திண்டுக்கல்: JCB, Hitachi வாகனங்களை அசால்ட்டாக இயக்கி ஆச்சர்யமூட்டும் இரண்டரை வயது சிறுவன்

திண்டுக்கல் அருகே JCB, Hitachi வாகனங்களை சர்வ சாதாரணமாக இயக்கி ஆச்சரியப்படுத்துகிறார் பால்வாடி செல்லும் இரண்டரை வயது பாலகன். திண்டுக்கல் அடுத்துள்ளது குட்டத்துப்பட்டி கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் தாமஸ். இவரது மனைவி ரோனிகா மேரி. இந்த தம்பதியினருக்கு இரண்டரை வயது மற்றும் ஒன்றரை வயதில் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன. தாமஸ் ஜேசிபி மற்றும் ஹிட்டாச்சி இயந்திரங்களுக்கு தேவையான உதிரிபாகங்கள் விற்பனை நிலையம் மற்றும் பழுதுபார்க்கும் தொழில் செய்துவருகிறார். இவரது கம்பெனியும், வீடும் ஒரே இடத்தில் உள்ளது.  … Read more

குறுகலான முக்கொம்பு மேலணை புதிய பாலம்: 26-ம் தேதி ஸ்டாலின் புதிய அறிவிப்பு?

திருச்சியின் மிக முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றானதும், காவிரியில் வெள்ளம் ஏற்பட்டால் வெள்ள நீரை வெளியேற்றும்  வடிகாலாகவும் அமைக்கப்பட்டதுதான் முக்கொம்பு மேலணை.  இந்த அணை ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் தென்னிந்திய நீர்பாசனத்தின் தந்தை என்று அழைக்கப்படும். ஆர்த்தர் காட்டன் என்பரால் 1836-ம் ஆண்டில் ரூ. 2 லட்சம் செலவில்  கட்டப்பட்டது. இந்த அணையின் நீளம் 630 மீட்டர். 45 மதகுகளுடன் கட்டப்பட்டிருந்தது.  இந்த நிலையில் கடந்த 2018 ஆகஸ்ட் மாதம் காவிரியில் ஏற்பட்ட  வெள்ளப் பெருக்கில் முக்கொம்பு … Read more

காவல்நிலையத்தில் தற்கொலை முயன்ற சப் இன்ஸ்பெக்டர்..!

விஷமருந்தி சப் இன்ஸ்பெக்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாமக்கல் மாவட்டம், பொத்தனூரைச் சேர்ந்தவர் நீலகண்டன். இவர் ஜேடர்பாளையம் காவல்நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டர் பணியாற்றி வருகிறார். இன்று காவல்நிலையத்திற்கு வந்த அவர் வாங்கி வைத்திருந்த விஷமருந்தி மயங்கி விழுந்துள்ளார். அவரை மீட்ட காவல்துறையினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அவர் … Read more

பாக்கியராஜை நடனமாட வைத்தவர் நடக்க இயலாமல் ஒரு மாதம் படுத்த படுக்கையாகி உயிரிழந்த பரிதாபம்..!

தமிழ்சினிமாவில்  ஆரம்பகாலத்தில் நடப்பதை மட்டுமே வழக்கமாக கொண்ட நடிகர்களை கூட நடனமாடவைத்த பிரபல நடன இயக்குனர் சின்னா நடக்க இயலாமல் படுத்த படுக்கையாக உயிரிழந்தார். சின்னா உயிரிழந்தது குறித்து  திரையுலகினருக்கு தகவல் தெரிவிக்காத நிலையில் அவரது மகளும் நடிகையுமான நந்திதா உருக்கத்துடன் வெளியிட்ட வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கி உள்ளார். முந்தானை முடிச்சு படத்தில் இயக்குனர் பாக்கியராஜுக்கு நடந்து கொண்டே எளிதாக ஆடுவது எப்படி? என்பதை கற்றுக் கொடுத்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுத்தந்தவர் நடன … Read more

பெரம்பலூர் மாவட்டத்தில் இடநெருக்கடியால் வாசகர்கள் அவதி: இடவசதி இல்லாத நூலகங்கள் விரிவுபடுத்த உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு நூலகங்கள், போதிய இடவசதி இல்லாமல் நெருக்கடியில் இயங்கி வருகின்றன. அவற்றை விரிவுபடுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாசகர்கள், போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் வலியுறுத்துகின்றனர். தமிழக அரசின் பொது நூலகத் துறையின் கீழ் பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே மாவட்ட மைய நூலகம், வேப்பந்தட்டையில் முழு நேர நூலகம் மற்றும் 18 கிளை நூலகங்கள், 24 ஊர்ப்புற நூலகங்கள், 42 பகுதி நேர … Read more

சசிகலாவைவை தொடர்ந்து ஓபிஎஸ்ஸையும் நீக்க முயற்சி – ஈபிஎஸ் மீது தனியரசு பகீர் குற்றச்சாட்டு

