

தமிழ் சினிமா மட்டுமில்லாமல் இந்திய சினிமா உலகமே ஆவலுடன் எதிர்பார்த்திருந்த இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம், செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், வெள்ளிக்கிழமை மாலை பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் வெளியானது. எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் இரண்டு பாகங்களாக தயாராகி உள்ளது. பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாராகி வரும் இந்த திரைப்படத்தை … Read more

அனைவருக்கும் நான் மட்டும் ஒன்றை சொல்லிக்கொள்கிறேன்…. வெளுத்து வாங்கிய சசிகலாவின் பேச்சு.!

கள்ளக்குறிச்சியில் இன்று சசிகலா மேற்கொண்ட புரட்சிப்பயணத்தில் பேசியதாவது, “கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், உங்களையெல்லாம் இன்று சந்தித்ததில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். உங்களுடைய அன்பும், ஆதரவும் எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.  புரட்சித்தலைவர் அவர்கள் தான் சிறுவயதில் பட்ட கஷ்டங்களையெல்லாம் மனதில் வைத்துதான், ஏழை எளிய மக்களின் கஷ்டங்களை போக்கும் வகையில் “சத்துணவு திட்டம்” என்ற மகத்தான திட்டத்தை கொண்டு வந்தார். அதேபோன்று புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தொட்டில் குழந்தை திட்டம், தாலிக்கு தங்கம், அம்மா உணவகம், அம்மா மருந்தகம், மாணவச் … Read more

அதிமுக பொதுக்குழு வழக்கு.. 11-ந் தேதி காலை 9 மணிக்குத் தீர்ப்பு.!

அதிமுக பொதுக்குழுவுக்குத் தடைகோரி உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தொடுத்த வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் வரும் 11ஆம் தேதி காலை 9 மணிக்குத் தீர்ப்பளிக்கப்படும் என நீதிபதி அறிவித்துள்ளார். அதிமுக பொதுக்குழுவுக்குத் தடைகோரி ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி, நான்கு வினாக்களை எழுப்பி அதற்குப் பதிலளிக்க எடப்பாடி பழனிசாமிக்கு உத்தரவிட்டிருந்தார். இரண்டாம் நாள் விசாரணையின்போது அதற்கு இபிஎஸ் வழக்கறிஞர் விஜய் நாராயண் பதிலளித்தார். அதிமுகவில் பொதுக்குழு தான் அதிகாரம் பெற்ற அமைப்பு என்றும், … Read more

சென்னையில் 10 நாட்களுக்கு எந்தெந்த சாலைகளில் போக்குவரத்து மாற்றம்? – முழு விவரம்

சென்னை: நாளை முதல் தலைநகர் சென்னையில் எந்தெந்த சாலைகளில் எல்லாம் போக்குவரத்து மாற்றம் மேற்கொள்ளப்பட உள்ளது என்பது குறித்த முழு விவரம் பார்ப்போம். சென்னையில், ஈ.வே.ரா சாலையில் உள்ள அண்ணா வளைவு மற்றும் வடபழனி முதல் அசோக் பில்லர் வரையிலான இடங்களில் நாளை முதல் 10 நாட்களுக்கு சோதனை ஓட்டமாக போக்குவரத்து மாற்றம் அமல்படுத்தப்பட உள்ளது. ஈ.வே.ரா சாலையில் உள்ள அண்ணா ஆர்ச் பகுதி கோயம்பேட்டிலிருந்து அமைந்தகரை நோக்கிச் செல்லும் வாகனங்கள் அண்ணா ஆர்ச் வளைவில் இடதுபுறமாக … Read more

’சமூக விரோதிகள் சட்டவிரோதமாக நுழைவார்கள்’ – கமிஷனர் அலுவலகத்தில் ஜெயக்குமார் திடீர் மனு

