லேடீஸ் ஹாஸ்டலுக்குள் தாவிக் குதித்த நேபாளி.. கால் ஒடிந்து நோயாளியானார்..! போலீஸ் செய்கிற வேலையா இது?

தாம்பரத்தில் பெண்கள் விடுதியின் உள்ளே ஏறிக்குதித்த நேபாளி இளைஞர் ஒருவர், தப்பிக்கும் முயற்சியில் சுவர் ஏறிக்குதித்ததால் காலில் எலும்பு முறிந்து சிக்கிக் கொண்டார். வழக்கை விசாரிக்க சோம்பல் பட்டு கால் முறிந்த நேபாளியை பெருங்களத்தூர் போலீஸ் எல்லைக்குட்பட்ட குடியிருப்பு பகுதியில் போட்டுச் சென்ற தாம்பரம் போலீசாரின் மெத்தனம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.. சென்னை பெருங்களத்தூர் குடியிருப்பு பகுதியின் சாலையில் நடக்க சிரமப்பட்டு நேபாள நாட்டு இளைஞர் ஒருவர் தட்டுத் தடுமாறி தவழ்ந்து வந்தார். அங்குள்ள … Read more

அதிமுகவில் ஒற்றைத் தலைமை இருக்க வேண்டும்: ஓபிஎஸ், இபிஎஸ் தலைமையிலான கூட்டத்தில் நிர்வாகிகள் வலியுறுத்தல்

சென்னை: அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என்று ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட செயலர்கள் வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பாக கட்சி நிர்வாகக் குழு முடிவெடுக்கும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். 2019-ல் நடைபெற வேண்டிய அதிமுக அமைப்பு தேர்தல் கரோனாவால் தள்ளிப்போனது. இதையடுத்து, கடந்த ஆண்டு டிசம்பரில்பதவி வாரியாக தேர்தல் அறிவிக்கப்பட்டு, ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக பழனிசாமி மற்றும் படிப்படியாக மாவட்டச் செயலர்கள், நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இவ்வாறு தேர்வு செய்யப்பட்ட … Read more

Rasi Palan 15th June 2022: இன்றைய ராசிபலன்

Rasi Palan 15th June 2022:  ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம். Rasi Palan 15th June 2022: இன்றைய ராசி பலன், ஜூன் 15ம் தேதி 2022 ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)  … Read more

மாநிலக் கல்விக் கொள்கை குறித்து.. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை.!

 மாநிலக் கல்வி கொள்கை உருவாக்க அமைக்கப்பட்ட குழுவின் முதல் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது. தமிழக அரசின் மாநில கல்வி கொள்கையை வடிவமைக்க, கல்வியாளர்கள், வல்லுனர்கள் அடங்கிய மாநில அளவிலான குழு அமைக்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஏப்ரல் மாதம் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அதன்படி, மாநில கல்வி கொள்கையை உருவாக்க ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் 13 பேர் கொண்ட குழு அமைத்தது. அந்த குழுவில் பல்வேறு பேராசிரியர்களும், கல்வியாளர்களும் இடம்பெற்றுள்ளனர். அனைவருக்கும் … Read more

கஞ்சா அடிப்பதற்காக செல்போன் திருட்டு, வழிப்பறி செய்வேன்.. 14வயது சிறுவனின் வாக்குமூலத்தால் அதிர்வலை..!

தஞ்சையில் கஞ்சா அடிப்பதற்காக செல்போன் திருட்டு, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடுவதாக 14 வயது சிறுவன் ஒருவன் கூறியுள்ளான். சென்னையை சேர்ந்த பாஸ்கர் என்பவர் தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக நேற்றிரவு காத்திருந்தார். அப்போது செல்போனில் பேசிக் கொண்டு இருந்த அவரிடம் இருந்து கண் இமைக்கும் நேரத்தில் 14 வயது சிறுவன் செல்போனை பறித்து கொண்டு ஓடினான். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் துரத்திச் சென்று சிறுவனை மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். Source link

பட்டினப்பாக்கம் கடற்கரையில் 2 கற்சிலைகள் கண்டெடுப்பு: வீசிச் சென்றது யார் என போலீஸ் விசாரணை