”கட்சியை நம்பி ஒப்படைத்த சசிகலாவை கட்சியை விட்டு நீக்கிய எடப்பாடி பழனிசாமி தற்போது ஓ.பன்னீர்செல்வத்தையும் நீக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்” எனக் குற்றஞ்சாட்டி உள்ளார் தனியரசு.  தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை கட்சியின் தலைவர் தனியரசு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்துப் பேசினார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய தனியரசு, ”என்னுடைய ஆதரவு ஓபிஎஸ்-க்குதான்.  ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக பல சோதனைகளை சந்தித்து. இரட்டை தலைமை இறுதி ஆன பிறகு, தனக்கான நிலைகளை எல்லாம் விட்டு … Read more

கோவை.! 20 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்த விபத்தில் ஓட்டுனர் படுகாயம்.!

கோவை மாவட்டம் வால்பாறை அருகே 20 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்த விபத்தில் ஓட்டுனர் படுகாயமடைந்துள்ளார். கோவை மாவட்டம் வால்பாறை கக்கன்காலனி பகுதியை சேர்ந்தவர் சூரியன். இவர் நேற்று சாலக்குடி பகுதியிலிருந்து வால்பாறை பகுதியில் உள்ள ஒரு தனியார் தேயிலை தொழிற்சாலைக்கு விறகு ஏற்றிச் சென்றுள்ளார். அப்பொழுது வால்பாறை-சாலக்குடி சாலையில் லாரி சென்று கொண்டிருக்கும்போது எதிர்பாராதவிதமாக சாலையோரத்தில் இருந்த தடுப்பை உடைத்து 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் லாரி ஓட்டுனர் காயமடைந்த … Read more

சீரியல்னா அப்படி… நிஜத்தில் நாங்க இப்படி… ரோஜா நட்சத்திரங்களின் அரிய புகைப்படங்கள்

Tamil Photo Gallery Of Tamil Serial Roja Team : தமிழ் சின்னத்திரையில் முக்கிய சீரியல்களில் ஒன்று ரோஜா. சுப்பு சூரியன், பிரியங்கா நல்காரி, ராஜேஷ், வடிவுகரசி, டாக்டர் ஷர்மிளா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வரும் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தினசரி எபிசோடுகள் பரபரப்பையும் விறுவிறுப்பையும் ஏற்படுத்தி வருவதால், டிஆர்பி ரேட்டிங்கிலும் ரோஜா சீரியலுக்கு நல்ல ரேட்டிங் கிடைத்து வருகிறது. சீரியலின் பரபரப்பான எபிசோடுகளுக்கு மட்டுமல்லாது முக்கிய … Read more

திண்டுக்கல்லில் உள்ள தனியார் வேளாண் கல்லூரி விடுதியில் பசியால் மயங்கி விழுந்த 13 மாணவ, மாணவிகள்.!

திண்டுக்கல் வேடசந்தூர் அருகே சேனாங்கோட்டையில் உள்ள தனியார் வேளாண் கல்லூரி விடுதியில் பசியால் 13 மாணவ, மாணவிகள் மயங்கி விழுந்தது தொடர்பாக ஆர்டிஓ விசாரணை நடத்தினார். மாணவ, மாணவிகள் அனுமதிக்கப்பட்டுள்ள வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று  ஆர்.டி.ஓ சிவக்குமார் இன்று விசாரித்தார். அப்போது விடுதி கேண்டீனில் தினமும் காலை 9.30 மணிக்கே காலை உணவு வழங்கப்படுவதாகவும், ஆனால் 7 மணிக்கே வகுப்புகள் தொடங்கப்படுவதாகவும் மாணவ, மாணவிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து முறையாக விசாரணை நடத்தப்பட்டு, தவறு நடந்திருக்கும் … Read more

நூபுர் சர்மா கைதாக வாய்ப்பு: முகமது நபி விமர்சன வழக்கில் விசாரிக்க டெல்லி வந்தது மும்பை போலீஸ்

புதுடெல்லி: இஸ்லாமிய இறைத்தூதர் முகமது நபிகளை தவறாக விமர்சனம் செய்த பாஜக செய்தித்தொடர்பாளர் நூபுர் சர்மா கைதாகும் சூழல் உருவாகி உள்ளது. இவரை நேரில் விசாரிக்க மும்பை போலீஸார் டெல்லிக்கு வந்துள்ளனர். கடந்த மே 26-ல் இந்தி தொலைக்காட்சி சேனல்களில் வழக்கம்போல் பாஜக செய்தித் தொடர்பாளரான நூபுர் சர்மா கலந்து கொண்டார். ஆனால், அன்றைய தினம் அவர் இஸ்லாமியர்களின் இறைத்தூதரான முகமது நபியை தவறாக விமர்சனம் செய்திருந்தார். இதனால், முஸ்லிம் நாடுகள் உள்ளிட்ட சர்வதேச அளவில் இந்தியாவிற்கு … Read more