அதிமுக பொதுக்குழு திட்டமிட்டப்படி நடைபெறுமா என்பது குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பதிலளித்துள்ளார். அதிமுக தலைமை அலுவலகத்தில் சமூக விரோதிகள் சட்டவிரோதமாக நுழைய இருப்பதால் பாதுகாப்பு தரக் கோரி சென்னை காவல் ஆணையரகத்தில் ஜெயகுமார் இன்றுமனு அளித்தார். அதன் பின்னர் அங்கிருந்த செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: அதிமுக தலைமை அலுவலகத்தில் சமூக விரோதிகள் சட்டவிரோதமாக நுழைய இருப்பதாக நம்பத்தகுந்த தகவல் கிடைத்தது. இதனால் பாதுகாப்பு கேட்டு காவல் ஆணையரிடம் மனு அளித்திருக்கிறோம். இதுதொடர்பாக பரிசீலனை செய்து உரிய … Read more

முயல் குட்டிகளுக்கு இடையே மறைந்திருக்கும் கோழிக் குஞ்சு… 25 நொடியில் கண்டுபிடிக்க சவால்!

Optical Illusion game: இந்த ஆப்டிகல்இல்யூஷன் படம் ஈஸ்டரை அடிப்படையாகக் கொண்டது, மிகவும் அழகானது. மிகவும் சுவாரசியமான இந்த புதிரில் பிஸியாக இருக்கும் முயல் குட்ட்டிகளுக்கு இடையே ஒரு கோழிக்குஞ்சு மறைந்திருக்கிறது. அதை 25 நொடிகளுக்கு கண்டுபிடிக்க வேண்டும் என்பதே உங்களுக்கான சவால். ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒரு சூறாவளி போல இணையத்தை சுழற்றி அடித்து வருகிறது. ஒரு காந்தம் போல நெட்டிசன்களை ஈர்த்து வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் முடிவில்லாத குழப்பத்தை அளிக்கும் இறுதியில் விடை … Read more

தலித், SC என்பதெல்லாம் எவ்வளவு கேவலமான அடையாளங்கள் என்பது இப்போதுதான் திராவிட மரமண்டைகளுக்கு புரிகிறதுபோல… ஷியாம் கிருஷ்ணசாமி.!

புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமியின் மகன் ஷியாம் கிருஷ்ணசாமி பதிவிட்டுள்ள டிவிட்டர் பதிவுகள் தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அதில்,  “தலித், SC என்பதெல்லாம் எவ்வளவு கேவலமான அடையாளங்கள் என்பது, அவை இளையராஜா மீது  பூசப்பட்ட பிறகு தான் திராவிட மரமண்டைகளுக்கு புரிகிறதுபோல… இசைஞானிக்கு மட்டுமல்ல, சுயமரியாதை உள்ள எவருக்கும் இந்த அடையாளங்கள் கறை தான்! இழுக்கு தான்! இதில ஆதி திராவிடர் என்ற இவனுங்க கண்டுபிடிப்பு வேற தலித், SC என்பதெல்லாம் எவ்வளவு கேவலமான … Read more

நீட் தேர்வில் முறைகேடு, ஆள்மாறாட்டம் நடைபெறாமல் தடுக்க வேண்டும் – மதுரை உயர்நீதிமன்ற கிளை

மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வு மிக முக்கியமானது என்பதால் முறைகேடு மற்றும் ஆள் மாறாட்டம் நடைபெறாமல் கண்டிப்பாக தடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. நீட் தேர்வு ஆள்மாறாட்டம் தொடர்பான வழக்கில் இன்று ஆஜரான சிபிஐ அதிகாரி, பேஸ் டிடெக்டர் போன்ற நவீன கருவிகள் மூலம் நீட் தேர்வில்  முறைகேடுகளை தடுக்கலாம் என்றும், தேர்வு மையங்களின் எண்ணிக்கையை அதிகரித்து, கண்காணிப்பை தீவிர படுத்தலாம் என்றும் கூறினார். இருப்பினும் முறைகேடுகளை தடுக்க என்னென்ன நடைமுறைகள் … Read more