சென்னை: பட்டினப்பாக்கம் கடற்கரையில் பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலை உட்பட 2 கற்சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. அந்த சிலைகளை வீசிச் சென்றது யார் என போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சென்னை பட்டினப்பாக்கம் காவல் நிலைய காவலர்களான நவின் மற்றும் விமல் (ஓட்டுநர்) ஆகியோர் நேற்று முன்தினம் மாலை ரோந்து வாகனத்தில் பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் அதே பகுதி சீனிவாசபுரம், துலுக்கானத்தம்மன் கோயில் எதிரில் உள்ள கடற்கரையில் 2 கற்சிலைகள் … Read more

"திமுக தேர்தல் அறிக்கையும் அம்புலிமாமா கதையும்" – அண்ணாமலை விமர்சனம்

திமுக அறிவித்த 517 பக்க தேர்தல் அறிக்கை அம்புலிமாமா கதை போல் தான் இருக்கும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். கும்பகோணத்தில் பாஜக மத்திய அரசின் 8 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது. பாஜகவின் சாதனைகளை விளக்கி பேசினார் மாநிலத் தலைவர் திமுக ஆட்சி பொறுப்பேற்று 100 நாட்களுக்குள் கும்பகோணத்தை தனி மாவட்டமாக்குவேன் என அறிவித்தார்கள். 1 ஆண்டுகளாகியும் அறிவிக்கவில்லை. தமிழக முதல்வர் கும்பகோணத்தை … Read more

அழகிய பெரியவன் எழுதும் ஒவ்வொரு விரலிலும் உலகம் தொடர் – 7

அழகிய பெரியவன் மதம் அன்பு செய்யும் உந்துசக்தி ‘Man is certainly stark mad, he cannot make a flea, and yet he will be making Gods by dozens’– M. E. de Montaigne ஒரு தன்னார்வக் குழுவின் பயிற்சிப் பட்டறையில் பேசுவதற்காக அழைத்திருந்தார்கள். அந்தக் குழுவின் மாநில அளவிலான கருத்தாளர்கள் கலந்து கொள்கிற கூட்டம் அது. மதங்களின் கருத்தியலும் அவை ஏற்படுத்தும் தாக்கங்களும் என்று தலைப்பு கொடுக்கப்பட்டிருந்தது. நான் பேசிக்கொண்டிருக்கும்போதே … Read more

அதிமுகவில் மீண்டும் ஒற்றை தலைமை.. ஓபிஎஸ்-ஐ சந்தித்த அதிமுகவின் முக்கிய புள்ளிகள்.!!

அதிமுக பொதுக்குழு கூட்டம் வரும் 23ம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு இன்று சென்னை: ராயப்பேட்டை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற பெற்றது. மேலும், இந்த கூட்டத்தில் முடிவுகள் குறித்து தகவல் வெளியானவை, வரும் 23ம் தேதி நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களுக்கு அனுமதி இல்லை. அதிமுக பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்க … Read more

சுங்கக் கட்டணத்திற்கு பயந்து லாரியை குறுக்கு வழியாக ஓட்டிய ஓட்டுனர்.. ரயில்வே தடுப்பில் லாரி சிக்கியதால் ஓட்டுனர் தவிப்பு..!

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி அருகே சுங்க கட்டணத்திற்கு பயந்து லாரியை குறுக்கு வழியாக ஓட்டிச் சென்ற ஓட்டுனர் ரயில்வே  தடுப்பில் சிக்கி தவித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.  பந்தாரப்பள்ளி பகுதியில் ரயில்வே தரை பாலத்தின் வழியாக கனரக வாகனங்கள் செல்ல தடை விதித்து உயர் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் புதுப்பேட்டை வழியாக நாட்றம்பள்ளி சென்ற தனியார் லாரி ஒன்று ரயில்வே தடுப்பில் எதிர்பாராதவிதமாக சிக்கிக்கொண்டது. இதனால் செய்வதறியாமல் திகைத்த ஓட்டுனர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் லாரியை தள்ளச் சொல்லி … Read more